Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வனயுத்தம் ஒரு பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நான் நேற்றிரவு ஒரு படம் பார்த்தேன்.படத்தின் பெயர் வனயுத்தம்.வீரப்பன் கதை சொல்லும் படம் என்றும் அவரது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை வெளிக் கொண்டும் வரும் வகையில் எடுத்த படம் என்றும் சொன்னார்கள்.
 
படத்தில் கிஸோர் என்பவர் வீரப்பன் வேடத்தில் நடித்திருக்கிறார் இல்லை வாழ்ந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.அவருடைய புன்னகை கொள்ளையழகு :D அர்ஜீன் மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர்.
 
நான் அறிந்த வரையில் நிஜ வாழ்க்கையில் வீரப்பன் முதலில் யானைத் தந்தங்கள் கடத்துபவனாகவும் பின்னர் சந்தன மரம் உட்பட வாசனைத் திரவியங்கள் கடத்துபவனாகவும் இருந்திருக்கிறார்.அவரை இப்படி கட‌த்தற்கார‌ராய் ஆக்கியதே பெரிய பண முதலைகளும்,மந்திரிகளும் என்றும் சுத்தி வர‌ இருக்கும் அனைத்து மக்களுக்கும் வீரப்பன் நன்றாக உதவி செய்திருக்கிறார் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
 
பட‌த்தில் வீர‌ப்பன் செய்த நல்ல செயல்களைளோ அல்லது அவருக்கு பின்னால் இருந்து அவரை இயக்கிய முக்கிய புள்ளிகள் பற்றியோ எதுவும் சொல்லப்பட‌வில்லை.
 
உண்மையில் வீர‌ப்பனை பிடிப்பதற்காக கிராம மக்களுக்கும்,காட்டுவாசிகளுக்கும் அதிர‌டிப்படையினரும்,காவற்துறையினரும் நிறைய அட்டகாச‌ங்களை செய்ததாகவும் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் பல அப்பாவிகளை சுட்டுக் கொண்டதாகவும் அறிந்துள்ளேன்.ஆனால் இவையனைத்தும் பட‌த்தில் காட்டப்பட‌வில்லை.
 
வீர‌ப்பனையும்,அவனது குழுவை மாத்திர‌ம் கெட்டவனாக காட்டிய இப்படம் தமிழக காவற்துறையினரை நல்லவர்களாக காட்டுகிறது...அரிய வளங்கள் உள்ள காட்டை அழிக்கும் ஒர் கொடியவனாகவே வீர‌ப்பன் பட‌த்தில் காட்டப்படுகிறார்.
 
வீர‌ப்பனுக்காக காசுக்கு வேலை செய்யும் ஒரு கிழவரைப் பயன் படுத்தி [அவர் தான் வெளியுலகத்திற்கும்,வீர‌ப்பனுக்கும் உள்ள தொட‌ர்பாளர்] நாட்டுக்குள் வீர‌ப்பன் கூட்டத்தை வர‌ வழைத்து அம்புலன்சில் வைத்து எல்லோரையும் சுட்டுக் கொண்ட‌தாக காட்டுகிறார்கள்.இதற்கிடையில் வீர‌ப்பன் நாட்டுக்குள் வந்ததே பெரிய தாக்குதல் ஒன்றை பிளான் பண்ணி சிலோனுக்கு போவதற்காம் .வீர‌ப்பனுக்கும்,புலிகளுக்கும் தொட‌ர்ப்பு இருக்குது என சொல்ல வாறார்களோ தெரியவில்லை :unsure:
 
வீர‌ப்பனை காட்டிக் கொடுத்து அந்தக் கூட்டம் அழியக் கார‌ணமாக இருந்த கிழவராக நம்மட‌ ஜெயபாலன் ஜயா நடித்திருக்கிறார்.பொருத்தமான வேடமாய்ப் பார்த்துத் தான் கொடுத்திருக்கிறார்கள் :lol: கடைசியில் காவற்துறையினருக்கும்,முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நன்றி சொல்கிறார்கள்.காட்டு வளங்களை அழித்ததிற்கும்,அநியாயத்திற்கு போராடினதிற்கும் நியாயமான ஒர் அர‌சு வீரப்பனுக்கு நல்ல தண்ட‌னை வழங்கிட்டுடாம் என்று அர‌சிற்கு புகழார‌ம் சூட்டுகிறார்கள்
 
