Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

மாணவர்களுக்கு அண்ணன் சுப.உதயகுமாரன்- (ஒருங்கிணைப்பாளர், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்) அவர்களின் அன்பு வேண்டுகோள்.

 

602049_553539791352940_1037724531_n.jpg

''ஈழப் படுகொலைகள் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போதுதான் அது முழுமையான மக்கள் போராட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஐ.நா-வில் மனித உரிமை அமர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், போராட்டங்களும் முடிந்துபோனால் அது பின்னடைவாகிவிடும் என்னும் நிலையில், மாணவர்கள் ஈழ மக்களுக்காகக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். ஈழ மக்களின் விடிவுக்காகச் சர்வதேசச் சமூகத்தை நம்பியிருக்கும் நிலையில், தமிழகத்தில் இருந்து உருவாகும் அழுத்தங்களே இந்திய அரசுக்கு நெருக்கடியை உருவாக்கும். இது ஒரு தொடக்கம்தான். இன்னும் எட்ட வேண்டிய இலக்கை மனதில்
வைத்துக்கொண்டு, சாத்வீகமான போராட்டங்களை மாணவர்கள் தொடர வேண்டும்!''

 

(முகநூல்)

  • Replies 1.3k
  • Views 119.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

 

 
தமிழகத்தின் மூன்று விசக் கிருமிகள் !

கடந்த ஐம்பது ஆண்டுகளாக தங்கள் அறிவு வலிமையை பயன்படுத்தி தமிழினத்திற்கு

எதிராகவே கருத்துக்களை பரப்பி வருபவர்கள் இவர்கள் மூவர் . இவர்களுடைய

கருத்துக்களால் மூளைச் சலவை செய்யப்பட்ட தமிழர்களும் நிறைய உண்டு .

தமிழீழம் அமையக் கூடாது என்பதில் ஒத்தக் கருத்தை கொண்டவர்கள் இவர்கள் .

இவர்களுக்குள் இருக்கும் முக்கியமான ஒற்றுமை இவர்கள் அனைவரும் பார்பனர்கள்

என்பதே ஆகும் . இவர்களுக்கு என்றும் பிடிக்காதது தமிழர் ஒற்றுமை .

தமிழகத்தில் எழுந்துள்ள எழுச்சியால் நிலை குழைந்து போன இவர்கள் தற்போது

பித்து பிடித்தது போல் தங்கள் கருத்துகளை அள்ளி வீசி வருகின்றனர் .

தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்தப் படவேண்டிய மூவர் இவர்கள் .

564681_624527564228764_1673749694_n.jpg

 

 

---------  முகநூலில் இருந்து ---------------------------------

 

 

இவ்வளவு தான்தோன்றி ரவுடிகளாக காங்கிரஸ்காரனுகள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மகிந்தா, கோத்தா, பொன்சேக்கா போன்றவர்கள் கூட தொலைக்காட்சியின் முன்னால் இப்படி செய்ய மாட்டர்கள்.

 

புத்த பிக்குவை தாக்கியதற்காக கைதுகள் செய்கிறார்கள். இந்த காங்கிரஸ் காரணுகள் மாணவர்களை தாக்குவது படங்களில் வருகிறது. அவர்கள் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

 

இந்த காங்கிரஸ்காரணுகளையும் அவர்களிடம் சரண் அடைந்திருந்த கருணாநிதியையும் பொன்சேக்கா கோமாளிகள் என்று அழைத்தது இதனால்த்தானா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் சார்பாக
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு,

ஈழத்தமிழர்கள் நலன் கருதி 27-03-2013 அன்று சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் திருப்தி அளிப்பதாகவும் மாணவர்களின் கோரிக்கைகளையும் போராட்டங்களையும் பிரதிபலிப்பதாக உள்ளது. அதற்கு நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். ஆனால் இந்த சட்டமன்ற தீர்மானத்தை சுட்டிக்காட்டி இந்திய நாடாளுமன்றத்திலும் அதையே ஐநா மன்றத்திலும் நிறைவேற்றப்பட்டு ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் வரையில் எங்கள் மாணவர்கள் போராட்டம் தொடரும். அதுவும் அறவழியில் தொடரும்.

