Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா செல்லும் குழுவில் இருந்து நீக்கப்பட்டார் மகிந்த சமரசிங்க – சிறிலங்கா அதிபரின் உத்தரவே காரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahinda-samarasinghe-cp-676.jpg

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் பங்கேற்கும் குழுவில் இருந்து, மனிதஉரிமை விவகாரங்களுக்கான சிறிலங்கா அதிபரின் சிறப்புத் தூதுவரான, அமைச்சர் மகிந்த சமரசிங்க கழற்றி விடப்பட்டுள்ளார். 

கடந்த பல ஆண்டுகளாக ஜெனிவா கூட்டத்தொடர்களில் சிறிலங்கா குழுவுக்குத் தலைமை தாங்கி வந்த, அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே, இம்முறை ஜெனிவா செல்லும் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜெனிவாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தலைமையில், வெளிவிவகார அமைச்சு, சட்டமாஅதிபர் திணைக்களம் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட குழுவே இம்முறை ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது. 

தாம் ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க, அது பற்றி மேலதிக கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துள்ளார். 

மகிந்த சமரசிங்க நீக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்தோ, அமைச்சர்கள் எவரும் ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனரா என்பது குறித்தோ கருத்து எதையும் வெளியிட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது. 

மனிதஉரிமைகள் விவகாரங்களுக்கான சிறிலங்கா அதிபரின் தூதுவர் பொறுப்பில் இருந்து சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, நிரந்தரமாகவே நீக்கப்பட்டு விட்டாரா என்பது குறித்தும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கருத்து வெளியிட மறுத்துள்ளது. 

அதேவேளை, சிறிலங்கா வெளிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்பாரா இல்லையா என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்றும், ஜெனிவா செல்லும் குழு உறுப்பினர்களும் இன்று தெரிவு செய்யப்படுவர் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொட்னி பெரேரா தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு சிறிலங்காவின் நிலைப்பாட்டை விளக்குவதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் இன்று கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

இதற்கிடையே, ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க அவசர கலந்துரையாடலுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

இன்று சிறிலங்கா வரும் அவர், இரண்டு நாட்களுக்கு கொழும்பில் தங்கியிருந்து, வெளிவிவகார அமைச்சு மற்றும் சிறிலங்கா அரசின் மூத்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்கான உபாயங்கள் குறித்து ஆலோசனைகளில் ஈடுபடவுள்ளார். 

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடருக்கு சிறிலங்காவின் சார்பில் ரவிநாத் ஆரியசிங்கவே தலைமை தாங்கவுள்ளார். 

இவரது தலைமையிலான குழுவில், சட்டமாஅதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த 5 சட்டவாளர்கள், நீதி அமைச்சின் செயலர், பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஆகியோர் அங்கம் வகிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தக் குழுவைச் சேர்ந்த சிலர் ஏற்கனவே ஜெனிவா சென்று அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


 

கடந்த முறை வந்த டக்லஸ் அவர்களும் வரமாட்டாரா?

வந்து புலம்பெயர் தமிழர்களை சந்திக்க மாட்டாரா?

யாழ் அபிவிருத்திகள், சிங்கப்பூராகும் நெடுந்தீவு பற்றி கதை அளக்க மாட்டாரா??

போனமுறை Super Star ஆக வந்து தோன்றிய நடிகை தாமரா குண நாயகம், இந்த முறை சொந்த பதவியே இல்லாமல் போய்விட்டா. தாமாரா தனது புலமையையும் ஔவையின் சீரிய வாழ்வையும் ஒப்பிட்டுப்பார்க்கட்டும். திருப்பதியானை விட இவர்களுக்கு ஔவையால் உதவமுடியும் போல் தெரிகிறது. தாமரா மகிந்தாவுக்கு "ஆற்றங் கரையில் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும்" என்றும் ஒரு வரி எழுதி ஒரு தபால் அனுப்பிவைக்கட்டும்.

 

போனமுறை பல உபநடிகைகளும் வந்தார்கள். அவர்களுக்கும் இந்த முறை வேலை இல்லை. பன்மொழி புலவர் குழாம்களான கக்கீம், விமல், தேவானந்தா, கருணா போன்ற வர சந்தர்ப்பம் இல்லை என்ப்தையே இது சொல்கிறது.

 

இராமாணயனத்தை முறையாக கற்காத நாம் எல்லாம் சில கம்பராமாயணது பாடல்களை தெரிந்து வைத்திருக்கிறோம். கம்பர் பல சிறபியல்புகளை காவியம் முழுவதும் புகுத்தியதால் பலதேவைகளுக்கு இந்த பாடல்கள் உதாரணம் காட்டபடுவதுதான் அதன் காரணம். கீழே வரும் பாடலின் சொற்கள் தாம் உதாரணம் காட்டும் பொருளான காற்றாடியின் இயக்கத்தை பிரதி பலிப்பதனால் வகுப்பு ஆசியரால் ஒருதடவை பாடிக்காட்டப்பட்டபாடல்.

 

இலங்கைக்கு மன்னாக இருந்த இராவணனனை வில்லனாக வருணிக்கும் கம்பர் தனது உதவுகவிகளுக்கு அவர்களின் பலதேவைகளுக்கு தீனிபோட்டுத்தான் மன்னன் வளர்த்து வந்தான் என்கிறார். ஆனால் அந்த தீனிகள் இருந்து வரும் இடத்தை அறியாமல் அவற்றை அனுபவித்து வந்த உதவிகள் போரில் தம்மால் இராவணனை காக்கமுடியும் என்று மார்தட்டி முன்னால் சென்று ஒவ்வொருவராக மாண்டார்கள். கடைசியில் கும்பகர்ணன் எழுப்பப்பட்டு போருக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கே வதைபடுகிறான். அது போரின் முடிவை ஆரம்பிக்கும் இடமாக அமைகிறது.

 

இந்த முறை மகிந்தா அனுப்பிவைக்கும் குழு தோற்றால் மகிந்தா இனி தான் வெளியே வந்து இராமானை பார்க்க வேண்டி வரலாம். இனி காலத்தை கடத்த அனுப்பிவைக்க கூடிய இந்திரஜித் தாமாராக்கள் பலர் மகிந்தாவின் கையில் இல்லை.

 

"உறங்குகின்ற கும்பகன்ன! உன்கள் மாய வாழ்வெலாம் 
இறங்குகின்றது இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்! 
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே 
உறங்குவாய், உறங்குவாய்! இனிக்கிடந்து உறங்குவாய்".

 

(காற்றினில் சுழலும் கற்றாடியின்(கறங்கு) இசையை ஒத்த சொற்கள் தெரியப்பட்டு எழுதப்பட்டபாடல்)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொன்றாக களருது

 

நல்ல சகுனம் தெரியுது

 

வேகப்படுத்துங்கள் உறவுகளே தங்கள் பணிகளை.

மகிந்தவும் குழுவும் தனியே  நிற்கும் காலம்வரும்வரை.....

  • கருத்துக்கள உறவுகள்

போன முறை சுவிசில் இருந்து போய் கூட்டத்தொடரில் கக்கீமுக்கு பக்கத்தில் இருந்து படம் போட்டவையும்...டக்கிளசுடன் கூட்டம் நடத்தினவையும்...நாலு தெருவுக்குள் அரசியல் பேசி..நாலு குடும்பத்தவர்களை வெருட்டிவடக்கு முதன் மந்திரி தான் தான் என்று சொல்லுறவையும் என்ன செய்யப் போகினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.