Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டென்மார்க் நாடாளுமன்றத்தில் நடைபெறும் மாநாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி சிறப்புரையாற்றுகின்றார்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

tgteft-300x163.jpg

 

தற்போதய டென்மார்க் அரசின் முதன்மை கட்சியான சமுக சனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Troels Ravn அவர்களுடைய ஏற்பாட்டில் நாளை டென்மார்க் நாடாளுமன்றத்தில் நடைபெறும் மாநாட்டில் சிறப்புரையாற்றுவதற்காக நாடுகடந்த அரசின் பிரதிநிதியும் அழைக்கப்பட்டுள்ளார்.

 

நாளை நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வதர்காக நாடுகடந்த தமிழீழ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சின் ஆலோசகர் டேவிட் சுந்தா அவர்கள் இன்று டென்மார்க் வந்து சேர்ந்துள்ளார்.

 

புலம்பெயர் தமிழ் மக்களால் சனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப்ப தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்டு செயல்படும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி ஒருவர் டென்மார்க் அரச கட்சி நாடாளுமன்றஉறுப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டமையானது தமிழ் மக்களின் சனநாயக செயல்பாட்டுக்கு கிடையத்த சிறப்பாகும்.

 

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுவதை தடுப்பதற்காக சிறிலங்கா அரசு முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இலங்கைத்தீவில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான இந்த மாநாடு, டென்மார்க் சமூக சனநாய கட்சியில் இணைந்து செயல்படும் தமிழ் உறவுகளின் வேண்டுகோளுக்கு அமைய அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் Troels Ravn மற்றும் Mogens Jensen ஆகியோரால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

 

நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநதியுடன் டென்மார்க்கின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், ஆய்வாளர்களும் மற்றும் தாயகத்தில் இருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளனர்.

 

http://nerudal.com/nerudal.56676.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னம்பலம் என்ற பெயரைக்கேட்டாலே நாக்குத் தடுமாறுகின்றது.

 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சரியான நேரத்தில் சரியான வழிகளைப் பின்பற்றுகின்றார்

ஈழத்தமிழனின் விடிவிற்கு நீங்கள் செய்யும் பணிக்கு வாழ்த்துகளுடன்

நன்றிகளும் உரித்தாகட்டும்    .

 

வள வள என்று பேசாமல் கிடைக்கும் சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்கடுத்த வேண்டும்.

முக்கியமாக இனப்படுகொலை ஆதாரங்களை (CD கள் + ஆவணங்கள்)  அங்கு பிரசன்னமாகியிருக்கும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

வெறுமனே போட்டோ எடுத்து, அறிக்கைவிட்டு பிழைப்பு நடத்துவதில் பெரும் பயன் கிடைக்காது.

இதன் மூலம் தமிழருக்கு நீதியும், விடுதலைப் புலிகள் மீதான தடைகளை விலக்கும் சூழ்நிலையும், சிங்கள அரச பயங்கரவாதிகள் மீது பொருளாதார தடைகளும்   ஏற்பட்டாவிடால் இவர்கள் பயனற்றவர்கள் என்றே வரலாறு பதியும்.  

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வள வள என்று பேசாமல் கிடைக்கும் சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

 

தயவு செய்து தமிழீழம் ஏன் வேண்டும் என்பதனை ஆணித்தரமாக டென்மார்க் அரசிலுள்ள ஒவ்வொருவரும் நன்கு புரிந்து கொள்ளும்படி கருத்துக்களை பதிவு செய்யவும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

100 பேருக்கு மட்டுமே இடம் இருக்கு என்று தெரிந்தும் அனைத்துலக கும்பல் தமது குடும்பங்களுடன் சென்று கதிரைகளை நிரப்பியுள்ளதாக மாநாடு நடைபெறவிருக்கும் இடத்தில் இருந்து தகவல்கள் வருகின்றது.

 

முன்கூட்டியே தமது வரவை பதிவு செய்யும் படி கூறப்பட்டிருந்தது இந்த கும்பல் நாடுகடந்த அரச பிரிதிநிதியின் வரவை குழப்புவதற்காக தமது கும்பலில் உள்ள தமிழர்களின் பெயர்களை பதிந்து அங்கு டெனிஸ் பாராளமன்றஉறுப்பினர்களுக்கு இடம் இல்லாமல் பண்ணியிருக்கிறார்கள்.

 

இந்த கும்பலை சேர்ந்த சிவாவும் மகேசும் மாநாட்டை நடத்தும் பாராமன்றரை சந்தித்து நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதியின் சிறப்புரையை நிப்பாட்டுமாறு கேட்டுஇருக்கிறார்கள்.

 

இறுதியாக நேற்றும் கஜேந்திரகுமார் பொன்னப்பலத்துடன் சேர்ந்து சென்று திரும்பவும் கேட்டிருக்கிறார்கள்.

 

முக்கிய குறிப்பு, கஜேந்திரகுமார் பொன்னப்பலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பி என அறிமுகபடித்தியிருக்கிறது அனைத்துலக கும்பல்.

மாநாட்டு மண்டபத்தில் இருந்து ………
 

 

Edited by onmai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.