Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களமுனையில் நின்ற ஊடகவியலாளரே படங்களை விற்றுள்ளார்; அரசாங்கம் தகவல்

Featured Replies

ஊடகவியலாளர் ஒருவர் டொலர்களுக்கு ஆசைப்பட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

நேற்று முன்தினம் குருநாகலில் இடம்பெற்ற இராணுவ நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இறுதிக் கட்டத்தில் நடைபெற்றதான மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பிலான புகைப்படங்கள் பல திடுக்கிடும் வகையில் வெளிவந்துள்ளன. இதனால் இலங்கைக்கு சர்வதேச நாடுகளினால் அழுத்தங்கள் பாரிய அளவில் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி களமுனைப் படங்களை வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு வழங்கியவரைத் தாம் கண்டறிந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


அதற்கமைய சிங்கள ஊடகம் ஒன்றைச் சேர்ந்த இவர், 2009ஆம் ஆண்டு மே மாதம் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற அனைத்து போர் நடவடிக்கைகளின் போதும் தொலைக்காட்சி ஒன்றின் சார்பில் முன்னரங்கப் பகுதியில் பணியாற்றியிருந்தார்.

 

எனினும் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இவர் இலங்கையில் இருந்து வெளியேறி, தற்போது தனது குடும்பத்துடன் மேற்குநாடு ஒன்றில் வசித்து வருகின்றார்.


இதேவேளை, குறித்த நபர் டொலர்களுக்கு ஆசைப்பட்டு புலம் பெயர் நாட்டில் உள்ள புலிகளிடம் நாட்டை காட்டிக் கொடுத்துள்ளார். இருப்பினும் இவரது கடந்த கால நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=229181921324515226

  • கருத்துக்கள உறவுகள்

இவராக இருக்குமோ? :unsure:

 

 

:D

  • தொடங்கியவர்

 ஊடகவியலாளர் ஒருவர் டொலர்களுக்கு ஆசைப்பட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

 

வெளிவந்த படங்கள் அனைத்தும் உண்மையானவை என்பதை மகிந்த கூட்டம் ஏற்றுக்கொண்டுள்ளது !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிவந்த படங்கள் அனைத்தும் உண்மையானவை என்பதை மகிந்த கூட்டம் ஏற்றுக்கொண்டுள்ளது !

 

 

அதுதானே, இந்த வார்த்தைகள் போதுமே! 'செய்தவை அனைத்தும் போர்க்குற்றங்களே என்பதற்கு!....

 

தன் வாயாலேயே ஒத்துக்கொண்டுள்ளாரே!.

  • கருத்துக்கள உறவுகள்

வித்ததோ கவுண்டது.. நடந்ததைத் தானே படம் எடுத்து வித்திருக்காங்க. அதுதான் உலகத்திற்கு தெரிய வேண்டியது. இவ்வளவு நாளும் அப்படின்னு நடக்கவே இல்லைன்னீங்க. அனிமேசன் எண்டீங்க. புலிகள் தான் எண்டீங்க.. இப்ப உண்மையைச் சொல்லிட்டீங்கல்ல.. எனி நடையைக் கட்டுங்க..! :)

அரசால் பழி வாங்கப்பட்ட சில ஊடகவியலார் அரசை காட்டிக்கொடுத்திருக்கிறார்கள். அரசு தனது எதிரியான ஊடகத்துறையை இப்போ காட்டிகொடுத்திருக்கிறது. சர்வதேச விசாரணை தடுக்க முடியாது என்று மனித உரிமைகள் மீறலின் முதல் சூத்திரதாரியான பொன்சேக்கா விசாரணை ஏற்படுவதற்கான காரணம் போரின் போது நடந்து முடிந்திருக்கு என்று கூறி போரின் நடத்தையை காட்டிகொடுத்திருக்கிறார். இனி பொன்சேக்கா கொண்டு நடத்திய ராணுவம் தான் பொன்சேக்காவின் கட்டளைகளை நிறை வேற்றும் போதுதான் விசாரணை எழவேண்டியதற்கான சந்தேகத்தை தரும் நடத்தைகள் ஏற்பட்டனவா இல்லையா என்பதை சொல்ல வேண்டும்.

 

இதை கோபத்தபயா இந்தியா தான் கைப்பற்ற பட்டவர்களை தன்னிடம் தந்தது என்றும் கைப்பற்றபட்டவர்களின் மறைவுகளுக்கு அவர்களேதான் காரணம் என்றும் கூறினார். படத்தைக் கடத்தி சென்ற ஊடகவியலார் அதை இராணுவம் செய்ததாகத்தான் கூறினார்.  பொன்சேக்கா இந்தியாவின் உத்தரவின் பேரில்த்தான் பாலச்சந்திரன் கொல்லபட்டான் என்பதை சூசகமாக சொல்வதற்கு பாலசந்திரனை கொன்ற (இந்தியப்)புலிகள் இந்திய இராணுவ சீருடை அணிந்திருந்தார்கள் என்று கூறினார்.

 

இபோதே இந்த ஈடாட்டம் என்றால் விசாரணை ஒருநாள்த்தன்னும் நீடிக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.