Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

நேற்று Headlilne Today சேனலில் Sri Lanka's Terror Tourism என்ற நிகழ்ச்சி வந்தது. போர் நடந்து முடிந்த புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் பகுதிகளை எப்படி இலங்கை அரசு தனது ராணுவ வெற்றியை அராஜகத்துடன் வெளிப்படுத்தும் சுற்றுலா மையமாக ஆக்கியுள்ளது என்பதை முதன்முறையாக இந்தியா டுடே நிருபர் சந்தீப் உன்னிதன் கவர் செய்துள்ளார். புலிகள் பயன்படுத்திய டாங்கர்கள், வாகனங்களை அப்படியே காட்சிப் படுத்தியுள்ளார்கள்.. இந்த இடத்திற்கு சிங்கள பள்ளிக் குழந்தைகள் மற்றும் மற்ற இலங்கைப் பகுதியில் உள்ளவர்களை அழைத்து வந்து காண்பிக்கிறார்கள். எல்லா இடங்களீலும் சிங்கள, ஆங்கில பெயர்ப்பலகை மட்டுமே (தமிழ் கிடையாது). மாபெரும் தமிழ் சிவிலியன் படுகொலை நிகழ்ந்த இடத்தில் அது பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது - துப்பாக்கியுடன் நெஞ்சை நிமிர்த்தும் சிங்கள படை வீரனின் சிலை மட்டுமே. கட்டாயம் இதன் வீடியோ பதிவைப் பாருங்கள். 

 

 

 



இதன் பிறகு நடந்த விவாதத்தில் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அசோக் மேஹ்தா, சந்தீப் உன்னிதன் ஆகியோர் இலங்கை செய்வது எந்த வகையிலும் ஏற்க முடியாதது என்றும், போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களுக்கு உரிமை வழங்குவதில் இலங்கை மிக மோசமாக நடந்து கொள்வதையும் அழுத்தமாக சுட்டிக் காட்டி இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக பேசினார்கள். 1880களின் அமெரிக்க சிவில் யுத்தத்திற்குப் பிறகு வெற்றி பெற்ற வடக்கு மாகாணக் காரர்கள் தோல்வியுற்ற தெற்கு மாகாணத்தினரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அமைதியின் சின்னமாக தங்கள் போர் நினைவகத்தை (Gaetysburg) அமைத்தார்கள் - ஒருங்கிணைந்த அமெரிக்காவை உருவாக்க அது உதவியது. ஆனால் இலங்கை செய்வது அதற்கு நேர்மாறானது என்று அருமையாக ஒரு கருத்தை சொன்னார் அசோக் மேத்தா. 

 

 



இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை உரத்த குரலில் திமுக செல்வகணபதி எடுத்துரைத்தார் (கனிமொழி ராஜபட்சேக்கு மாலை போடும் படத்தைக் காட்டி திமுகவின் இரட்டை வேடம் பற்றீக் கேட்டபோது கொஞ்சம் ஆடிப்போய்விட்டார்). எழிலன் நாகநாதன் எல்டிடிஈ ஆதரவு தொனி இல்லாமல் நிதானமாக தமிழர் உரிமைகள் பற்றி பேசினார்.. இலங்கை அரசு செய்வதில் தவறொன்றூம் இல்லை என்ற தொனியில் பேசிய சுப்பிரமணிய சுவாமி, ஜி பார்த்த சாரதி ஆகியோரை நிகழ்ச்சியை நடத்திய ராஹுல் கன்வால் & மற்றவர்கள் சங்கடப் படுத்தும் கேள்விகளால் துளைத்தனர். இலங்கை அரசின் உணர்வற்ற குரூர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய Headlines Today சேனலுக்கு பாராட்டுக்கள்

 

 

 video http://headlinestoday.intoday.in/programme/sri-lanka-terror-tourism-velupillai-prabhakaran-memorial/1/259728.html

via fb 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், அபராஜிதன்!

இலங்கை  படுகொலை, இன்றைய நிலைமை, மாணவர் போராட்டங்கள் - இவற்றை மற்றைய மாநிலங்கள், சக இந்தியர்கள், சாதாரண சிங்களவர்கள் என பலதரப்பு மக்கள் மத்தியிலும் கொண்டு செல்வது எமது கடமை.

இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை இதுதான் என்று மிக தெளிவாக பார்த்தசாரதி சொல்லுகின்றார் .

இலங்கை தமிழருக்கு தீர்வு எதுவும் கிடைக்க இந்தியா எதுவும் செய்யவேண்டும் வேண்டும் என்றால் கோமாளிதனமாகக  எதுவும் செய்து சிங்களத்தை நியாய படுத்த வைத்துவிடாதிர்கள் என்பது தான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.