Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் சிறிலங்காவிற்கு எதிராக 209 யோசனைகள்! - 98 யோசனைகளை நிராகரிப்பது என சிறிலங்கா அரசு தீர்மானம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜெனீவாவில் சிறிலங்காவிற்கு எதிராக 209 யோசனைகள்! - 98 யோசனைகளை நிராகரிப்பது என சிறிலங்கா அரசு தீர்மானம்!
[sunday, 2013-02-03 11:14:44]
 
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள 209 யோசனைகளில் 98 யோசனைகளை நிராகரிப்பது என சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வாறு நிராகரிக்கப்படவுள்ள விடயங்களில் யுத்தக் குற்றம், சர்வதேச நீதிமன்ற விசாரணை, பாதுகப்புத் தரப்பு ஆகியனவும் உள்ளடங்கும் என அந்தச் செய்திகள் கூறுகின்றன. ஏனைய 111 யோசனைகளையும் சிறிலங்கா அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
 
இதேவேளை, ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வில் கலந்து கொள்ளும் நாடுகளில் 24 நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவுடன் சேர்ந்து செயற்படவுள்ளன. மேலும், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக 1200 மில்லியன் ரூபாக்களை சிறிலங்கா அரசு ஒதுக்கி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.http://seithy.com/breifNews.php?newsID=75205&category=TamilNews&language=tamil

209 யோசனைகளில் 98 யோசனைகளை நிராகரிப்பதும் மிகுதியை ஏற்பதும் ஒன்றுதான் (ஒன்றையும் நிறைவேற்றப்போவதில்லை, இழுத்தடிப்பு மட்டுமே  )

pol-cartoon-3-2-2013.jpg

209 யோசனைகளில் 98 யோசனைகளை நிராகரிப்பதும் மிகுதியை ஏற்பதும் ஒன்றுதான் (ஒன்றையும் நிறைவேற்றப்போவதில்லை, இழுத்தடிப்பு மட்டுமே  )

புலிப் புரளி கிளறிவிட்டுவிட்டு வடக்கை முழுவதாக இராணுவமயப்படுத்துகிறார். அதற்கு நேரம் பெற்றுக்கொள்ளத்தான் இந்த திருட்டு.

 

மகிந்த பதவியை விட்டு விலகத்தக்கதாக எதையும் அவசரமாக ஏற்றுவிடார், பதவியை இழந்த டட்லி, சிறிமா, JR, சந்திரிக்கா எல்லோருக்கும் நடந்ததை அவர் அறிவார். மேலும் இந்த முறை தமிழரும் காத்துகொண்டு இருக்கிறார்கள். இதில் புலம் பெயர் மக்கள், மகிந்தா பிரேணயில் விட்டுக்கொடுத்து அதனால் பதவி இழந்தால் தாம் அவர் மீது தம் கையை போட வளம் பார்த்துக்கொண்டு திரிவது மட்டும் அல்லாமல் பல NGO களையும் தூண்டிவிட்டு அவர்களையும் மகிந்தா மீது கையை வைக்கப்பண்ண முயல்கிறார்கள்.  இதனால் மகிந்தாவின் ஒரே வழி மேற்கு நாடுகளை ஏய்த்துக்கொண்டே தன் பிடியை இறுக்குவதுதான்.

 

மேலும் மகிந்தா இந்த முறை ஒரு குழப்ப மனநிலையிலும் இருக்கிறார். கடந்த மார்ச்சில் கக்கீம், விமல், தேவானந்தா, கருணா போன்றவர்களை அனுப்பிவைத்து அவர்களுக்கு பாவனைக்குரிய பொருளகளும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் வெல்லுமோ தோற்குமே என்பது தெரிந்திராத பிரேரணை வென்றுவிட்டது. இந்தியா தன் உற்ற நண்பனுக்கு தொப்பி பிரட்டியும் இருந்தது. இந்த முறை பிரேணை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் வந்து குவிய தொடங்கியிருக்கிறது. இது சரியா, பிழையா வேறு. ஆனால் மகிந்தா தனிய கக்கீம், கருணா போன்றவர்களையும் அனுப்பி அவர்களுக்கு உபகரணங்களையும் அனுப்பிவைத்தால் அதோடு மட்டும் பிரேரணை வெல்லும் என்ற அபிப்பிராயத்தில் இல்லை. இதனால் பொட்டிஞ்சர் பக்கமும் திரும்பிப் பார்க்கிறார். 

