Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள சுப்பர் ஸ்டார் வடிவேலு சுட்ட ஜோக்

Featured Replies

  • தொடங்கியவர்

சின்னாச்சி: புதுசா பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கற முகத்தார் குடும்பம் ரொம்ப நல்ல மாதிரி! நான் அங்கே போனவுடனேயே காப்பி கொடுத்தாங்க!''

சின்னப்பு: சரியாகப் போச்சு! அந்தக் காபிப் பொடியையும், பாலையும், சர்க்கரையையும் நம்ம வீட்டுலேர்ந்துதான் கடன் வாங்கிட்டுப் போனாங்க!''

  • தொடங்கியவர்

இரண்டாவது டிக்கெட்

உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இரண்டு டிக்கெட் வாங்கியிருந்த ஒரு நபர் தன் சீட்டில் போய் உட்கார்ந்தார். அவரின் பக்கத்து சீட் காலியாக இருப்பதை பார்த்த வேறு ஒருத்தர், “அந்த சீட்டில் உட்கார யாராவது வருவார்களா?” என்று கேட்டார்.

“இல்லை, அந்த சீட் காலியாகத்தான் இருக்கும்” என்று முதல் நபர் சொன்னார்.

“நம்பவே முடியவில்லை, உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு, வராமல் போன அந்த நபர் ஒரு சரியான முட்டாளாகத்தான் இருக்க வேண்டும், என்ன சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்க,

“அந்த சீட் என்னுடையதுதான், என் மனைவிக்கும் சேர்த்து இரண்டு டிக்கெட் புக் செய்திருந்தேன். ஆனால் பரிதாபமாக அவள் இறந்து போய்விட்டதால் இந்த சீட் காலியாக இருக்கிறது..”

“உங்கள் வாழ்க்கையின் சோகத்தை நினைத்தால், எனக்கே வருத்தமாக இருக்கிறது.. என்ன செய்ய..? அது சரி, உங்களுடன் மேட்ச் பார்க்க உங்கள் நண்பர், சொந்தக்காரர், பக்கத்து வீட்டுக்காரர் யாரையாவது கூட்டி வந்திருக்கலாமே?”

“அவர்கள் எல்லோரும்தான் என் மனைவியின் இறுதி ஊர்வலத்துக்கு சென்றிருக்கிறார்களே..!”

"..??????????"

  • தொடங்கியவர்

ஆசிரியர்: மகாபாரதம் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலே, வாசுதேவன், தேவகிக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்துக் கொண்ட கம்சன், தனது தங்கை என்றும் பாராமல், தேவகி மற்றும் கண்வன் வாசுதேவனை சிறையில் அடைத்தான். முதல் குழந்தை பிறந்த போது, அக்குழந்தையை விஷம் வைத்து கொன்றான், பின் சிறிது காலம் கழித்து இரண்டாம் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தையை கூரிய வாளின் உதவியோடு கொன்றான். மூன்றாவது குழந்தையை...

மாணவன்(விஸ்ணு): சார் ஒரு சந்தேகம்..

ஆசிரியர்:என்ன சந்தேகம்?

மாணவன்(விஸ்ணு): 8வது குழந்தை பிறந்தால் ஆபத்து என்று தெரிந்திருந்தும், வாசுதேவன், தேவகியை ஏன் ஒரே சிறை அறையில் கம்சன் அடைத்து வைத்தான்?

ஆசிரியர்: .....?

  • தொடங்கியவர்

சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் இறந்து சொர்க்கத்திற்கு சென்றனர். ஒவ்வொருவரையும் கடவுள் தனியே சந்தித்து, அவர்களது குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து கேட்டார். குறைவான குழந்தை உடையவர்களுக்கு அதிகமான பரிசும், அதிகமான குழந்தை பெற்றவர்களுக்கு குறைவான பரிசும் கொடுத்தார். காந்தியும் கடவுளை சந்திக்க உள்ளே சென்றார். ஆனால் வெளியே வரும்போது வெறுங்கையுடன் வந்தார். என்னவென்று மற்றவர்கள் விசாரித்தபோது காந்தி கோபமுடன் சொன்னார்.

