Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகரித்துவரும் 13வது திருத்தச் சட்டத்தின் மீதான கரிசனை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகரித்துவரும் 13வது திருத்தச் சட்டத்தின் மீதான கரிசனை!

யதீந்திரா
 

ஜெனிவா தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், பிறிதொரு விடயமும் மெதுவாக மேலெழுந்திருக்கிறது. ஜெனிவா பற்றிய விவாதங்களுக்கு நடுவே இது தெரிவதால், பெரியளவில் எவரது கவனத்தையும் பெற்றிருக்கவில்லை. அந்த விடயம் - இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டம் தொடர்பானதாகும். ஜெனிவா பற்றிய விவாதங்களுக்கு நடுவே இது ஏன் குறிப்பாக வெளித்தெரிகிறது. இதற்கும் அமெரிக்கா ஜெனிவாவில் கொண்டுவரவுள்ள பிரேரணைக்கும் உள்ள தொடர்பு என்ன? சில தினங்களுக்கு முன்னர் இது அமெரிக்க நாடாளுமன்றத்திலும் ஒலித்திருக்கிறது.

 

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக், இலங்கை ஜனநாயகத்தில் பின்நோக்கிச் செல்வதாக குறிப்பிட்டிருக்கின்றார். இதற்குரிய சான்றுகளாக, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறியது, மற்றும் முன்னாள் உயர் நீதியரசர் விவகாரம், ஆகிய விடயங்களை அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவிற்கான ஆசிய பசுபிக் உபகுழுவில் உரையாற்றியபோதே பிளேக் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

 

இதற்கு சில தினங்களுக்கு முன்னர், இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய அதன் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், 13வது திருத்தச் சட்டத்தை வலியுறுத்தியிருந்ததையும் இவ்விடத்தில் குறித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இலங்கை தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு இந்திய அரசுக்கு இருப்பதாக குறிப்பிட்டிருந்த குர்சித், தமது சகல அதிகாரபூர்வமான சந்திப்புக்களின் போதும் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இதேவேளை, சில தினங்களுக்கு முன்னர், ஆளும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டு குழுவினரை சந்தித்த இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், தமிழ் மக்களுக்கு 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகளவான அதிகாரங்கள் வழங்கப்படும் என்னும் இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதியில் எந்தவிதமான சமரசங்களும் செய்யப்பட மாட்டாதென்று குறிப்பிட்டிருக்கின்றார்.

 

இதனைத் தொடர்ந்து, அரசியலமைப்பில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமா அல்லது இல்லையா என்பது குறித்து மக்கள் மத்தியில் கருத்தறியும் வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டுமென்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். சமீப நாட்களாக, 13வது திருத்தச்சட்டம் தொடர்பான அவதானம் அதிகரித்திருக்கும் பின்புலத்தில்தான் பாதுகாப்புச் செயலரின் மேற்படி கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன. 13வது திருத்தச் சட்டத்தின் மீதான பிராந்திய, சர்வதேச அவதானம் அதிகரித்திருக்கின்றதொரு சூழலில்தான் மேற்படி அபிப்பிராயம் வெளிவந்திருக்கிறது

 

13வது திருத்தச்சட்டம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் முன்னர் பாதுகாப்புச் செயலரே வெளிப்படுத்தியிருந்தார். கடந்த வருடம் ஒக்டோபரில், 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் அவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் உள்நாட்டிலும் இந்தியாவிலும் விவாதத்துக்குரிய விடயமாக மேலெழுந்தது. 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான அழைப்பை விடுத்திருந்த கோத்தபாய, போர் முடிவடைந்திருக்கின்ற சூழலில் 13வது திருத்தச் சட்டம் அவசியமற்றது என்றும், அது பிரிவினைக்கான சுயாட்சி அடிப்படையைக் கொண்டிருக்கிறதென்றும் குறிப்பிட்டிருந்தார். இதன் எதிரொலியாக, கோத்தபாய புதுடில்லிக்கும் அழைக்கப்பட்டிருந்தார்.

