Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: கூட்டமைப்பு

Featured Replies

தென்னாபிரிக்காவின் விஜயத்திற்கும் இலங்கை அரசாங்கத்துடன் நாம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கும் தொடர்பில்லை. இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தீய நோக்கங்களை கைவிடச் செய்யவும் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தும் வகையில் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கோரியுள்ளது.

 

 

கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்று தென்னாபிரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது.

முரண்பாடு தீர்த்தல், உண்மை மற்றும் நல்லிணக்கம் பற்றிய தமது சொந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தென்னாபிரிக்க மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆகியன மேற்கொண்ட முன்னெடுப்புக் காரணமாகவே இத்தூதுக்குழு தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ளது.


தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதியமைச்சர் தலைமையிலான தூதுக்குழுவொன்று 2011ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தபோது இவ்வாய்ப்பை இலங்கை அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வழங்க முன்வந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதை ஏற்றுக்கொண்டது.

 

 

இலங்கை அரசாங்கம் ஜனவரி 2011இல் த.தே.கூட்டமைப்புடன் இனப்பிரச்சினை தொடர்பில் பேச ஆரம்பித்தது. த.தே.கூ. நேர்மையாகவும் முழுமனதுடனும் செயற்பட்டு அரசியல் தீர்வொன்றுக்கான முழுமையான முன்மொழிவுகளை மார்ச் 2011இல் சமர்ப்பித்தது.


இலங்கை அரசாங்கம் தமது பக்கக் கருத்துக்களை, 5 மாத காலத்தில் 7 கூட்டங்கள் நடந்தபோதும் முன்வைக்கத் தவறியது. இதனால் அடுத்த கூட்டத் திகதியொன்றுக்கு ஒப்புக்கொள்ள த.தே.கூ. மறுத்தது.

இதன் பின்னர் ஜனாதிபதி த.தே.கூ. தலைவரைச் சந்தித்ததைத் தொடர்ந்து பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் இருபக்க பேச்சுவார்த்தை 16ஆம் திகதி செப்டெம்பர் மாதம் 2011இல் மீண்டும் தொடங்கப்பட்டது.

1.இலங்கை அரசாங்கத்தின் பதில் கருத்துக்கு பதிலாக முன்னைய 5 முன்மொழிவுகளையிட்டு பேச வேண்டும்.

2.த.தே.கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டதும் த.தே.கூ. நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சேரும்.


ஆயினும் மேற்கூறிய ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசாங்கம் ஜனவரி மாதம் 2012இல் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியது. இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதப்போக்குக் காரணமாக ஸ்தம்பித நிலையை உடைப்பதற்கான 2 முயற்சிகள் தோல்வி கண்டன.

 

ஸ்தம்பித நிலை இன்றுவரை தொடர்கின்றது. பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துவிட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை இராணுவ நிதியில் ஒடுக்குகின்ற வடக்கு, கிழக்கு பகுதிகளின் சனத்தொகை அமைப்பை மாற்றுகின்ற தனது வேலைத்திட்டத்தை ஆக்ரோஷத்துடன் தொடர்ந்து வருகின்றது.


இப்பின்னணியில்தான் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவில்  மார்ச் 2012இல் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. இதை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் பெரிதும் தவறிவிட்டது.

 

25 பெப்ரவரி 2013இல் தொடங்கவுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் 22ஆவது அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் செயலின்மை மீது முக்கிய கவனம் செலுத்தப்படும்.


நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென நாம் நம்புகின்றோம்.

 

இப்பின்னணியில் தற்போது த.தே.கூ. தென்னாபிரிக்காவுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தை சுட்டிக்காட்டி சில முன்னேற்றங்கள் அடையப்பட்டுள்ளதாக உலகத்துக்கு காட்ட அரசாங்கம் முற்படுமென்பதை நாம் நன்கறிவோம்.

எனவே தென்னாபிரிக்காவின் முன்னெடுப்பு தொடர்பில் எமது செயற்பாட்டுக்கும் இலங்கை அரசாங்கத்துடன் நாம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கும் தொடர்பில்லையென்பதை தெளிவுபடுத்த நாம் விரும்புகின்றோம்.