யாரோ ஒரு முட்டாள் கடவுளிடம் 'நான் தான் இந்தியாவின் தந்தை' என்று சொல்லியிருக்கிறான்

அவர்கள் எல்லோரும்தான் என் மனைவியின் இறுதி ஊர்வலத்துக்கு சென்றிருக்கிறார்களே..!

"..??????????"

:shock: :shock:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஒட்டையாக நறுக்கு.....

கண்ணன் சரியான தலைவலியோடு அவனது பமிலி டாக்டலை பார்க்கப் போனான். டாக்டர் "தலை மயிரை ஒட்டையாக வெட்டிவிடு, தலை வலி போய்விடும்" என்று சொன்னார். அவர் சொன்ன படியே சலூனுக்கு போய் தலை மயிரை ஒட்டையாக வெட்டிக் கொண்டான், தலைவலி சரியாகப் போனது. ஒரு வாரம் கழித்து அவனது நுனி விரல் கதவில் மாட்டுப் பட்டு வீங்கிப் போனது. உடனே டாக்டரை பார்க்கப் போனான். அவதற்கு டாக்டர் "நகத்தைக் சொஞ்சம் ஒட்டையான வெட்டிக் கொள், வீக்கம் தானாக குறைந்து விடும்" என்றார். அவர் சொன்ன படியே நகத்தை ஒட்டையாக வெட்டிக் கொண்டான், வீக்கம் குறைந்து விட்டது. ஒரு வாரம் கழித்து அவன் ஒரு கல்யான வீட்டுக்குச் சென்றான். அங்கே அதே பமிலி டாக்டரும் வந்திருந்தார். அவரைக் கண்டதும் இவன் ஒரே ஓட்டமாக ஒடினான். இவன் ஓடுவதைக் கண்டுவிட்டு டாக்டர் இவனைப் பின் தொடர்ந்து ஓடினார். என்னய்யா என்னை கண்டும் காணாமல் ஓடிப் போற என்று டாக்டர் அவனைப் பார்த்துக் கேட்டார். அதற்கு அவன் "டாக்டர் எனக்கு ய+ரின் ஒழுங்கா போகுதில்லை. " என்றான். (உங்கட்ட வந்தா....) :

  • 1 month later...

நல்ல ஜோக்ஸ் சொல்றேள் வடிவேலு சேர்.....

இப்பிடி ஆத்தில எல்லாரும் சிரிச்சு ரொம்ப நாளாவுறது..

இப்பிடியே...நல்ல ஜோக்ஸா சொல்லிண்டு இருந்தேள்னா...

அத சொல்லி ஒருவழியா பக்கத்தாத்து பார்வதியை கரெகட்டு

பண்ணிப்புடுவோனோன்னா.....

என்ன அடல்ஸ் ஜோக்ஸ் சொன்னா ஆம்பிளையான என்னும் பாக்காம

அடிக்க வாறா...

கொஞ்சம் நல்ல ஜோக்கா சொல்லுங்கோ வெடிவேலு சேர்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ரணில் பிரதமராக இருந்த போது நடந்தது…

திடீரென்று ஒரு நாள் ரணிலின் மனைவி மயங்கி விழுந்தார், ரணிலுக்கு கையும் ஓடல காலும் ஓடல, கல்யாணம் ஆகி கன காலத்துக்கு பிறகு தன் மனைவி உண்டாகி இருக்கிறாள் என்று நினைத்து அடுத்த கணமே நாவலோகா ஆஸ்பத்திரிக்கு போன்போட்டார். மறு கணம் பரிவாரங்கள் புடை சூழ மருத்துவமனையை சென்றடைந்தனர் ணிலும் அவரது மனைவியும் , அங்கு ரணிலின் மனைவிக்கு X-Rax, Ecg,Abcd எல்லா Test களும் எடுத்து முடிய டாக்டர் வெளியே வந்தார் டாக்டரை கண்ட ரனில் வாய் நிறைய பல்லுடன் “ எனக்கு என்ன குழந்த டாக்டர் பிறக்கும்? ஆண் பிள்ளையா பெண் பிள்ளையா டாக்டர் பிறக்கும்” என்று ஆவல் மேலிட கேட்டார் , அதற்கு டாக்டர் very sorry Mr.ரணில் உங்க மனைவியின் மயக்கத்துக்கும் வயிறு வீக்கத்துக்கும் காரணம் வாய்வு (Gastick) தானே ஒளிய வேற ஒண்டும் இல்ல” என்டு சொன்னது தான் தாமதம் ரணில் கோபம் மேலிட டாக்டரின் கொலரை பிடித்துக் கொண்டு கேட்டார்....