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வு தொடர்பான கூட்டத்தில், இலங்கை தொடர்பான விடயங்கள் அவதானிக்கப்படுவதற்கு ஒரு மாதம் இருந்த நிலையிலேயே மேற்படி இந்திய விஜயம் இடம்பெற்றிருந்தது. தற்போது மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது, அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை இந்தியா ஆதரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ள நிலையிலேயே 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று அவரே குறிப்பிட்டிருக்கின்றார். 13வது திருத்தச் சட்டத்தை அவ்வளவு சுலபமாக நீக்கிவிட முடியாது என்பதையே மேற்படி கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன.

 

1987 இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கில் பூர்வீகமாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களின் சுயாதீனமான வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதே மேற்படி 13வது திருத்தச் சட்டம். எனினும், இதன் மூலம் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்ய முடியாதென்று கூறி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உட்பட பிரதான அரசியல் இயக்கங்கள் இதனை நிராகரித்திருந்தன. தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய மிதவாத தலைமையான தமிழர் விடுதலைக் கூட்டணியும் இதனை நிராகரித்திருந்தது. இவ்வாறு அனைவராலும் நிராகரிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும், பரந்தன் ராஜன் தலைமையிலான ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியும் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டிருந்தது.

 

பிரபாகரன் - பிரேமதாச உடன்பாட்டின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை வெளியேறிய பின்னர், 13வது திருத்தச் சட்டம் என்பது முளையில் வாடிய பயிரானது. கடந்த 2009 மே வரைக்கும் 13வது திருத்தச் சட்டம் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பில் பேச வேண்டிய அவசியம் எவருக்கும் இருந்திருக்கவில்லை. காரணம் விடுதலைப்புலிகள் அதனை அனுமதித்திருக்கவில்லை. விடுதலைப்புலிகளின் அழிவுக்கு பின்னர், தமிழ் மக்களுக்கான தலைமைப் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்ட பின்னர் கூட, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான உறுதியான கருத்துக்கள் எவற்றையும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் அவசியம் என்று கூறியிருக்கின்றார். 13வது திருத்தச் சட்டத்தினை அடியொற்றிய தீர்வொன்றின் மீது கரிசனைகள் அதிகரித்து வருகின்ற சூழலில்தான் சம்பந்தரின் மேற்படி கருத்தும் வெளிவந்திருக்கிறது.

 

13வது திருத்தச் சட்டம் தேவையா அல்லது இல்லையா என்னும் விவாதம் மேலெழுந்தபோது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா 13வது திருத்தச் சட்டமூலம் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு முயற்சியை மேற்கொண்டிருந்தார். மாகாணசபை முறைமைக்கு ஆதரவான நிலைப்பாடுள்ள 32 பாராளுமன்ற உறுப்பினர்களது கையெழுத்து அடங்கிய மகஜரொன்றையும் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மகிந்தவிடம் கையளித்திருந்தார். இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நபரான பாதுகாப்புச் செயலர், 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான அழைப்பை விடுத்த சந்தர்ப்பத்தில் டக்ளசின் மேற்படி முயற்சி குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் மாகாணசபை முறைமையை இல்லாதொழிப்பதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவது அவ்வளவு எளிதல்ல என்னும் உண்மை வீதிக்கு வந்தது.

 

உண்மையில், மேற்படி முயற்சிக்கு கூட்டமைப்பு தலைமையேற்றிருக்க வேண்டும். ஆனால், கூட்டமைப்பின் தலைமையிடமுள்ள தடுமாற்றமே, இது போன்ற முயற்சிகளிலிருந்து அவர்களை விலகியிருக்கச் செய்கிறது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சம்பந்தனிடம் இவ்வாறானதொரு பார்வை இருப்பினும் புற அழுத்தங்களை கருத்தில் கொண்டு அவர் பல்வேறு விடயங்களை விழுங்கிக்கொள்ள வேண்டிய இக்கட்டுக்கு ஆளாகியிருகின்றார் போன்றே தெரிகிறது.

