Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தான் செய்த தவறை தானே உணர்ந்து இலங்கை பிராயச்சித்தம் தேட வேண்டும்; இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவிப்பு

Featured Replies

தான் செய்த தவறை தானே உணர்ந்து இலங்கை பிராயச்சித்தம் தேட வேண்டும்; இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவிப்பு

                                                         8c6c7372608ea6f8df4824af7ca8a993.jpg

                            

                                                        

இலங்கையில் மனித உரிமை

மீறல்கள் நடந்துள்ளமை தொடர்பில் பல ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. தான் செய்த

தவறை இலங்கையே உணர்ந்து பிராயச்சித்தம் தேட வேண்டும். என இந்திய மத்திய

வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற இலங்கை பிரச்சனை குறித்த சிறப்பு

விவாதத்திற்கு பதில் அளித்து உரையாற்றுகையிலேயே குர்ஷித் இவ்வாறு

கூறியுள்ளார்.

அதேவேளை, நட்பு நாடாக இருந்தாலும் செய்த தவறைச் சுட்டிக்காட்டும் துணிவு இந்தியாவுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விவாதத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

விவாதத்தில் பங்குகொண்ட உறுப்பினர்கள் மிகவும் கவனத்துடன் கருத்து

தெரிவித்துள்ளனர். அவையில் பேசிய உறுப்பினர்களின் உணர்வுகளை அரசும்

பங்கெடுத்துக்கொள்கிறது. 27 ஆண்டுகளாக இலங்கையில் பிரச்சனையை தீர்க்க

இந்திய அரசு உதவி வருகிறது. இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதில்

இந்தியா அக்கறை கொண்டுள்ளது.

உண்மையை ஏற்றுக்கொள்ள பரந்த மனம் வேண்டும். கடந்த காலத்தை பின்தள்ளி நாம்

முன்செல்ல வேண்டும். இலங்கை பிரச்சனை தமிழ்நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல.

இந்தியர் அனைவரின் பிரச்சனை. இன்று நாம் செய்யக்கூடியது நாளை நமக்கு எதிராக

திரும்பிவிடக் கூடாது.

பிற நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவதில்லை என்பது இந்தியாவின் கொள்கை.

எந்த நாட்டையும் துண்டாடுவதை நாம் ஆதரிப்பதில்லை. நட்பு நாடாக இருந்தாலும்

செய்வது தவறு என்றால் சுட்டிக்காட்டும் துணிவு இந்தியாவுக்கு உண்டு.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது தொடர்பாக பல ஆதாரங்கள்

வெளியாகி உள்ளன. சம்பந்தப்பட்ட நாடே தாம் செய்த தவறை உணர்ந்து பிராயசித்தம்

செய்ய வேண்டும். போரின்போது பெண்களுக்கு, குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட

கொடுமைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும்

கவனத்தில் கொண்டு தீர்மானத்தை ஆதரிப்பதா, இல்லையா என முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு பேசினார்.

ஆனால், வெளியுறவுத்துறை அமைச்சரின் கூற்றில் திருப்தியடையாத தி.மு.க,

அ.தி.மு.க உறுப்பினர்கள் அமைச்சரின் கூற்றைக் கண்டித்து வெளிநடப்பு

செய்தனர்.

அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனத் தெரிவித்த

அவர்கள் இலங்கைத் தமிழர் விவகாரத்‌தில் ஏற்கனவே கூறிய பதிலையே அமைச்சர்

திரும்ப திரும்ப கூறுகிறார் எனவும் குற்றஞ்சாட்டினர்.