 

சீனாவிடம் கடன் வாங்கி லொபி செய்வது இலகு. இதை தனி மனிதனாக கதிர்காமர் நன்றாகச் செய்து, இலங்கையில் நின்று உண்மைகளை கண்ட மேற்கு நாட்டு அதிகாரிகள் எல்லோரையும் முட்டாள்கள் ஆக்கியிருந்தார். அண்மையில் சுசான் ரஸ்சுக்கு எதிராக 100 % வெற்றி. அன்றைய காலங்களில் இது ஐ.நாவிலும்  நன்றாக வேலை செய்தது. 

 

இருந்தாலும் இதில் சில தொழில் நுட்ட பிரச்சனைகள். லொபி மேற்குநாடுகளில் வேலை செய்யும். ஆனால் இந்தியா வங்காளம், ஆபிரிக்க நாடுகள் தொழில் பட லஞ்சம் நேராக கொடுக்க வேண்டும். அன்றைய மனித உரிமைகள் சபை பலம் குறந்தது. புஸ் பகிஸ்கரித்தது. (இதனால் அமெரிக்க லொபியுக்கு தேவை இருக்கவில்லை) அன்றைய ஐ.நா ஆர்வலர்கள் மேற்குநாடுகள் மட்டும். இன்றைய பேரவை சற்று பலமானது. இன்று கலந்து கட்டி சர்வதேச மட்டத்தில் 24 நாடுகளின் ஆதரவு தேவை. இதை லஞ்சமும் லொபியுயயும் கலந்து பவித்து வாங்கினால்த்தான் உண்டு. மேலும் சுசான் ரஸையும் ராஜாங்க அமைச்சில் எதிர்த்து, மகிந்த அன் கோ, ஐ.நா.வில் போட்டு வைத்திருக்கிறது. அது அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வரக்கூடிய நேரடி சிக்கல்களை தணித்திருந்தாலும் சிக்கல்கள் ஆரம்பித்து வளரத்தொடங்கியிருந்த திசையான ஐ.நா வை அப்படியே விட்டுவைத்துவிட்டது.  

 

எதுவுக்காய் இருந்தாலும் கடன் பணம் சீனாவிலிருந்து வரும். ஆனாலும் மகிந்த சிந்தனை, மகிந்த தர்மங்களின் பால் சென்று ஒரு முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இரண்டு  தொழில் நுட்பம் பாவிக்க வேண்டிய இடம்.  24 நாடுகள் வாங்கப்பட வேண்டும்.  இதுதான் மகிந்தாவின் குழப்பம். லொபியும், லஞ்சமுமா அல்லது குத்திகளும், குட்டிகளுமா?  எந்தப் பாதை வெற்றி அளிக்கும்?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
நிராகரித்த 98 யோசனைகளுக்கும் 98 LLRC போன்ற பம்மாத்து பெயர்களை இப்போதே தயார் படுத்தி சர்வதேசத்தையும் தமிழர்களையும் பேக்காட்ட தயார் நிலையில் இருக்கும் என நம்பலாம்.காலம் கடத்த இது போன்ற பெயர்கள் சிங்களத்துக்கு தொடர்ந்து கை கொடுத்த வண்ணமே உள்ளன.
 
1200 மில்லியன் ரூபாக்கள் ஆசியர்களையும் ஆபிரிக்கர்களையும் வளைத்துப்போட பெரிதும் உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.