Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் 15,000 சிங்களவர் மீள்குடியேற்றப்படுவர்: அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Govt_logo(2).jpg
-றிப்தி அலி

மீள்குடியேற்ற செயற்பாடு முடிவடையும் காலத்தை வரையறுத்து கூற முடியாது என்பதுடன் வடக்கில் 15,000 சிங்களவர்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது "மீள்குடியேற்றமே' தவிர 'மீள்குடியமர்த்தல்" அல்ல என வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரத்ன நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

இவர்கள் வெலிஓயா, பதவியா மற்றும் வவுனியா தெற்கு ஆகிய பகுதிகளிலேயே மீள்குடியேற்றப்பட்டவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள சிங்கவர்களுக்காக 850 வீடுகளை அரசாங்கம் நிர்மாணிக்கவுள்ளது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாச தெரிவித்தார்.

"இதில் முதற் கட்டமாக 500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் இவற்றின் நிர்மாணப் பணிகள் முடிவடையும் நிலையிலுள்ளன. இந்த புதிய வீடுகளின் திறப்பு விழா இன்னும் ஓரிரு மாதங்களில் இடம்பெறவுள்ளது" என அவர் குறிப்பிட்டார்.

இந்த வீடுகள் வெலிஓயா பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்றன. இந்த 500 வீடுகளும் நான்கு கிராமங்களை உள்ளடக்கியதாகவுள்ளன என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இதுபோன்ற வீடுகள் பதவியா பிரதேசத்திலும் நிர்மாணிக்கப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரத்ன மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாச ஆகியோர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

வட மாகாண அபிவிருத்திக்காக 2,569 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அரசாங்கம் செலவளிக்கவுள்ளது.இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு உதவிகளும் கிடைக்கும் என்றும் வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரத்ன தெரிவித்தார்.

எனினும் வட மாகாண அபிவிருத்திக்கு வெளிநாட்டு உதவிகளே அதிகம் வழங்கப்படுகின்றன. இவை நிதியுதவி மற்றும் கடன் ஆகிய இரண்டு வகைகளில் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதில் கடன்கள் குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் வெளிநாடுகளினால் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது வடக்கில் 42 நலன்புரி நிலையங்கள் மாத்திரமே உள்ளன என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாச தெரிவித்தார்.

எனினும் இவை சிறிய கிராமங்கள் என்றே அழைக்கப்படுகின்றது. ஏனென்றால் இங்கு மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியவசிய வசதிகளும் மேற்கொள்ளப்பட்டள்ளன என அவர் குறிப்பிட்டார்.

"இவற்றில் சுமார் 400 குடும்பங்களே உள்ளன. இவர்கள் ஆரம்ப காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களாவர். எனினும் இறுதிக் கட்ட யுத்ததின்போது வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்" என செயலாளர் ஜானக சுகததாச தெரிவித்தார்.

"இதற்கு மேலதிகமாக பல்லாயிரக்கணக்கானோர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் இந்தியவிலுள்ள நலன்புரி நிலையங்களிலும் உள்ளனர். அத்துடன் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் மீள்குடியேற்றபட வேண்டியுள்ளனர்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

'இவற்றில் முஸ்லிம்கள் மன்னார் மாவட்டத்தின் முசலி உள்ளிட்ட பல இடங்களில் மீள்குடியேற்றப்படுகின்றனர். எனினும் இவர்கள் காணி விடயத்தில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்' என்றும் எஸ்.பி.திவாரத்ன தெரிவித்தார்.

"அதாவது இவர்களின் காணிகள் விடுதலை புலிகளினால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களை மீள்குடியேற்றப்படும் போது அவர்களின் காணிகளில் ஏனையோர் உள்ளனர். இதனால் பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதற்காக அரசாங்கம் மாற்று திட்டங்களை மேற்கொண்டுள்ளது" என அவர் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்ற செயற்பாட்டை முடிவடையும் காலத்தை வரையாறுத்து கூற முடியாது அது ஏனெனில் இது பாரிய செயற்பாடொன்றாகும்'  என்றும் அவர் தெரிவித்தார்.

"இதற்கு மேலதிமாக திருகோணமலை சம்பூரிலும் பல குடும்பங்கள் மீள்குடியேற்ற வேண்டியுள்ளனர். எனினும் குறித்த பிரதேசம் முதலீட்டு வலயமாக மாற்றப்படுவதானல் இவர்களுக்கு மாற்று நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. 

எனினும் அவற்றை அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் இவற்றில் 56 குடும்பங்கள் அண்மையில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்பில் பேச்சு நடத்தி நஷ்டஈடு வழங்கப்படும்" என அவர் குறிப்பிட்டார். 

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளோம் என எஸ்.பி.திவாரத்ன தெரிவித்தார். இவற்றில் வீதி அபிவிருத்தி, பாடசாலை மற்றும் வைத்தியசாலை நிர்மாணம் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளடக்கபடுகின்றன என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் வட மாகாணத்தில் எந்தவித அதியுயர் பாதுகாப்பு வலயங்களுமில்லை என எஸ்.பி.திவாரத்ன தெரிவித்தார்.