தி.மு.க, அ.தி.மு.க உறுப்பினர்களைத் தொடர்ந்து அவையில் இருந்து பாரதிய ஜனதாக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

http://onlineuthayan.com/News_More.php?id=195681883308507009#

 

இலங்கையில் ஒற்றுமை வந்தால் இந்தியாவை கஸ்மீரை விட்டு வெளியேறத் தேவை இல்லை என்றோ,  சீனாவை தாய்வானுக்குள் போகலாம் என்றோ அமெரிக்கா சொல்லப்போவதில்லை. கஸ்மீரை இந்தியா ஆள்வதற்கு ஈழத்தமிழரை இந்தியா பலிகொடுக்க முடியாது. இது தமிழ் நாட்டில் ஆரம்பித்து மற்றய மாநிலங்களையும் உடைந்து போக வைக்கும் வழிமுறையே. இந்தியா கஸ்மீரை ஏமாற்றி பிடித்ததால் அமெரிக்கா கூறுவது நீதியானதே.

அனைத்து கட்சி தமிழக எம்.பி.க்களும் பா.ஜ.க எம்.பிக்களும் கூட்டாக வெளிநடப்பு செய்துள்ளனர்

 

இலங்கை விவகாரம் தொடர்பில் இந்திய லோக்சபாவில் இன்று வியாழக்கிழமை கடுமையான வாத விவாதங்கள் இடம்பெற்ற நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்து திருப்தியளிக்கவில்லை எனக்கூறி, தி.மு.க, அ.தி.மு.க என அனைத்து கட்சி தமிழக எம்.பி.க்களும் பா.ஜ.க எம்.பிக்களும் கூட்டாக வெளிநடப்பு செய்துள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இதைத் தொடர்ந்து சல்மான் குர்ஷித் மீண்டும் பேசத் தொடங்கியதை அடுத்து, பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.யான யஷ்வந்த் சின்ஹா, 'தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர், 'வீடு கட்டிக் கொடுத்தோம்' என்றார். அவரது பதிலுக்கு அதிருப்தி வெளியிட்ட பா.ஜ.க. எம்.பி.க்களும் தங்களது கண்டனத்தை வெளியிட்டவாறு வெளிநடப்பு செய்துள்ளனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60228-2013-03-07-12-59-47.html

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசை வேரோடும், வேரடிமண்ணோடும் அறுத்து எறிவதுதான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே நன்மை..! இல்லாவிட்டால் தமிழ்நாட்டுக்கு மட்டுமே நன்மை.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காங்கிரசை வேரோடும், வேரடிமண்ணோடும் அறுத்து எறிவதுதான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே நன்மை..! இல்லாவிட்டால் தமிழ்நாட்டுக்குm nanmai illai 

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சைத் தமிழன்..

 

நான் சொல்லவந்தது என்னவென்றால்.. அகில இந்திய அளவில் காங்கிரஸ் துடைத்தொழிக்கப்பட்டால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கு நன்மை.. இல்லாவிட்டால் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் இப்போதைக்கு நன்மை.. ஏனென்றால் தமிழகத்தில்தான் ஏற்கனவே அவர்கள் அழிந்துபோய்விட்டார்களே..! :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி தான் டங்கு...

  • கருத்துக்கள உறவுகள்

விவாதத்தில் பங்குகொண்ட உறுப்பினர்கள் மிகவும் கவனத்துடன் கருத்து

                தெரிவித்துள்ளனர். அவையில் பேசிய உறுப்பினர்களின் உணர்வுகளை அரசும்

                பங்கெடுத்துக்கொள்கிறது. 27 ஆண்டுகளாக இலங்கையில் பிரச்சனையை தீர்க்க

                இந்திய அரசு உதவி வருகிறது.
இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதில்

                இந்தியா அக்கறை கொண்டுள்ளது.

 

முடியல..

 

 

பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.யான யஷ்வந்த் சின்ஹா, 'தமிழர்கள்
சுயமரியாதையுடன் வாழ என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர், 'வீடு கட்டிக் கொடுத்தோம்' என்றார்.

 

 

எப்பா சாமி... இவரை விட  தமிழ்நாட்டை அப்படியே அலேக்க தூக்கி போய் டில்லிக்கு பக்கத்துல வச்சிடணும் என்று சொல்லும் வடிவேலு எவ்வளவே மேல்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.