Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி: மத்திய உளவுத் துறை எச்சரிக்கை

Featured Replies

இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.


2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு குற்றவாளி அப்சல் குருவுக்கு தில்லியில் சனிக்கிழமை திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 

அதை எதிர்த்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹூரியத் அமைப்புகளும் அதன் சார்பு இயக்கங்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

 

இந்த நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ- முகம்மது ஆகிய இயக்கங்களின் தளபதிகள் கூட்டம் கடந்த சனிக்கிழமை இரவு பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்றதாக இந்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து, மத்திய உள்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

ராவல்பிண்டியில் நடைபெற்ற பயங்கரவாத இயக்கங்களின் தளபதிகள் கூட்டத்தில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப் படையின் அதிகாரிகள் சிலரும் பங்கேற்றதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து காஷ்மீரின் லோலாப், சோபூர், பாரமுல்லா ஆகிய பகுதிகளில் பதுங்கியுள்ள தங்களின் இயக்கத்தினருக்கு ஒரு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
அங்குள்ள சிலருக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில் ""நமது முக்கிய விருந்தினர்கள் வரவுள்ளனர்.
 
அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும்'' என்று சங்கேத மொழியில் பேசப்பட்ட தகவல் இடைமறித்துக் கேட்கப்பட்டுள்ளது. அதன் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்'' என்று அந்த அதிகாரி கூறினார்.
 
இது குறித்து, மத்திய உளவுத் துறை முன்னாள் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ""அப்சல் குரு சம்பவத்துக்குப் பிறகு இதுபோன்ற சங்கேத மொழியில் பயங்கரவாதிகள் பேசியிருப்பதால், அவர்களின் இலக்கு, தலைநகர் தில்லி, மும்பை, பெங்களூர், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் மற்றும் குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.
 
எங்கள் வட்டாரத்தில் விசாரித்தவரை, இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்தும் நோக்குடன் ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் கடந்த மூன்று மாதங்களாக கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
 
அவர்கள் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர், பலுசிஸ்தான், பதன்க்வா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்'' என்றார்.
 
http://dinamani.com/latest_news/article1458928.ece

  • தொடங்கியவர்

அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றியதற்கு பழிவாங்கும் விதமாக, இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய காங்கிரஸ் அரசும் தாக்குதல் நடக்க்வேண்டும் என்று விரும்புவது போல் இருக்கு.. :huh:  அப்படி நடந்தால் மக்கள் கவனத்தை திசை திருப்பலாம்.. உடனே ஒரு தேர்தலையும் வைத்து வாக்குகளை அள்ளலாம். :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.