Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தள்ளாத வயதிலும் தனி ஈழம் கோரி வைகோ தாயார் உண்ணாவிரதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தள்ளாத வயதிலும் தனி ஈழம் கோரி வைகோ தாயார் உண்ணாவிரதம்

Posted by: Mayura Akilan Published: Friday, March 22, 2013, 10:41 [iST]
 
நெல்லை: தனி ஈழம் கோரியும், கொலைகார ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியில் அவரது தாயார் மாரியம்மாள் வையாபுரி (வயது 91) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
22-vaikomother-7-600.jpgஆங்காங்கே உண்ணாவிரதம், சாலை மறியல் தீவிரமடைந்துள்ள நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள், இன்று ஆயிரக்கணக்கானோருடன் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

இந்த போராட்டத்தினை மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் அ.பழனிச்சாமி தொடங்கிவைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வை.ராஜேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

கலிங்கப்பட்டியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. சிறுவன் பாலச்சந்திரனின் உருவம் வரையப்பட்ட பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

இந்த போராட்டம் குறித்து நம்மிடையே பேசிய தாயார் மாரியம்மாள், 1990 ஆண்டு கலிங்கப்பட்டியில் உள்ள எங்களின் வீட்டில்தான் 37 விடுதலை புலிகளுக்கு உணவளித்து பாதுகாத்து வந்தோம். அப்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த தோடு உணவளித்து உபசரித்தோம். அந்த பாசம் காரணமாகவே இப்போது உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில், நெல்லை மாவட்ட மதிமுக செயலாளர் தி.ப. சரவணன், இணைய தள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது அலி, மாநில மாணவர் அணிச் செயலாளர் கி.மு. ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

http://tamil.oneindia.in/news/2013/03/22/tamilnadu-vaiko-s-91yer-old-mother-on-fast-seeking-tamil-eelam-171990.html

  • கருத்துக்கள உறவுகள்

பழமொழியை மாத்தி எழுதினால்,

 

புலியைப் பெத்தது, பூனையாகுமா? :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி..!

 

வைகோ அவர்களின் ஆதரவு என்பது உள்ளூர் அரசியலுக்கு அப்பாற்பட்டது..!

ஒரு உணர்வுள்ள பற்றுள்ள வீரத்தாய் !

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி..!

 

வைகோ அவர்களின் ஆதரவு என்பது உள்ளூர் அரசியலுக்கு அப்பாற்பட்டது..!

 

உண்மைதான் இசைக்கலைஞன், 
 
அதற்க்கு மேல் இவர்களின் குடும்பமே வெளியில் தெரியாத பல உதவிகளை எமது தமிழ் ஈழ போராட்டத்திற்கு செய்திருக்கின்றார்கள் இன்றும் செய்துகொண்டும் இருக்கின்றார்கள் 
  • கருத்துக்கள உறவுகள்

தாயே... உங்கள், மகன் வைகோ, தனது வாழ்வில்... மூன்றரை வருடங்கள் சிறையில் இருந்தவர்.
தனது உயிரை துச்சம் என, மதித்து... ஈழத்துக்குப் போனவர்.
அதனால்.... தனக்குச், சொல்லாமல்... ஈழத்துக்குப் போனதை கண்டித்தவர் கருணாநிதி.
சொல்லிட்டுப் போயிருந்தால்.... போட்டுக் குடுத்திருப்பார்.
பல இன்னல்களை தாங்கிய, உங்கள் குடும்பத்தில், இந்த வயதில்... உண்ணாவிரதம் இருக்க வேணுமா?
உங்கள், உணர்வே... போதும், எங்களுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.