Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘அரசே நாட்டை விட்டு ஓடு” ; இன்றிலிருந்தே ஆரம்பிப்போம் – எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு!

Featured Replies

‘அரசே நாட்டை விட்டு ஓடு” ; இன்றிலிருந்தே ஆரம்பிப்போம் – எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு!

— 

19/04/2013 at 10:01 pm

 

 

eathir-kadchi-150x150.jpg

மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் அராஜக அரசாங்கத்தை நாட்டை விட்டு விரட்டியடிக்கும் காலம் வந்துவிட்டதால் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து வீதியில் இறங்கி ‘அரசே நாட்டை விட்டு ஓடு” என விரட்டியடிக்க இன்றிலிருந்தே போராட ஆயத்தமாவோமென எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எதிக் கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண, மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார, நவ சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரா, முஸ்லிம் தேசியக் கட்சியின் தலைவர் அசாத் சாலி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் நல்லையா குமரகுருபரன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மங்கள சமரவீர எம்.பி.,

ஆட்சியில் அமர்த்திய மக்களிடம் இந்த அரசாங்கம் ‘அரசாங்க பராமரிப்பு வரி” யை அறவிடுகின்றது. இது எந்த வகையில் நியாயம் எனக் கேட்கின்றோம். இது எல்லாம் ஒரு குடும்பத்தின் நாடகமாகும்.

இந்த அரசுக்கு ஊழல் மோசடிகள் செய்து நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கமே தவிர வேறு ஒன்றும் இல்லை. கார் ஓட்டப் பந்தயம் போன்றவற்றுக்கு வீண்விரயமாகும் மின்சாரங்களுக்கு யார் மின் கட்டணம் செலுத்துகின்றனர். அது எவ்வாறு செலுத்தப்படுகின்றது எனக் கூறமுடியுமா?

எனவே நாட்டு மக்களின் பணத்தினை அநியாயமாக்க நாம் இடமளியோம். அத்துடன் இந்த அராஜக ஆட்சிக்கு நாம் இனி ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். எனவே அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ‘அரசே நாட்டைவிட்டு ஓடு” என போராட ஆயத்தமாவோம் எனத் தெரிவித்தார்.

நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண கூறுகையில்,

இங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியா நிலவுகின்றது. மாறாக பௌத்த இனவாத ஆட்சியே இங்கு நிலவுகின்றது. தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் இந்த அரசாங்கம் பௌத்த பேரினவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை பலவந்தமாக செயற்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொள்கின்றது.

பொதுபல சேனா மற்றும் ராவணா போன்ற அடிப்படைவாத பௌத்த அமைப்புக்களை உருவாக்கி அரசாங்கம் தனது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது. நாட்டில் ஜனநாயகம் என்பது கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. அதையே வடக்கில் உதயன் பத்திரிகை மீதான தாக்குதல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

எனவே, இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என்றால் ஆட்சியில் இருக்கும் அரசை வீட்டுக்கு விரட்டுவதே சரியான வழியாகும். ஆகவே அனைத்து மக்களும் இன்றிலிருந்து ஒன்றிணைந்து வீதியில் இறங்கி அரசுக்கெதிராக போராட முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவிக்கையில்,

நாட்டு மக்களின் கழுத்தை நெரித்து இரத்தத்தைக் குடிக்கும் பணவெறி பிடித்த பேய்களை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். இந்த நாட்டில் மக்கள் எவ்வாறு வாழ்க்கையை கொண்டு செல்வது. ஏன் அந்த நாட்டில் வாழ வேண்டும் என்ற கேள்விகள் கூட மக்கள் மனதில் எழத்தோன்றியுள்ளன.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் எல்லோரும் அரசைவிட்டு வெளியேறி மக்களின் வாழ்க்கைக்கு உறுதி வழங்க வேண்டும். அரசிலுள்ள அமைச்சர்கள் சிலர் களவாக எத்தனோல் மற்றும் போதைவஸ்து வியாபாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பணவெறி பிடித்த ஆட்சிக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி எம்மோடு இணைந்து போராட முன்வர வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

http://tamilleader.com/?p=10682

Edited by மல்லையூரான்

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ரணில் ஓடும்வரை அரசாங்கத்தை விரட்ட முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை வான் இப்ப  கொஞ்ச நாளாய் வேலை இல்லாமல் நிற்குதாம்.ஐ.தே.க காரருக்கு வசதி எப்படி?? :lol:  :lol:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள மக்களின் உறுதியான தமிழீழ ஆதரவு .... :)

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களின் உறுதியான தமிழீழ ஆதரவு .... :)

 

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ்மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என சிங்கள மக்கள் போராடுகிறார்கள்....நீங்கள் தான் சிங்கள மக்களை பிரிவினைக்காக தூண்டுகிறீர்கள் ...:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.