Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவாமியின புதிய கலாட்டா..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி என்றாலே அதிர்ச்சி, பரபரப்புச் செய்திகள்தான். அந்த வகையில், சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்த அவர்,

‘‘ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பிறகு அங்கேயே இறந்துவிடவில்லை. உயிர் தப்பி காஷ்மீருக்கு வந்து சேர்ந்தார். பௌத்த மதத்தைத் தழுவி எண்பது வயது வரை வாழ்ந்து, அதன் பிறகே இறந்திருக்கிறார். வரலாற்றில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும். அதற்காக ஒரு கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கி, ஓர் அறிஞர்கள் ‘குழு’வை வைத்து ஆராய உள்ளேன்’’ என்ற அதிர்ச்சிக் குண்டை வீசியிருக்கிறார். ‘தி டாவின்சி கோட்’ பட சர்ச்சை ஓய்வதற்குள் இப்படியரு விஷயத்தைச் சொல்லியிருக்கும் டாக்டர் சுவாமியைச் சந்தித்தோம்.

‘‘கடந்த ஆறாம் தேதி எங்கள் கட்சிப் பொதுக் கூட்டத்திற்காக, காஷ்மீர் சென்றிருந்தேன். பேசிக்கொண்டிருந்த போது, ‘டாவின்சி கோட்’ பற்றி விவாதம் வந்தது. ‘ஏசுவுக்கு மனைவி உண்டா? இல்லையா? என்ற கலந்துரையாடலின்போது , ஒருவர் சொன்ன தகவல் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

அதாவது, ‘காஷ்மீரில் ஏசு அவரது மனைவி மற்றும் மோஸஸின் கல்லறை இன்றும் இருக்கிறது. அதைச் சிலர் பராமரித்து வருகிறார்கள்’ என்றார். உடனே நான் அங்கேயிருந்த ஓர் அரசு உயரதிகாரியிடம் பேசினேன்.

‘‘லடாக் பகுதியிலுள்ள ‘லே’ என்ற இடத்திற்கு முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில், ஹெமிஸ் கோம்பா (பிமீனீவீs நிஷீனீஜீணீ) என்ற புத்த ஆசிரமம் உள்ளது. அங்கே தான் ஜீஸஸ் ஆரம்பக்காலத்தில் படித்திருக்கின்றார். யோகா, தியானம் உள்பட பலவும் கற்றுத் தேறியிருக்கின்றார். அதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன’’ என்று சொன்னார். பைபிளிலேயே, ‘ஜீஸஸ் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமில் பிறந்தார். யூத மன்னர்கள் மற்றும் மத குருமார்களுக்குப் பயந்து, பிறந்தவுடனேயே எகிப்துக்குத் தப்பி ஓடினார்கள். பிறகு பத்து வருடங்கள் கழித்துத்தான் மீண்டும் சொந்த ஊருக்குச் செல்கிறார்கள். பத்து வயது முதல் பதினான்கு வயதுவரை ஜீஸஸ் அங்கேயே இருந்தார்’ என்றெல்லாம் உள்ளது.

பிறகு, அந்தப் பதினான்கு வயதிலிருந்து அடுத்த ஏழு ஆண்டுகள் அவர் எங்கே சென்றார் என்பது கூறப்படவில்லை. அது மர்மமாக உள்ளது. ஏழாண்டுகள் கழித்து இருபத்தொராவது வயதில்தான் மீண்டும் ஜெருசலேம் செல்கிறார்.

இடைப்பட்ட ஏழாண்டுகளில் அவர் எங்கே இருந்தார் என்பதுதான் கேள்வி. அந்தச் சமயத்தில்தான் ஏசு இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்கு வந்து பௌத்த மத ஆசிரமத்தில் பலவற்றையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இன்னொரு விஷயமும் உள்ளது. ஏசு பிறந்தவுடன் எகிப்துக்குத் தப்பிச் சென்றார்கள் இல்லையா? பத்து ஆண்டுகாலம் அங்கே இருந்த போது, எகிப்திலும் பௌத்த ஆசிரமத்தில் சேர்ந்து கற்றிருக்கிறார்.

ஏசு சொன்ன போதனைகளைக் கவனித்தால், அது இந்து, புத்த மதத்தோடு ஒன்றி வருவதைக் காண முடியும்.

இன்னொன்றையும் கூறலாம் ஏசுவுக்கு முன்பிருந்தவர்களோ அல்லது அவருக்குப் பின்பிருந்த சீடர்களோ அவரைப்போன்று ‘அதிசயங்களை’ செய்யவில்லை. குருடனுக்குப் பார்வையளித்தது, ஊனமுற்றவரை நடக்க வைத்தது, இறந்தவரை உயிர்ப்பித்ததென்று ஏசுதான் செய்தார். இந்த ‘சித்து’ வேலைகளும் இந்தியத் தன்மை கொண்டவையே.

