Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோரின் வழக்குகளை திரும்பப் பெற முடியாது - சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா.

Featured Replies

தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மீதான அவதூறு வழக்குகளை திரும்பப் பெற முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்,  தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

 
 இதற்கு உடனடியாக பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை திரும்பப் பெற முடியாது  என்று கூறினார்.

தன்னையும், தமது அரசையும் அவதூறாக பேசுவது மக்கள் மீதான நம்பிக்கையை பாதிக்கும் என்று கூறிய ஜெயலலிதா, தம்மிடம் கோரிக்கை வைப்பதை விட்டு விட்டு அவதூறு பேசுவோருக்கு ஆலோசனை தரலாம் என்றார்.

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14214:karunanidhi,-vijayakanth-and-can-not-get-back-cases-chief-minister-jayalalithaa-in-the-assembly&catid=36:tamilnadu&Itemid=102

 

அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ

 

தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது அரசின் மீது பழிசுமத்துவோர் அவதூறு வழக்குக்களை சந்தித்தே ஆகவேண்டுமென உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

 

இன்று செவ்வாய் தமிழக சட்டமன்றத்தில், காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, தேசிய முற்போக்கு திராவிடர் கழக அணியின் துணைத் தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், அவரது கட்சித் தலைவர் விஜயகாந்த், திமுக தலைவர் மு கருணாநிதி உள்ளிட்டோர் மீது தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குக்கள் திரும்பப்பெற்றுக்கொள்ளப்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

 

அது சம்பந்தமாக பதிலளித்த முதல்வர், "எத்தகைய உயரிய பொறுப்பில் ஒருவர் இருந்தாலும் அவர் நா காக்கவேண்டும். காக்காமல் இருப்பவர்களுக்குப் பாடம் புகட்டவே அத்தகைய வழக்குகள்" என்று கூறினார்.

 

"தன்னை நம்பி கோடிக்கணக்கான மக்கள் வாழும்போது, தன்னைப் பற்றியோ தனது அமைச்சரவை சகாக்களைப் பற்றியோ அவதூறாக ஏதும் கூறப்படும்போது அரசு அமைதி காத்தால், புகார்கள் உண்மை என்றாகிவிடும் என்பதாலேயே வழக்குக்கள் தொடரப்படுகின்றன" என்று அவர் விளக்கமளித்தார்.

 

அரசியல்வாதிகள் தவிர ஊடகவியலாளர்கள் மீதும், ஊடக நிறுவனங்கள் மீதும் பல்வேறு அவதூறு வழக்குகளைத் தமிழக அரசு தொடர்ந்துள்ளது.

 

 

"கொலைகள் குறைகின்றன"

 

சட்டம் ஒழுங்கு பற்றிப் பேசுகையில், அவர் தனது ஆட்சியில் ஆதாயக் கொலைகள் குறைந்துள்ளன என்று கூறினார்.

"முந்தைய அஇஅதிமுக ஆட்சியின் இறுதி ஆண்டான 2006ல் 1274ஆகக் குறைந்த கொலைகளின் எண்ணிக்கை, பிற்பாடு வந்த திமுக ஆட்சியில், 25.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இப்போது மறுபடியும் கொலை சம்பவங்களின் உயர்வு வீதம் குறைந்துள்ளது."

 

2011ல் உயர்வு விழுக்காடு 1.86 ஆகக் குறைந்து, 2012ல் அது 3.38 சதமாக அதிகரித்தது என்றாலும், திமுக ஆட்சியோடு ஒப்பிடும் போது கொலை சம்பவங்களின் அதிகரிப்பு சதவிகிதம் 2 விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறினார் ஜெயலலிதா.

 

குறிப்பாக உணர்ச்சி கொந்தளிப்பினால் ஏற்படும் கொலைகளை காவல்துறையினரால் தடுக்க இயலாது. எனவே, ஒட்டுமொத்த கொலைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல், ஆதாயக் கொலைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

 

"அந்த அடிப்படையில், 2010ல் 153 என இருந்த ஆதாயக் கொலைகளின் எண்ணிக்கை 2012ல், 137 ஆகக் குறைந்துள்ளது. எனவே, இந்த இரண்டு ஆண்டுகளில் ஆதாயக் கொலைகள் 10.45 சதவீதம் குறைந்திருப்பது காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றுவதையேக் காட்டுகிறது" என ஜெயலலிதா வாதிட்டார் .

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/04/130423_jayadefamation.shtml

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.