Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் போர்க்குற்றம்: புதியதலைமுறை புதியஆதாரம் வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் போர்க்குற்றம்: புதியதலைமுறை புதியஆதாரம் வெளியீடு

http://puthiyathalaimurai.tv/pt-special-documentary-on-lankan-war-crimes

இனவெறித்தீயில் இரையான இளந்தளிர்கள்”

கைகளை பின்புறமாக பிணைத்து, தலையில் சுட்டு கொல்லும் இலங்கை ராணுவத்தின் ஈவிரக்கமற்ற செயல்... காட்சிகளாக வெளியான போது நம்மை அதிர்ச்சியூட்டின.

இதேபோல ஒவ்வொருவரையும் செயலற்றவராக்கி உதவியற்ற நிலையில் கொன்று குவிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர். அதற்கான விடை நம்மிடம் இல்லையென்றாலும், சாட்சியமாக இதுவரை வெளிவராத காட்சிகள் அடங்கிய பதிவுகள் புதியதலைமுறைக்கு கிடைத்துள்ளன.

கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிராயுதபாணியான ஆண்கள், ஆடைகளின்றி இழுத்துத்தள்ளப்படுகிறார்கள்.. பின்னால் இருந்து வெற்றி எக்காளத்துடன் இலங்கை ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுகிறார்.

ஒரு போர் மூண்டால் ராணுவ வீரர்கள் உயிர் துறப்பார்கள். உயிருடன் பிடிபடுபவர்கள் போர்க் கைதிகளாவார்கள். ஆனால் போரில் கைதிகளாக பிடிபட்டவர்களை கொல்வதென்பது சர்வதேச சட்டங்களின் படி ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம்.

போருக்கு பிந்தைய காலகட்டத்தில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் அத்தனையுமே போர்க்குற்றங்கள்தான்.

போர்க்கைதிகள் கொல்லப்படுவது பற்றியும், பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது பற்றியும் பேசும் சர்வதேச சட்டங்கள் போர்க்காலத்தில் கொல்லப்படும் குழந்தைகள் பற்றி இதுவரை எங்குமே பேசவில்லை என்பது தான் துயரம்.

அப்படி ஒரு சிறுவனை கொல்லும் காட்சிகள் பிரத்யேகமாக புதிய தலைமுறைக்கு கிடைத்திருக்கிறது.

மேற்காணும் புகைப்படத்தில், இலங்கை ராணுவத்தினரிடம் பிடிபட்ட இளைஞர்கள் மத்தியில் ஒரு சிறுவன் அமர்ந்திருக்கிறான். அடுத்து, அந்த சிறுவனின் உடல், தலை சிதைத்த நிலையில் மற்ற உடல்களுடன் சேர்ந்து கிடக்கிறது.

லண்டனைச் சேர்ந்த உலகத் தமிழர் பேரவை தனக்கு கிடைத்த புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்தை புதிய தலைமுறைக்கு வழங்கியிருக்கிறது. இதை நாம் ஒரு முறைக்கு இருமுறையாக உறுதிப்படுத்திக்கொள்ள தடயவியல் துறையில் பெரும் நிபுணத்துவம் பெற்ற ஒரு வல்லுநரை அணுகி ஆய்வு செய்தோம்.

மாநிலத்தில் பல குற்ற வழக்குகளில் துப்பு துலங்குவதற்கு பெரும் துணையாக இருந்த, 22 ஆண்டுகாலமாக மாநில தடய அறிவியல் துறையில் பணிபுரிந்த திரு.சந்திரசேகரன், இந்த காட்சிகளை நன்கு ஆயுவு செய்து, தனது ஆய்வு விவரங்களை விவரித்தார்.

2009 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப்போர் முடிந்ததற்கு பிறகு, இதுவரை பல அதிர்ச்சிகரமான காட்சிப்பதிவுகள், புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

உலகத்தமிழர் பேரவை வெளியிட்ட இந்த காட்சி ஆதாரங்கள், ஒருவேளை அந்தச் சிறுவன் உயிரோடு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை முற்றாக சிதைத்திருக்கிறது.

