Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

A9 பாதையை திறந்தது மட்டுமே அரசு நிறைவேற்றியுள்ள ஒரேயொரு LLRC பரிந்துரை – மனோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

634042322images.jpg

ஐநாவில் இலங்கை இம்முறையும் பழைய பல்லவியையே பாடியது - மனோ

இலங்கை அரசாங்கம், தனது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளில், A9 நெடுஞ்சாலையை திறந்து விடவேண்டும் என்ற ஒரேயொரு பரிந்துரையை மட்டுமே இதுவரையில் நிறைவேற்றியுள்ளது. ஏனைய பல பரிந்துரைகளை தொட்டும் பார்கவில்லை சிலவற்றை மேலோட்டமாக பார்த்துள்ளது. இதுதான் உண்மை. 

இந்த நிலையில்தான், "எதுவும் எங்களுக்கு சொல்லித்தரவும் வேண்டாம், கற்றுத்தரவும் வேண்டாம், எங்களுக்கு நேரமும், அவகாசமும் மாத்திரம் தாருங்கள்" என்று எங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அடிப்படையிலான இறுமாப்பான உரையை இலங்கை அரசாங்க பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க மனித உரிமை ஆணைக்குழுவில் ஆற்றியுள்ளார். அவரது பேச்சின் உள்ளடக்கம் இதைதான் கூறுகிறது. 

இதுதான். ஐநா சபைக்கும், உலகத்துக்கும் இலங்கை அரசாங்கம் அனுப்பியுள்ள செய்தி. இது இலங்கையிலே தமிழ் மக்களிடம், "நீங்கள் ஐநாவுக்கும், உலகத்துக்கும் சென்று முறையீடு செய்யாதீர்கள்" என்று சொல்லப்படும் செய்தியின் மறுபக்கம். 

இந்த இரண்டுமே கேட்டு, கேட்டு சலித்துப்போன பழைய பஞ்சாங்க பல்லவி என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 

ஐநாவில் அரசாங்க பிரதிநிதி குழுவின் தலைவர் மஹிந்த சமரசிங்க ஆற்றியுள்ள அரசாங்கத்தின் ஐநா கொள்கை உரை தொடர்பாக கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 

கடந்த முறையும் இதே "டைம் அண்ட் ஸ்பேஸ்" என்ற நேரமும், அவகாசமும் என்ற கோரிக்கைதான் முன்வைக்கப்பட்டது. இந்த முறையும் அதுதான். 

ஆனால் கடந்தமுறை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளில் ஐம்பது விகிதத்தை தாம் நிறைவேற்றிவிட்டதாகவும் மிகுதி ஐம்பது விகிதத்தை நிறைவேற்றவே நேரமும், அவகாசமும் தாருங்கள் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை மஹிந்த சமரசிங்க, அமைச்சர் ஜி. எல். பீரிஸ் மற்றும் அன்றைய அமைச்சரவை சட்ட ஆலோசகர் மொஹான் பீரிஸ் ஆகியோர் கூட்டாக சொன்னார்கள். இது உண்மைக்கு புறம்பான அப்பட்டமான கூற்று என அப்போதே சொன்னோம். 

ஐநா சபையில் எதையாவது சொல்லிவிட்டு திரும்பி வாருங்கள்; பிறகு அடுத்த சந்தர்ப்பம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பதுதான் ஐநா தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிரந்தர கொள்கை. ஆனால், அந்த அடுத்த சந்தர்ப்பம் மீண்டும் இன்று வந்துவிட்ட நிலையில், இன்று மீண்டும் அதே கோரிக்கையை மகிந்த சமரசிங்க முன்வைத்துள்ளார். 

இலங்கை அரசாங்கம், A9 நெடுஞ்சாலையை திறந்து விடவேண்டும் என்ற ஒரேயொரு கற்றுக்கொண்ட ஆணைக்குழு பரிந்துரையை மட்டுமே இதுவரையில் நிறைவேற்றியுள்ளது. உண்மையில் கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கை வெளிவரும் முன்னரேயே இந்த A9 பாதை ஏறக்குறைய திறந்துவிடப்பட்டிருந்தது. இன்று அது புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை திறப்பு அரசாங்கத்துக்கு அரசியல் இராணுவ ரீதியாக தேவையாகவும் இருக்கிறது. 

இதைதவிர ஏனைய கற்றுக்கொண்ட ஆணைக்குழு பரிந்துரைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தடுத்துவைக்கப்பட்டிருப்போர், காணாமல் போனோர், சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு, திட்டமிட்ட குடியேற்றம், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு உட்பட பல முக்கியமான பரிந்துரைகளை தொட்டும் பார்க்கவில்லை சிலவற்றை மேலோட்டமாக பார்த்துள்ளது. இதுதான் உண்மை. இந்நிலையில் மஹந்த சமரசிங்கவின் ஐநா உரையை உலகம் ஏற்றுகொள்ள முடியாது. 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

A9 பாதையை திறந்தது மட்டுமே அரசு நிறைவேற்றியுள்ள ஒரேயொரு LLRC பரிந்துரை – மனோ

 

mano-150-225x300.jpgஇலங்கை அரசாங்கம், தனது கற்றுக்கொண்ட ஆணைக்குழு பரிந்துரைகளில், A9 நெடுஞ்சாலையை திறந்து விடவேண்டும் என்ற ஒரேயொரு பரிந்துரையை மட்டுமே இதுவரையில் நிறைவேற்றியுள்ளது. ஏனைய பல பரிந்துரைகளை தொட்டும் பார்கவில்லை சிலவற்றை மேலோட்டமாக பார்த்துள்ளது. இதுதான் உண்மை.

