Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

TNA புலிகளின் வழியைப் பின்பற்றுகின்றது – டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA புலிகளின் வழியைப் பின்பற்றுகின்றது – டக்ளஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்றி செயற்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாட்டைப் பற்றி பொய்யான தகவல்களை புலிகளைப் போன்றே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பல நாடுகளுக்கு விஜயம் செய்து, பொய்யான பிரச்சாரங்களை செய்வதனை வழக்கமாகக் கொண்டிருந்தனர் எனவும், அதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத் திட்டங்களை ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டுகொள்ளத் தவறியுள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.யாழ்ப்பாணம் ரில்கோ சிட்டி ஹோட்டலில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, இந்தியா, ஜெனீவா போன்ற நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விஜயம் செய்து போலிப் பிரச்சாரங்களை செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.யாழ்ப்பாணத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் கிடையாது எனவும், எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களைப் போன்றே யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் வன்முறை வெடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை வெளிநபர்களினால் திணிக்க முடியாது எனவும், உள்நாட்டு ரீதியிலேயே அதனை எட்ட முடியும் எனவும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/88580/language/ta-IN/article.aspx

எமது இனத்தின் சாபக்கேடு நாம் ஒற்றுமையாக இல்லை என்பது மட்டுமல்ல
எமது வீழ்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு எட்டப்பனும் இருந்தமையும் தான்  :(

அமைச்சர் அவர்களே! 
மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி இன்னும் இருக்கா?
இல்லாட்டி கழற்றியாச்சா?

அபிவிருத்தி என்பது தமிழரின் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளில் ஒன்றாக இது வரை இருக்கவில்லை. மகாவலி கங்கையில் நீந்தி வரும் மீங்குஞ்சுகளொடு குஞ்சுகளாகத்தான் சிங்களவர் வந்து தமிழர் பிரெதேசங்களை ஆக்கிரமிக்கிறார்கள் என்பதுதான் தமிழரசுக்கட்சியின் அந்த நாளைய பிரசாரம். இதனால்த்தான்  தலைவர் அபிவிருத்திப் பங்கை தனது கையில்எடுத்தவர். சுனாமி நேரம் இலங்கை உள் நுளைந்து இடங்களை பிடிக்காமல் பாதுகாத்துக் கொணடத்தும் இந்த  தேவானந்தா பாணி அபிவிருத்திகளில் இருந்து தமிழ் நிலங்களை காக்கவே

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கான ஜனாதிபதியின் செயற்பாடு அரசியல் நோக்கற்றவை :அமைச்சர் டக்ளஸ்

 

daclas.jpgஅரசியல் நோக்கங்கள் எதுவுமின்றி தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜனாதிபதிக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஜனாதிபதியின் செயற்பாடுகளுகுத் தமிழ் பேசும் மக்கள் நல்லெண்ண சமிக்ஞையை வெளிப் படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-

தேர்தல் காலங்களில் மட்டுமே அரசியல்வாதிகள் மக்களை நாடி வருவார்கள். எனினும் தேர்தலில்லாத இந்தக் காலத்தில் ஜனாதிபதி அவர்கள் யாழ். மக்களைத் தேடி வந்துள்ளார். ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயம், தன்னலம் கருதியதோ அல்லது அரசாங்கத்தின் தேவை சார்ந்ததோ அல்ல. இது தமிழ் மக்களின் நலன் நாடி மேற்கொள்ளப்பட்ட நல்லெண்ண விஜயமாகும். ஜனாதிபதியின் இந்த நல்லெண்ண வருகை கண்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

யாழ். மக்களுக்கு 24 மணிநேரமும் மின்சாரத்தை வழங்கியுள்ளது அரசாங்கம். மின் ஒளியை வழங்கியுள்ள ஜனாதிபதி அனைத்துத் தமிழ் மக்களினதும் வாழ்வொளியை ஏற்றி வைப்பார் என்பது எமது முழுமையான நம்பிக் கையாகும். அந்த நம்பிக்கையுடனேயே நான் ஜனாதிபதியை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்துள்ளேன். தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தையே தமிழ் பேசும் வடக்கு கிழக்கு மக்களும் அனுபவிக்க வேண்டுமென்பதே ஜனாதிபதியின் நோக்கம்.

அரசியல் உரிமையும் அபிவிருத்தியும் எமது இரண்டு கண்களாகும். அதனை எமது மக்களுக்காக நிறைவேற்றுவதே எமது இலட்சியம். அதற்கு ஜனாதிப தியவர்கள் உறுதுணையாக இருக்கின்றார் என்பதை நான் அவரது சார்பில் தமிழ் மக்களுக்குக் கூறிக்கொள்ள விரும்பு கின்றேன். யுத்தத்துக்குப் பின் மக்களை பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும் வாழ்வாதாரச் செயற்பாடுகள் பாரியளவில் மேற்கொள்ளப்படுகின்றன. அதனை ஊக்குவிப்பது நம் எல்லோரதும் பொறுப்பாகும். நாம் நம்மை மேலும் முன்னேற்றிக் கொள்ளும் செயற்பாடுகளுக்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு இன்றியமையாதது.

எமது தேசம், எமது மக்கள் என்ற விழிப்புணர்வுடன் அரசாங்கத்தின் நல்லெண்ணத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் அரச அதிகாரிகள் இது எமது அரசாங்கம் என்கின்ற உரிமையையும் கையிலெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.