 

13வது திருத்தச் சட்டம் என்பது இலங்கையின் உடனடி அயல்நாடான இந்தியாவின் தலையீட்டினால் கொண்டுவரப்பட்ட ஒரு விடயம். எனவே 13வது திருத்தச் சட்டம் என்பது இரு நாடுகள் தொடர்புபட்ட ஒன்று. வெறுமனே இலங்கை சுயாதீனமாக அதனை நீக்கிவிட முடியாது. உதாரணமாக 13வது திருத்தச் சட்டத்தை இந்தியாவை புறம்தள்ளி இலங்கை அரசு நீக்க முற்படுமாயின், இந்தியாவும் கச்சதீவிற்கான ஒப்பந்தத்தை நீக்க முற்படலாம். இதன் காரணமாகவே, இந்தியா தொடர்ந்தும் 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வொன்றுக்கான அழுத்தத்தை வழங்கி வருகிறது. இந்த பின்புலத்திலேயே றொபட் ஓ பிளேக் இலங்கை ஜனநாயகத்தில் பின்நோக்கிச் செல்வதற்கான காரணிகளில் ஒன்றாக 13வது திருத்தச் சட்டத்தை அடிகோடிட்டிருக்கின்றார்.

 

இதனை சற்று ஆழ்ந்து நோக்கினால் ஒரு விடயம் வெள்ளிடை மலையாகிறது. இலங்கையில் புரையோடிப்போயுள்ள இன முரண்பாட்டுக்கான அரசியல் தீர்வின் அடிப்படையாக 13வது திருத்தச் சட்டம் இருப்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்க பிரேரணையை இந்தியா ஆதரித்திருக்கின்ற நிலையில்தான் இந்தியாவினால் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டிய பொறுப்பை அமெரிக்கா கருத்தில் கொள்கின்றது. அமெரிக்க-இந்திய அழுத்தங்களின் பின்புலத்தில், 13வது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு அமுல்படுத்தாது, அதிகாரப்பகிர்வு யோசனைகளை அரசாங்கம் தொடர்ந்தும் புறம்தள்ளுமாயின் இரு பக்கத்திலும் அடிப்படைவாத சக்திகளின் கைகளே ஓங்கும்.

 

அமெரிக்காவில் நடந்தது யதீந்திராவுக்கு விளங்கவில்லை.  பிளேக் அமெரிக்க காங்கிரசில் பேசியவர். எனவே யதீந்திரா மாதிரி குயக்க தர்க்கம் பேசவில்லை.

 