"எனினும் யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை பிரதேசத்தில் மாத்திரமே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளன. இவை சிறியளவானதே. அதாவது தெல்லிப்பளை பிரதேசம் 17 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக உள்ளது" என அவர் குறிப்பிட்டார்.

வட மாகாணத்தில் முன்னர் காணப்பட்டதை விட சிறிய அளவிலேயே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் காணப்படுகின்றன. இவை பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60116--15000-.html

  • கருத்துக்கள உறவுகள்

15 ஆயிரம் சிங்களக் குடும்பங்களை வடக்கில் குடியேற்றுவதில் அரசு திடம்; அவர்களுக்கு வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்படும்
home.jpg

வடக்கில் 15 ஆயிரம் சிங்கள மக்களை குடியேற்றவுள்ளதுடன், குடியேறவுள்ள மக்களுக்கு வீடுகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. 

 
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவியைப் பயன்படுத்தியே இவை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துகொண்ட வடமாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரத்ன, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாச ஆகிய இருவருமே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். 
 
அங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:
 
உள்நாட்டுப் போரின் காரணமாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம்  மக்களை மீள்குடியேற்ற வேண்டியுள்ளது. 
 
இதற்கமைய வடமாகாணத்தில் 15 ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படவுள்ளன. இது மீள்குடியேற்றமே தவிர "மீள்குடியமர்தல்' அல்ல. 
 
வடக்கின் எல்லைக் கிராமங்களான பதவியா, வவுனியா தெற்கு மற்றும் முல்லைத்தீவுடன் புதிதாக இணைக்கப்பட்ட வெலிஓயா பிரதேச செயலர் பிரிவிலேயே சிங்கள மக்களை குடியேற்றவுள்ளோம். 
 
பதவியாவில் ஏற்கனவே விவசாயிகள் என்ற போர்வையில் 2 ஆயிரம் சிங்களக் குடும்பங்களுக்குக் காணி வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் விவசாய செய்கை மேற்கொள்வதற்கு உபகரணங்களும் அரசினால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. 
 
இந்த நிலையில் வவுனியா சேமமடு வீதியின் முடிவைத் தொடர்ந்து காட்டுப்பகுதியூடாக வெலிஓயாவை நோக்கிச் செல்லும் பகுதியிலும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகக் காடழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
 
அத்துடன் வடக்கில் குடியேற்றப்படும் சிங்களவர்களுக்காக 850 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. இதில் 500 வீடுகளின் நிர்மாணப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன.  இவை வெலிஓயாப் பகுதி சிங்கள குடியேற்ற மக்களுக்கு உரியது. 
 
இதனைப் போன்றே பதவியா மற்றும் ஏனைய இடங்களில் குடியேறும் சிங்கள மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. இந்த வடமாகாண அபிவிருத்திக்காக இலங்கை அரசு 2.569 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை செலவு செய்யவுள்ளது. இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு உதவிகளும் கிடைக்கும்.
 
பெரும்பாலும் வடமாகாணத்துக்கு வெளிநாட்டு நிதிகளே கிடைக்கின்றன. இவை நிதியுதவி மற்றும் கடனாக வழங்கப்படுகின்றன. மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் பல இடங்களில் குடியேற்றப்படுகின்றனர். எனினும் இவர்கள் காணி விடயத்தில் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். 
 
இவர்களின் காணிகளை தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ளனர். முஸ்லிம்களை குடியேற்றும் போது அவர்களின் காணிகளில் ஏனையோர் உள்ளனர். இதனால் அவர்கள் பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதற்கான மாற்றுத் திட்டங்கள் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 
 
இதனைவிட, திருகோணமலை சம்பூரில் குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளன. எனினும் குறித்த பிரதேசம் முதலீட்டு வலயமாக மாறறப்படுவதனால் இவர்களுக்கு மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
 
மாற்று நடவடிக்கைகளை அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் 56 குடும்பங்களை அண்மையில் மீளக்குடியமர்த்தியுள்ளோம். ஏனையயோர் தொடர்பில் பேச்சு நடத்தி நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=231651884508685439

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாகவே இது நடைபெற்று வருகின்றது

தற்பொழுது அதை  சொல்லி

ஒன்றில் செயற்படுத்த முனைகிறார்கள்

அல்லது

செய்ததை பதிவு செய்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சிங்கள குடியேற்றங்கள் அமெரிக்க இந்திய மௌனமாக இருபது ஏன்? அவர்களின்  மறைமுக ஆதரவு இருக்கிறது என்ற அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை மீள்குடியேற்றம் செய்வதாகக் கூறும் சிங்களத்தின் 

அறிக்கைகளை  மேற்குலகம் நம்பலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.