Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார்கில் போருக்கு முன் இந்தியாவுக்குள் ஊடுருவிய முஷாரஃப்

Featured Replies

பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக இருந்த முஷாரஃப், கார்கில் போர் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு எல்லை தாண்டி வந்து இந்தியப் பகுதிக்குள் ஓர் இரவு தங்கியிருந்ததாக அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முஷாரஃப் இருந்தபோது அந்நாட்டு ராணுவத்தின் ஊடகப் பிரிவின் மூத்த அதிகாரியாக இருந்த அஷ்பக் ஹுசேன், கார்கில் போர் குறித்து புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். அதில் தாம் எழுதிய கருத்துகளை அவர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் வியாழக்கிழமை மீண்டும் கூறினார். ஹுசேன் கூறியதாவது:


முஷாரப் கடந்த 1999ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஹெலிகாப்டரில் இந்தியப் பகுதிக்குள் சென்றார். அங்கு 11 கி.மீ. தூரம் பயணித்த அவருடன் 80ஆவது பிரிகேட் படைப்பிரிவின் கமாண்டரான பிரிகேடியர் மசூத் அஸ்லமும் உடனிருந்தார். இந்தியப் பகுதியில் சிக்ரியா முஸ்டாகர் என்று அழைக்கப்படும் இடத்தில் முஷாரஃப் ஓர் இரவு தங்கியிருந்தார். அங்கு கர்னல் அம்ஜத் ஷபீர் தலைமையிலான பாகிஸ்தானிய வீரர்களும் இருந்தனர். முஷாரஃப் அடுத்த நாள் பாகிஸ்தான் திரும்பினார்.

 

முன்னதாக, பாகிஸ்தான் படையினர் முதலில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி 1998, டிசம்பர் 18ஆம் தேதிதான் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவினர். இதை மேற்பார்வையிடுவதற்காக நதீம் மற்றும் அலி ஆகிய ராணுவ அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். எனினும், இந்த ஊடுருவலுக்கான நோக்கம் குறித்து அவர்களுக்கு எப்போதும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பான வேவுப் பணியை அவர்கள் மேற்கொண்டபோதும், அவர்களுக்கு இதன் நோக்கம் குறித்து விளக்கம் தரப்படவில்லை.


அதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு ராணுவத்தின் சில படைப்பிரிவுகளுக்கு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டிச் சென்று இந்திய நிலைகளை ஆக்கிரமிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இந்தியப் பகுதிக்குள் மென்மேலும் ஊடுருவிச் செல்வதில் படைப்பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டன. பாகிஸ்தான் படையினரின் இந்த ஊடுருவல் குறித்து அப்பகுதியில் ஆடு மேய்க்கும் ஒருவர் இந்திய ராணுவத்திடம் தெரிவித்தார். முந்தைய ஊடுருவல் நடவடிக்கை போலவே கார்கில் ஊடுருவலுக்கான நோக்கமும் திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை. இந்த ஊடுருவல் திட்டத்துக்கு மேஜர் ஜெனரல் ஜாவெத் ஹசன் மற்றும் வடக்குப் பிராந்தியப் படைப்பிரிவுகளின் தலைவர்களாக இருந்த அதிகாரிகள் மூளையாகச் செயல்பட்டனர்.

 

ஊடுருவல் முயற்சிகளைத் தொடர்ந்து, இந்திய பாகிஸ்தான் படையினருக்கு இடையிலான மோதல்கள் அந்த ஆண்டு மே மாதத்தில் தொடங்கின. வடக்குப் பிரிவு காலாட்படையைத் தவிர, 31 ஆஸாத் காஷ்மீர் ரெஜிமெண்ட், 24 சிந்து ரெஜிமெண்ட், எல்லைக் காவல்படை உள்ளிட்டவையும் கார்கில் மோதலில் பங்கேற்றன. எனினும், இந்த மோதல் வெற்றி பெற்றதாக முஷாரஃப் கூறுவதை ஏற்க முடியாது. கார்கில் போரில் 270 பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமே இறந்ததாக அவர் சமீபத்தில் கூறியிருப்பதும் சரியல்ல. எனது ஆய்வின்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் இந்தப் போரில் இறந்தனர் என்று ஹுசேன் தன் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.


பாகிஸ்தான் வீரர்களின் ஊடுருவலை முஷாரஃப் தலைமையிலான 4 தளபதிகள் திட்டமிட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் அதிகாரியான ஷாகித் ஆசிஸ் சமீபத்தில் கூறியுள்ள கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஹுசேனின் பேட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

http://dinamani.com/world/article1446156.ece

பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக இருந்த முஷாரஃப், கார்கில் போர் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு எல்லை தாண்டி வந்து இந்தியப் பகுதிக்குள் ஓர் இரவு தங்கியிருந்ததாக அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

முன்னமே தெரிந்திருந்தால் வாஜ்பாய் சந்திர மண்டலத்துக்கு ஓடிப் போயிருப்பார்!

 

  • தொடங்கியவர்

முசாரப் மீண்டும் போட்டியிட்டு அதிபராக வந்தால் இவ்வாறான தாக்குதல்கள் மீண்டும் நடக்கும்.
அதேவேளை முசாரப் அமெரிக்காவையும் ஆப்கானிஸ்தானில் தலிபானுடன் இணைந்து தலையிடி கொடுத்தவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.