Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தொடர்பான தகவல்களை வழங்கிய மற்றுமொரு நபர் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஜனநாயக விரோதிகள்

 

மக்கள் தமது ஆட்சியாளர்களை பொதுசன வாக்கெடுப்பு மூலம் தெரிந்து கொள்வதை தடுப்பவர்கள் எவரும் ஜனநாயக விரோதிகள்.
  1. தமிழீழம் என்ற நாடு 9 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறது. அங்கே எத்தனை முறை தேர்தல்கள் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கறது? 
  2. முக்கியமான தமிழீழ அரசியல் கட்சிகளின் பெயர்கள் எவை?
  3. ஆட்சியமைத்த கட்சிகள் எவை?
  4. எதிர்க்கட்கள் எவை?
 
இவை எவற்றிற்கும் நேரடியான பதில் இல்லாவிட்டால் அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கவில்லை. அப்படி ஜனநாயகமற்ற நிலையில் அந்த நாட்டை வைத்திருந்தவர்களை ஜனநாயகவாதிகள் என்றா சொல்வர்?
இத்தனைக்கும் சிங்களவர்கள் நாட்டில் சிங்களவர்கள் தமது ஆட்சியாளரை வாக்குரிமை மூலம் மீண்டும் மீண்டும் மாற்றிவர அவர்களுக்கு உரிமை இருந்து வந்திருக்கிறது. 
 

 தலதாமாளிகைக்கு குண்டு வைத்தது பயங்கரவாதச் செயல்

 

 

வழிபாட்டு நிலையம் ஒன்றுக்கு குண்டு வைத்தது பயங்கரவாத செயல் இல்லையா? 
சிறிலங்கா அரசு கோவில்கள் மீதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் குண்டுவீசியது பயங்கரவாத செயல் இல்லையா?  
 
தலதா மாளிகைக்கு குண்டு வைத்தது பயங்கரவாதசெயல் அல்ல என்று சொல்லிவிட்டு அதே சம்பந்தன் எப்படி சிறிலங்கா அரசு கோவில்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் குண்டுவீசுவதை பயங்கரவாதசெயல் என்று சொல்ல முடியும்?
 

சிங்களப் பகுதியில் குண்டுகள்   வைத்தது பயங்கரவாதச் செயல்

 

மக்கள் வாழ்விடங்களில் குண்டுவைப்பது பயங்கரவாதசெயல் இல்லையா?
அப்படியென்றால் சிறிலங்கா அரசு இவ்வளவு காலமும் குண்டுவீசி மக்களை கொன்றது பயங்கரவாதசெயல் இல்லையா?
 
அரசியல் தலைவர்களைக் கொலை செய்த பயங்கரவாதிகள் (சிங்கள - இந்திய அரச பயங்கரவாதிகள் செய்த படுகொலைகளை புலிகள் மேல் போட்ட பெருமை சம்பந்தனுக்கும் உரியது)
 
சம்பந்தன் அல்ல, இலங்கை புலனாய்வுதுறையும் இந்திய புலனாய்வுதுறையும் இவ்வாறு தெரவித்தன. உங்களிடம் உள்ள ஆதராங்களை இதுவரை பகிரங்கப்படுத்தாமல் நீங்கள் மிகவும் பாரிய பங்களிப்பை செய்திருக்கிறீர்கள்.

 

ஏன் யூட்டன்ன.. புலிகள் தலதாமாளிகாவயை தாக்கும் வரைக்கும்.. சிங்களப் பிரதேசத்தை தாக்கும் வரைக்கும் காத்துக் கொண்டிருந்தனீங்கள்.

 

நயினாதீவில தேர் எரிக்கேக்க சொல்லி இருக்கலாம். வண்ணார் பண்ணை சிவன் கோயில் மேல.. லலித் குண்டு போடேக்க சொல்லி இருக்கலாம்.. தமிழ் பகுதிகளில் இருந்து போன மக்களை பஸ் பஸ்ஸா மறிச்சு வெட்டிச் சாய்க்கேக்க சொல்லி இருக்கலாம்... தமிழாராட்ச்சி மாநாட்டில் சுட்டுக்கொல்லேக்க சொல்லி இருக்கலாம்.. இப்படி ஆயிரம் நடந்திச்சே தமிழ் பகுதிகளில.. அப்ப என்ன சம்பந்தன் ஐயாவும் நீங்களும் நித்தாவே கொண்டு கொண்டிருந்தீங்க.

 

எத்தனை பள்ளிகள் தாக்கி அழிக்கப்பட்டன தமிழ் பகுதிகளில்.. தேவாயலங்கள் மீது குண்டு வீசினனீங்க.. அப்ப எல்லாம் எங்க போனது பயங்கரவாதம்..????!

