Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானில் பயங்கர நிலநடுக்கம்: பாகிஸ்தான், டெல்லியிலும் அதிர்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: ஈரானை மையமாக கொண்டு இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இதன் தாக்கம் பாகிஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டது.

ஈரானை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஈரானையொட்டிய பாகிஸ்தான் எல்லை மற்றும் டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

மேலும் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கட்டிடங்கள் அதிர்ந்ததால், மக்கள் அலறியடித்தபடி வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.

குறிப்பாக டெல்லியின் புறநகரான நொய்டா மற்றும் குர்காவ் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=13881

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
ஈரானில் மீண்டும் பூமியதிர்வு; 40 பேர் பலி
செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013 16:59
ஈரானின் தென்கிழக்கு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும்  இடம்பெற்ற சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி காரணமாக குறைந்தபட்சம் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுவதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
இந்த பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் 7.8ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. 
 
பாகிஸ்தானின் எல்லையில் உள்ள காஷ் நகரிலிருந்து 86 கிலோமீற்றர் தொலைவில் இந்த பாரிய  பூமியதிர்ச்சியின் தோற்ற மையம் காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
மத்திய கிழக்கிலும் வளைகுடாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
தென்மேற்கு ஈரானில் இந்த மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற 6.3 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சி காரணமாக குறைந்தபட்சம் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 850 பேர் காயமடைந்தனர். 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/64042-2013-04-16-11-33-46.html

  • கருத்துக்கள உறவுகள்

மதியச் சாப்பாடுக்கு அலுவலகத்தை விட்டு கீழே வெளியே வரும்போது சாலையில் பலரும் அலறியடித்து வெளியே ஓடி வந்தபோதுதான் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என தெரிந்தது...ஆனால் நான் நிலநடுக்கத்தை உணரவில்லை. ரிக்டர் அளவில் 7.8 என்றளவில் அதிர்வு இருந்ததாக இங்கே செய்திகள் வெளியானது.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் மிக பயங்கர நிலநடுக்கம்: 40 பேர் பலி

 

தெஹ்ரான்: ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் இன்று மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் டெல்லி, குர்காவ்ன் உள்ளிட்ட இந்தியாவின் வட பகுதிகளும், பாகிஸ்தானும், வளைகுடா நாடுகளும் குலுங்கின. இன்று மாலை 4.14 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு 8 ரிக்டர் புள்ளிகளாக இருந்ததாக அமெரிக்க நிலவியல் மையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இது 7.6 முதல் 7.8 புள்ளிகளாக இருந்ததாக ஈரான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஈரானில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. 40 பேர் வரை பலியாகிவிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பலி எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

 

டெல்லி, குஜராத், சண்டீகர் குலுங்கியது...
 
இந்தியாவில் இந்த நிலநடுக்கம் டெல்லி, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், சண்டீகர் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. இங்கு வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
 
கராச்சி, ராவல்பிண்டி, குவெட்டா, இஸ்லாமாபாத்...
 
அதே போல பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, குவெட்டா, இஸ்லாமாபாத், ஹைதராபாத் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. அதே போல ஆப்கானிஸ்தானின் காண்டஹார் பகுதியும் இந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்தது.
 
துபாய், ஷார்ஜா, அஜ்மான்...
 
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வளைகுடா நாடுகளிலும் உணரப்பட்டது.துபாய், ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட‌ அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் நில‌ந‌டுக்க‌ம் உண‌ர‌ப்ப‌ட்ட‌து. அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் வ‌சித்து வ‌ரும் ம‌க்க‌ள் த‌ங்க‌ள் க‌ட்டிட‌த்தை விட்டு தெருக்க‌ளில் காத்திருந்த‌ன‌ர். அரைம‌ணி நேர‌ம் க‌ழித்து த‌ங்க‌ள‌து இருப்பிட‌ங்க‌ளுக்கு திரும்பின‌ர்.
 
பஹ்ரைன், கத்தாரிலும்...
 
அதே போல பஹ்ரைனிலும் கத்தாரிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. இதையடுத்து அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் உயரமான கட்டடங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த நிலநடுக்கம் தெற்கு ஈரான்-பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண எல்லையில் கஷ் என்ற பகுதியில் மையம் கொண்டிருந்தது. நிலத்துக்கு அடியில் 15.2 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி தான் ஈரானை 6.1 ரிக்டர் புள்ளிகள் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதும் அதில் 37 பேர் பலியானதும் நினைவுகூறத்தக்கது. நிலநடுக்கத்தின் தாக்கத்தை விவரிக்கும் படம்: கீழே உள்ள படம் அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள படமாகும். இதில் நிலநடுக்கத்தின் தாக்கத்தின் அளவு விவரிக்கப்பட்டுள்ளது.
 
16-shake-map--600.jpg
 
 
-- தட்ஸ்தமிழ்

 

 

Edited by ராஜவன்னியன்

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 40 பேர் பலியானதாக தகவல்

 

iran-earthquake1.png

 

 

ஈரானில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8.0, 7.8 என பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி மாலை 4.41 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட இந்திய மாநிலங்களையும் உலுக்கியுள்ளது.

ஈரான் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் காஷ் நகரில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் பாகிஸ்தான் எல்லை அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம், ஈரானில் கடும் சேதத்தை விளைவித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஈரான் நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 40 பேர் பலியானதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சவுதி அரேபியா, ஈரான், துபை, அஃப்கானிஸ்தான், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகளிலும் உணரப்பட்டது. பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துபையிலும் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவிலும் நிலஅதிர்வு: இதன் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. காஷ்மீர், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும், டெல்லி குர்காவோன் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு சில வினாடிகள் உணரப்பட்டது. டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வால் மக்கள் அச்சத்தில் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறினர்.

http://puthiyathalaimurai.tv/iran-earth-quake

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.