Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியத் தொழிலாளரை வெளியேற்றும் திராணி இலங்கைக்கு உள்ளதா?

Featured Replies

http://tamilworldtoday.com/archives/5034

 

 

சித்திரைப் புத்தாண்டை கொண்டாடிய இலங்கையர்களுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியிடமிருந்து வழங்கப்பட்ட வாழ்த்துச் செய்தி ஒரு சம்பிரதாயபூர்வமானதாக இருக்கக்கூடும். ஆனால் இரண்டு விடயங்களில் இந்த வாழ்த்துச் செய்தி அசாதாரண நகர்வுகளை வெளிப்படுத்துகின்றது.

ஒன்று, கொரிய வளைகுடாவின் அதியுச்சப் பதற்றம் காரணமாக தென்கொரியாவுக்கான அவசரப் பயணத்தை மேற்கொண்ட வேளையிலும்கூட இலங்கைக்கான செய்தியை ஜோன் கெரி முன்னகர்த்தியமை!

இரண்டு, இலங்கைத் தீவின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதலுக்கு இலங்கையுடன் இணைந்து ஒத்துழைப்பதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதான செய்தியும் இலங்கையருக்கான புத்தாண்டு செய்தியுடன் இணைந்தமை!

ஆக மொத்தம், இந்து சமூத்திரத்தின் 'குட்டி' மாங்காய்த்தீவு சமகால அனைத்துலக ஒழுங்கில் முக்கிய இடத்தை அதீதமாக பெற்றுவருவதற்கு ஜோன் கெரியின் வாழ்த்துச் செய்தி முதல் கொழும்பு டொக்யார்ட் பகுதியில் இருந்து இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் வரை சான்று பகர்கின்றன. 

 

http://tamilworldtoday.com/archives/5034

 

கட்டுரை பிழையான அனுமாங்களை திணித்துவிட்டு பின்னர் தனது அலசலை ஆரம்பிக்கிறது. 

 

வட கொறிய தென் கொறிய நிலைமைக்கும், இலங்கை இந்திய நிலைமைக்கும் இடையில் பாரிய வித்தியாசம்.

 

1949 ல் வாக்குரிமை பறிக்கபட்டு 60% மலையகத் தமிழரை 1964ல் இந்தியாவுக்கு திருப்ப அனுப்ப உடன்படிக்கை செய்யப்பட்டது. இ்லங்கை நினைத்தால் செய்யும்.

 

இந்திய எதிர்ப்பு, மகிந்த பதவிக்கு வந்த நாளில் இருந்தே வந்துவிட்டது. இந்தியா தனது விருப்பத்தில் போருக்கு உதவியது.  இலங்கை வருடி அழைக்கவில்லை. கட்டுரையில் பாவிக்கும் "பெரியண்ணை" சொல் சல்மான் குர்திஷ் ஆல் நிராகரிக்கப்பட்டது. இலங்கையில் அதை பாவித்தால் தண்டிக்கப்பட கூட முடியும். இலங்கை உடன் படிக்கை ஒன்றின் கீழ் கொடுத்த எண்ணை குதங்களையே திரும்ப பெற முயல்கிறது. இந்திய தூதுவராலயத்து அதிகாரி ஒருவரின் மனைவிக்கு ஆசியர் வேலைக்காக கொடுத்து வீசா புதிப்பிக்கப்படவில்லை என்று இரண்டு மூண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு செய்தி யாழில் பதியப் பட்டிருந்தது. அதனால் இந்திய உத்தியோகத்தருக்கு விசா மறுப்பு மாணவர் போராட்டத்தின் பின் வந்தது அல்ல.

Edited by மல்லையூரான்

இலங்கையானது அமெரிக்க கொள்கைவகுப்பில் முக்கியம் இடம் பிடிக்கலாம் (இன்னும் பிடிக்கவில்லை). அதற்கு தொடரும் மகிந்த சிந்தனை நிச்சயம் உதவும்.

அமெரிக்காவின் மாற்றம் பல ஈடாடல்களுக்கு பின்னர்தான் வரும்.

 

இந்தியாவும் நமது விடுதலைக்கு எதிராக செயல்ப்பட்டிருந்தாலும், அமெரிக்காவின் நடத்தை பிரத்தியேகமானது. இந்தியா இந்திராகாந்தி காலத்தில் சிறிமாவுடன் ஒருவகை உறவில் இருந்தது. பின்னர் J.R. வந்தவுடன் மாறியது. தான் ஆயுதங்கள் கொடுத்து ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தது. ராஜீவ் பாதை மாறினார். பார்த்தசாரதியை திருப்பி அழைத்தார். புதிய தூதுவர்கள் மூலம் புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தினார். இன்றைய காங்கிரசின் கொள்கைகள் வெறும் பழிவாங்கல்களே.  அதில் ஆராய பெரிதாக எதுவும் இல்லை.