 

ஆக புலிகள் செய்தா அது பயங்கரவாதம்.. அமெரிக்காவும் சிறீலங்காவும் அதையே செய்தா... அது என்ன பயங்கரவாத முறியடிப்பு...????!

 

என்னமா ஒரு ஜனநாயகம் பேசுறீங்க பாருங்க... ரெம்ப உலகம் தெரிஞ்சவரா காட்டிக்கப்படாது அண்ணே. ஜனநாயகம் என்ற பெயரில நடத்திற சர்வாதிக்காரத்தை நீங்க அங்கீகரிப்பீங்க.. மக்கள் எவ்வளவு நாளைக்குத்தான் அங்கீகரிக்கிறாங்கன்னும் பார்க்கலாம். சம்பந்தன்.. முதுகில் குத்துவது இன்று நேற்றல்ல. அவரைப் பற்றி புலிகளுக்கு நல்லாவே தெரிந்திருந்தது. உள்ள முதுகில குத்துறதுகளுக்கு இவர் கொஞ்சம் பறுவாயில்லை என்று தான் இவரை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்வாங்கினது. அவர் அதற்கான பலாபலனை காட்டிட்டார். நல்லது.. இப்ப என்ன அவர் மட்டும் வாழுறார்.. மொத்த இனமே நிர்க்கதியா நிற்குதே.. இதுதான் ஜனநாயகமோ..???! இதற்காகத்தான் மக்கள் வாக்குப் போட்டிச்சினமோ..???!

 

புலிகள் எந்தத் தேர்தல்களையும் தடுத்து நிறுத்தல்லையே.... தமிழ் மக்கள் வாக்குப் போடாமல் இருக்கல்லையே.. தமிழ் பகுதிகளில் ஆயுதமும் பயிற்சியும் வழங்கி சிங்களப் படைகளைக் கொண்டு... வன்முறையை தூண்டி விட்ட அமெரிக்கா அது தென்னிலங்கைக்கு போனதும்.. ஏன் பதறனும்..???! இதெல்லாம் சும்மா நடக்கேல்ல...??! எல்லோருக்கும் அவை அவைட இராஜதந்திர பூகோள நலன் இருந்தது போல.. புலிகளுக்கும் இருக்கத்தானே செய்யும்..???! அது உங்கட கண்ணிற்குப் புலப்படாதோ..???!

 

சரி புலிகள் செய்தது பயங்கரவாதம்.. தண்டிச்சிட்டீங்க.. அப்ப சிங்களம் செய்த பயங்கரவாத்திற்கு தமிழ் மக்களுக்கு என்ன பரிகாரம் பண்ணினனீங்க..????! இது எந்த ஜனநாயகப் புத்தகத்தில எழுதி இருக்கு.. வலியவன் பயங்கரவாதம் செய்யலாம்.. மெலியவன் செய்யக் கூடாதுன்னு..?!! :):lol::icon_idea:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகத்தில நியாயம் என்ற ஒன்றில்லை. எவனட்ட.. பண வலுவும்.. படை வலுவும்.. தொழில்நுட்ப வலுவும்.. அதிகார வலுவும் இருக்கிறதோ.. அவன்.. அநியாயம் செய்தாலும்.. அதுதான் நியாயம். இன்றைய உலக ஒழுங்கு இப்படித்தான் மனிதர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இந்த இடத்தில் புலிகள் மட்டும்.. அநியாயத்துக்கு சாத்வீகம்.. மனிதாபிமானம்.. தர்மம்.. பார்த்திக்கிட்டு நின்றதால தான் இத்தனையும். தலிபான்கள் போல.. சதா.. போட்டிக்கிட்டிருந்தா.. அமெரிக்கா.. என்ன சிங்களவன் கூட பின்வாங்கி ஓடி இருப்பான். புலிகள் சிங்களவர் மேல அதிகம் மனிதாபிமானம் காட்டினதே தப்பு..! அதுதான் தமிழ் மக்களுக்கு பேரழிவானது..! துவக்கு வைச்சிருக்கிறவன் முன்னாடி வேட்டிக்கட்டிட்டு நின்று பிரித் ஓதி வெல்ல முடியாது..! துவக்கை துவக்கால தான் சந்திக்கனுன்னு நிர்ப்பந்தம் எழுந்தால் அதை அப்படித்தான் சந்திக்க வேண்டும்.

 

எல்லா புரட்சியாளர்களும் விழுந்தது.. ஒரே காரணத்தால் தான். சேகுவராவில் இருந்து.. புலிகள் வரை விழுந்தது.. எப்போ அவர்கள் வல்லாதிக்க சக்திகளை.. வல்லாதிக்க சக்திகளைச் சார்ந்தோரை.. அளவுக்கு மிஞ்சி நம்பினார்களோ.. அந்த நிமிடத்தில்.. இருந்து அவர்கள் அழிவு ஆரம்பமானது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.