Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி கோசிப் பாகம் 1

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின் எனது நண்பரை கோயிலில் சந்தித்தேன்.எல்லோரையும் போல சாமி கும்பிட போற ஆள் இல்லை தானே நான் கோசிப்புக்கு தானே போறனான் நண்பரை கண்டவுடன் கைகுலுக்கி எப்படி அப்பா கண்டு கனகாலம் ஊரில கண்டதற்கு இப்ப தான் சந்தித்தேன் அவர் இங்கு 20 வருட காலத்திற்கு மேல் இங்கு வசிக்கும் நபர்.நான் புதுசு தானே எப்படி அப்பா அவுஸ்ரேலியா என்று கேட்டேன் அதற்கு நண்பர்,இவங்கள் சரியான ரெஸிட் இவங்களை விட சிங்களவங்கள் நல்லம் அவனோட வாழலாம் இவங்களோடு வாழஏலாது இங்கு வந்தற்கு அங்கே இருந்து இருக்காலாம் என்றார் நாட்டு பிரச்சினை இல்லை என்றால் தான் அங்கு போய் இருப்பேன் என்றும் வயது போன பின் அங்கே போய் இருப்பது என்று யோசிக்கிறேன் என்றார்,உடனே நான் மச்சான் வந்தற்கு ஊருக்கு போனினீயோ என்று கேட்டேன்.அதற்கு நண்பன் எனக்கு இப்ப அங்கு ஒருத்தரும் அங்கு இல்லை எல்லோரையும் இங்கு கூப்பிட்டு விட்டேன் ஒரு சொந்தமும் இப்ப அங்கு இல்லை ஒன்ற விட்ட தம்பியயும் இப்ப பொன்சர் பண்ணிருக்கிறேன் அவரும் கெதியில் இங்கு வந்து விடுவார் என்ற வீடு எல்லாம் விற்று காசு எடுத்து கொண்டு வருகிறார் என்று கூறினார்(எனக்கு கேட்க வேண்டும் போல இருந்தது இவங்கள் ரேசிட் என்றால் ஏன் எல்லோரையும் இங்க கூப்பிட்டனிர் என்று)

இது எனது மூத்த மகன் மெடிசன் பைனல் இயர்,இரண்டாவது மகள் அவளும் பிஎஸ்சி செயிகிறாள் முடித்தவுடன் மெடிசன் செய்வா என்று மனைவியையும் அறிமுக படுத்தினார்.

நான் கேட்டேன் அப்ப இங்கு தரபடுத்தல் இல்லையோ வெள்ளையனுக்கு கூட கருப்பனுக்கு குறைய என்று நண்பன் பதிலே சொல்லவில்லை.விடை பெற்று வெளியே வந்தவுடன் மகன் தனது காரில் சென்றார்.நம்பர் பிளேட்டை பார்த்தேன் மகனின் பெயர் அதில் இருந்தது.என்னடப்பா மகனின்ட பெயர் இருக்கிறது என்று கேட்டேன் அது பேர்சனல் நம்பர் பிளேட் என்றார்கள் என்ற காரில் நம்பர் பிலெட் மனைவின் பெயரில் அமைந்திருக்கிறது என்றார்.

இப்படியான சலுகைகள் இல்லாமல் தானே அங்கு மக்கள் கஸ்டபடுகிறார்கள் இங்கு நீங்கள் கொஞ்சமாவது நிம்மதியாக இருக்கிறார்கள் என்று ஊரில் சனம் படும் பாட்டுக்கு இது எவ்வளவோ மேல் தானே என்றேன் அதற்கு அவர் என்ன தான் இருந்தாலும் தோலும் கொஞ்டம் வெள்ளையாக இருந்தால் நல்லம் தானே இவங்களுக்கு சமமாய் இருக்கலாம் என்று கூறினார் கருப்பு தோல் இல்லாவிடின் நாங்கள் தான் சூப்பர்ப் இன் ட வேல்ட் என்று விடை பெற்று சென்றார் நண்பர்............ :evil: :evil: :evil: :evil:

வணக்கம் புத்தனே!

எனக்குக் கொசிப் கேக்கிறதெண்டால் சரியான விருப்பம். தொடர்ந்து எழுதுங்கோ,

அப்ப உங்கடை ஊரிலையும் ஆக்கள் அப்பிடித் தான் இருக்கினம் போலை.

