Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர்களின் உட்டாலங்கடி உண்ணாவிரதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உட்டாலங்கடி உண்ணாவிரதம்


நடிகர் சங்கத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் திரண்டனர் தமிழ்த் திரை நட்சத்திரங்கள். ஏப்ரல் 2-ம் தேதி நடிகர்கள் பலரும் கறுப்புச் சட்டையுடன் வந்திருந்தனர். சென்ற தடவை இதே நடிகர் சங்கத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தபோது சிலர் மைக்கை பிடித்து மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கினார்கள். அதுமாதிரியான தர்மசங்கட நிலை இப்போது ஏற்படக் கூடாது என்று நட்சத்திரங்கள் யாரையும் பேசவிடவில்லை. சிலரோ ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் போல தலையைக் காட்டிவிட்டுப் பறந்தனர்.
 
 உண்ணாவிரதப் பந்தலில் பலரும் கறுப்புச் சட்டையில் அமர்ந்து இருக்க, காலை 11.15-மணிக்கு வெள்ளுடையில் பரபரவென ஆஜரானார் ரஜினி. வந்ததும் சரத், ராதாரவி, வாகை சந்திரசேகர், சிவகுமார், அஜித், சூர்யா எல்லோரையும் குசலம் விசாரித்தார். 12.45-மணிக்கு தனது இன்னோவா காரில் பறந்துவிட்டார் ரஜினி.
 
தி.மு.க-வின் உள்கட்சி விவகாரங்களில் தலையிடும் குஷ்பு, பொதுப் பிரச்னையான ஈழத் தமிழருக்கு ஆதரவான உண்ணவிரதத்தில் தலையே காட்டவில்லை. 2-ம் தேதி இரவு ஸ்டார் ஹோட்டலில் பிரபுதேவா பிறந்த நாள் கொண்டாடினார். அங்கே நடந்த திருவிழாவில் 'உற்சாகமாக’ பிரபுதேவாவை அரவணைத்தபடி போஸ் கொடுத்தார் குஷ்பு. இருவருமே உண்ணாவிரதத்துக்கு வரவில்லை.  
 
p25.jpg
ஏப்ரல் 1-ம் தேதி 'சிறுத்தை’ சிவா இயக்கும் 'வெற்றிகொண்டான்’ படத்தின் படப்பிடிப்பை வைத்திருந்தனர். உண்ணாவிரதத்தில் அஜித் கலந்துகொண்டதால், படப்பிடிப்பை 8-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். பொது நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் தலையைக் காட்டாத அஜித், கால் வலியுடன் காலில் வளையம் மாட்டிக்கொண்டு உண்ணாவிரதத்தில்  உட்கார்ந்து இருந்தார்.
 
அன்று காலை உண்ணாவிரதப் பந்தலுக்கு வராமல்  ஐஸ்கிரீம் பார்லர் திறப்பு விழாவில் கலந்துகொண்டார், த்ரிஷா. விஷயம் கேள்விப்பட்டு, த்ரிஷாவுக்கு போன்செய்த ராதாரவி கடுமையாகவே திட்டிவிட்டாராம். அதன் பிறகே மதியம் ஒன்றரை மணிக்கு வந்தார். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு நைஸாக எஸ்கேப் ஆனார். அன்று இரவு நடந்த பிரபுதேவா பார்ட்டியில் த்ரிஷாவும் செம டான்ஸ்.
 
''சிறுவன் பாலச்சந்திரன் முதுகில் குண்டு பாய்ந்து இறக்கவில்லை. மார்பில் குண்டு வாங்கி, மரணத்தில்கூட தான் ஒரு மாவீரனின் மகன் என்று நிரூபித்து இருக்கிறான்'' என்று கடைசியில் வாகை சந்திரசேகர் பேசியதைக் கேட்டு சிலர் கண் கலங்கினார்கள்.
 
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார் விஜய். இப்போது ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருந்ததால் வரவில்லை. அதைக் கடிதமாக சரத்குமாருக்கு அனுப்ப, உண்ணாவிரதப் பந்தலில் விஜய் கடிதம் படித்துக் காட்டப்பட்டது.
 
