Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகுலுடன் தமிழக காங்கிரஸார் சந்தித்து ஆலோசனை

Featured Replies

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை தமிழக காங்கிரஸார் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மக்களவை எம்.பிக்கள் 8 பேர், மாநிலங்களை எம்.பி.க்கள் 4 பேர், அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன், சிதம்பரம் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் சுமார் 30 நிமிடங்களுக்கு நீண்டது.

 

தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து அவர்களிடம் ராகுல் கேட்டறிந்ததாகவும், அது தொடர்பாக விவாதம் நடைபெற்றதாகவும் தெரிகிறது.

 

மேலும், இலங்கை விவகாரம், இலங்கை விவகாரத்தில் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை ஆகியவை குறித்து கேட்டறிந்தாராம். மேலும், இலங்கை விவகாரத்தில் திமுக நிலை குறித்து ராகுல் விசாரித்ததாகத் தெரிகிறது.


காங்கிரஸ் துணைத்தலைவராக ராகுல் பொறுப்பேற்றதற்குப் பிறகு முதல் முறையாக அவர் தமிழக காங்கிரஸாரைச் சந்தித்தார். இதுதொடர்பாக தொடர் கூட்டங்களை அவர் நடத்த எண்ணியுள்ளார். அதில் முதல் குழுவாக தமிழக காங்கிரஸாரிடம் அவர் ஆலோசனைக்காக அழைத்துள்ளார். இதன்பின்னர் தில்லி காங்கிரஸார், அமைச்சர்கள், எம்.பி,க்கள் உள்பட பலர் ராகுலுடன் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றனர்.

 

http://dinamani.com/latest_news/article1487938.ece


தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை: இலங்கைக்கு எதிரான தீர்மானம்




First Published : 05 March 2013 03:02 AM IST

 

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும்

தீர்மானம், அது தொடர்பாக தமிழகத்தில் "டெசோ' அமைப்பு நடத்தி வரும்
போராட்டங்கள் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள்,
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி
திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.


தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலக அறையில் ராகுல்
காந்தியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான
பி.எஸ். ஞானதேசிகன் தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்தித்தனர். 
மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், மக்களவை
உறுப்பினர்கள் என்.எஸ்.வி. சித்தன், எம். கிருஷ்ணசாமி, கே.எஸ். அழகிரி,
ஜே.எம். ஆரூண், எஸ்.எஸ். ராமசுப்பு, பி. விஸ்வநாதன், மாணிக்கம் தாகூர்,
மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் இந்தக் குழுவில்
இடம்பெற்றிருந்தனர்.


தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் இந்த சந்திப்பின்போது உடனிருந்தார்.


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு
தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்களையும் மத்திய அமைச்சர்களையும்
ராகுல் காந்தி சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.


முக்கியமான பேச்சு: இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக ஜெனீவாவில் உள்ள
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா
கொண்டு வரும் தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலையை காங்கிரஸ்
உறுப்பினர்கள் வினவியதாகத் தெரிகிறது.


அப்போது பேசிய உறுப்பினர்கள், ""மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான
கூட்டணி அரசில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை அங்கம்
வகிக்கின்றன. இந்தக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழ் ஈழ ஆதரவு இயக்கம் (டெசோ)
என்ற அமைப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.


அந்த அமைப்பு சார்பில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க
வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தில்லியில் வரும்
7-ம் தேதி "டெசோ' சார்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ்
பங்கேற்கலாமா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்'' என்று அவர்கள்
ராகுலிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.


சிதம்பரம் விளக்கம்: இதையடுத்து, இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக
மத்திய அரசின் நிலை என்ன என்று மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம் ராகுல்
காந்தி கேட்டதாகவும் அதற்கு அவர் சில விளக்கங்களை அளித்ததாகவும் தெரிகிறது.


 ""கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு
வந்தபோது இலங்கை அரசு நியமித்த படிப்பினை நல்லிணக்க ஆணையக் குழு
(எல்எல்ஆர்சி) அளித்த  பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று
வலியுறுத்தும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரித்தது.


அதன் பிறகு கடந்த ஓராண்டில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால்,
தற்போதைய ஜெனீவா கூட்டத்தில் அமெரிக்கா தாக்கல் செய்யும் தீர்மானத்தின்
முழு விவரம் கிடைத்ததும் மத்திய அரசு நல்ல முடிவை எடுக்கும்''
என்று
சிதம்பரம் கூறியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


ராகுல் பதில்: இதையடுத்து பேசிய ராகுல் காந்தி, ""இலங்கைத் தமிழரின்
நலன்களில் காங்கிரஸ் கட்சிக்கு முழு ஈடுபாடும் அக்கறையும் உள்ளது.


அதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை எடுக்கும்படி மத்திய அரசை காங்கிரஸ்
வலியுறுத்தும். மற்றபடி "டெசோ' கருத்தரங்கில் காங்கிரஸ் தலைவர்கள்
பங்கேற்பது குறித்து கட்சி மேலிடத்திடம் கேட்டறிந்து குலாம் நபி ஆசாத்
தெரிவிப்பார்'' என்று கூறியதாகத் தெரிகிறது.


ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள 47 உறுப்பு நாடுகளில் சுமார் 30
நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறியுள்ளன. இந்த
நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை இதுவரை
தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.


http://dinamani.com/tamilnadu/article1488520.ece
 

 

  • தொடங்கியவர்

இராகுல் எடுக்கும் முடிவு தமிழகம் உட்பட்ட உலகத்தமிழர்கள் அவரைப்பற்றிய சரித்திரத்தை எழுத காரணமாக அமையும்.

  • தொடங்கியவர்

TN MPs meet Rahul on Lanka issue, pitch for tough stand

 

 

Congress MPs from Tamil Nadu on Monday told Rahul Gandhi that India should take a tough stand against Sri Lanka at the upcoming UN meet on Tamils issue as it was crucial for the party's future in the state.

 

Party sources said that the MPs including Union Ministers P Chidamabaram, G K Vasan and Jayanthi Natarajan and PCC Chief B S Gnanadesikan wanted India to support the resolution at the UN Human Rights Commission on the Sri Lankan Tamil's issue and found the party Vice-President "very sympathetic" to the cause of Tamils.

 

Though the meeting was customary affair following the start of the budget session of Parliament, MPs utilised the opportunity to impress upon the leadership that the Sri Lankan Tamils issue needed to be tackled strongly. They also raised the issue of fishermen from Tamil Nadu getting killed by Sri Lankan Navy as also the general political situation in the state. The MPs said that Gandhi was told of the problems faced by Sri Lankan Tamils and the need for a political reconciliation and implementation of the 13th Amendment. The meeting came in the wake of Dravidian parties, DMK and AIADMK, making the Tamil problem a major issue in state politics and putting pressure on the Centre to take a tough stand in the UN Human Rights Commission. India has already said that there should be accountability for such issues but has remained evasive on the position it will take at the UN on a resolution against that country.

 

The DMK, a key UPA constituent, had said in the Rajya Sabha last week that it has lost faith in the government on the issue and its members had staged a walkout along with those from AIADMK and Left, dissatisfied with External Affairs Minister Salman Khurshid's reply to the debate on the plight of Tamils in Sri Lanka.

 

The Congress has 12 MPs in the state.

 

Read more at: http://news.oneindia.in/2013/03/04/tnmps-meet-rahul-on-lanka-issue-pitch-for-toughstand-1163869.html

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.