இதில் முக்கியம் என்ன என்டால் இந்த பட‌த்தை எடுத்த டைர‌க்டர் தான் தலைவரின்ட‌ வாழ்க்கை வர‌லாற்றை பட‌மாக்கப் போகிறாராம்.ஒழுங்காய் வீர‌ப்பனின்ட‌ வாழ்க்கையில் நட‌ந்ததையே பட‌மாய் எடுக்க முடியவில்லை இதிலை வேறு தலைவரின்ட‌ வாழ்க்கையை பட‌மாக எடுக்கப் போகிறாராம்...எப்படி பட‌த்தை எடுத்து,எப்படி பட‌த்தை முடிப்பார் என்று சொல்லியா தெரிய வேண்டும் :(

படத்தின் இயக்குநரில் இருந்து கதாநாயகன் வரைக்கும் கர்நாடக மானிலத்தைச் சார்ந்தவர்கள்; அதனால்தான் வீரப்பனை கொடியவனாக காட்டி, அதிரடைப்படையின் அட்டூளியங்களை காட்டவில்லை.

 

இந்த இயக்குநர் தான் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கையை படம் எடுக்க போகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒன்று இரண்டு பேரைத் தவிர அனைவருமே சுய விளம்பர
நோக்கோடும் வியாபார உத்தியோடுமே எம்மையும் எம் தேசத்தையும் வைத்துத்
திரைப் படத்தைத் தயாரிக்கின்றனர். அவர்களிடம் உண்மையையும் நேர்மையையும்
எப்படி ரதி எதிர் பார்க்க முடியும். அவர்களின் படங்களை நல்லதோ கெட்டதோ
என்று கூடப் பார்க்காது திரை அரங்குகளுள் பார்க்க முண்டியடிக்கும் எம்
தமிழ்க் கூடத்தைச் சொல்லவேண்டும். அவர்கள் எம்மை வைத்துக் காசு
பார்க்கின்றார்கள் அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள கவிஞர் (poet) ஜெயபாலன் அவர்களும் நடித்துள்ளார்..

 

 

‘வனயுத்தம்’ திரைவிமர்சனம்

 

தமிழக காவல்துறை, கர்நாடக காவல்துறையுடன் கைகோர்த்துக்‌கொண்டு, இரண்டு மாநில போலீஸ்க்கும் பல ஆண்டுகள் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனை சாய்த்த கதை தான் “வனயுத்தம்” மொத்தமும்!

 

கதைப்படி, தனது சந்தன மரக்கடத்தலுக்கும், யானை தந்த கடத்தலுக்கும் தடையாக இருக்கும் வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை கொன்று குவிக்கும் வீரப்பன்-கிஷோரை, காலம் போன கடைசியில் அவரது அந்திம காலத்தில் கிட்டத்தட்ட வீரப்பனுக்கு பார்வை பறிபோன சமயத்தில், ட்ரீட்மெண்ட் என்ற பெயரில் அவனது காட்டை விட்டு வெளியே வரவழைத்து விஜயகுமார் ஐ.பி.எஸ். எனும் அர்ஜூன் தலைமையிலான போலீஸ் டீம், வீரப்பனை தீர்த்து கட்டும் வீரமான கதை தான் “வனயுத்தம்! இது வீரப்பனின் கதையா.? தமிழக போலீஸின் வீரம் சொல்லும் கதையா…? என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்!

 

வீரப்பனாக கிஷோர் கச்சிதமாக அந்த பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார். சோழி உருட்டுவதும், குறிபார்ப்பதும், பின் காட்டு விலங்குகளையும், காக்கி சட்டைகளையும் சுட்டு தள்ளுவதுமாக கலக்கி இருக்கிறார் மனிதர்.