உண்ணாவிரதத்துக்கு வந்தவர்களை வாசல் வரை சென்று ராதாரவியும் வாகை சந்திரசேகரும் அழைத்து வந்தனர். வடிவேலுவை உண்ணாவிரதத்துக்கு அழைத்தார்களாம். ''வேணாம். அங்கே வந்தா, நான் ஏதோ சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுற மாதிரி சிலர் விசாரிப்பாங்க. எனக்கு தர்மசங்கடம் ஆகிடும். ஆளைவிடுங்கப்பா..’ என்று கழண்டுகொண்டாராம் வைகைப் புயல்.
 
'விஸ்வரூபம்’ விவகாரத்தை உலக மகா பிரச்னை ஆக்கி, 'நான் தமிழ்நாட்டை விட்டுப்போறேன். இந்தியாவை விட்டுப் போகப்போறேன். எனக்கு வாழ்வதற்கு உலகத்தில் இடமே இல்லையா?’ என்றெல்லாம் தழுதழுத்த கமல், உண்ணாவிரதம் முடியும் நேரத்தில் வந்து மற்றவர்கள் பழரசம் குடிப்பதைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.
 
நல்லாத்தாம்பா நடிக்கிறாங்க!
 
நன்றி: Vikatan.com


 

  • கருத்துக்கள உறவுகள்
நடிகைகள்  நடிகர்கள் படத்தில் மட்டும் தான் நடிக்கின்றார்கள் என்று நினைத்தேன் ஆனால் வாழ்க்கையில் அதனை விட பிரமாதமாக நடிக்கின்றார்கள் போல் இருக்கின்றது.. 
 
என்ன அவர்களுக்கு ஒரு கஸ்ரம் ஏற்படும்போதும் பார்ப்பவர்கள் நடிக்கின்றார்கள் என்று விட்டு விடப்போகின்றார்கள். 

உள்குத்து ஆரம்பம் . பொதுவாக இதுபோல உள்குத்து போராட்டத்திற்கு பின்னடைவே தவிர பலன் ஒன்றும் இல்லை . இங்கு திரையுலகினர் செய்த ஒரே தவறு உண்ணாவிரதம் என அறிவித்தது தான் . போராட்டம் என்று சொல்லி இருக்கலாம் . அவன் வந்தான் இவன் வரலை இதெல்லாம் தேவையே இல்லாத செய்திகள் .

எமக்காக இதாவது அவர்கள் செய்தார்கள். நாம் நமக்காக என்ன செய்தோம்?

  • கருத்துக்கள உறவுகள்

விகடனுக்கு எங்க நொட்டை பிடிச்சு எழுதினா விற்பனை அதிகமாகும் என்ற சூத்திரம் தெரியும்..!

 

விடுங்கைய்யா கலைஞர் 3 மணிநேரம் மெரினாவில காத்து வாங்கிட்டு.. இந்த போர் ஓய்ஞ்சிட்டுது என்று சொல்லி 50,000 க்கும் மேற்பட்ட மக்களை துடிக்கத் துடிக்க சாகடிச்சதையும்.. அப்புறம் சரணடைய வைச்சு கொல்ல வைச்சதையும் மறைக்கிற ஊடகங்கள்.. உதுகளை மட்டும்... பெரிசா தூக்கிப் பிடிப்பினம்.

 

விடுங்க சார். அவங்களுக்கு தெரிஞ்ச வகைல போராடுறாங்க.! போராட முதல் எழுதி இருந்தா அதனை வழிகாட்டியா பின் பற்றி இருப்பாங்க. போராடி முடிஞ்ச அப்புறம் விடுப்பு எழுதிறது..

 

1. போராட்டங்களை மறைமுகமாக மழுங்கட்டிக்கச் செய்வதற்குச் சமன்.

 

2. விகடனுக்கு வியாபாரத்தை விட மற்றது எல்லாம் இரண்டாம் பட்சம் என்ற எடுகோளை எடுக்க வைக்கும்..! :icon_idea:

உள்குத்து ஆரம்பம் . பொதுவாக இதுபோல உள்குத்து போராட்டத்திற்கு பின்னடைவே தவிர பலன் ஒன்றும் இல்லை . இங்கு திரையுலகினர் செய்த ஒரே தவறு உண்ணாவிரதம் என அறிவித்தது தான் . போராட்டம் என்று சொல்லி இருக்கலாம் . அவன் வந்தான் இவன் வரலை இதெல்லாம் தேவையே இல்லாத செய்திகள் .

