Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

Featured Replies

நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பான வழக்கில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது என்ற சட்டத்தை மீறி 2001ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார். தான் தாக்கல் செய்த வேட்புமனு ஒவ்வொன்றிலும் 2 தொகுதிகளுக்கு மேல் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும், இனிமேலும் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யப் போவதில்லை என்றும் உண்மையை மறைத்து உறுதிமொழி அளித்தார்.
 
தேர்தல் அதிகாரி முன் இவ்வாறு பொய்யான உறுதிமொழி அளிப்பது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். இதற்கான புகாரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென வேண்டுகோள் வைத்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மறைந்த குப்புசாமியும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயனும் மேலும் சில உறுப்பினர்களும் 2001ல் தேர்தல் கமிஷனுக்கு  முறையீடுகள் அனுப்பினர்.
 
தேர்தல் கமிஷன் உடனடி நடவடிக்கை எடுக்காததால் அப்போது திமுக நாடாளுமன்ற குழு தலைவராயிருந்த குப்புசாமி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இதனால் விஜயன் தனியாக எந்த வழக்கும் அப்போது தாக்கல் செய்யவில்லை. குப்புசாமி தாக்கல் செய்த அந்த ரிட் மனுவில் தீர்ப்பளித்த நீதியரசர்கள் எலிப்பி தர்ம ராவ், பழனிவேலு ஆகியோர் கொண்ட அமர்வு தேர்தல் கமிஷன் குற்ற புகார்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி புதுக்கோட்டை, பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட்கள் முன்பு புகார்களும் தேர்தல் அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டன.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தேர்தல் கமிஷனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடும்போது இப்படித்தான் செய்ய வேண்டும் என்று பணிக்காமல் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மட்டும் கேட்டிருக்க வேண்டும் என்று கூறி வழக்கை மீண்டும் விசாரித்து 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்துக்கே திருப்பி அனுப்பியது.
   
திரும்ப அனுப்பப்பட்ட வழக்கை விசாரித்த நீதியரசர்கள் எலிப்பி தர்ம ராவ், வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வு, 2013ல் விசாரணை முடித்து தீர்ப்பு வழங்குவதற்காக  ஒத்திவைத்தது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி குப்புசாமி காலமாகி விட்டார். ஏற்கனவே இந்த வழக்கில் மறைந்த குப்புசாமியுடன் தேர்தல் கமிஷனுக்கு புகார் அளித்த ஏ.கே.எஸ். விஜயன்,  குப்புசாமி தொடர்ந்த வழக்கை தானே தொடர்ந்து நடத்த முடிவு செய்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
 
 நீதியரசர் எலிப்பி தர்மராவ் நீதியரசர் மாலா ஆகியோரைக் கொண்ட அமர்வு, மனுதாரர் குப்புசாமி மறைந்த காரணத்தினால் மனுவை தள்ளுபடி செய்வதாகவும், விஜயனுக்கு இவ்வழக்கில் தன்னை இணைத்து தொடர்ந்து வழக்கை நடத்த உரிமை இல்லை எனவும் கூறி தீர்ப்பு அளித்துள்ளனர்.
 
புகார் அளித்தவர் மரணமடைவதால் அவர் எந்த குற்றத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தாரோ, அந்தக் குற்றம் மறைந்து விடாது என்பது நியதி. மேலும் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கு மனுதாரரின் மறைவின் காரணமாக தள்ளுபடி செய்யப்படக் கூடாது என்று, பல முன்னுதாரணத் தீர்ப்புகள்  உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளன. இவ்விரு சட்டக் கோட்பாடுகளின் அடிப்படையில், உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என்பதால், இவ்வழக்கு விஜயனால் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14310:jayalalithaa-s-appeal-against-the-supreme-court-on-behalf-of-the-dmk&catid=12:politics&Itemid=105

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.