தமிழக அரசு ஈழத்தமிழர்களுக்கான எங்களது அறவழி போராட்டங்களை ஆதரிக்குமேயானால் தமிழகத்தில் பூவிருந்தவல்லி, செங்கல்பட்டு ஆகிய சிறப்பு முகாம் சிறைகளில் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களுக்கு தொழில்தொடங்க அரசு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திருச்சியில் ஜனநாயக முறையில் கறுப்புக் கொடி காட்டிய மாணவர்களை காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்களின் மீதும் அவர்களைத் தூண்டிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மீதும் சட்டமுறைப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பாக
ஜோ பிரிட்டோ - 8678962611

 

Loyolahungerstrike

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட சென்னை வாழ் திருநங்கைகள் நடத்தும் உண்ணாநிலை போராட்டம்
 
 
 

வட சென்னை வாழ் திருநங்கைகள் நடத்தும் உண்ணாநிலை போராட்டம் நாளை(30/03/13) காலை 9மணிக்கு ஆரம்பமாகி மாலை 6மணி வரை நடக்கிறது தாய் தமிழ் உறவுகள் அனைவரும் வரவும்.

இடம்: தண்டையார்பேட்டை அப்போலோ மருத்துவமனை அருகில்.

தொடர்புக்கு : 9176219268, 9841064107

இதேவேளை, கோவையில் நாளை மறுதினம் ஞாயிறன்று காலை 10 மணி அளவில் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்வதற்கும் தமிழகம் முழுதும் மாணவர்கள் ஒன்றிணைத்தல் குறித்தும் மாணவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இடம் இன்னும் முடிவாகவில்லை . கோவை மற்றும் கோவையை சுற்றியுள்ள 150க்கும் மேற்பட்ட கல்லூரியை சேர்ந்த மாணவ பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்

 

http://www.sankathi24.com/news/28482/64//d,fullart.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் .அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களால் இலங்கை தூதர் காரிய வாசன் கொடும்பாவி சென்னை நீதி மன்ற வளாகத்தில் எரிப்பு .

ilangai thuthar kaariya vaasan kodumpaavin uruva boommaiyai Dr.Ambedkar sattakkalluri maanavargal chennai uyar nithimandra valagathil eritthanar...thodarbukku 9941586869..

 
733764_599755576703138_2036541803_n.jpg

Loyolahungerstrike

My dear friends. . .

Actually anna University made these much of Holidays To Divert Students From the Protest. . .

and. .

To be frank

Yes We are Diverted. . . :/

But, few Students are still Struggling to support for the cause.

Now listen. .

We enjoyed these Holidays. . .

At least For tomorrow

We should Join together and should stand For the protest. . .

I request everyone of u to Kindly participate in the Protest . . .

Please Invite Your friends. . .

We have enjoyed a lot in these days. .

Put a Full stop to those Enjoyments

and

Tomorrow Please Join us. .

Chepauk stadium 10:00am

Many college Gonna participate there. . .

So no Problem will come for us. .

Please Share This . .

 

Loyolahungerstrike

தமிழக மாணவர் எழுச்சி மற்றும் சமகால அரசியல் நிலவரம் பற்றி தமிழீழ விடுதலைக்கான மாணவர் அமைப்பின் இணைப்பாளர்களில் ஒருவரான தினேஸ் அவர்களின் நேர்காணல்

 

 

 

பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை தேவைகளுக்காக அரசாங்கத்தால் ஒரு நாளைக்கு 70 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது, இந்த ரூபாயில் தான் இவர்களின் அனைத்து தேவைகளையும் இவர்கள் கவனித்துக்கொள்ளவேண்டும். இந்த தொகையில் பாதி இவர்களுக்கு பொருட்கள் வாங்கி தரும் தலையாரிக்கே செலவாகிவிடும் என்பதே உண்மை. இதனால் இந்த தொகை தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லையென்று இந்த தொகையை உயர்த்தி தரவேண்டும் அல்லது அரசாங்கமே தங்களின் தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என்று பூந்தமல்லி சிறப்பு முகாம் வாசிகள் கடந்த 9 மாதங்களாக இந்த தொகையை வாங்க மறுத்து புறக்கணித்து வந்தனர். அவர்களுக்கான அடிப்படை தேவைகளை அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் மூலம் பூர்த்தி செய்து வந்தனர்.

