Jump to content

இந்திய அரசின் தடுமாற்றமும் சுவாமியின் அதிரடி வருகையும் (சமகாலப் பார்வை)


Recommended Posts

இந்திய அரசியலில் ஒரு கோமாளி என வர்ணிக்கப்பட்டாலும், சுப்பிரமணிய சுவாமியின் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. அரசியலில் அவர் பிரபலமான தரகர். ஒரு தேநீர் விருந்தை நடத்தியே ஆட்சியைக் கவிழ்த்த பெருமைக்குரியவர். இதனைவிட ஈழப் பிரச்சினையில் அவரது கோட்பாடு என்ன என்பது வாசகர்களுக்குத் தெரியாததல்ல. இந்தப் பின்னணியில்தான் இந்திய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமியின் திடீர் கொழும்பு விஜயம் இராஜதந்திர வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
 
அண்மைக்காலமாக இந்தியத் தொலைக்காட்சி விவாதங்களில் தோன்றி இலங்கை அரசை நியாயப்படுத்திவந்த சுப்பிரமணியம் சுவாமி திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வியாழக்கிழமை கொழும்பு வந்தார். வந்த உடனடியாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகைக்குச் சென்று சந்தித்தார். இரு தரப்பினரும் என்ன பேசினார்கள் என்பது வெளிப்படுத்தப்படவில்லை. அடுத்ததாக இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தாவைச் சந்தித்த பின்னர் உடனடியாகவே அவர் இந்தியா திரும்பிவிட்டார்.
 
இவற்றைவிட அவரது நிகழ்ச்சி நிரலில் எதுவும் இருக்கவில்லை. அதனைவிட அவரது விஜயம் உத்தியோகபூர்வமானதா அல்லது தனிப்பட்ட விஜயமா என்பதும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு வர வேண்டிய தேவை ஒன்று அவருக்கு இருக்கவில்லை. ஆக, இது தனிப்பட்ட ஒரு விஜயமாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால், தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்த சுவாமிக்கு அலரிமாளிகையில் செங்கம்பளம் விரிக்கப்பட்டது எதற்காக?
 
சுவாமியின் விஜயம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட காரணங்கள் உள்ளன. அதுவும் ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ள பிரேரணை தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் டில்லி திண்டாடிக்கொண்டுள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்தத் திடீர் விஜயமும் இரகசியப் பேச்சுக்களும் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.
 
டில்லிக்கும் கொழும்புக்கும் இடையில் புதிய ‘டீல்” ஒன்றைக் கொண்டுவருவதற்கான தனது ‘தரகர் வேலை’யை சுவாமி முன்னெடுக்கின்றாரா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகின்றது. வழமையாக கொழும்புக்கும் டில்லிக்கும் இடையில் இவ்வாறான ‘டீல்”களைச் செய்பவராக சென்னையிலிருந்து வெளிவரும் ‘இந்து’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான எம்.ராம் இருந்துள்ளார். இப்போது பதவியில் இல்லாத ராம் செல்வாக்கற்றவாகவும் ஆகிவிட்டார். அந்த இடத்தை சுவாமி பிடித்துக்கொண்டுள்ளார்.
 
ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மற்றொரு பிரேரணை கொண்டுவரப்படும் என அமெரிக்க அறிவித்த கணத்திலிருந்தே அதனை ஆதரிக்க வேண்டும் என்ற அழுத்தங்கள் இந்தியாவின் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் உருவாகியிருந்தது. அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, மனித உரிமை அமைப்புக்கள், ஊடகங்களும் இதற்காகக் குரல் கொடுத்தன. ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த அதிகரித்த அழுத்தங்களின் பின்னணியில்தான் இந்திய அமைச்சர் நாராயணசாமி இந்தப் பிரேரணையை இந்தியா ஆதரிக்கும் என ஒன்றுக்கு மேற்பட்ட தடவை உறுதியளித்திருந்தார். அதேபோல இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் தமிழக காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களைச் சந்தித்த போது இதே பதிலைக் கூறியிருந்தார்.
 