 

இதுதான் அவர்களின் வியாபாரம். வந்தவர்களை பாராட்ட மனமில்லை, கேவலம்

 

உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

விகடனின் இந்த கட்டுரை சுட்டி நிற்பது தமிழக மக்களை.

 

தமிழ் நடிகர்களில் அநேகர் வேற்று மொழி, வேற்று மாநில நடிகர்களாக இருந்து கொண்டும் தமிழர்களின் சினிமாவில் நடித்துக்கொண்டும், தமிழ் மக்களின் பணத்தில் சொகுசாக வாழ்ந்து கொண்டு இருக்கையிலும் தமிழ் மக்கள் சார்பான ஒரு போராட்டத்திற்கு கொடுக்கும் ஆதரவின் போலித் தன்மையை படம் போட்டு காட்டுகின்றது,

 

தமிழர்களின் ஒரு சொட்டு வியர்வைக்கு உயிரையே கொடுப்பதாக சொல்லும் நடிகர் ஒரு இலட்சம் தமிழ் மக்களின் கொலைகளுக்காக நீதி கேட்டு போராடும் போது போட்ட வேடத்தினைக் காட்டுகின்றது. தமிழ் மக்கள தன்னை கைவிடமாட்டார்கள் என்று கூறி அவர்களின் செக் மணியோடர் போன்றவற்றை வரவாகப் பெற்றவரின் தமிழ் மக்கள் பற்றை காட்டி நிற்கின்றது. தமிழத்தின் மருமகள் என்றவர் தமிழக மக்களின் உணர்ச்சிப் போராட்டதிற்கு வராமல் விட்டதைக் கேட்கின்றது.

 

ஹொலிவூட்  கலைஞர்களாக இருக்கட்டும் அல்லது வட இந்திய கலைஞர்களாக இருக்கட்டும் உலகில் உள்ள அநேக கலைஞர்கள் எல்லாம் நீதிக்கான போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்தி தம் ஆதரவினை கொடுக்கும் போது அடுத்த முதல்வர், அடுத்த பிரதமர் என்று கனவு காணும் தமிழ் நடிகர்களின் சுயநல அரசியலை கேள்வி கேட்கின்றது. தமிழக மக்கள் மத்தியில் நடிகர்களுக்காக தம் வாழ்வையே அர்ப்பணிக்கும் போக்கு இருக்கும் போது அதன் அத்திவாரத்தில் சில வெடிப்புகளை கோரி நிற்கின்றது.

 

இதில் கருத்து எழுதி இருப்பவர்களில் பலர் நடிகர்களில் ஆதரவினை தக்க வைக்க வேண்டும் என்று நினைத்து நடிகர்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு ஓரளவுக்கேனும் ஈழ மக்களுக்கான ஆதரவினை வெளிப்படுத்தும் ஒரு பிரபல ஊடகமான விகடனை முற்றிலுமாக குறை சொல்ல முனைகின்றனர். ஒரு ஊடகத்தினை பகைப்பதனால் ஏற்பாடும் பாதிப்புக்கும்  நடிகர்களின்  போலித்தனத்தினை குறை சொல்லுவதனால் ஏற்படும் பாதிப்பிற்கும் இடையிலான வேறுபாட்டை புரிய மறுக்கின்றனர். 

 

இதில் எமக்கும் ஒரு செய்தி இருக்கின்றது.  எம் மக்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பலி கொண்டதற்காக, அதில் சரிசமனாக பங்கு கொண்ட அதே நாட்டில் இருந்து கொண்டு நீதி கேட்டு போராடும் போராட்டத்துக்கு போலியாக ஆதரவு கொடுப்பவர்களை ஆகக் குறைந்தது எம் வாசல் வரைக்கும் வரவேற்று நிகழ்ச்சி செய்வதை விட்டு விடுவது நன்று என்று.

 

 

 

 

Edited by வைரவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.