ஆனால் கடந்த 20 நாட்களாக அவர்களை பார்க்க வரும் எந்த உறவினர்களையும் கியூ பிரிவினர் அனுமதிப்பதில்லை. இனி 10 நாட்களுக்கு முன் அனுமதி வாங்கினால் மட்டுமே பார்க்க அனுமதிக்க முடியும் என்று அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தனர். இதனால் சிறப்பு முகாமில் இருப்பவர்கள் கடந்த இருபது நாட்களாக வெளியிலிருந்து எந்த உணவு பொருட்களும் கிடைக்காமல் தனிமைபடுத்தப்பட்டனர். உறவினர்கள் சந்திப்பதற்கு வெளிநாட்டினர் சட்டபிரிவில் எந்த இடத்திலும் இல்லாத இந்த கெடுபிடிகளை எதிர்த்து 27/03/2013 முதல் சந்திரகுமார் என்பவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். சந்திரகுமாரை பார்க்க வந்த அவர் மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவரும் சிறப்பு முகாம் வாசலிலேயே உண்ணாவிரதத்தை தொடர்ந்துவந்தார். இந்நிலையில் நேற்று மாலை உண்ணாவிரதம் இருந்த சந்திரகுமாரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அவரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் தற்போது புழல் சிறையில் அடைத்து வைத்துள்ளது காவல் துறை .


தனது குடும்பம் கைதான செய்தியை அறிந்த சந்திர குமார் நேற்று இரவு தூக்க மாத்திரைகளை நிறைய உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் . அவரை சக முகாம் வாசிகள் காப்பாற்றி அரசுக்கு தகவல் கொடுத்தனர் . அவரை அவசமாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ந்தனர் காவல் துறை . சந்திர குமார் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சட்ட விரோதமாக இந்த ஈழத் தமிழர்கள் பூந்தமல்லி சிறையில் வெளிநாட்டவர் சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வை
க்கப்பட்டுள்ளனர். அவர்கள் முகாம்களில் குடும்பத்தோடு வாழ சட்டப்படி அனுமதி இருந்தாலும் காவல் துறை அதை அனுமதிப்பதில்லை . அதற்கு எதிராகத் தான் இப்போது சந்திர குமார் போராட்டம் செய்து முடிவில் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் . சொந்தநாட்டில் ஈழத் தமிழர்கள் அகதி ஆக்கப்பட்டனர். இப்போது தாய் தமிழகத்திலும் அவர்கள் உரிமைகள் இழந்து அகதியாக , அடிமையாக வாழ்கின்றனர். தமிழக அரசு இலங்கைக்கு எதிராக தீர்மானம் போட்ட அதே வேளையில் இங்குள்ள ஈழத் தமிழர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

(முகநூல்)

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் ஈழத்தமிழர் திரைப்படச்சங்கம் தாய்த்தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அடையாள உண்ணாவிரதம்
 
 

6.JPGபிரான்சில் ஈழத்தமிழர் திரைப்படச்சங்கம் தாய்த்தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வலுச்சேர்க்கும் வகையிலும் பிரான்சில் 28.03.2013 வியாழக்கிழமை காலை 10.00 மணிமுதல் 6.00 மணிவரை அடையாள கவனயீர்ப்பு உண்ணாமறுப்பு போராட்டத்தை நடாத்தியிருந்தனர்.

அகவணக்கத்துடன் ஆரமாகிய இப்போராட்டம் பிரான்சின் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட முர்து லாப்பே (சர்வதேச சமாதான நினைவுச்சின்ன சுவர்) உள்ள இடத்தில் நடாத்தப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்காக வெளிநாட்டு மக்கள் பார்வையிட்டுச் செல்லும் இவ்விடத்தில் துண்டு பிரசுரம் வழியாகவும், நேரடிவிளக்கங்களும் இவர்களால் கொடுக்கப்பட்டிருந்தன.

ஈழத்தமிழ் மக்களுக்காகவும் இப்போராட்டத்தினையும் தமிழ்நாட்டில் கடந்த 21 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் மாணவர்களின் எழுச்சிப்போராட்டங்களும் பொது மக்களுக்கு விளக்கமாக கொடுக்கப்பட்டதுடன் தமிழ்நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஏற்பாட்டாளர்களுடன், மாணவர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.

பிரான்சில் கடந்த 4 வருடங்களாக செயற்பட்டு வரும் LIFT என்கின்ற அமைப்பு நவீன தொழிநுட்பத்தின் மூலம் உலகத்தரம் வாய்ந்த வியக்க வைக்கும் வகையில் தாயக விடுதலை, சமூகம், மண்பற்று, தமிழர் எதிர்காலம் என்பனவற்றுடன் பல்வேறு தமிழ்ச்சமூகத்தின் அன்றாட வாழ்வைக்கொண்ட குறும்படங்களை தயாரிக்கின்ற படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு அமைப்பாக செயற்பட்டு வருகின்றது.