ஆனால், கடந்த புதன்கிழமை இந்தியப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான விவாதத்துக்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், ஜெனீவா பிரேரணை தொடர்பில் இந்தியா தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டார். அது தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது உரிய வேளையில் பாராளுமன்றத்தில் தெரியப்படுத்தப்படும் என்பதுதான் அவரது நிலைப்பாடாக இருந்தது. இது ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதில் இந்தியா தடுமாறுகின்றதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் சுப்பிரமணியம் சுவாமியின் அதிரடியான வருகையும் இந்தச் சந்தேகங்களை அதிகரிப்பதாகவே இருக்கின்றது.
 
கொழும்பு விஜயத்தின்போது, அமெரிக்கப் பிரேரணை தொடர்பாக இலங்கை அஞ்சத் தேவையில்லை என்ற வகையில் சுவாமி தெரிவித்திருந்த கருத்துக்கள் கவனிக்கத்தக்கன. இலங்கையைப் பாதுகாப்பதற்கான பொறிமுறை ஏதாவது இந்தியாவிடம் உள்ளதா என்ற கேள்வியை இது எழுப்புவதாக இருக்கின்றது. கடந்த வருடத்தைப் போல இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சி ஒன்றை இந்தியா மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதற்கான காரணங்கள் உள்ளன.
 
இந்திய மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதோ அல்லது அவர்கள் மீதான நெருக்குவாரங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதோ இரண்டாம் பட்சம்தான். ஈழத் தமிழர்களின் பிரச்சினையைப் பயன்படுத்தி தன்னுடைய பிராந்திய நலன்களைப் பெற்றுக்கொள்வதுதான் அதன் இலக்கு. இந்திரா காந்தியின் காலத்திலிருந்து இலங்கைப் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் மூலோபாயம் இதுதான். இது தொடர்பான தமது இலக்கை அடைவதற்காகத்தான் இன நெருக்கடியை இந்தியா பயன்படுத்திவந்துள்ளது.
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவைக் கொண்டுவந்து வைத்திருப்பதுதான் இந்தியாவின் இன்றைய தலையிடி. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைதான் இந்தியாவிடம் இன்றுள்ள ஒரே துரும்புச் சீட்டு. ராஜபக்ஷவைப் பணிய வைப்பதற்கு இதனைவிட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை என டில்லியில் ஒரு தரப்பினர் கருதுகிறார்கள். இதனை எதற்காகப் பயன்படுத்துவது என்பதில்தான் இந்தியா இன்று குழம்பியிருக்கின்றது. அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தால் அதன் பின்னர் தமது பிராந்திய நலன்சார்ந்து எதனையும் செய்ய முடியாது என்பது டில்லிக்குத் தெரியும். அதாவது: சீனா மேலும் ராஜபக்ஷவுடன் நெருங்குவதற்கு இது காரணமாகிவிடலாம்.
 
அதாவது, தம்மிடமுள்ள துரும்புச் சீட்டைப் பயன்படுத்தி அதிஉச்ச பலனைப் பெற்றுக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இந்தியாவை இன்று குழப்பும் விடயம். கொழும்புக்கும் இந்தியாவின் இந்தக் குழப்பம் தெரியாததல்ல. அதற்கேற்றவகையில்தான் கொழும்பும் காய் நகர்த்துகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவை வைத்துள்ள இந்திய இராஜதந்திரிகள் சிலரும் இதன் பின்னணியில் இயங்குவதாகத் தெரிகின்றது. இவை அனைத்தினதும் உச்ச கட்டமாகத்தான் சுப்பிரமணியம் சுவாமியின் அதிரடி வருகை அமைந்திருந்தது என பல்வேறு தரப்பினருடனும் தொடர்புகளைக் கொண்டுள்ள அரசியல் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.
 