இந்த நிலையில்தான், “எதுவும் எங்களுக்கு சொல்லித்தரவும் வேண்டாம், கற்றுத்தரவும் வேண்டாம், எங்களுக்கு நேரமும், அவகாசமும் மாத்திரம் தாருங்கள்” என்று எங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அடிப்படையிலான இறுமாப்பான உரையை இலங்கை அரசாங்க பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க மனித உரிமை ஆணைக்குழுவில் ஆற்றியுள்ளார். அவரது பேச்சின் உள்ளடக்கம் இதைதான் கூறுகிறது.

இதுதான். ஐநா சபைக்கும், உலகத்துக்கும் இலங்கை அரசாங்கம் அனுப்பியுள்ள செய்தி. இது இலங்கையிலே தமிழ் மக்களிடம், “நீங்கள் ஐநாவுக்கும், உலகத்துக்கும் சென்று முறையீடு செய்யாதீர்கள்” என்று சொல்லப்படும் செய்தியின் மறுபக்கம்.

இந்த இரண்டுமே கேட்டு, கேட்டு சலித்துப்போன பழைய பஞ்சாங்க பல்லவி என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐநாவில் அரசாங்க பிரதிநிதி குழுவின் தலைவர் மகிந்த சமரசிங்க ஆற்றியுள்ள அரசாங்கத்தின் ஐநா கொள்கை உரை தொடர்பாக கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

கடந்த முறையும் இதே “டைம் அண்ட் ஸ்பேஸ்” என்ற நேரமும், அவகாசமும் என்ற கோரிக்கைதான் முன்வைக்கப்பட்டது. இந்த முறையும் அதுதான்.

ஆனால் கடந்தமுறை, கற்றுக்கொண்ட ஆணைக்குழு பரிந்துரைகளில் ஐம்பது விகிதத்தை தாம் நிறைவேற்றிவிட்டதாகவும் மிகுதி ஐம்பது விகிதத்தை நிறைவேற்றவே நேரமும், அவகாசமும் தாருங்கள் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை மகிந்த சமரசிங்க, அமைச்சர் ஜி. எல். பீரிஸ் மற்றும் அன்றைய அமைச்சரவை சட்ட ஆலோசகர் மொஹான் பீரிஸ் ஆகியோர் கூட்டாக சொன்னார்கள். இது உண்மைக்கு புறம்பான அப்பட்டமான கூற்று என அப்போதே சொன்னோம்.

ஐநா சபையில் எதையாவது சொல்லிவிட்டு திரும்பி வாருங்கள்; பிறகு அடுத்த சந்தர்ப்பம் வரும்போது பார்த்துகொள்ளலாம் என்பதுதான் ஐநா தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிரந்தர கொள்கை. ஆனால், அந்த அடுத்த சந்தர்ப்பம் மீண்டும் இன்று வந்துவிட்ட நிலையில், இன்று மீண்டும் அதே கோரிக்கையை மகிந்த சமரசிங்க முன்வைத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம், A9 நெடுஞ்சாலையை திறந்து விடவேண்டும் என்ற ஒரேயொரு கற்றுக்கொண்ட ஆணைக்குழு பரிந்துரையை மட்டுமே இதுவரையில் நிறைவேற்றியுள்ளது. உண்மையில் கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கை வெளிவரும் முன்னரேயே இந்த A9 பாதை ஏறக்குறைய திறந்துவிடப்பட்டிருந்தது. இன்று அது புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை திறப்பு அரசாங்கத்துக்கு அரசியல் இராணுவ ரீதியாக தேவையாகவும் இருக்கிறது.

இதைதவிர ஏனைய கற்றுக்கொண்ட ஆணைக்குழு பரிந்துரைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தடுத்துவைக்கப்பட்டிருப்போர், காணாமல் போனோர், சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு, திட்டமிட்ட குடியேற்றம், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு உட்பட பல முக்கியமான பரிந்துரைகளை தொட்டும் பார்க்கவில்லை சிலவற்றை மேலோட்டமாக பார்த்துள்ளது. இதுதான் உண்மை. இந்நிலையில் மகிந்த சமரசிங்கவின் ஐநா உரையை உலகம் ஏற்றுகொள்ள முடியாது.

http://tamilleader.com/?p=6537

"வரலாற்று தவறுகளிலிருந்து சிங்களவர் மட்டுமல்ல நாமும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்'

