Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் வெடித்திருக்கும் போராட்டம் சுதந்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையினை கொடுக்கின்றது - கிளிநொச்சி மக்கள்!

Featured Replies

தமிழகத்தில் வெடித்திருக்கும் போராட்டம் சுதந்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையினை கொடுக்கின்றது - கிளிநொச்சி மக்கள்!

PostDateIcon.png வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013 21:38
தமிழீழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றழித்துவிட்டு இந்தியாவிற்கு வருகை தந்திருக்கின்ற சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக இந்தியாவில் வெடித்துள்ள போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு விரைவில் சுதந்திரம் கிடைக்குமென்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். 

 

தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுக்கின்ற இந்தியத் தமிழ் உறவுகளின் தீரமிகு செயற்பாடுகளை நோக்கும்போது தமிழீழ தேசியத் தலைவரையும் தமிழ் மக்களையும் இந்தியத் தமிழ் உறவுகள் எந்த நிலையில் வைத்து மதிக்கின்றனர் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது என்றும் கிளிநொச்சி மக்கள் தெரிவித்துள்ளனர். 

 

தமிழ் மக்களின் முக்கியமான கோட்டையாக விளங்கிய கிளிநொச்சி மாவட்டம் யுத்தத்தால் கடும் அழிவைச் சந்தித்துள்ள போதிலும் தாங்கள் இன்றுவரை தமிழ்த் தேசிய உணர்வுடனேயே வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள கிளிநொச்சி மக்கள் தங்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டு உறவுகள் மேற்கொள்கின்ற போராட்டம் காலத்தின் தேவையை உணர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் கூறியுள்ளனர். 

 

மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் தமிழ் மக்களைக் கோரமாகக் கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச இன்று வெள்ளைப் புறா வேடமிட்டு தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்ற இந்திய தேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றார். உண்மையாகவே இது சுற்றுப் பயணம் அல்ல. இது இந்திய அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கை. காலம் காலமாக தமிழ் மக்களுக்கு நன்மைகள் விளையும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதெல்லாம் இந்திய அரசாங்கம் மகிந்த ராஜபக்சவுக்கு பக்கபலமாகச் செயற்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் பல தடவைகள் மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றியிருக்கிறது. 

 

இந்திய அரசியலில் கலைஞர் கருணாநிதியை தமிழ் மக்கள் துரோகி என்றே கருதுகின்றனர். 2009 ஆம் ஆண்டு இறுதிப் போராட்ட காலத்தில் கருணாநிதி ஆடிய நாடகம் காரணமாகவே தமிழ் மக்கள் பெரும் அழிவைச் சந்தித்தனர். அன்று ஈழத் தமிழ் மக்களுக்குச் சார்பாக தமிழ்நாட்டுத் தமிழ் மக்கள் கொதித்தெழுந்தனர். ஆனால், இந்த கொதிப்பை அடக்குவதற்கு கலைஞர் கருணாநிதி உண்ணாவிரதம் என்ற நாடகத்தை அரங்கேற்றி தமிழ் மக்களின் அழிவுக்குத் துணை நின்றார். 

 

அதேபோலவே தமிழ் நாட்டுத் தமிழர்கள் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கிளர்ந்து நிற்கும் போது தான் மட்டும் தனியே நின்றால் அரசியல் நடத்த முடியாது என்பதை உணர்ந்த கருணாநிதி கறுப்புச் சட்டைப் போராட்டம் என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார். கருணாநிதியின் நாடகமும் மகிந்தவைக் காப்பாற்றுகின்ற நாடகமாகவே அமையும். 

 

ஆனால், இந்தியாவில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கின்ற தமிழ் மக்களின் தீரமிகு எழுச்சிக்கு முன்னால் கருணாநிதி இனியும் தமிழின அழிப்புக்கு துணை நிற்ற முடியாது என்பதை உணர வேண்டும். 

 

மகிந்த ராஜபக்ச வெறுமனே தனிப்பட்ட விடயமாக இந்தியாவிற்கு வரவில்லை. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது இலங்கையைக் காப்பாற்றுமாறு மடிப்பிச்சை கேட்டுத்தான் வந்துள்ளார். ஆனால், மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகைக்கு இந்தியாவில் என்றுமில்லாத அளவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதையடுத்து மகிந்த தனது பல செயற்பாடுகளை இடைநடுவில் கைவிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. 

 

ஈழத் தமிழரைக் கேட்பதற்கு யாருமே இல்லை என்ற நோக்கத்துடன் எங்களை இங்கே வாட்டி வதைக்கின்ற மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களில் கை வைத்தால் தமிழகம் கொதித்தெழும் என்ற உண்மையை இந்தியாவில் இன்று கண்கூடாகவே கண்டுகொண்டிருக்கிறார். 

 

அன்புக்குரிய இந்தியத் தமிழ் உறவுகளே, நீங்கள் தமிழீழத் தமிழர்களுக்காக மிகவும் உணர்ச்சிபூர்வமாக எழுச்சியடைந்திருக்கின்றமையைக் காண்கின்ற போது ஈழத்தில் எங்கள் உள்ளம் பூரிக்கின்றது. உங்கள் உணர்ச்சி வெள்ளம் எங்களுக்கு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையைத் தருகின்றது. நாங்கள் விரைவாக எமது விடுதலையை வென்றெடுப்போம் என்று நாங்கள் நம்புகின்றோம். உங்கள் உதவியுடன் நாங்கள் எமது சுதந்திரத்தை பெற்றுக்கொள்வோம் என்று நம்புகின்றோம். உங்கள் போராட்டங்கள் தொடரட்டும். என்றும் நாங்கள் உங்கள் உணர்வுகளுடன் இணைந்திருப்போம் என்று கிளிநொச்சி மக்கள் தெரிவித்துள்ளனர். 

 

வீரமணி 

எமது விடுதலை போராட்டத்தை பொறுத்தவரையில் ஒன்று இருக்கும்பொழுது இன்னொன்று இருக்கவில்லை.

 

அதேவேளை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது சிங்களத்திற்கு எல்லாமே ஒரே கோட்டில் வந்து நின்றது. அதுவே அதற்கு கடைசியாக எல்லாம் ஒரே கோட்டில் நின்ற நாளாக இடுக்கட்டும்.


தமிழக உறவுகளின் எழுச்சியுடன் தமிழருக்காக சகலதும் ஒரே  கொட்டில் வரட்டும், எமது மக்களுக்கும் விடிவு கிடைக்கட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.