ஜனாதிபதியுடன் சுவாமி பேச்சுக்களை நடத்திய போது பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ மட்டும்தான் அவருடன் இருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. இதிலும் ஒரு செய்தி உள்ளது!
 
- கொழும்பிலிருந்து தமிழ்லீடருக்காக பார்த்தீபன்.
Link to comment
Share on other sites

 அதாவது, தம்மிடமுள்ள துரும்புச் சீட்டைப் பயன்படுத்தி அதிஉச்ச பலனைப் பெற்றுக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இந்தியாவை இன்று குழப்பும் விடயம். கொழும்புக்கும் இந்தியாவின் இந்தக் குழப்பம் தெரியாததல்ல. அதற்கேற்றவகையில்தான் கொழும்பும் காய் நகர்த்துகின்றது.

 

 

உப்புச்சப்பு இல்லாத பதின்மூன்றாவது திருத்த சட்டத்தையே இந்தியாவால் அமுல்படுத்த முடியுமா?

 

இந்தியாவுக்கு சீனாவுடன் மகிந்த கூட்டம் மேலும் இறுக்கமாக சேர்ந்து விடுமா என்ற பயம் இருக்கலாம். ஆனால் அந்த பயத்தை தானே உருவாக்கியது.

 

 

இந்த விடயங்களில் அமெரிக்க அரசு இந்தியாவை விட தெளிவாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்த நால்வர் கைது! நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் தம்பதியினர் உட்பட நால்வரை பிலியந்தலை, படகெத்தர பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸாரின்  விசாரணையில் ” குறித்த சீன நிறுவனத்திற்கு தரம் மற்றும் செயல்திறனைப் பொறுத்து ஒரு வீடியோவிற்கு 50,000 முதல் 100,000  ரூபாய்  வரையில்  சந்தேக நபர்கள் விற்பனை செய்து வந்துள்ளமை” தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388415
    • Published By: DIGITAL DESK 7 17 JUN, 2024 | 02:46 PM   முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 3389 தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்றையதினம் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வடமாகாணத்திலே 2415 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம். கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு காணி இல்லை. ஏற்கனவே விடுதலைபுலிகள் மௌனிக்கப்பட்ட காலங்களிற்கு பின்னர் பூர்விகமான மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்து. 4238 சிங்கள  குடும்பங்களுக்கு காணிகள் வழங்கி வீட்டு வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அரசாங்கம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்தே வழங்கியிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் 47455 மொத்த குடும்பங்களும், 140931 மக்கள் தொகையாக காணப்படுகின்றது. இதில் தமிழர்களுடைய பூர்வீக இடங்களில் 4557 குடியமர்த்தப்பட்ட சிங்கள குடும்பங்களை சேர்ந்த 12545 பேரும், முஸ்லீம் மக்களாக 1675 குடும்பங்களை சேர்ந்த 6382 பேரும் தமிழ் மக்களாக 41210 குடும்பங்களை சேர்ந்த 121799 பேருமாக காணப்படுகிறார்கள்.  குறிப்பிட்டு கூறக்கூடிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு சேர்ந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு 4557 குடும்பங்களில் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் ஆமையன்குளம், முந்திரிகைகுளம், மறிச்சுக்கட்டி குளம் ஆகிய குளங்களையும் அதனோடு இணைந்த நிலப்பரப்புகளையும் அபகரித்தே சிங்கள மக்களுக்கு வழங்கி தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையும், குளங்களையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் நிலமையை ஆட்சியாளர்கள் கொக்குத்தொடுவாய் , கொக்குளாய், கருநாட்டுக்கேணி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள். இது தவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 28676 இளைஞர், யுவதிகள் தமக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் தருமாறு விண்ணப்பித்த ஒரு நடவடிக்கை இருக்கின்றது. அரசாங்கமே விண்ணப்பிக்குமாறு அறிவித்தல் வழங்கியிருந்தார்கள். ஆனால் இன்றுவரைக்கும் அவர்களுக்கான எதுவித காணிகளும் வழங்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/186265
