Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ஷாவின் இந்திய விஜயத்தை வைத்து விளம்பரம் தேடும் கருணாநிதி தனது பாதையின் அடுத்த மைல் கல்லாக ஜெயலலிதா மீது பாய்சல்

Featured Replies

இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் சேர்ந்து முள்ளிவாய்க்காளில் 146,000 அப்பாவிப்பொது மக்களை பொசுக்கி தள்ளிய போது தான் கூட்டு வைத்திருந்த  மத்திய அரசை தட்டி கேடக மறுத்துவிட்டு என்றோ ஓய்ந்து போய்விட்ட சகோர யுத்தம் என்ற நொண்ட்டிச்சாட்டில் தூங்கிய கருணாநிதி , தனது குடும்ப சண்டையை மூடி மறைக்க அடுத்தகட்டமாக, ஈழத்தமிழர் விவகாரம் சம்பந்தமாக அமெரிக்காவினதை விட இன்னொரு பிரேரணையை இந்தியா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரவேண்டும் என்று கேட்டதற்காக, ஜெயலைத்தாமீது பாயந்திருக்கிறார். 

 

செய்தி:

 


ஈழத்தமிழர் விடயத்தில் காலம் கடந்து நாடகம் ஆடுகின்றார் ஜெயலலிதா - கருணாநிதி குற்றச்சாட்டு! 
[saturday, 2013-02-09 23:02:35]
Karunanidhi-Jayalalitha-090213-seithy-15

இலங்கைத் தமிழர்கள் மீது தான் மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் அவர் போடும் இரட்டை வேடம் குறித்து தமிழ் மக்கள் நன்கு அறிவர்' என்று தி.மு.க. தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, '8.2.2013 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை வழங்கிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று பேரவையில் அ.தி.மு.க. ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது என்றும், அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டடார்.

  

அத்துடன், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தபோது, அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக, இந்திய மத்திய அரசு வாக்களிக்க வேண்டுமென்று பிரதமரிடம் தான் வலியுறுத்தியதாகவும், முதலில் அதை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசாங்கம், தனது தொடர் வலியுறுத்தல் காரணமாக அந்தத் தீர்மானத்தை ஆதரித்தது என்றும் கூறியிருக்கிறார். ஆனால் இதே முதலமைச்சர் ஜெயலலிதா தான் 16.4.2002 அன்று, அ.தி.மு.க. ஆட்சியிலே, இதே தமிழகச் சட்டப் பேரவையிலே இலங்கைப் பிரச்சினை பற்றி ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:-

* இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது.

* தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும், இந்திய மண்ணில் காலூன்றுவது ஒரு போதும் ஏற்கப்பட மாட்டாது, அனுமதிக்கப்பட மாட்டாது.

* பிரபாகரனை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா அரசோடு சட்டப்படியாகவும், தூதரக நடை முறைப்படியும், அனைத்து விதமான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரபாகரனை அவர் புரிந்த குற்றங்களுக்காக இந்தியாவில் உள்ள நீதிமன்றத்தில் உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தமிழக சட்டமன்றப் பேரவை மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

* ஸ்ரீலங்கா அரசினால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரகாரனை பிடித்து நாடு கடத்த இயலவில்லை என்றால், ஸ்ரீலங்கா அரசின் அனுமதியோடு, இந்திய இராணுவத்தை ஸ்ரீலங்கா அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனை சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக சட்டமன்றப் பேரவை கேட்டுக்கொள்கிறது.

இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தவர் ஜெயலலிதாதான். அது மாத்திரமல்ல் 17.1.2009 அன்று இதே ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் 'இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்' என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இலங்கையில் தமிழ் இனப்படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியபோது, ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், 'விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது, இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை' என்றே மத்திய அரசுக்கு அப்போது வக்காலத்து வாங்கினார்.

4.11.2007இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச் செல்வன் மறைந்த போது ஒரு இரங்கல் கவிதையை நான் எழுதினேன் என்பதற்காக ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று, இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தவர் தான் ஜெயலலிதா.

இதையெல்லாம் இலங்கைத் தமிழர்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டு நேற்று, 8.2.2013 அன்று சட்டப் பேரவையில் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களிடம் தான் மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல தன்னைக் காட்டிக்கொள்கிறார். இதில் இருந்து அவரது உண்மை உருவத்தை, இலங்கைத் தமிழர்களும், இங்குள்ள தமிழர்களும் புரிந்துகொள்ள வேண்டும்' என்று கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=75693&category=TamilNews&language=tamil

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படியோ.

இப்படியே அடிச்சுகிட்டு கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகளை உளரும் ஐயாவிற்கு நன்றிகள்..!!

கேப்டன் தொலைகாட்சியில் இலங்கை அதிபர் இனப்படுகொளையாளன் ராஜபக்சேவை பற்றி தமிழகம் முழுவதும் நடந்த எதிர்ப்பு போராட்டம் பற்றிய தொகுப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 

மிக்க மகிழ்ச்சி...


ஆனால் நெருடலான விடயம் தே.மு.தி.க. என்ன செய்துகொண்டிருந்தது?

 

 

46879_10200490353759631_27223965_n.jpg

 

 

தே.மு.தி.க. பா.மா.க. மற்றும் அ.தி.மு.க. இந்த மூன்று கட்சிகள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. பா.ம.க. அறிக்கை மட்டும் கொடுத்தது. ம.தி.மு.க., பெரியார் தி.க. (கொளத்தூர் மணி) மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் தில்லி திருப்பதிக்கே சென்று அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நெருக்கடி காரணமாக தி.மு.க., வி,சி,க. வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தியது.

விசயகாந்த் அவர்களே உங்களுக்கு "கேப்டன்" பட்டம் எப்படி வந்தது என்று தெரியுமா (கேப்டன் பிரபாகரன்)...விஜயகாந்த் அவர்களே எங்கே போனீர்கள் ராஜபக்சே வந்தபோது...தர்மா படத்தில் அகதிகளுக்காக நடித்தது வெறும் நடிப்பா?

 

இலங்கை பிரச்சினை என்று முடிகிறதோ அன்றுதான் என் பிறந்தநாளை கொண்டாடுவேன் என்று கூறினீர்களே...இன்று சர்வதே சதி காரணமாக புலிகளுக்கு, தமிழர்களுக்கு தற்காலிக தோல்வி மற்றும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது...இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒன்று போர் முடிந்த பின்னர் நீங்கள் பிறந்தநாள் கொண்டாடுகிறீர்கள்...அது எதற்கு தமிழன் வீழ்ந்ததாலா இல்லை சிங்களவன் வென்றதாலா?

 

- முகநூல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.