 

இத்தீர்மானத்துக்கமைய (இலங்கை அரசாங்கம்) நடக்கவும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தீய நோக்கங்களை கைவிடச் செய்யவும் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்த ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவில்  பொருத்தமான நடவடிக்கை மிக அவசியமெனவும் நாம் கருதுகின்றோம்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58236-2013-02-03-11-07-02.html

  • தொடங்கியவர்

69679_475537085859510_1687872519_n.jpg

தமிழில் ஒன்று ஆங்கிலத்தில் ஒன்று என்று இல்லாமல் - ஆங்கிலத்தில் சிங்கள அரச பயங்கரவாதிகளின் அராஜகத்தை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும்!

பாலர் பாடசாலைப் பிள்ளைகள் போல் கூட்டமைப்பு செயற்படுகிறது!



இன்னும் பல நூறு மடங்கு வேகமாக, பல நூறு மடங்கு காரசாரமாக செயற்பட வேண்டிய தேவை தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு உண்டு!

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்க பயணத்தை நல்லிணக்க முயற்சியாக அரசு காட்ட முனைவது தவறானது! - கூட்டமைப்பு அறிக்கை!!

 

'தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் அடக்குமுறை நிகழ்ச்சி நிரலை கைவிடுவதற்கான அழுத்தங்களை சர்வதேசம் வழங்கவேண்டும். குறிப்பாக இலங்கை அரசு இது தொடர்பில் ஆக்கபூர்வமாகச் செயற்பட ஐ.நா.மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்கவேண்டும். நல்லிணக்க அறிகுறியாக கூட்டமைப்பின் தென்னாபிரிக்க பயணத்தை அரசு காண்பிக்க நினைப்பது தவறானதாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்புக் குழு ஒன்று தென்னாபிரிக்காவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. தமது பயணத்தின் நோக்கம் பற்றியும், தற்கால அரசியல் சூழலில் தமது நிலைப்பாடு குறித்தும் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

 

எமது தென்னாபிரிக்கப் பயணத்தை இலங்கை அரசு தனது பிரசாரத்துக்காக பயன்படுத்தக்கூடும். ஏனெனில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் சபை அமர்வில் தனக்கு ஏற்படவுள்ள நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக இலங்கையில் மீள் நல்லிணக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக காட்டவேண்டிய தேவை இலங்கைக்கு உண்டு. அந்த முன்னேற்றத்துக்கு கூட்டமைப்பின் தென்னாபிரிக்கப் பயணத்தை ஒரு உதாரணமாகக்காட்ட அரசு முனையலாம்.

 

உண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த தென்னாபிரிக்கக் குழுவின் அழைப்பின் பேரிலேயே நாம் இங்கு வந்துள்ளோம். தென்னாபிரிக்காவில் தேசிய காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் நாம் நடத்தும் கலந்துரையாடல், இலங்கை அரசுடன் நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக அமையாது. மாறாக முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளல், மீள் நல்லிணக்கம் தொடர்பான அனுபவங்கள் என்பவற்றைப பகிர்தலே  எமது தென்னாபிரிக்கப் பயணத்தின் நோக்கமாகும்.

 

இலங்கை அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தன. கூட்டமைப்பின் இணக்கப்பாடுகளுக்கான தெரிவுகளை அரசு ஏற்றுக்கொள்ள மறுத்தமையே இதற்குக் காரணமாகும்.

 

பேச்சுக்கள் தடைப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் நிகழ்ச்சி நிரலை அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றது. அத்துடன் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்கவும் அது முயல்கிறது. இத்தகைய பின்புலத்திலேயே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு  நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதனை நிறைவேற்ற இலங்கை அரசு தவறிவிட்டது.


எனவே, ஆக்கபூர்வமான செயற்பாட்டில் கவனம் செலுத்தவும், தமிழர்கள் மீதான அடக்குமுறை நிகழ்ச்சி நிரலை நிறுத்தவும் சர்வதேசமும், ஐ.நா.மனித உரிமைகள் சபையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=1ad60348-fda1-4d1f-945f-39f1f6005922

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.