இவ்அமைப்பானது தனியே குறும்படம், திரைப்படம் என்கின்ற வட்டத்திற்குள் நிற்காமல் காலத்தின் தேவையறிந்து தமிழர்கள் நியாயமான போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டிய நல்லதொரு தருணத்தையும், தேவையும் பயன்படுத்தியுள்ளனர் இதே செயற்பாடுகள் செய்ய வேண்டிய கடமைப்பாடு உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் உண்டு என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது.

1.JPG

2.JPG

3.JPG

4.JPG

5.JPG

7.JPG

8.JPG

9.JPG

10.JPG

11.JPG

12.JPG

13.JPG

14.JPG

15.JPG

16.JPG

17.JPG

18.JPG

 

 

http://www.sankathi24.com/news/28488/64//d,fullart.aspx

தமிழக மாணவர் போராட்ட செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள அனைவரும் loyolahungerstrike முகநூல் பக்கத்தில் like செய்யுங்கள். இப்பொழுது 30,255 likes :)

 

http://www.facebook.com/tamilnaduhungerstrike

580326_599777703367592_1193154830_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுவரொட்டிப் போராட்டம் - கிழித்தெறிந்த சிறீலங்காப் புலனாய்வாளர்கள்.

தமிழர்களின் தீர்வாக தனித் தமிழீழம் அங்கிகரிக்கப்பட வேண்டுமென்று போராடிவருகின்ற தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. எழுச்சிமிகு வாசகங்களுடன் இந்தச் சுவரொட்டிகள் காணப்பட்டன.

ஆனால், இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சில மணி நேரங்களிலேயே யாழ்.பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் அந்தச் சுவரொட்டிகளைக் கிளித்தெறிந்தனர்.

நேற்று விடுமுறை நாளாக இருந்த போதிலும் யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் நடமாட்டம் கணிசமானளவு இருந்தது. பல்கலைக்கழக நூலகத்திற்;கு வருகை தந்த மாணவர்கள் மற்றும் இதர செயற்பாடுகளுக்காக வருகை தந்த மாணவர்களுமாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.

இந்த நிலையில், காலை எட்டு மணியளவில் பல்கலைக்கழக விளம்பரப் பலகைகள், மாணவர் பொது அறை, மாணவர் ஒன்று கூடும் இடங்கள் மற்றும் மரங்கள் போன்றவற்றில் தமிழக மாணவர்களுக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

“உறவுக்கு கை கொடுத்த உறவுகளே நீங்கள் இன்று உரிமைக்கும் தோள் கொடுக்கிறீர்கள்”

“தமிழக உறவுகளே நீங்கள் தரணியில் பாவலர்கள் ஈழத் தமிழரின் காவலர்கள்”

“தமிழீழமும் தமிழகமும் ஐந்தெழுத்து மந்திரம், ஐந்தெழுத்து மந்திரத்தை ஆயுள் வரை மறக்கமாட்டோம்”,

“தலைவன் வழி நடந்து தமிழீழம் காண்போம். தமிழன் என்று சொல்லி தரணியை ஆள்வோம்”;.

“தமிழக உறவுகளே நீங்கள் எம் இதயம். உங்கள் உணர்வுகளே ஈழத்தின் உதயம்”;,

“தமிழக முதல்வரே தரணியின் முதல்வரே ஈழத்தின் தாய் நீ எங்கள் தமிழீழத்தின் தாய் நீ”

“கடந்த காலத்தை மறவுங்கள். வருகின்ற காலத்தை நினையுங்கள். வாழ்கின்ற வையகத்தை அமையுங்கள். தமிழ் ஈழத்தை எமக்காக அமையுங்கள்”;.

“செங்களத்தை எமக்காய் அமைத்து சிங்களத்தை நாம் சிதறடிப்போம்”

“ஈழத்தில் இன்று நாம் சிறைப்பறவை. நாளைய உலகில் நாம் விடுதலைப் பறவை”,

“தமிழக மாணவரே உங்கள் மனங்களில் எங்கள் சிந்தனைகள் எங்கள் மனங்களிலோ உங்கள் சாதனைகள்”;.