13ம் திருத்தம் என்றுமே அது வந்திருந்திருக்க வேண்டிய வடக்கு கிழக்குக்கு அமூலுக்கு வரவில்லை. மகிந்தாவும் அதை அமுலாக்க ஆர்வம் காட்டவில்லை. அந்த நிலையில் ஜனநாயகத்தில் ஒரு தேக்கம் காணப்படுமேயன்று பினோக்கி சென்றதகாது.   ஜனநாயகம் பின்னோக்கி செல்வதாக பிளேக் சொல்லியிருந்த காரணம் சிராணியை முறை கேடாக பதவி விலக்கியதே. இலங்கை எந்த சந்தர்பத்திலும் சிராணி பதவி விலக்கப்பட்டது 13ம் திருத்த தீர்ப்பினால் என்று கூறவில்லை. அது யதீந்திராவின் பிழையான விளக்கம். அதை அமெரிக்க காங்கிரசில் கூறியவர் பிளேக் மட்டுமே. அது பிளேக்கினது அனுமானம்( அதுதான் சகலரினதும் அனுமானமும்). மேலும் பிளேக்கின் நிலைப்பாடு 13ம் திருத்த எதிர்ப்பு சட்டமான திவிநிகும்பாவில் சிராணி கொடுத்த விளக்கம் சட்டப்படியானது என்பதும், அதிகாரத்திற்குட்பட்ட தீர்ப்பு என்பதும். ஆனல் இது அரசாங்கத்திற்கு பிடிக்கத்தாதால் தலைமை நீதிபதியை பதவி நீக்கினார்கள் என்பதுதான் பிளேக் காங்கிரசில் கொடுத்த விளக்கம். தலைமை நீதிபதி தாங்கள் விரும்பிய தீர்ப்பை தரவில்லை என்று பதவி நீக்குவது ஜனநாயக நாடொன்றில் பாரதூரமான அரசியல் சமநிலை மீறல். இங்கேதான் இலங்கை ஜனநாயத்தில் பின்நோக்கி சென்றது என்றுதான் குறிப்பிட்டார். 2/3 பெரும்பான்மையை வைத்திருக்கும் இலங்கை 13ம் திருத்தத்தை நீக்கவோ திவி நெகும்பாவை கொண்டுவரவோ சிராணி குறுக்கே நிற்க முடியாது. ஆனால் இலங்கை முயன்றது போல செய்ய முடியாது என்றதுதான் அவவின் தீர்ப்பு. இலங்கை அதன் பின்னரும் கூட முழுவத்தாக  சிராணி வித்தித்த நிபந்தனைகளை பூர்த்திசெய்து திவிநெகும்பாவை கொண்டுவரவில்லை. தீர்ப்பை மாற்றீடு செய்து வடமாகண ஆழுநரிடம் கையொப்பம் பெற்றது. யதீந்திராவுக்கு பிளேக் எந்த இடத்திலும் 13ம் திருத்ததத்தை நிறைவேற்றாதது இலங்கையின் ஜனநாயகத்தின் பின்னடைவு என்று சொல்லவில்லை என்பது நன்றாக விளங்கியிருந்தும் வழமை போல தனது திரிப்பு தொழிலை செய்துவிட்டார். ஆக அதில் அமெரிக்க காங்கிரஸ் 13ம் திருத்தம் பற்றி விவாதிக்கவில்லை. சிராணியின் பதவி நீக்கம் பற்றித்தான் விவாதித்தது.

 

கச்சதீவு ஓப்பந்தத்தை இந்தியா 13ம் திருத்த ஒப்பந்ததிற்கு பலியிடுவது என்பது அவரின் பகிடி சேட்டைக்கதை. கச்சதீவு இலங்கையினது என்றதுதான் ஒப்பந்தந்தம். அது ஒரு land lease ஒப்பந்தம் இல்லை. ஒருதடவை கச்சதீவு இலங்கையின் எல்லைக்குளுக்குள் வருவதாக இந்தியா ஒத்துக்கொண்டபின்னர் இல்லை இல்லை நீ என்னை கிள்ளிப்போட்டாய்; ஆகவே திருப்பித்தா என்று கூறி இந்தியா அழமுடியாது.  இலங்கை அண்மையில் இந்தியாவுடன் செய்து கொண்ட பல வர்த்தக ஒப்பந்தகளை கிழித்தது.  சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் விட்டது. இவை எவற்றிலும் கச்சதீவு ஒப்பந்தம் இழுக்கப்படவில்லை. 13ம் திருத்தத்தை இலங்கை நிறைவேற்றாவிட்டால் கச்சதீவு ஒப்பந்தம் கிழிக்கப்படும் என்பது வெறுமனே யதீந்திராவின் கண்டுபிடிப்பு . மேலும் இலங்கையில் 13ம் திருத்தம் நிறைவேற்றப்படவில்லை என்பது சட்டநுணுக்கங்கள் தாண்டி வாதிடமுடியாதது. இலங்கை எந்த சந்தர்ப்பத்திலும் அது நிறைவேற்றுப்பட்டுவிட்டதாக வாதிட முடியும்.