வேரோடி விளாத்தி முளைச்சாலும் தாய்வழி தப்பாதுதானே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா நன்றி .........

எல்லா இடத்திலும் இப்படியான ஆக்கள் இருப்பினம் தானே புத்தன்

நான் சிட்னி கொசிப் எண்டவுடன சுண்டல் தூயா பபா அன்ட் கந்தப்ஸ் பற்றிய கொசிப் எண்டு நினைச்சிட்டன்பா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனை பேர் கிளம்பிட்டீங்க அது சரி கந்தப்புவை பற்றி தினம் ஒரு கொசிப் தரலாம் நீங்கள் சகிக்க மாட்டீங்கள்....

தைரியம் இருந்தா எழுதுங்க பாப்பம் எங்கட அவுஸ்திரேலிய றோயல் பமிலி மேல உங்களால கை வைக்க ஏலுமா புத்ஸ் :wink: :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைச்சுத்தா போச்சு?????அது சரி அவுஸ்ரேலியாவில எங்க ரோயல் பமிலி இல்லையே நாங்கள் ஒரு ஜனநாயக குடும்பம் :roll: :roll: :roll: :D:D:D

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நானும் உப்படிப்பலரைக்காணுகிரனான். சிங்கக்கொடியுடன் துடுப்பாட்டம் நடக்கும் இடங்களுக்கு போகும் இவர்கள் தமிழரைவிட சிங்களவர் நல்லவர்கள் என்பினம்.

அவுச்திரெலியா வெள்ளைக்காரர்கள் நிற வெறி பிடித்தவர்கள் என்பினம். இலங்கையில் இருந்திருக்கலாம் என்பினம். ஆனால் எல்லோச்சகோதரர்களையும் வெளி நாட்டுக்கு கூப்பிட்டுவினம். சிங்களவன் நல்லவன் என்றால் ஊரில் இருந்திருக்கலாமே. ஈழப்போராட்டத்தினைக் கொச்சைப்படுத்திவினம். அகிம்சையில் போரிட வேண்டும் என்பினம். பெடியல் தேவையில்லாமல் சண்டையினைத் தொடக்கி வீணான இழப்பு என்பினம். ஆனால் ஈழச்செய்திகள் வாசிக்கமாட்டினம். இலங்கை டெயிலி நீயூஸ் செய்தியில் வரும் பொய்ச் செய்திகள் தான் வாசிப்பினம். எதுக்கெடுத்தாலும் கீதையில் வரும் கருத்துக்கள் சொல்வினம். அப்ப நானும் நீங்கள் கும்பிடுகிற ஆரியக் கடவுள் கிருஸ்ணன் தானே அர்ச்சுனனைப்பார்த்து கடமையைச் செய் பலனை எதிர்பாக்காதே என்று சொல்லி கெளரவர் மீது சண்டை செய்யச்சொன்னவர். கடவுளே உரிமைக்காச் சண்டை போடு என்று சொன்னவர். ஆனால் பெடியல் செய்தால் பிழை என்று சொல்லுறியள் என்று கேக்க, கீதையில் எவ்வளவு நல்ல விசயம் இருக்குது என்று சொல்லி அது வேற, இது வேற என்று அடம் பிடிப்பினம். நான் கோபம் தாளாமல் உங்களுக்கும் எட்டப்பன் கதிர்காமருக்கும் வித்தியாசமில்லை என்று சொல்ல, இப்ப என்னோட அவையள் அரசியல் கதைப்பதில்லை. யாழிலும் உப்பிடி ஒன்று இரண்டு ஊலாவுது. எப்படி விளங்கப்படுத்தினாலும் காதில் அவைக்கு ஏறாது. கடைசியாக அனாதைகளாக மற்றவர்களினால் ஒதுக்கப்படும் நிலைக்கு இவர்கள் வரப்போவது உறுதி

கந்தப்பு நீங்க சொல்லுற மாதிரி பலர் லண்டனிலும் இருக்கினம். படித்த முட்டாள்கள் என்ன சொன்னாலும் திருத்த முடியாதவர்கள்

எல்லா இடத்திலும் இப்படியான ஆக்கள் இருக்கினம் புத்தன் & கந்தப்பு அவர்களை திருத்துறது ரொம்பக் க்ஷ்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.