“கல்வி மட்டும் எம் வாழ்க்கையல்ல, தமிழ் இனத்தைக் காப்பதும் கடமையாகும்”

“உலகில் எழுச்சி மிக்க இனமாக நாம் உருவெடுப்போம். புதிய வாழ்வு சமைப்போம் நாம் புதிய சாதனை படைப்போம்”

“உங்கள் எழுச்சி எங்கள் உயர்ச்சி எங்கள் உயர்ச்சி உங்கள் மலர்ச்சி”

“நாங்கள் வெல்வோம் நாளைய உலகில் நாங்கள் வெல்வோம்”

போன்ற பல எழுச்சி வாசகங்கள் இந்தச் சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருந்தன.

இந்தச் சுவரொட்டிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் நான்கு மோட்டார் சைக்கிள்களில் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் துறையினர் அந்த துண்டுப் பிரசுரங்களைத் தேடித் தேடிக் கிளித்தெறிந்தனர். அகப்பட்ட மாணவர்கள் சிலரை விசாரித்த புலனாய்வுத் துறையினர் அவர்களை அச்சுறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

இதேவேளை எதிரியின் குகைக்குள் இருந்துகொண்டே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுவரொட்டிப் போராட்டமொன்றை நடத்தியுள்ளமை பெருமைப்பட வேண்டிய விடயமாகவே நோக்கப்படுகின்றது. பொங்கு தமிழர்களாய் பொங்கி எழுந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எந்த தடை வரினும் அதனை உடைத்து வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி. அதேபோன்று தமிழக மாணவர்களும் எந்த தடைவரினும் ஈழத் தமிழருக்கான போராட்டங்களைக் கைவிட மாட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இவர்களின் போராட்டம் நிச்சயமாக வெற்றி பெறுமென்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(முகநூல் : loyolahungerstrike)

மதுரை அனைத்து கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரண்டு மணிநேரமாக வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தனி தமிழ் ஈழ கோரிக்கைகளை கோஷமிட்டனர். பின்னர் சற்றுமுன் நூற்றுகணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

(முகநூல் : loyolahungerstrike)

சற்று முன்:திருச்சி மாணவர்கள் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கபட்டதை கண்டித்து அவர்களை கைது செய்ய கோரி இன்று காலை புதுகோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் காங்கிரஸ் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற 130 மாணவர்களை காவல் துறை கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைக்கபட்டுள்ளார்கள்

மாணவர்களுக்கு உங்கள் வாழ்த்துகளை தெரிவிக்க தொடர்புக்கு:

shanmuganathan - 9751466364
nagaa athiyan -8883382058

 

(முகநூல் : loyolahungerstrike)
 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் முன்பு ipl போட்டிகளுக்கு எதிராக நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் நாமக்கல் மாணவர் தன்மான சக்ரவர்த்தி கலந்து கொண்டு வெயிலின் கொடுமை மாணவர்களுக்கு தெரியாமல் இருக்க நாட்டுப்புற பாடல்களை பாடி உற்சாகப்படுத்தினார்.

 

486330_481572155229603_137697718_n.jpg

(முகநூல்)


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

கும்பகோணத்தில் அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் :

மிக்க மகிழ்ச்சியான செய்தி,,கும்பகோணத்தில் தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இப்போதும் போராட்டம் நடைபெற்று வருகிறது .

(முகநூல் : loyolahungerstrike)
 



--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாளை (31.3.2013) அன்று காலை 10 மணி அளவில் கோவை காந்திபுரம் கமலம் துரைசாமி ஹாலில் கோவை மற்றும் கோவை சுற்று வட்டார கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் கலந்தாலோசனை கூட்டம்.. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு..

தொடர்புக்கு : ராஜகுரு : 9995098489.

(முகநூல் : loyolahungerstrike)

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

17994_600016193343743_1758400295_n.jpg

 

 

பழைய மஹாபலிபுர சாலையில் பொதுமக்களின் ஆதரவுடன் உண்ணாவிரதம் .


அந்த பக்கத்தில் உள்ள நண்பர்கள் அனைவரும் இனைந்து கொள்ளலாம் .


தொடர்புக்கு :9840628449 and 98413 75541

 

***************************************************************************

 

8584_599957156682980_280203468_n.jpg

 

 

*****************************************************************************

 

ஈழத்திற்கான போராட்டத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாற்ற காங்குரஸு தலைமை முயல்கிறது. இவனுங்க இங்க தான் இருப்பானுங்க எப்பவேனா திருப்பி அடிகலாம். இப்போதைக்கு இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.

