Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகொரியா அணு ஆயுத மிரட்டல்: எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுத்தியது அமெரிக்கா!

Featured Replies

அமெரிக்கா பயந்து போனார்கள் போல? :(

  • Replies 58
  • Views 3.4k
  • Created
  • Last Reply

இது எதிர் பார்த்ததுதான். புதிய தலைவர் ஒருபக்கமும் போகமுடியாத்தபடி செய்தவர்கள் தந்தையும் மேற்கு நாடுகளும். இதனால் அவர் ஒரு மிரட்டலை முயன்றார். அதனால் ஒரு புதிய முடிவும் வரப்போவத்தில்லை. முதலில் சம்பந்த பட்ட ஆறு நாடுகளும் நிபந்தனை எதுவும் இல்லாமல் ஒரு தடவை கூட வேண்டும். அதில் யார் முதலில் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். 

வடகொரியா அணு ஆயுதத்தை கைவிட மறுப்பு

 

அணு ஆயுதத்தை எந்த சூழ்நிலையிலும் கைவிடமாட்டோம், ஆயுதக் குறைப்பு குறித்து வேண்டுமானால் பேச்சு நடத்தத் தயார் என்று வடகொரியா அறிவித்துள்ளது.

தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக போர் நடத்த வடகொரியா தயாராகி வருவதாலும் கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஏற்கெனவே அணு ஆயுதங்களை வைத்துள்ள வடகொரியா சமீபத்தில் மீண்டும் அணு ஆயுத சோதனை மேற்கொண்டு தனது அணு ஆயுத வலிமையை அதிகரித்துக் கொண்டுள்ளது.

அந்நாடு அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால் பேரழிவு ஏற்படும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. இதனிடையே பிரச்னையை தீர்த்துக் கொள்ள பேச்சு நடத்த வேண்டுமென்று சீனா உள்ளிட்ட வடகொரியாவின் நட்பு நாடு மூலம் அந்நாட்டு சர்வதேச அளவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவின் வலியுறுத்தலால் தங்கள் நாடு மீது ஐநா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் கோரியுள்ளது.

இந்நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக அந்நாட்டின் முக்கிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், "ஆயுதங்களைக் குறைத்துக் கொள்வது தொடர்பாக அமெரிக்காவுடன் எத்தனை முறை வேண்டுமானாலும் பேச வடகொரியா தயாராக இருக்கிறது. ஆனால் அணு ஆயுதங்களை எந்த சூழ்நிலையிலும் கைவிடமாட்டோம். இது விஷயத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் எப்போது அணு ஆயுதங்களைக் கைவிடுகிறதோ, அப்போது வடகொரியாவும் ஆணு ஆயுதங்களைக் கைவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/20/1130420035_1.htm

 

  • 2 weeks later...

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பதற்றம்:கேசாங் தொழிற்பூங்கா மூடல்

ஏப்ரல் 28, 2013

 

south-koreans-workers-go-to-the-paji-som

 

 

வட கொரியா மற்றும் தென் கொரியா இணைந்து நடத்தும் கேசாங் தொழிற்பூங்கா நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இதற்கு தென்கொரியாதான் காரணம் என்றும் வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று தென்கொரியா இறுதியாக தனது ஊழியர்களை தொழிற்பூங்காவிலிருந்து திரும்பப்பெற்றுள்ளது.

பேச்சுவார்த்தை நடத்த தென்கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்துவிட்டது. இதனால் தென்கொரியா தொழிற்பூங்காவை விட்டு 170 ஊழியர்களை வெளியேற்றியுள்ளது. இந்த தொழிற்பூங்கா மூடப்பட்டுள்ளதால் சமரசம் நடப்பதற்கான இருந்த இறுதி வாய்ப்பும் பறிபோனதாக பார்க்கப்படுகிறது.

ஆண்டிற்கு 90 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டித் தருவதால் வடகொரியாவின் மிகச்சிறந்த பொருளாதார திட்டமாக இத்தொழிற்பூங்கா கருதப்படுகிறது. இந்த திட்டத்திற்கு கணிசமான தொகையை மாதாமாதம் தென் கொரியாவும் அளித்து வந்தது. வடகொரியா போர் எச்சரிக்கை விடுத்திருந்ததையடுத்து இந்த தொழிற்பூங்கா மூடப்பட்டது. இது நிரந்தரமான முடிவு என தற்போது வடகொரியா தெரிவித்துள்ளது.

 

http://puthiyathalaimurai.tv/tension-between-north-korea-and-south-korea-kecan-industrial-park-closures

 

படைகள் பின் வாங்காது : தென் கொரிய அரசு அறிவிப்பு

ஏப்ரல் 29, 2013 

வட கொரியா ராணுவம் தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி ஜப்பான் நாளிதழ் ஒன்று, வட கொரியா தன் எல்லைப் பகுதியில் வைத்துள்ள ஏவுகணைகளைப் பயன்படுத்தப் போவதில்லை என செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால், வட கொரியா தன் ஆயுதங்களை முற்றிலும் விலக்கிக் கொள்ளாத வரை, தென் கொரிய ராணுவம் பின் வாங்காது என்றும், எல்லைப் பகுதியைக் கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடும் என்றும் தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.

