Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ உரிமைப் போராட்டத்தை இந்திய அரசு அங்கீகரிக்கவேண்டும்.

Featured Replies

தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்: சு.ப.தமிழ்ச்செல்வன்

[புதன்கிழமை, 21 யூன் 2006, 14:44 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]

தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினரை இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப்பணியகத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பையடுத்து ஊடகவியலாளர்களுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல்:

கேள்வி: இன்றைய சந்திப்பு தொடர்பாக?

பதில்: நோர்வே அனுசரணையாளர்களை வழமையாக சந்திக்கின்ற சந்திப்பாகவே இது அமைந்தது. முக்கியமாக ஒஸ்லோ சந்திப்புக்களுக்கு பின்னரான சந்திப்பு என்ற வகையிலும் அரசும், அரச படைகளாலும் படுகொலைகளையும், வன்முறைகளையும் அதிகரித்துள்ள நிலையில் நாம் நோர்வே அனுசரணையாளர்களை சந்தித்தது என்ற வகையில் இச்சந்திப்பு முக்கியம் பெறுகின்றது.

நோர்வே அனுசரணையாளர்களுக்கு எமது நிலைப்பாட்டை தெட்டத்தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்துள்ளோம். சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து தமிழ் மக்களை படுகொலை செய்து கொண்டிருப்பதும் எமது பிரதேசம் மீதும், எமது மக்கள் மீதும் சிறிலங்கா விமானப்படை குண்டுவீச்சுக்களையும் ஆட்லறித் தாக்குதல்களையும், பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தி எமது மக்களை படுகொலை செய்வதும் எமது மக்கள் காணாமல் போவதும், மக்கள் அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் போன்ற நடவடிக்கைகள் ஒரு பிரகடனப்படுத்தாத யுத்தத்தை எமது தேசம் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பதையே சுட்டிக்காட்டுகின்றது என்பதையும், நாம் அரசின் செயற்பாடுகளை பார்த்துக்கொண்டு பொறுமை காத்துக்கொண்டிருக்க முடியாது என்பதையும் உறுதியாக தெரிவித்துள்ளோம்.

கேள்வி: நோர்வே என்ன பதிலைக் கூறுவதாக தெரிவித்தது?

பதில்: நோர்வேத் தரப்பு இன்று அல்லது நாளை அரசதரப்பைச் சந்தித்து எங்களுடைய நிலைப்பாட்டை தெரியப்படுத்துவதாக கூறியுள்ளனர்.

கேள்வி: நோர்வேத் தரப்பிற்கு ஐந்து கேள்விகளுக்கான பதில் விடுதலைப் புலிகளினால் எந்த வகையில் அனுப்பப்பட்டுள்ளது?

பதில்: எமது சமாதான செயலகம் ஊடாக நேற்று முன்தினம் நோர்வேக்கு பதிலினை அனுப்பியுள்ளோம். நோர்வேயின் கேள்விகளுக்கான ஒட்டுமொத்தமான பதிலினை தெரிவித்துள்ளோம்.

அதாவது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவில் இடம்பெறுவது தொடர்பான கால அவகாசத்தை கேட்டிருந்தார்கள். நாம் நீண்டகால அவகாசத்தை கொடுப்பதிலுள்ள சங்கடமான நிலைமைகள் பற்றியும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை நூறு வீதம் கடைப்பிடிக்கின்ற தன்மையை அரசு காட்டுகின்ற போதுதான் யுத்த நிறுத்த உடன்பாடு மேற்கொண்டு செல்ல முடியும் என்பது பற்றிய விளக்கங்களை பதிலில் தெரிவித்துள்ளோம்.

கேள்வி: நோர்வேக்கு அனுப்பிய பதில்கள் தொடர்பாக இன்று ஏதாவது ஆராயப்பட்டதா?

பதில்: நாம் அனுப்பிய பதில்கள் தொடர்பான விளக்கங்களை எம்மிடம் கோரினார்கள். நாம் தெளிவாக, விரிவாக விளக்கியுள்ளோம்.

கேள்வி: போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்ற முடியாது என நீங்கள் தெரிவித்ததாக ஹான்ஸ் பிறட்ஸ்கர் தெரிவித்துள்ளாரே?

பதில்: ஐரோப்பிய ஒன்றியம் தடை அறிவிப்பை வெளியிட்டது என்பது நடுநிலைமையை சமதரப்பு என்கின்ற கோட்பாட்டை, நிலைப்பாட்டை பலவீனப்படுத்தியிருக்கின்றத

இன்றை நிகழ்வு தொடர்பாக ஒரு பொருத்தமான ஆய்வு

அரசை வழிக்குக்கொண்டுவர வேண்டும். - சங்கதியின் செய்திஆய்வு.

கிளிநொச்சியில் நோர்வேத்து}வர் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளரைச் சந்தித்த பின்னர் சொன்னார், சுவீடன், பின்லாந்து, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்தவர்கள் கண்காணிப்புக் குழுவில் பணியாற்றவதற்கு விடுதலைப்புகள் தெளிவாகவே மறுத்துவிட்டார்கள் என்று அவர்களையும் உள்ளடக்கிய கண்காணிப்புக்குழு மிகச் சிறந்த பணியை கடந்த காலங்களிலே ஆற்றியிருக்கிறது எனவும் திரு ஹானஸ்பிரட்ஸ்கர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தக் கூற்றுக்களின் அர்த்தமும், அதை அவர் வெளியிட்ட தோரணையும், அவரது முகபாவம், தொனி என்பனவும் இந்தவிதமாகப் புலிகள் எடுத்துள்ள நிலைப்பாட்டால் தாங்கள் கவலையடைவதாக அர்த்தப்படக்கூடியவையாக இருந்தன.

நோர்வேத்த துதுவருடைய இந்தக் கருத்தை தமிழீழ அரசியற்தறைப் பொறுப்பாளரிடம் கேட்டபோது அவர் மிகத் தெளிவாக நிலைமையை விளக்கினார். நோர்வே கவலையடைவது வேறு, எமது கொள்கை, இலட்சியம் என்பவைவேறு, நோர்வே கவலைஅடைவதற்காக நாம் எமது கொள்கையையும் இலட்சியத்தையும் கைவிடமுடியாது முன்கூட்டியே நோர்வேக்கு இது தொடர்பான அனைத்துவிடயங்களையும் தெரிவித்திருந்தோம்.

முன்னெச்சரித்திருந்தோம். அவர்கள் அப்போதே விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் - எனக் கூறிய திரு சு.ப.தமிழ்ச்செல்வன் இதுவரைகாலமும் எமது தாயகத்தில் கண்காணிப்புப்பணியாற்றியமைக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.