 

 

****************************************************************************************************************************

 

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுவரொட்டிப் போராட்டம் - கிளித்தெறிந்த சிறீலங்காப் புலனாய்வாளர்கள்.

தமிழர்களின் தீர்வாக தனித் தமிழீழம் அங்கிகரிக்கப்பட வேண்டுமென்று போராடிவருகின்ற தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. எழுச்சிமிகு வாசகங்களுடன் இந்தச் சுவரொட்டிகள் காணப்பட்டன.

ஆனால், இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சில மணி நேரங்களிலேயே யாழ்.பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் அந்தச் சுவரொட்டிகளைக் கிளித்தெறிந்தனர்.

நேற்று விடுமுறை நாளாக இருந்த போதிலும் யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் நடமாட்டம் கணிசமானளவு இருந்தது. பல்கலைக்கழக நூலகத்திற்;கு வருகை தந்த மாணவர்கள் மற்றும் இதர செயற்பாடுகளுக்காக வருகை தந்த மாணவர்களுமாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.

இந்த நிலையில், காலை எட்டு மணியளவில் பல்கலைக்கழக விளம்பரப் பலகைகள், மாணவர் பொது அறை, மாணவர் ஒன்று கூடும் இடங்கள் மற்றும் மரங்கள் போன்றவற்றில் தமிழக மாணவர்களுக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

“உறவுக்கு கை கொடுத்த உறவுகளே நீங்கள் இன்று உரிமைக்கும் தோள் கொடுக்கிறீர்கள்”

“தமிழக உறவுகளே நீங்கள் தரணியில் பாவலர்கள் ஈழத் தமிழரின் காவலர்கள்”

“தமிழீழமும் தமிழகமும் ஐந்தெழுத்து மந்திரம், ஐந்தெழுத்து மந்திரத்தை ஆயுள் வரை மறக்கமாட்டோம்”,

“தலைவன் வழி நடந்து தமிழீழம் காண்போம். தமிழன் என்று சொல்லி தரணியை ஆள்வோம்”;.

“தமிழக உறவுகளே நீங்கள் எம் இதயம். உங்கள் உணர்வுகளே ஈழத்தின் உதயம்”;,

“தமிழக முதல்வரே தரணியின் முதல்வரே ஈழத்தின் தாய் நீ எங்கள் தமிழீழத்தின் தாய் நீ”

“கடந்த காலத்தை மறவுங்கள். வருகின்ற காலத்தை நினையுங்கள். வாழ்கின்ற வையகத்தை அமையுங்கள். தமிழ் ஈழத்தை எமக்காக அமையுங்கள்”;.

“செங்களத்தை எமக்காய் அமைத்து சிங்களத்தை நாம் சிதறடிப்போம்”

“ஈழத்தில் இன்று நாம் சிறைப்பறவை. நாளைய உலகில் நாம் விடுதலைப் பறவை”,

“தமிழக மாணவரே உங்கள் மனங்களில் எங்கள் சிந்தனைகள் எங்கள் மனங்களிலோ உங்கள் சாதனைகள்”;.

“கல்வி மட்டும் எம் வாழ்க்கையல்ல, தமிழ் இனத்தைக் காப்பதும் கடமையாகும்”

“உலகில் எழுச்சி மிக்க இனமாக நாம் உருவெடுப்போம். புதிய வாழ்வு சமைப்போம் நாம் புதிய சாதனை படைப்போம்”

“உங்கள் எழுச்சி எங்கள் உயர்ச்சி எங்கள் உயர்ச்சி உங்கள் மலர்ச்சி”

“நாங்கள் வெல்வோம் நாளைய உலகில் நாங்கள் வெல்வோம்”

போன்ற பல எழுச்சி வாசகங்கள் இந்தச் சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருந்தன.

இந்தச் சுவரொட்டிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் நான்கு மோட்டார் சைக்கிள்களில் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் துறையினர் அந்த துண்டுப் பிரசுரங்களைத் தேடித் தேடிக் கிளித்தெறிந்தனர். அகப்பட்ட மாணவர்கள் சிலரை விசாரித்த புலனாய்வுத் துறையினர் அவர்களை அச்சுறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

இதேவேளை எதிரியின் குகைக்குள் இருந்துகொண்டே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுவரொட்டிப் போராட்டமொன்றை நடத்தியுள்ளமை பெருமைப்பட வேண்டிய விடயமாகவே நோக்கப்படுகின்றது. பொங்கு தமிழர்களாய் பொங்கி எழுந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எந்த தடை வரினும் அதனை உடைத்து வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி. அதேபோன்று தமிழக மாணவர்களும் எந்த தடைவரினும் ஈழத் தமிழருக்கான போராட்டங்களைக் கைவிட மாட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இவர்களின் போராட்டம் நிச்சயமாக வெற்றி பெறுமென்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