 

அமெரிக்கா ஏன் புலிகளை எதிர்த்தது? சில கருத்தில்லா மாற்றுக்கருத்துக்களின் ஊகங்களைத் தவிர நான் சரியான பதிலை காணவில்லை.

1 .புலிகள் பயங்கரவாதிகளா.?(-ஏன் பயங்கரவாதிகள்?)

2. இலங்கை பிளவு படக்கூடாது என்பதாலா?(-ஏன் பிளவுபகடக்கூடாது).

3. இந்தியாவின் உதவி தேவைப்பட்டதால் அதன் எதிரிகளான புலிகளை எதிர்த்ததா?

4. புலிகள் அமெரிக்காவின் எதிரிகளான ஈரான், வட கொறியா போன்றவற்றிடம் ஆயுதங்கள் வாங்கினார்களா? அல்லது சர்வதேச கடத்தல்களில் ஈடுபட்டார்கள் என்ற கதைகள் உண்மையா? (அதற்காக மட்டும் ஈழத்தமிழரின் சுதந்திரப்போரை அமெரிக்கா நசுக்கியதா?)

5. புலிகள் முட்டாள்கள், இலங்கை இராஜதந்திரம் கூடியது என்பதாலா?

.........

 

 

இலங்கை ராஜதந்திரம் கூடியது என்றால் இன்றைய இடர்ப்பாடுகளிலிருந்தும் அது தன்னைத்தான் இலகுவில் வெளிக்கொண்டுவந்து விடும். ஆனால் இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து இன்று அது இருந்துதிருக்க வேண்டிய அரசாட்சி, பொருளாதார முன்னேற்றங்களை காணாமல், ஒரு மத, ஒரு மொழி, சர்வாதிக்கார அரசாக மாறியிருப்பது அதன் ராஜதந்திர சிறப்பில் பெரிய பள்ளம் இருப்பதை மூடி மறைக்க தவறுகிறது.

 

புஸ்காலத்தில் அமெரிக்காவின் வெளிநாட்டுக்கொள்கையில் இருந்த ஓட்டைகள் எதுவும் இரகசியமல்ல. ஆனால் அமெரிக்கா புலிகளுக்கு எதிராக செயல்ப்பட்ட வெற்றியின் பின்னனி, பிரதானமாக கதிர்காமர் ஒஸ்போர்ட் பல்கலைகளகத்தில் படித்த அரசியலில் மேற்குநாட்டு அரசியலை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தமையே. பிளேக் இலங்கை வந்த போது மிகத்திறமையான இராஜதந்திரி ஒருவரால் கையாளப்பட்டார். அவர் வரும் போது தான் ஜோன் கொப்பின்சில் படித்தவர் என்பதால் இலங்கை மூன்றாம் தர நாடு என்று மிகவும் அசண்டை கேட்டாக இருந்துவிட்டார். கதிர்காமர் தனது லொபியிங் தந்திரங்களை பாவித்து கவனமாக மேற்கு நாடுகளை கையாண்டுவிட்டார். பிளேக் இலங்கை வரமுன்னரே அமெரிக்கக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இந்த புதிய மாற்றத்தை செயல்ப்படுத்தவே பிளேக் அனுப்பிவைக்கபட்டிருந்தார். இதனால் அவர் கதிர்காமர் கிண்டிய பொறிக்கிடங்கில் போய் விழுந்ததிலும் பெரிய ஆச்சரியம் இல்லை.

இலங்கையில் நடத்தையின் படி அது கதிர்காமரின் லொபியிங் தந்திரத்தைத்தான் பெரித்துபடுத்துகிறது. அமெரிக்காவை உள்நாட்டில் வெளிப்படையான வாய்ப்பேச்சுக்களால் எதிர்க்கிறது.  இதுவரையில் அமெரிக்க கேட்டபடி ஜனநாயபாதையில் செல்ல மறுக்கிறது. இது தமிழர் விடையத்தில் மட்டுமல்ல, முஸ்லீம், சிங்களவர் விடையத்திலும் இலங்கை அமெரிக்க ஆலோசனைகளை மதிப்பதில்லை. இவற்றின் பின்னர் அமெரிக்க அரசியலில் தாக்கம் ஏற்படுத்தவென்று, லொபி கம்பனிகளை வாடகைக்கு அமர்த்துகிறது.

 

இலங்கை இந்த கடைசி முயற்சியிலும் சில வெற்றிகளை கண்டிருப்பதால் அமெரிக்கா இலங்கையை பற்றி முழுவதாக உணர்ந்து தனது வெளிநாட்டுக்கொள்கைகளை ஏற்படுத்திக்கொள்ள முன்னர் பல ஈடாடல்களை சந்திக்கும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.