Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிராக சுதந்திரமான விசாரணை ஓன்று அவசியம் சிதம்பரம் அதிரடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இனப்படுகொலை நிகழ்த்திய இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா? ஆதரிக்காதா? என்ற கேள்விகள் ஒருபக்கம்.. இலங்கை நட்பு நாடு என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் விளக்கம் இன்னொரு பக்கம்.. உச்ச கட்டமாக தமிழக மாணவர்கள் போராட்டம்.. இந்நிலையில் 22-ந் தேதி நல்ல செய்தி வரும் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ப.சிதம்பரத்தின் 'சைலன்ட்' ரோல் 'லாபி' ரோல் எப்போதுமே உண்டு. இலங்கை இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் சுப. வீரபாண்டியன், கனிமொழி வழியே ப.சிதம்பரத்தின் மூலமாக மத்திய அரசுடன் பேச்சு நடத்தியதாகவும் சொல்லப்படுவது உண்டு.

தற்போது மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தின் குக்கிராமங்கள் கூட கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காரைக்குடியில் பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

மத்திய அரசு மீதான கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ப.சிதம்பரம் காரைக்குடி கூட்டத்துக்கு செல்லும் வழியில் தமிழ் அமைப்பினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் பொதுக் கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் சுதந்திரமான நம்பகத்தன்மை மிகுந்த ஒரு விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த தீர்மானத்திலே வாசகம் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதுபோன்ற ஒரு வாசகம் அந்த தீர்மானத்திலே இருந்தால், அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்.

இந்தியா அந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். இந்தியா அந்த தீர்மானத்தை வலியுறுத்த வேண்டும். இந்தியா அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பது நம்முடைய குரல். நம்முடைய வேண்டுகோள். 22ம் தேதி வரை நீங்கள் பொறுமை காக்க வேண்டும்.

22ம் தேதி நல்ல செய்தி நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனக்கு இருக்கும் நம்பிக்கையை உங்களுக்கு நான் ஊட்டுகிறேன். உங்களுக்கும் அந்த நம்பிக்கை வர வேண்டும். உங்களுக்கு உள்ள நம்பிக்கையை உங்களுடைய அடுத்த வீட்டுக்காரருக்கு ஊட்ட வேண்டும். அவருக்கு அந்த நம்பிக்கை வர வேண்டும். எல்லாரும் மாணவர்கள் மத்தியிலே இன்று தொடங்கி 22ம் தேதி வரை ஊட்டுங்கள் என்றார்.

Thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்தின் சில்லெடுப்பு என்னவென்று விளங்குதோ...வாசகம் வரும் ..மாணவருக்கு சொல்லுங்கோ....

இன்று சிதம்பரம் தமிழ்நாட்டில் காங்கிரெஸ் கண்டிப்பாக ஆதரிக்கும் என்றும், அதேவேளை குர்ஷித் இன்னும் முடிவு எடுக்கவில்லையென வட இந்தியாவிலும் சொல்லிக்கொண்டு திரியுறாங்க. நல்லா பூ சுத்துரானுங்க ?

  • கருத்துக்கள உறவுகள்

தீர்மான வாசகத்தில் "காத்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்" என்கிற வரிகள் இணைக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்..! ஆனால் தீர்மானத்தைத் திருத்தும் சந்தர்ப்பம் மிகக்குறைவு.. ஆகவே தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும்..! :wub:

 

இலங்கைக்கும் திருப்தி.. தமிழகத்தையும் சமாளித்ததுமாதிரி இருக்கும்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மாணவரது சக்தியை  புரிந்து கொண்டுள்ளாரா???

22ந்திகதிவரை பொறுத்திருப்போம்.

 

ஆனால் இனி  தமிழரை ஏமாற்றமுடியாது

அதற்கு இன்றைய தலைமுறை அனுமதிக்காது

 



இவர் போன்றவர்கள்  தவறான முடிவெடுப்பின் இது தான் இவர்களது தமிழக கடைசி வருகையாக இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.