 

 

 

-முகநூல்-  Loyolahungerstrike

 

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=p9nqbYCLYbc

 

 


விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

 

 

-முகநூல்-  Loyolahungerstrike

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Edited by தமிழரசு

IPL க்கு டிக்கெட் வாங்கியவர்கள்..உங்கள் உணர்வை வெளிப்படுத்த மைதானத்தில் பிடிக்க வேண்டிய பதாகைகள்.

1. போர் குற்ற காட்சிகள் - WAR CRIME PICTURES


2. இது திட்டமிட்ட இனப்படுகொலை- IT IS STRUCTURAL GENOCIDE


3. இதுவரை 600 இந்திய மீனவர்கள் ஸ்ரீலங்கா ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்- SRILANKA ARMY/NAVY SO FAR KILLED 600 INDIANS FISHERMENS. BUT OUR INDIAN GOVT NOT PROTECT US.


4. எங்களது..இந்திய கடமைகளை நாங்கள் சரியாக செய்கிறோம்.. எங்களின் உணர்வுகள் அவமதிக்கப்படுகின்றன. WE DID OUR DUTIES AS A INDIAN FULLY, BUT OUR EMOTIONS WERE INSULTED .


5. ஈழமக்கள்..இலங்கையின் குடிமக்கள் என்றால் சொந்த இராணுவத்தால் ஏன் கொல்லப்பட்டார்கள்??? - IF SRILANKA TAMIL S ARE UNITED SRILANKA CITIZEN , THEN WHY OWN CITIZENS ARE KILLED BY SRILANKAN ARMY??


6. சேனல் 4 ல் வெளி வந்த இனப்படுகொலை காட்சிகள் பொய்யெனில்..சர்வதேச விசாரணை செய்வதில் தயக்கமேன்??- IF THE CHANNEL 4 "GENOCIDE" VIDEOS ARE FAKE, THEN WHY SRILANKA NOT READY TO ACCEPT "INTERNATIONAL INVESTIGATION". ???


மொழி பெயர்ப்பில் குறையிருப்பின் மன்னிக்கவும்.

இதனை விட சிறந்த வாசகங்களும்..சிறந்த மொழி பெயர்ப்பும் தேவைப்படுகிறது. மாணவர்களெ..தோழர்களே... உலகம் முழுதும் நமது எண்ணம் சென்று சேர ஒத்துழையுங்கள். உங்களின் சின்ன செயலும்.. பெரிய காரியத்தை சாதிக்க உதவும்!

 

(முகநூல்)

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

8266_502627736463080_2111275116_n.jpg



-முகநூல்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று (30.03.2013) தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் எந்த மாநிலத்திலும் சிங்களவர்கள் வந்து விளையாடக் கூடாது. இதனை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

மேலும், பூந்தமல்லி சிறப்பு முகாமை உடனே இழுத்து மூட வேண்டும். உடனடியாக முகாமில் உள்ள மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் குண்டர்களை கைது செய்ய வேண்டும். மாணவர்களை தாக்குமாறு ஏவிவிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம் என்றார்.

 
-முகநூல்-  Loyolahungerstrike
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் கடந்த 1 மாதமாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள், சினிமா துறையினர், தமிழ் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போது திருநங்கைகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே இன்று திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் வடசென்னை பகுதியில் உள்ள திருநங்கைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதில் தமிழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் ,தனித் தமிழீழத்திருக்கு பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும் , ராஜபக்சேவை இனப்படுகொளையாளி என அறிவித்து தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் ,தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா அரசு ஏற்கவேண்டும் , உடனடியாக நடவடிக்கை மேட்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.

554535_600115156667180_1360418685_n.jpg

-முகநூல்-  Loyolahungerstrike

மாணவர்கள் மீது உருட்டுக்கட்டையால் தாக்கிய காங்கிரஸ். வீடியோ இணைப்பு.

 

 

(முகநூல் : loyolahungerstrike)

Edited by துளசி

ஈழத்திற்கான போராட்டத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாற்ற காங்கிரஸ் தலைமை முயல்கிறது.