ராணுவத்தின் பிடியில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இருந்ததையும், உயிரற்று கிடந்த புகைப்படங்களும் உலகையே உலுக்கின. அந்த புகைப்படங்கள் கேலம் மேக்ரேவின் நோ ஃபயர் ஸோன் ஆவணப்படத்தில் அந்த புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இலங்கை ராணுவம் அரங்கேற்றிய போர்க்குற்றங்களின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்திய அந்த புகைப்படங்களோடு புதிய தலைமுறைக்கு கிடைத்த காட்சி ஆதாரங்கள், போர்க்குற்றத்தின் இன்னொரு வடிவத்தை வெளிச்சமிட்டுக்காட்டின.

உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்களுக்கோ, மனித உரிமை மீறல்களுக்கோ சாட்சியம் இல்லை என்று நினைத்தது இலங்கை. ஆனால். எதை வெற்றிக்களிப்பில் பதிவு செய்தார்களோ அந்த காட்சிகள்தான் இன்று சாட்சியங்களாக அவர்களுக்கு எதிரானதாக திரும்பிக்கொண்டிருக்கின்றன.

இந்த வீடியோ ஆதாரங்கள் மூலம் வெளிப்படும் ஓர் உண்மை, இந்தக் கொடிய செயலில் ஈடுபட்டவர்களே, இந்த நீளமான வீடியோ காட்சிகளையும் எடுத்துள்ளனர்.

ஒரு கையில் துப்பாக்கி ஏந்தி சுட்டவர்கள். மறு கையில் தங்களிடம் உள்ள கைபேசியில் அதனை பதிவு செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. சாட்சியமற்ற போராக கருதப்பட்ட இலங்கை யுத்தத்தில் சாட்சியமாக நின்று இந்த விடியோ காட்சிகள், உலக சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கி எடுத்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றன..

இறந்துபோன குழந்தைகளின் எண்ணிக்கை பற்றி மட்டும் அல்ல.. காணாமல் போன குழந்தைகளைப் பற்றி கூட ஐநா அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால், குழந்தைகளின் மறுவாழ்வுப்பணிகளை இலங்கை அரசு சிறப்பாக மேற்கொண்டிருந்ததாக பாராட்டு தெரிவித்திருந்தது ஐநா அறிக்கை.

பொதுமக்களையும், குழந்தைகளையும் விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறது.

ஆனால் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்களோ, புதிய தலைமுறை வசம் கிடைத்துள்ள விடியோகாட்சிகளோ, அந்த குழந்தைகள் போரில் சிக்கி உயிரிழந்ததாக இலங்கை சொல்லும் நொண்டிச்சாக்கை நிராகரிக்கின்றன.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் உடலாவது அடையாளம் தெரிந்த ஓர் உடலாக இருக்கிறது.

ஆனால் நமக்கு கிடைத்த காட்சியில் உள்ள சிறுவன் யாரென்றே தெரியாது. இவனைப்போல எத்தனை எத்தனையோ சிறுவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.

இலங்கை இராணுவத்தால்  சிறுவன் படுகொலை  கொலை ! திடுக்கிடும் புது ஆதாரங்கள்! [வீடியோ& படங்கள்]

கைகளை பின்புறமாக பிணைத்து, தலையில் சுட்டு கொல்லும் இலங்கை ராணுவத்தின்

ஈவிரக்கமற்ற செயல்...  காட்சிகளாக வெளியான போது நம்மை அதிர்ச்சியூட்டின.

இதேபோல

ஒவ்வொருவரையும் செயலற்றவராக்கி உதவியற்ற நிலையில் கொன்று

குவிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர். அதற்கான விடை நம்மிடம் இல்லையென்றாலும்,

சாட்சியமாக இதுவரை வெளிவராத காட்சிகள் அடங்கிய பதிவுகள் புதியதலைமுறைக்கு

கிடைத்துள்ளன.

கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறமாக கட்டப்பட்ட

நிராயுதபாணியான ஆண்கள், ஆடைகளின்றி இழுத்துத்தள்ளப்படுகிறார்கள்.. பின்னால்

இருந்து வெற்றி எக்காளத்துடன் இலங்கை ராணுவ வீரர் துப்பாக்கியால்

சுட்டுத்தள்ளுகிறார்.

http://youtu.be/GSRVUj3PW2g

ஒரு போர் மூண்டால் ராணுவ வீரர்கள் உயிர்

துறப்பார்கள். உயிருடன் பிடிபடுபவர்கள் போர்க் கைதிகளாவார்கள். ஆனால்

போரில் கைதிகளாக பிடிபட்டவர்களை கொல்வதென்பது சர்வதேச சட்டங்களின் படி

ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம்.