 

விஜயகுமார் ஐ.பி.எஸ்.ஸாக அர்ஜூனும் புகுந்து விளையாடி இருக்கிறார். அவரின் கூட்டாளி போலீஸ் அதிகாரியாக ரவிகாளை, “குப்பி படத்தைக்காட்டிலும் இதில் மிரட்டி இருக்கிறார். வீரப்பனுக்கு உதவி, பின் போலீஸ்க்கு உதவும் “ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்குமாராக வரும் சுரேஷ் ஓபாராய், அருள்மணி உள்ளிட்டோரும் அமர்க்களம். டி.வி. ரிப்போர்ட்டராக வரும் லட்சுமிராய், “கெஸ்ட் ரோலா? “ஒஸ்ட் ரோலா? என்பதை இயக்குனர் தான் சொல்ல வேண்டும்!

 

விஜய் மில்டனின் ஒளிப்பதிவு, சந்தீப் சவுட்டாவின் இசை, அஜயன் பாலாவின் வசனம், ஆண்டனியின் படத்தொகுப்பு என இன்னும் ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும் வீரப்பனின் வாழ்க்கையில் நடந்த எத்தனையோ சுவாரஸ்யமான சம்பவங்களில், ஒரு சில கூட படத்தில் இல்லாததும், சில காட்சிகளும், க்ளைமாக்ஸூம் போலீஸ் பெருமை பேசுவதும், வனயுத்தத்தை வழக்கமான யுத்தமாக்கி விடுவதை இயக்குனர் ஏஎம்ஆர் ரமேஷ் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!

 

வீரப்பன் தரப்பு நியாயங்களை ஒரு சில காட்சிகளில் கூட சொல்லாதது, இது வீரப்பன் கதையா.? விஜயகுமாரின் வெற்றிக்கதையா…? என்பதை புரியாதா புதிராக்கிவிடுகிறது.

 

எனவே “வனயுத்தம்”, வழக்கமான “தமிழ்சினிமா சப்தம்! யுத்தம்!!” எனலாம்.

 

http://tamilleader.com/?p=5428



வீர‌ப்பனை காட்டிக் கொடுத்து அந்தக் கூட்டம் அழியக் கார‌ணமாக இருந்த கிழவராக நம்மட‌ ஜெயபாலன் ஜயா நடித்திருக்கிறார்.பொருத்தமான வேடமாய்ப் பார்த்துத் தான் கொடுத்திருக்கிறார்கள் :lol: கடைசியில் காவற்துறையினருக்கும்,முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நன்றி சொல்கிறார்கள்.காட்டு வளங்களை அழித்ததிற்கும்,அநியாயத்திற்கு போராடினதிற்கும் நியாயமான ஒர் அர‌சு வீரப்பனுக்கு நல்ல தண்ட‌னை வழங்கிட்டுடாம் என்று அர‌சிற்கு புகழார‌ம் சூட்டுகிறார்கள்
 
இதில் முக்கியம் என்ன என்டால் இந்த பட‌த்தை எடுத்த டைர‌க்டர் தான் தலைவரின்ட‌ வாழ்க்கை வர‌லாற்றை பட‌மாக்கப் போகிறாராம்.ஒழுங்காய் வீர‌ப்பனின்ட‌ வாழ்க்கையில் நட‌ந்ததையே பட‌மாய் எடுக்க முடியவில்லை இதிலை வேறு தலைவரின்ட‌ வாழ்க்கையை பட‌மாக எடுக்கப் போகிறாராம்...எப்படி பட‌த்தை எடுத்து,எப்படி பட‌த்தை முடிப்பார் என்று சொல்லியா தெரிய வேண்டும் :(

 

நீங்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது.

 

நேர்மையாகப் படம் எடுத்தால் தணிக்கைக் குழுவினர் கத்தி வைத்துவிடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.