 

ஜனநாயக தமிழ்த் தலைவர்களை நிராகரித்து அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை 1950 களிலும் 1960 களிலும் தூக்கி எறிந்த கடந்த கால தவறுகளில் இருந்து சிங்கள அரசியல் தலைவர்கள் பாடம் கற்க வேண்டும். அதேபோல் இந்திய  இலங்கை  ஒப்பந்தத்தின் போது 1980 களில் கிடைத்த சந்தர்ப்பத்தையும் கடந்த ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின் போது 2003 இல் ஐக்கிய இலங்கைக்குள் அதிகபட்ச  அதிகாரப் பகிர்வு தீர்வு உருவாகும் சந்தர்ப்பத்தையும் தவறவிட்ட கடந்த கால தவறுகளில் இருந்து தமிழ்த் தலைவர்கள் பாடம் கற்க வேண்டும்.

நாமும் கற்க வேண்டும். அவர்களையும் கற்கச் செய்ய வேண்டும். இது தான் எதிர்காலத்தை நோக்கிய எமது பயணத்திற்கான படிப்பினை. இதனை புதிய தலைமுறையைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ளுவீர்கள் என நம்புவதாக ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

 

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் மனோ கணேசன் உரையாற்றினார். ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. கரு ஜயசூரிய , மாகாண சபை உறுப்பினர் ஷிரால் லக்திலக ஆகியோரும் கலந்து கொண்ட நிகழ்வில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது ;

 

அரசியல் அமைப்பில் உள்ள 13 ஆம் திருத்தம் அண்ணன் என்றால், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் தம்பியாகும். இந்த அண்ணனும் தம்பியும் தமிழர்களாகிய எமது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைத் தரவில்லை. இது எனக்குத் தெரியும்.

 

ஆனால், நாம் வரலாற்றில் இருந்து பாடம் படித்துள்ளோம். அந்தப் பாடம் இந்த இரண்டு ஆவணங்களையும் இரண்டு அடிப்படைகளாகக் கொண்டு நாம் முன்னேறிச் செல்ல வேண்டுமெனக் கூறுகின்றது. இதை புதிய தலைமுறையைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ளுவீர்கள் என நம்புகின்றேன்.

 

இங்கு உ ரையாற்றிய ஷிரால் லக்திலக, நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை பரிந்துரைகளையும் இன்று ஜெனீவாவில் நடக்கும் மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தையும் நிராகரித்தார். இவற்றால் நமக்கு எந்த ஒரு பிரயோசனமும் இல்லை என்றார். அத்துடன் தமிழர்களும் , சிங்களவர்களும் இனத்துவ அரசியலை கைவிட்டு பொது அரசியல் செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.

 

நண்பர் ஷிரால் லக்திலகவின் இந்தக் கருத்துகளை முற்றாக நிராகரிக்கிறேன். நான் ஏற்கனவே சொன்னது போல் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் எமது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை தரவில்லை என்பது உண்மை. ஆகவே அதை நான் முற்றாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், அது  ஒரு ஆரம்பம்.
அது எமக்கு இன்று ஒரு ஆயுதம். அது இந்த அரசு தயாரித்த ஆயுதம். அதை வைத்தே நாம் இவர்களை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும்.

 

அதேபோல் தான் 13 ஆம் திருத்தம் எமக்கு கிடைத்துள்ள இன்னொரு ஆயுதம். அதையும் ஒரு ஆரம்பமாகக் கொள்வோம். அதேபோல் தான் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு கூட்டம்.
இதுவும் எமக்கு கிடைத்துள்ள ஒரு ஆயுதம். இவை மூலம் நமக்கு முழுமையான தீர்வுகள் கிடைத்துவிடும் என நான் சொல்லவில்லை. எனது கருத்தை கல்வியறிவு கொண்ட நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

 

நல்லிணக்க  ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளையும் 13 ஆம் திருத்தத்தையும் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டத்தையும் நிராகரிக்கச் சொல்பவர்களிடம் கவனமாக இருங்கள். இவர்கள் எமக்கு இன்று எஞ்சி இருக்கும் ஒரு சில வாய்ப்புகளையும் கூட கைவிட சொல்கிறார்கள்.

 

ஜனநாயக தமிழ்த் தலைவர்களை நிராகரித்த கடந்த  கால தவறுகளில் இருந்து சிங்கள அரசியல் தலைவர்கள்  பாடம் கற்க வேண்டும். அதேபோல் கடந்த  கால சந்தர்ப்பங்களை தவற விட்ட கடந்த கால தவறுகளில் இருந்து தமிழ் தலைவர்கள் பாடம் கற்க வேண்டும். நாமும் கற்க வேண்டும்.  அவர்களையும் கற்கச் செய்ய வேண்டும். இதுதான் எதிர்காலத்தை நோக்கிய எமது பயணத்திற்கான படிப்பினை. இதை புதிய தலைமுறையைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ளுவீர்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=3160:q--------&catid=54:local&Itemid=458

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.