ராஸ்கல் , நீ என்னை என்ன காத்தடிக்கிற பம் என்டா நினைச்சுக்கொண்டு இருக்கிற!!!!”

இது ரணில் பிரதமராக இருந்த போது நடந்தது…

திடீரென்று ஒரு நாள் ரணிலின் மனைவி மயங்கி விழுந்தார், ரணிலுக்கு கையும் ஓடல காலும் ஓடல, கல்யாணம் ஆகி கன காலத்துக்கு பிறகு தன் மனைவி உண்டாகி இருக்கிறாள் என்று நினைத்து அடுத்த கணமே நாவலோகா ஆஸ்பத்திரிக்கு போன்போட்டார். மறு கணம் பரிவாரங்கள் புடை சூழ மருத்துவமனையை சென்றடைந்தனர் ணிலும் அவரது மனைவியும் , அங்கு ரணிலின் மனைவிக்கு X-Rax, Ecg,Abcd எல்லா Test களும் எடுத்து முடிய டாக்டர் வெளியே வந்தார் டாக்டரை கண்ட ரனில் வாய் நிறைய பல்லுடன் “ எனக்கு என்ன குழந்த டாக்டர் பிறக்கும்? ஆண் பிள்ளையா பெண் பிள்ளையா டாக்டர் பிறக்கும்” என்று ஆவல் மேலிட கேட்டார் , அதற்கு டாக்டர் very sorry Mr.ரணில் உங்க மனைவியின் மயக்கத்துக்கும் வயிறு வீக்கத்துக்கும் காரணம் வாய்வு (Gastick) தானே ஒளிய வேற ஒண்டும் இல்ல” என்டு சொன்னது தான் தாமதம் ரணில் கோபம் மேலிட டாக்டரின் கொலரை பிடித்துக் கொண்டு கேட்டார்....

ராஸ்கல் , நீ என்னை என்ன காத்தடிக்கிற பம் என்டா நினைச்சுக்கொண்டு இருக்கிற!!!!”[/

:lol::lol::lol: அப்படி யெண்டால் :?: :?: :D

சின்னப்பு : ரொம்ப நாளாச்சு. இன்னொரு தலைதீபாவளி கொண்டாடணும்னு ஆசையா இருக்கு மாமா!"

சின்னப்புவின் மாமா : புரியலையே மாப்ளே. என்ன கேட்கறீங்க?"

சின்னப்பு: உங்களோட கடைசிப் பெண்¢ணை...!"

................................................................

அருவி : டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!

டாக்டர்: எங்கப்பா கடிச்சுச்சு?

அருவி : ரோட்ல டாக்டர்!

.....................................................

கந்தப்பு : ''நீ எழுதின கதை பேப்பர்ல வந்திருக்கு. உனக்கு யார் எழுதிக் கொடுத்தாங்க?''

சின்னப்பு

ஆகா சுட்டு விட்டு பெயரை மாத்தி போடுவதும் நகைச்சுவையாகத்தான் இருக்கின்றது.

சிரிக்க வைத்ததிற்கு நன்றிகள்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சின்னப்பு : நீயும் நானும் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா இதெல்லாம் சுத்திப்பாக்கற மதிரி நேத்திக்கு கனவு கண்டேன்!

சின்னாச்சி : அப்படியா எந்தெந்த இடத்துக்கெல்லாம் போனோம்?

சின்னப்பு : நீயுந்தான வந்த அப்பறம் என் கிட்ட கேக்கற?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பு : நீயும் நானும் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா இதெல்லாம் சுத்திப்பாக்கற மதிரி நேத்திக்கு கனவு கண்டேன்!

சின்னாச்சி : அப்படியா எந்தெந்த இடத்துக்கெல்லாம் போனோம்?

சின்னப்பு : நீயுந்தான வந்த அப்பறம் என் கிட்ட கேக்கற?

:lol::lol::lol::D:D:D:lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.