போருக்கு பிந்தைய காலகட்டத்தில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் அத்தனையுமே போர்க்குற்றங்கள்தான்.

போர்க்கைதிகள்

கொல்லப்படுவது பற்றியும், பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது

பற்றியும் பேசும் சர்வதேச சட்டங்கள் போர்க்காலத்தில் கொல்லப்படும்

குழந்தைகள் பற்றி இதுவரை எங்குமே பேசவில்லை என்பது தான் துயரம்.

அப்படி ஒரு சிறுவனை கொல்லும் காட்சிகள் பிரத்யேகமாக புதிய தலைமுறைக்கு கிடைத்திருக்கிறது.

மேற்காணும்

புகைப்படத்தில், இலங்கை ராணுவத்தினரிடம் பிடிபட்ட இளைஞர்கள் மத்தியில் ஒரு

சிறுவன் அமர்ந்திருக்கிறான். அடுத்து, அந்த சிறுவனின் உடல், தலை சிதைத்த

நிலையில் மற்ற உடல்களுடன் சேர்ந்து கிடக்கிறது.

லண்டனைச் சேர்ந்த

உலகத் தமிழர் பேரவை தனக்கு கிடைத்த புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்தை

புதிய தலைமுறைக்கு வழங்கியிருக்கிறது. இதை நாம் ஒரு முறைக்கு இருமுறையாக

உறுதிப்படுத்திக்கொள்ள தடயவியல் துறையில் பெரும் நிபுணத்துவம் பெற்ற ஒரு

வல்லுநரை அணுகி ஆய்வு செய்தோம்.

மாநிலத்தில் பல குற்ற வழக்குகளில்

துப்பு துலங்குவதற்கு பெரும் துணையாக இருந்த, 22 ஆண்டுகாலமாக மாநில தடய

அறிவியல் துறையில் பணிபுரிந்த திரு.சந்திரசேகரன், இந்த காட்சிகளை நன்கு

ஆயுவு செய்து, தனது ஆய்வு விவரங்களை விவரித்தார்.

2009 ஆம் ஆண்டு

இலங்கை உள்நாட்டுப்போர் முடிந்ததற்கு பிறகு, இதுவரை பல அதிர்ச்சிகரமான

காட்சிப்பதிவுகள், புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

உலகத்தமிழர்

பேரவை வெளியிட்ட இந்த காட்சி ஆதாரங்கள், ஒருவேளை அந்தச் சிறுவன் உயிரோடு

இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை முற்றாக சிதைத்திருக்கிறது.

ராணுவத்தின்

பிடியில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இருந்ததையும், உயிரற்று கிடந்த

புகைப்படங்களும் உலகையே உலுக்கின. அந்த புகைப்படங்கள் கேலம் மேக்ரேவின் நோ

ஃபயர் ஸோன் ஆவணப்படத்தில் அந்த புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இலங்கை

ராணுவம் அரங்கேற்றிய போர்க்குற்றங்களின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்திய

அந்த புகைப்படங்களோடு புதிய தலைமுறைக்கு கிடைத்த காட்சி ஆதாரங்கள்,

போர்க்குற்றத்தின் இன்னொரு வடிவத்தை வெளிச்சமிட்டுக்காட்டின.

உள்நாட்டுப்போரின்

இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்களுக்கோ, மனித உரிமை மீறல்களுக்கோ

சாட்சியம் இல்லை என்று நினைத்தது இலங்கை. ஆனால். எதை வெற்றிக்களிப்பில்

பதிவு செய்தார்களோ அந்த காட்சிகள்தான் இன்று சாட்சியங்களாக அவர்களுக்கு

எதிரானதாக திரும்பிக்கொண்டிருக்கின்றன.