    • 17 JUN, 2024 | 02:28 PM ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிப்பதன் மூலமே வெற்றிக்கான வாய்ப்பாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் புனரமைக்கப்பட்ட வீதி திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் தாளங்குடா கடற்கரை வீதி சுமார் 92இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.   கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.   இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சணாகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.      இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர், இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இன்று எந்த கட்சியுமே பலமான நிலையில் இல்லை. ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும்போது சக்திவாய்ந்த தலைவர் ஒருவரை இந்த நாட்டில் தேர்வுசெய்யமுடியும். யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்கு 51வீதமான வாக்குகள் தேவையாகவுள்ளது. அவ்வாறான வாக்குகளைப்பெறும் நிலையானது இன்றைய நிலையில் எந்த கட்சியனாலும் கடுமையான போட்டியாகவே இருக்கும். அதனால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைவரும் இன்றிணையும்போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/186267
    • ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மொத்த மதிப்பெண்ணை இனிமேல் பரீட்சையின் வினாத்தாள்களில் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (ஜூன் 16) தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், 1-6-10 முன்னோடித் திட்டங்களின் கீழ் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையில் 30% புள்ளிகள் தரம் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் பெற்ற கல்வியின் மூலம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இதை முறையாக மதிப்பிடுவது ஆசிரியரின் பொறுப்பு என்றும், பாடசாலை நிர்வாகத்தினர் ஆசிரியர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். புதிய உலகின் கல்விப் போக்குகளை மனதில் கொண்டு இந்தக் கல்வி முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார். நாத்தாண்டிய தம்மிஸ்ஸர வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடி தொழில்நுட்ப கட்டிடத்தை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 2500 அதிநவீன ‘ஸ்மார்ட் போர்டுகள்’ வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடசாகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, நட்பு ரீதியான கல்வி வாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒரே வலையமைப்பில் இணைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடர்பான ஆசிரியர் கையேடு பாட நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப சுற்றில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கணிதம், இரசாயனவியல், பௌதீகம், உயிரியல், சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஊடகம் மற்றும் தொழிநுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/303970
    • உலகம் முழுவதும் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை ஹஜ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் பரந்து விரிந்த அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம் (முதலாவது கிறிஸ்துவம்) ஆகும் . இந்நிலையில் இன்று ஹஜ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தேசியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது உள்ள உலக நடப்பின்படி இஸ்லாமிய மக்களைக்கொண்ட பாலஸ்தீன நாட்டின்மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் இதுவரை சுமார் 37,000 மக்கள் பலியாகியுள்ளனர். வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட மசூதிகளே காஸாவில் மிஞ்சுகின்றன. முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பண்டிகையாக இது அமைகிறது . தற்காலிகமாக தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திவைத்துள்ளதால் சற்று ஆசுவாசப்பட அவர்களுக்கு கிடைத்துள்ள நேரம் இது. அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் வர உள்ள நிலையில் காஸா போர் நிறுத்தத்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். இன்று ஹஜ் பண்டிகையை முன்னிட்டு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்த்துச் செய்தி ஒன்றை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த போரின் கொடூரங்களை நிறுத்துவதற்கான சரியான மற்றும் சிறந்த வழி இதுதான். ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அப்பாவி மக்களும் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். தங்களின் வீடுகளையும் சொந்தங்களையும் இழந்து நிற்கும் அம்மக்களின் வலி மிகவும் ஆழமானது. 3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். இதற்கு ஹமாஸும், இஸ்ரேல் அரசும் உடன்பட்டு இந்த வன்முறை வெறியாட்டங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். இறைத்தூதர் இப்ராஹிம் கடவுளுக்காக தனது மகனையே தியாகம் செய்ய முன்வந்த இந்த ஹஜ் திருநாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/303943
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.