Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் LLRC க்கு எதிரான தமிழீழத்திற்கான ஆர்ப்பாட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இன்று நடந்த LLRC க்கு எதிரானதும் தமிழீழத்திற்கு ஆதரவானதுமான ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

மேலும் படங்கள்.. தமிழ்நெட்டின் உதவியோடு..

 

05_04_2013_01_103165_445.jpg

 

05_04_2013_03_103173_445.jpg

 

05_04_2013_07_103189_445.jpg

 

05_04_2013_09_103197_445.jpg

 

05_04_2013_02_103169_445.jpg

 

05_04_2013_08_103193_445.jpg

 

மிகுதிப் படங்கள் இங்கே.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36199

  • கருத்துக்கள உறவுகள்

பலர் வந்தமாதிரித் தெரியவில்லையே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழமையை விட அதிகம். கிடைத்த கொஞ்ச நேரத்தில் விசிட் அடிச்சிட்டு வந்திருந்தம். பறவாயில்லை.. இந்தளவாவது வந்திச்சே..! :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்தாலும் ஒரு குடையின் கீழ் இருக்கிறோம்!
பிரிட்டனில் ஈழத்தமிழர்களுடன் பாரதிராஜா!


srilanka-06-04-2013-01.jpg

 

65 ஆண்டுகாலமாக தமிழினக் கருவறுப்புச் செயற்பாட்டை மேற்கொண்டு வரும் சிங்கள அரசின் மீது, ஐ நா சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும், தமிழக மாணவர்களின் எழுச்சிக்கு வலுச் சேர்க்கவும், பிரித்தானியாவில் 05.04.2013 வெள்ளிக்கிழமை நடந்த பேரணியில் பல்லாயிரக் கணக்கான மக்கள் எழுச்சியுடன் ஒன்று கூடி பங்கேற்றனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள்உட்பட பெருந்திரளானோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

பிரித்தானிய நேரம் மதியம் 2:30 மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பமான எழுச்சிப் பேரணி ஆரம்ப நிகழ்ச்சியை கந்தையா இராஜமனோகரன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில்  தமிழின உணர்வாளரும் தமிழ்த்திரைப்பட இயக்குனருமான பாரதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ் ஜெயானந்த மூர்த்தி, தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த பாரதி ஆகியோர் உரையாற்றினர்.

மேலும் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த தினேஸ்,  தமிழகத்திலிருந்து வழங்கிய உரையின் ஒலிப்பதிவும் இடம்பெற்றது.

பாரதிராஜா பேசுகையில், “ஈழம் கிடைக்கும், இனிமேல் தமிழன் என்பவன் ஈழத்தமிழன், இந்தியத் தமிழன், மலேசியத் தமிழன், கனடாத்தமிழன்... பிரித்துப் பார்க்காதீர்கள்.  தமிழன் எல்லோரும் அவன் எங்கிருந்தாலும் ஒரு குடையின் கீழ் இருக்கிறோம்..”.என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் வாசஸ்தலம் நோக்கி நகரத் தொடங்கிய எழுச்சிப் பேரணி, மாலை 4 மணியளவில் நிறைவு பெற்றது.

நிறைவு செய்யப்பட்ட பொழுது எழுச்சிப் பேரணியில் இழுத்துச் செல்லப்பட்ட சிங்கள அரசின் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

நிறைவு நிகழ்ச்சியின் போது தமிழகத்திலிருந்து மாணவரர் பிரிட்டோ வழங்கிய உரையின் ஒலிப்பதிவும் இடம்பெற்றது. தமிழக மாணவர் புரட்சியின் தொடர்ச்சியை இப்பேரணி பறைசாற்றியிருப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=96245

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் செய்தி-ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரனான தினேஷ் அவர்களின் செய்தி video

 

ஒருங்கிணைப்பாளர்கள், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து பேரணிக்கு அதரவாக நேரடியாக குரல் கொடுத்தார் தமிழர்களே தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கவேண்டும்.ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரனான தினேஷ் அவர்களின் செய்தி

 

for video 

http://www.vivasaayi.com/2013/04/video_5.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.