இந்த வீடியோ ஆதாரங்கள் மூலம்

வெளிப்படும் ஓர் உண்மை, இந்தக் கொடிய செயலில் ஈடுபட்டவர்களே, இந்த நீளமான

வீடியோ காட்சிகளையும் எடுத்துள்ளனர்.

ஒரு கையில் துப்பாக்கி ஏந்தி

சுட்டவர்கள். மறு கையில் தங்களிடம் உள்ள கைபேசியில் அதனை பதிவு

செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. சாட்சியமற்ற போராக கருதப்பட்ட இலங்கை

யுத்தத்தில் சாட்சியமாக நின்று இந்த விடியோ காட்சிகள், உலக சமுதாயத்தின்

மனசாட்சியை உலுக்கி எடுத்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றன..

இறந்துபோன

குழந்தைகளின் எண்ணிக்கை பற்றி மட்டும் அல்ல.. காணாமல் போன குழந்தைகளைப்

பற்றி கூட ஐநா அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால், குழந்தைகளின்

மறுவாழ்வுப்பணிகளை இலங்கை அரசு சிறப்பாக மேற்கொண்டிருந்ததாக பாராட்டு

தெரிவித்திருந்தது ஐநா அறிக்கை.

பொதுமக்களையும், குழந்தைகளையும்

விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்று இலங்கை அரசு

தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறது.

ஆனால் பிரபாகரனின் மகன்

பாலச்சந்திரனின் புகைப்படங்களோ, புதிய தலைமுறை வசம் கிடைத்துள்ள

விடியோகாட்சிகளோ, அந்த குழந்தைகள் போரில் சிக்கி உயிரிழந்ததாக இலங்கை

சொல்லும் நொண்டிச்சாக்கை நிராகரிக்கின்றன.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் உடலாவது அடையாளம் தெரிந்த ஓர் உடலாக இருக்கிறது.

ஆனால் நமக்கு கிடைத்த காட்சியில் உள்ள சிறுவன் யாரென்றே தெரியாது. இவனைப்போல எத்தனை எத்தனையோ சிறுவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.

 

நன்றி : புதியதலைமுறை.

 

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13353:srilanka-army&catid=37:india&Itemid=103

ஒரு ஐநா. வாக்கெடுப்பு ஊடாக தனி தமிழீழமே நிலையான தீர்வு.

அதன் திறவுகோல் தாய் தமிழகமே.

  • கருத்துக்கள உறவுகள்

பத்து நிமிடம் தான்.... பார்த்தேன், பார்த்தாயிரம் பிரபாகரன்கள் என்... மனதில்... கொளுந்து விட்டு எரிந்தார்கள்.
நானும் ஈழப்போரில்... குடும்பத்தில் ஒருவனை இழந்தவன். பதில் சொல்ல வேண்டும்... இந்தியமும், சிங்களமும், போலிப்படைகளும்.
அது, மட்டும்.... நான் செத்தாலும்.... என் ஆவி, வேகாது.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி வாழ வேண்டி இந்த சின்ன பையன்..இப்படி கொடுரமாய் இறந்து போய்க் கிடக்கிறார்...இதுக்கு எல்லாம் காலம் தான் பதில் சொல்லும்.....

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.. சரணடைந்து சாவைத்தழுவிக்கொண்ட வீரர்களே.. உங்களின் வீரச்சாவுகள் உலகின் மன்ச்சாட்சியை உலுக்க முன்னர் தின்றுவிட்டுச் செரிக்காமல் ஆய்வுகள் செய்யும் எங்களின் மனச்சாட்சிகளையாவது உலுக்குமா??

வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரசேகரனையும், கார்த்திகேயனையும்... சிறந்த புலன் விசாரணையாளர்கள் என்று... இந்திய அரசே பாராட்டியுள்ளது. இப்போ... தமிழ் பொடியன் செத்ததுக்கு.... வாயிலை, கொழுக்கட்டை வைச்சுக் கொண்டு இருக்குது.
*********
அப்பாவி, ஆறுமுகசாமி கேட்கிறான்....
"டோய்.... ஒனக்கு.... ஆப்படிச்சால் தான்... வாயை, திறப்பியா......"

இதை பரப்புரையும் செய்யுங்கள்.

உங்கள் முகநூலில் ஏற்றுங்கள்.

மேலும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.