 

அடுத்தது கோத்தாவின் அண்மைய பேச்சை திரித்தது. சிங்கள மக்கள் மனம் விரும்பி கொடுக்காத தீர்வுதான் 13ம் திருத்தம். அதற்கு சிங்கள் மக்களிடம் வாக்கு கேட்டால் அவர்கள் அரசு சொல்வதைதான் செய்வார்கள். இதை வைத்து கோத்தா காலத்திற்கு காலம் மக்கள் ஆணைக்கான வாக்கெடுப்பு என்று  சொல்லி வருகிறார். அதையேதான் முன்னரும் சொன்னவர். அதையேதான் அண்மையிலும் சொன்னர்வர். ஆனால் யதீந்திரா கோத்தா 13ம் திருத்தத்தை நிறைவேற்றி முடிக்க புழுவாக துடிக்கிறதாக நடிக்கிறார். 13ம் திருத்ததை நிறைவேற்ற கோத்தாவுக்கு ஏன் மக்கள் ஆணை தேவைப்படுகிறது? திருத்ததில் எங்கே மக்கள் ஆணை பற்றி குறிக்கப்பட்டிருக்கிறது?

 

யதீந்திராவின் நியாயப்படி இன்னுமொருவர் 13ம் திருத்தத்தை நிறைவேற்ற புழுவாக துடிக்கிறார். "13வது திருத்தச் சட்டம் தேவையா அல்லது இல்லையா என்னும் விவாதம் மேலெழுந்தபோது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா 13வது திருத்தச் சட்டமூலம் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு முயற்சியை மேற்கொண்டிருந்தார்" இதைதான் சொல்கிறது ஆத்தை படுகிற பாட்டுக்கை குத்தியன் பாலுக்கு(முதல் அமைச்சர் பதவிக்கு ) அழுதானாம் என்று. தமிழ் மக்கள் தீர்வுக்கு அல்லாட குத்தி முதலமைச்சர் பதவிக்கு அழுகிறது.  முதல் அமைச்சர் பதவி என்றால் என்ன 13ம் திருத்தம் என்றால் என்ன என்பதை யதீந்திரா விளங்கிக்கொள்ள இன்ன்னும் கொஞ்ச அரசியல் தெரிய வரவேண்டும்.

 

கடைசியாக கூட்டமைப்பும் 13ம் திருத்தமும். 13ம் திருத்தம் இலங்கையை பிடிக்க கணக்குப் பார்த்த ரஜீவினால் இலங்கையில் திணிக்கப்பட்டது. அது இலங்கையின் எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வல்ல. அது ரஜிவுக்காக இந்திய படைகளை இலங்கையில் வைத்திருந்து  காலம் கடத்த கொண்டுவந்த அடக்குமுறை திட்டம். அதை சிங்கள மக்களும் இந்திய அடக்கு முறையாகத்தான் பார்த்தார்கள். தமிழரும் இந்திய அடக்கு முறையாகத்தான் பார்த்தார்கள். இதனால் கூட்டமைப்பு 13ம் திருத்தம் தமிழருக்கான தீர்வாக எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. கூட்டமைப்பு தீர்வுக்கான பேச்சுவார்தைகளை  காணி, பொலீஸ், வடக்கு கிழக்கு இணைந்த 13ம் திருத்ததிலிருந்து ஆரம்பிக்க விரும்பியதாக மட்டும் கூறியது. இதை வெளிப்படையாகவும் கூறியது. அது ஆரம்பம் மட்டுமே. ஆனால் பேச்சுவாத்தைகளின் முடிவே தமிழ்மக்களின் தீர்வாகும். இதுதான் கூட்டமைப்பின் தீர்வு சம்பந்தமான நிலைப்பாடு.  ஆனால் 13ம் திருந்த நிலைப்பாட்டில், அரசு அதனை சிதறடிக்கும் எந்த முயற்சிகளையும் செய்ய முடியாது என்பதுதான் கூட்டமைப்பின் நிலை.  உதாரணத்திற்கு அரசு தமிழ் மக்களின் காணிகளை பறித்து விட்டது என்பது பற்றி அரசுடன்  பேச்சுவார்த்தைகளில் இருக்கும் போது அரசு இன்னொரு இடத்தில் போய் புதிதாக கணிகளை பறித்துவிட்டு வந்து பறித்த பழைய காணிகளுக்கான பேச்சுவார்த்தைக்கான மேசையில் திரும்ப அமர முடியாது. 13ம் திருத்தம் இப்போது இருக்கும் ஒரு உரிமையாக கொள்ளப்படுகிறது. அதை அரசு சிதைக்க முடியாது. ஆனல் அதை கூட்டமைப்பு தீர்வாக ஏற்றுக் கொண்டுவிட்டதாக பொருள் இல்லை.

