Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாக்.,கிற்கு இந்தியா பதிலடி : உங்கள் வேலைய மட்டும் பாருங்க என ஆவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடில்லி:""இந்திய குடிமக்களின் பாதுகாப்பை நாங்கள் பார்த்து கொள்கிறோம்; நீங்கள் உங்கள் நாட்டு மக்களை கவனித்து கொள்ளுங்கள். தேவையில்லாமல், எங்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம்,'' என, பாகிஸ்தான் உள்துறை அமைச்சருக்கு, மத்திய உள்துறை செயலர், ஆர்.கே.சிங் பதில் அளித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான், மும்பையில், தன் மனைவி, கவுரியுடன் வசிக்கிறார். "பொது இடங்களில், மது அருந்தி குழப்பம் ஏற்படுத்தினார்' என்றும், "புகை பிடிக்க தடை விதிக்கப்பட்ட இடங்களில், மீறி புகை பிடித்தார்' எனவும் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் இவர்.சில நாட்களுக்கு முன், பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் ஷாருக் கான், "நான் முஸ்லிம் என்பதால், என்னை இந்திய குடிமகனாக இந்திய அரசியல் கட்சிகள் சில நினைப்பதில்லை. என் தந்தை, தேச விடுதலைக்காக பாடுபட்டவர். எனினும், என்னை இந்தியாவிலிருந்து விரட்டி, பாகிஸ்தானுக்கு அனுப்பி விட சிலர் துடிக்கின்றனர்' என்ற ரீதியில் பேசியிருந்தார்.

இதை அறிந்த, இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியான, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான, லஷ்கர் - இ - தொய்பா தலைவன், ஹபீஸ் சயீது, "இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என, ஷாருக் உணர்ந்தால், பாகிஸ்தான் வந்து விடட்டும்; தேவையான, பாதுகாப்பு வழங்கப்படும்' என, கூறினான்.இதற்கு ஷாருக் கான் இது வரை எந்த பதிலும் கூறாமல், வாய்மூடி மவுனியாக இருக்கும் நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சரான, ரகுமான் மாலிக், இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கி விட்டார்.இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு, இந்திய தூதர் மற்றும் அதிகாரிகளுக்கு, கடந்த, 26ம் தேதி, பாகிஸ்தானில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில், பாக்., உள்துறை அமைச்சர், ரகுமான் மாலிக் பேசியதாவது:ஷாருக் கான் இந்திய குடிமகன்; அவருக்கு சக இந்தியர்கள் போலவே மதிப்பும், மரியாதையும் கிடைக்க வேண்டும். அதில் எந்த குறைவும் இல்லாத வகையில், இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மக்கள் அனைவரும், ஷாருக்கை தங்கள் நாட்டினர் போலவே கருத வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

அவரின் பேச்சு, பிரச்னையை மேலும் தீவிரமாக்கிவிட்டது.

அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய உள்துறை செயலர், ஆர்.கே.சிங் நேற்று கூறுகையில், ""எங்கள் குடிமக்களுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்க எங்களுக்கு தெரியும்; உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். எங்கள் விவகாரத்தில் வீணாக தலையிட வேண்டாம்,'' என்றார்.க்ஷக்ஷநடிகர் ஷாருக் கானின் பேச்சு, அதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து, அவர் இன்னும் கருத்து தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்ற, கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது.

பாக்., இந்துக்களை கவனிங்க! பா.ஜ., - காங்., கடும் கண்டனம் :

ஷாருக் கானுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் அமைச்சர் குரல் கொடுத்தது குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர், ராஜிவ் பிரதாப் ரூடி நேற்று கூறியதாவது:இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அளிக்கப்படுவது போன்ற சுதந்திரம், வேறு எந்த நாட்டிலும் இல்லை. தங்கள் நாட்டு சிறுபான்மையினரை அழித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவை எந்த விதத்திலும் ஒப்பிட முடியாது. பாக்., அமைச்சருக்கு, ஷாருக் கான் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.,வின் மற்றொரு செய்தி தொடர்பாளரான,ஷா நவாஸ் உசேன் கூறியதாவது:ஷாருக்கின் நடிப்பு திறமையை வைத்தே அவரை ரசிக்கின்றனர்; அவரை முஸ்லிம் என, யாரும் பார்ப்பதில்லை. பாலிவுட்டில், திலீப்குமார், மதுபாலா, மீனா குமாரி, ஜானி வாக்கர் என, ஏராளமான முஸ்லிம் நடிகர்கள் இருந்தனர்.அவர்களுக்கு எந்த அளவுக்கு மதிப்பும், மரியாதையும் அளிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு தான், சல்மான் கான், ஷாருக் கான், சைப் அலி கான் போன்ற இப்போதைய முஸ்லிம் நடிகர்களுக்கும் வழங்கப்படுகிறது. நடிப்பை தான் பார்க்கிறோமே தவிர, மதத்தை பார்ப்பதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர், சஞ்சய் ரவுத் கூறும் போது, ""இந்திய விவகாரத்தில் பாகிஸ்தான் மூக்கை நுழைக்க தேவையில்லை. அந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எந்த உரிமையும் கிடையாது; இந்தியாவில் அப்படியில்லை என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதைய நிலையில், ஷாருக் கானை விட, தமிழகத்தை சேர்ந்த நடிகர், கமல்ஹாசனுக்கு தான் அதிக பாதுகாப்பு வழங்க வேண்டும்; ஏனெனில், கமல்ஹாசனுக்கு தான் அதிக மிரட்டல் வந்துள்ளது,'' என்றார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மத்திய அமைச்சருமான, மணீஷ் திவாரி கூறுகையில், ""பாக்., உள்துறை அமைச்சர், அந்நாட்டின் உள்விவகாரங்கள் குறித்து மட்டுமே கவலைப்பட வேண்டும். தேவையில்லாமல் இந்திய விவகாரத்தில் தலையிட வேண்டாம். பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையின இந்துக்கள் நிலையை அவர் முதலில் மேம்படுத்தட்டும்,'' என்றார்.

தினமலர்

அப்பு இது பதிலடி இல்லை வாயடி 

இந்திய ராணுவப் பயங்கரவாதிகளின் தலை என்னவாயிற்று?

இந்திய ராணுவப் பயங்கரவாதிகளின் தலை என்னவாயிற்று?

 

அதுதான் ஆவேசப் பதிலடி கொடுத்து தமது மானத்தைக் காப்பாற்றியுள்ளார்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.