 

இவனுங்க இங்க தான் இருப்பானுங்க எப்பவேனா திருப்பி அடிகலாம். இப்போதைக்கு இலக்கு ஒன்று தான். இனத்தின் விடுதலை.

 

(முகநூல் : loyolahungerstrike)

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------
 

இலங்கை இறுதிப்போரின்போது நிகழ்ந்த இனப்படுகொலையை கண்டித்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

 

(முகநூல் : loyolahungerstrike)

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"உணர்ச்சி தமிழரே எழுர்ச்சி கொள்ளுங்கள் "'

தமிழீழம் வெல்லட்டும்

வேடிக்கை பார்க்கும் தமிழினமே

வீதியில் இறங்கிப் போராடு''

 
27133_600151093330253_586532790_n.jpg

-முகநூல்-  Loyolahungerstrike

காவிரி கரையில் ராஜபக்சே, சோனியா காந்தி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் படங்களுக்கு மாலை போட்டு திதி கொடுக்கும் போராட்டத்தை தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பை சார்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் நடத்தினர்.

 

1626_600171839994845_750457698_n.jpg

காவிரி கரையில் ஒன்று திரண்ட மாணவர்கள் மூவரின் படங்களுக்கு பூ மாலைப் போட்டு, வாழை இலையில் தேங்காய், வாழைப் பழம், பொட்டுக்கடலையுடன் படையல் வைத்தார்கள்.

தொடர்ந்து, அர்ச்சகர் வேடத்தில் இரண்டு மாணவர்கள் ஓமக் குண்டத்தை உருவாக்கி வேதம் ஓதினார்கள். சோனியா, சுப்பிரமணிசாமி, ராஜபக்சே உறவினர்கள் போல மாணவர்களே வேடம் தரித்து மந்திரம் ஓதி, ஈமச்சடங்கு செய்து, ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து கதறி அழுதார்கள்.

பின்பு அவர்கள் நெருப்பு குண்டத்தில் இருந்த அஸ்தியை காவிரி ஆற்றில் கரைத்து கைக்குலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்கள்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘இந்த மூன்று பேரும் ஒரு இனத்தையே கருவறுத்தவர்கள். இவர்களுக்கு பாவ மன்னிப்பே கிடையாது. தன் கணவனை இழந்ததற்காக ஒரு இனத்தையே அழித்த சோனியா, சர்வதேச புரோக்கர் சுப்பிரமணியசுவாமி, வில்லன் ராஜபக்கே இந்த மூன்று பேரையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி தரும் வரை தமிழீழ மாணவர்கள் கூட்டமைப்பு ஓயாது’’ என்றார்கள்.

 

(முகநூல் : loyolahungerstrike)
 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

கைதானாலும்... காவல் வாகனத்தையும் , கைது செய்து அடைக்கும் மண்டபத்தையும் கருத்தரங்கு கூடமாக மாற்றும் மதுரை மாணவர்கள்.

 

483980_445793595506803_441932501_n.jpg

 

(முகநூல்)

Edited by துளசி

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தினேஷ் மற்றும் பிரிட்டோ(நான்) ஆகியோரின் கூட்டறிக்கையை இப்பொழுது தான் நான் படித்தேன்.


கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாக மாணவர்களாகிய நாம் அரசியல் சார்பில்லாமல் கொள்கை தெளிவுகளோடு தனித்தமிழ் ஈழம் வேண்டி அறவழியில் போராடி வருகிறோம்.மாணவர்களாகிய நாம் ஒற்றை தலைமைக்கோ இரட்டை தலைமைக்கோ இடம் அளிக்க கூடாது கூட்டுத்தலைமை மட்டுமே முன்னிறுத்தப் படவேண்டும்.

என்னுடைய பெயரை பயன் படுத்தி தனிப்பட்ட முறையில் யாரும் அறிக்கையோ அல்லது வேறு செயல்களிலோ ஈடு படவேண்டாம் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

 

மாணவர்களாகிய நாம் ஒட்டு மொத்த தமிழ் சமுகத்தையும் ஒரே குடையின்கீழ் இணைத்து தனித்தமிழீழம் அமைப்பதற்கு போராடவேண்டி இருக்கிறது.

மாணவர்களாகிய நாம் ஒற்றுமையாக இணைந்து போராடுவோம் .

வாழ்த்துக்கள்.

"தமிழ் எங்கள் குருதி
ஈழம் அது உறுதி "

ஜோ பிரிட்டோ.

 

(முகநூல் : loyolahungerstrike)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.