அதுமட்டுமல்ல, பைபிளில் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு உள்ளது. புதிய ஏற்பாடுதான் ஏசுவின் போதனையைப் பற்றிக் கூறுகிறது. அது கூட ஏசு எழுதியது இல்லை. அவருக்குப் பின் வந்த சீடர் புனித செயிண்ட் பால் என்பவரால்தான் எழுதப்பட்டது. ஏசு சொன்னதாக பால் எழுதியது, எந்த அளவுக்கு உண்மையாக இருக்க முடியும்?’’ மாறுபாடுகள் இருக்கலாம் அல்லவா?’’ என்று விளக்கங்களை முன் வைத்தார் சுவாமி. மேலும்,

‘‘நமது பழைமையான புராணங்களில் ஒன்றான ‘பவிஷியா மகாபுராணம்’ என்ற நூலில் கூட, சில சுலோகங்கள் ஏசு போன்ற ஒருவர் பற்றியும் கூறுகின்றன.

அதாவது காஷ்மீர் பகுதி மன்னர் ஒருவர், அவரிடம் ‘நீ யார்?’ என்று கேட்பதாக வருகிறது. அதற்கு அவர்,

‘நான் கடவுளின் மகன். கன்னிப் பெண்ணுக்குப் பிறந்தவன். ஆழ்ந்த இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தலைவன். இடைவிடாத உண்மையைத் தேடுபவன் என்று கூறுவார்கள்’ என்றும்,

‘என் பெயர் ஈஸா_மாஸி’ என்றும் கூறியிருப்பதாக உள்ளது.

பழங்கால காஷ்மீர் மன்னர்களான சாலிவாஹனா மற்றும் கனிஷ்கர் ஆகியோரின் அரசுப் பதிவேடுகள் கூட, ஏசு இங்கே இருந்ததைக் கூறுகின்றன.

இப்படித் தெரியவரும் சில ஆதாரங்கள்படி பார்த்தால், ஏசு, காஷ்மீரில் ‘கனியார்’ என்ற இடத்தில் வாழ்ந்து இறந்து, அடக்கம் செய்யப்பட்டார் எனத் தெரிய வருகிறது. இது ஆதாரபூர்வமானதல்ல. ஆனால், அதற்காக விட்டுவிடாமல், இதில் உள்ள உண்மைகளை வெளியில் கொண்டு வர வேண்டும். விட்டுவிடக் கூடாது. ஒரு நிபுணர்கள் குழு மூலம் இவற்றை ஆராய வேண்டும்.

ஏசு கடைசிக் கட்டத்தில் சிலுவையில் அறையப்பட்டு மரணத்தைத் தழுவிய போது, அவரது உடலில் சுற்றியிருந்த ரத்தக்கறை படிந்த ஆடைகள் இன்னும் இத்தாலியில் உள்ள ‘டூரின்’ சர்ச்சில் இருக்கிறது என்கின்றனர். அதுதான் உண்மை என்றால், அதை டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

காஷ்மீர் ‘லே’ பகுதியில் உள்ள ஏசுவின் மனைவி சமாதி என்று சொல்லப்படுவதையும் தோண்டி எடுத்து ஆய்வு செய்து, டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதே போன்று சரியான வரலாற்று ஆய்வுகளையும் நடத்த வேண்டும். உண்மையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம்’’ என்று முடித்தார் சுவாமி. ஸீ

Thanks:Kumudam.....

இதை நான் எந்த மதத்தவரையும் புண்படுத்தவதற்காக இனைக்கவில்லை.....சுப்ரமணியசுவா

யேசுவிற்கு மனைவியா??

ӾĢø ÍÅ¡Á¢¨Â ÁÃÀÏ §º¡¾¨ÉìÌðÀÎò¾¢,

þÅÕìÌõ þìÀ¡ø «ò¾¡ÍìÌõ ²¾¡ÅÐ ¦¾¡¼÷Ò¸û

þÕì̾¡ ±ýÀ¨¾ì¸ñ¼È¢Â §ÅñÎõ.

ӾĢø ÍÅ¡Á¢¨Â ÁÃÀÏ §º¡¾¨ÉìÌðÀÎò¾¢,

þÅÕìÌõ þìÀ¡ø «ò¾¡ÍìÌõ ²¾¡ÅÐ ¦¾¡¼÷Ò¸û

þÕì̾¡ ±ýÀ¨¾ì¸ñ¼È¢Â §ÅñÎõ.

:lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol::lol:

:lol::lol::lol::lol:

உது வேறை ஒண்டும் இல்லை டாவின்சிக் கோட்டை கொஞ்சம் (யேசுநாதருக்கு மனைவி இருந்தது மனைவி கற்பினியாக இருந்தவ), இன்னொரு conspiracy theory ஆன (யேசுநாதரின் வழ்வு என்பது முழுக்க முழுக்க ஆவணப்படுத்தப்படவில்லை, வெற்றிடங்கள் உண்டு, அவற்றில் அவர் இமைய மலைக்கு வந்தார் பொளத்தத்தை பின்பற்றினார், அல்லது இந்துவானார்)என்பவற்றை சுப்பு தன்னுடைய கற்பனையால் குளைத்து அடித்திருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தமிழ் டாவின்சிக் கோர்ட் டோட இயக்குனர் ஆக்கலாம்...

சுவாமிக்கு இப்ப இந்திய அரசியல் போரடிச்சுட்டு அதால யேசு நாதரை பற்றி ஆராயுறாராக்கும்

கபீர்...ரஜினியின் பாபா,போன்ற ஆக்களிட்டை யேசு இமயமலை வந்து தியானம் பழகிட்டு போனாரென்று நம்ம பாட்சா சார் ..சொல்லிக்கட்டு இருந்தாரு.. அது..நிஜமாங்க...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.