 

எனவே 13ம் திருத்தம் நிறைவேற்றுவது பற்றி இந்தியாவை தவிர யாரும் இதுவரையில் பேசியது கிடையாது. இப்போது இந்தியாவும் அதை விட்டுவிட்டது. 13ம் திருத்தம் இலங்கை மீது இந்தியாவின் பெரியண்ணன் போன்ற ஒரு வலோற்கார ஒப்பந்தம். இலங்கை இந்தியாவின் நட்பு நாடாகையால் சல்மான் குதிர்ஷ் இனிமேல் இந்தியா  இலங்கை மீது பெரியண்ணன் நடத்தையை காட்டது என்று கூறிவிட்டார். அதன் படி இந்தியா இலங்கை விரும்பாத 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றது தான் பொருள்.

 

மிச்சக்கற்பனை எல்லாம் யத்தீந்திரா எக்கசக்கமாக புட்டை வைச்சு வெட்டிபோட்டு படுத்ததால் வந்த கனவுகளே.

Edited by மல்லையூரான்

பிறநாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது – சல்மான் குர்சித் [ சனிக்கிழமை, 09 மார்ச் 2013, 00:49 GMT ] [ அ.எழிலரசன் ] Salman-Khursheed.jpgபிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். 

புதுடெல்லியில் நேற்று ஆசிய பசுபிக் அனைத்துலக வர்த்தக சம்மேளன மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

“அடுத்தவரின் பிரச்சினையில் நாம் எப்போதும் தலையிடுவதில்லை 

மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவதில்லை. 

பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. 

ஆலோசனை கேட்காதவர்களுக்கும், பாதுகாப்பான, நல்ல ஆலோசனையை, சரியான நேரத்தில் இந்தியா வழங்கும். 

இந்தியா இயல்பாக செயற்படவே விரும்புகிறது. 

எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியது அவசியமில்லை. 

அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டிய தேவையும் இல்லை. 

அனைத்துலக அளவில் ஒரு நாடு அதிகாரம் செலுத்தும் வகையில் செயற்படுவதை இந்தியா எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. 

ஒரே நேரத்தில் இரு எதிரி நாடுகளுடன் நம்பிக்கையுடன் பேச இந்தியாவால் முடியும். 

மென்மையாக நடந்து கொள்வதாக இந்தியா மீது அடிக்கடி குற்றம் சாட்டப்படுவதுண்டு. 

உலக நாடுகள் அனைத்தும் செழிப்புடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், யாருடனும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டியதில்லை. 

அதனால் உலக காவல்காரன் கருத்துக்கு நாங்கள் ஆதரவு அளிப்பதில்லை. 

சீனாவிடமிருந்து கூட சில விடயங்களை கற்று, ஆரோக்கியமான போட்டியைச் சந்திக்கவே இந்தியா விரும்புகிறது.“ என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130309107915

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யதீந்திர உப்பு சப்பிலாத கடுரைகளை எழுதி மக்களை குழப்புவதை தவிர்க்கவேண்டும்.

நன்றி வெள்ளை யானை. 13ம் திருத்தம் பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கு இருக்கு. வாசித்து முடிக்கவில்லை. இன்னும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.