Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரியாவில் மனித உரிமை மீறல்: ஐநா கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிரியாவில் மனித உரிமை மீறல்: ஐநா கருத்து

 

uno.gifசிரியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் தாக்குதல்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இந்த எண்ணிக்கை 40 லட்சம் ஆக உயர வாய்ப்பு இருப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 70 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஐ.நா. அவை தற்போது உதவி செய்து வருவதாகவும், மேலும் பல தொண்டு நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே சிரியாவின் பொருளாதார நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சிரியா தலைநகருக்குள் புரட்சிபடை புகுந்தது: அரசு படையுடன் கடும் துப்பாக்கி சண்டை

 

siriya.jpgஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்ட புரட்சியை அடுத்து பக்கத்து நாடான சிரியாவிலும் மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த நாட்டு அதிபரை வீழ்த்திவிட்டு ஆட்சி அமைக்க அவர்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்கள். பொதுமக்களுக்கு ஆதரவாக புரட்சிபடை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பல்வேறு நாடுகள் ஆயுத உதவி செய்து வருகின்றன. இதன் மூலம் அவர்கள் அரசு படையை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

 

சிரியாவின் பலநகரங்கள் தற்போது புரட்சிபடையின் பிடியில் உள்ளன. அவர்கள் தலைநகரம் டமாஸ்கசை பிடிப்பதற்காக முன்னேறி வருகிறார்கள். தலைநகரை ஒட்டி உள்ள ஜோபார் மாவட்டத்தை அவர்கள் கைப்பற்றி கொண்டனர்.

 

டமாஸ்கஸ் அருகே உள்ள பார்மிரா நகரையும் தங்கள் பிடியில் கொண்டுவந்துள்ளனர். அங்கிருந்து தலைநகரம் டமாஸ்கசின் கிழக்கு பகுதிக்குள் புரட்சிபடைகள் புகுந் துள்ளன. அங்கு அரசு படைகளுக்கும், புரட்சிபடைகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. சரமாரியாக பீரங்கி தாக்குதலும் நடக்கின்றன. இந்த தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகயிருப்பதாக தெரியவந்துள்ளது.

 

பார்மிரா நகரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதில் 19 பேர் பலியானார்கள். புரட்சிபடையினர் தலைநகருக்கு புகுந்திருப்பதால் அவர்கள் முற்றிலும் நகரை கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சிரியா ராணுவ ஆயுத தொழிற்சாலை அருகே ‘பஸ் குண்டு’ வெடித்ததில் 54 பேர் பலி

 

article-2153138-13672d4f000005dc-74_306xசிரியாவில் கடந்த 2 ஆண்டுகளாக ஆட்சியாளர்களை எதிர்த்து புரட்சிப் படையினர் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். அரசுப் படைகளுக்கும் புரட்சியாளர்களுக்கும் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.இந்நிலையில், சிரியா ராணுவத்தின் சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள், அந்த தொழிற்சாலையின் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த போது வெடிப்பொருட்களை ஏற்றி வந்த பஸ்சை புரட்சியாளர்கள் வெடிக்க வைத்தனர்.இச்சம்பவத்தில் 11 பெண்கள் உள்பட 54 பேர் உடல் சிதறி பலியாகினர்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பெரிய நீர் தேக்கத்தை கைப்பற்றிய சிரியா நாட்டு கிளர்ச்சியாளர்கள்

 

சிரியாவில், மிகப் பெரிய அணையை, கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, எதிர்கட்சியினர், 22 மாதங்களாக போராடி வருகின்றனர். ஆசாத் பதவி விலகாத காரணத்தால், கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா, ஆயுத உதவி அளித்து வருகிறது.இதனால், சிரியாவில் தொடர்ந்து சண்டை நடக்கிறது.சிரியாவில், எல்லை புற நகரங்களை, கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.பல மாதங்களாக நீடிக்கும் சண்டையில், 60 ஆயிரம் பேர் கொல்லப் பட்டுள்ளனர். ஐந்து லட்சம் பேர், அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இதற்கிடையே, சிரியாவில், ரக்கா மாகாணத்தில், யூப்ரடீஸ் நதியின் மீது கட்டப்பட்டுள்ள, மிகப் பெரிய அணையை, கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசப்படுத்தியுள்ளனர்.

 

4.5 கி.மீ., நீளமும், 512 மீட்டர் அகலமும் கொண்ட இந்த அணையில், 880 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.இந்த அணையின் கட்டுப்பாட்டு அறையை, கிளர்ச்சியாளர்கள், நேற்று கைப்பற்றினர். அணையின் முக்கிய நுழைவாயில்களில், ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் தங்கியுள்ளனர்.இந்த அணையை மீட்க, அரசு படைகள், குண்டு வீசக்கூடிய அபாயம் உள்ளதாக, சர்வதேச பார்வையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அணை மீது குண்டு வீசப்பட்டால், ஏராளமான கிராமங்கள், வெள்ளத்தில் மூழ்கும்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.