 

http://puthiyathalaimurai.tv/south-korea-will-not-take-back-its-army-says-south-korean-government

பணியாத வடகொரியா! எரிச்சலில் அமெரிக்கா!!
29 ஏப்ரல் 2013

 

தென்கொரியாவுடன் அமெரிக்கா இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்; வடகொரியாவை அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும். இரண்டையும் செய்தபிறகு பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என்று வடகொரியா தனது நிலைப்பாட்டை இன்று மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

வடகொரியாவிலிருந்து வெளியாகும் Rodong Sinmun செய்தித்தாளில் வெளியிட்டுள்ள ராணுவ செய்திக் குறிப்பில், வடகொரியா அணுஆயுத சோதனைகளைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் அழுத்தங்கள் ஏற்கத்தக்க ஒன்றல்ல. வடகொரியாவை அணுஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும். அணு ஆயுத நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனில் வடகொரியாவும் அணுஆயுத நாடாக அறிவிக்கப்பட்ட பிறகே சாத்தியப்படும். அதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் சாத்தியமில்லை என்று முகத்தில் அறைந்தாற்போல் வடகொரியா மீண்டும் தெளிவுபடுத்தி விட்டது.

வடகொரியாவை அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க முடியாது என்பதில் அமெரிக்காவும் உறுதியாக இருப்பதால் கொரிய தீபகற்பத்தில் போர்மேகங்கள் விரைவில் விலகாது என்றே தெரிகிறது. இருநாடுகளுமே முரண்டு பிடித்து வரும் நிலையில் சியோல்,பெய்ஜிங் மற்றும் டோக்கியோவு சுற்றுப்பயணம் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவுத் துறைசெயலர் ஜான்கெரி,வடகொரியா அணுஆயுத திட்டங்களைக் கைவிடுவதில் சீரியசாக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்றார்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/29/1130429023_1.htm

 

ஒன்று வட கொரிய விட்ட மிரட்டலுக்கு சமமாக இது வரையில் எதுவும் செய்யவில்லை. 

 

எல்லையில் தென் கொரிய முதலீட்டில் வட கொறிய தொழிலாளிகள் தொழில் செய்து வந்தார்கள். தென்கொறிய இப்படியான ஆலைகளை வைத்து நிரந்தரமாக தொழில் செய்ய முடியாது என்று ஏற்கனவே தனது பங்கை விலத்திவிட்டது. முட்டாள் தனமாக தொழில்சாலைகளில் கையை போட்ட வட கொறியா தனது கடைசி வேலைக்காரரை இவ்வளவு நாளும் வைத்திருந்து பார்த்தது தென் கொரியா திரும்பி வருமா என்று. அது எல்லைப்பகுதி தொழில் சாலைகளை திறக்காது. ஏற்பட்ட நட்டங்களுக்கு தனது முதலாளிகளுக்கு ஏதாவது நட்ட ஈடு கொடுக்காலாம். ஆன 3000 மேற்பட்ட வட கொறியர் நிரந்தரமாக வேலையை இழந்துவிட்டார்கள்.

 

தென் கொரியாவும், அமெரிக்காவும் நடத்திய போர் பயிற்சிகள் நிறைவு

ஏப்ரல் 30, 2013

 

joint-war-exercises-of-South-Korean-and-

 

தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து நடத்தி வந்த தொடர் போர் பயிற்சிகள் நிறைவு பெறுகின்றன. இருப்பினும், தென் கொரியா தனது ராணுவத்தை உஷார் நிலையிலேயே வைத்திருக்கும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சிகளில் 10,000 தென்கொரிய படைகளும், 3,500 அமெரிக்க படைகளும் பங்கேற்றன. மார்ச் மாதம் துவங்கிய 2 மாத கால பயிற்சிகள் தற்போது நிறைவடைகின்றன.

இந்த பயிற்சிகளால் தென் கொரியாவின் ராணுவ பலத்தை அறிந்துகொள்ள உதவியாக இருந்தது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

வடகொரியா அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டதும், தென் கொரியா அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகள் மேற்கொண்டது. இதனால் கொரியத் தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது.

 

http://puthiyathalaimurai.tv/joint-war-exercises-of-south-korean-and-american-forces-ended

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா பயந்து போனார்கள் போல? :(

 

 

இல்லையென்றே நினைக்கின்றேன்....அமெரிக்க அரசியலில் நாடுகளுடன் போர்தொடுத்து பணத்தையெல்லாம் விரயமாக்குவது ஒருகட்சி.மற்றைய கட்சி தன்னாட்டு நலன்களுடன் சண்டை சச்சரவில்லாமல் பிரச்சனைகளை தீர்க்கப்பார்ப்பார்கள். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.