Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"19 மே 2009க்கு முன்னதான நிலைப்பாட்டிற்கு TNAசெல்லுமானால் கட்சியைக் கலைத்துTNA யில் இணைவோம்"

Featured Replies

"19 மே 2009க்கு முன்னதான நிலைப்பாட்டிற்கு TNAசெல்லுமானால் கட்சியைக் கலைத்துTNA யில் இணைவோம்"
01 மே 2013
 
 
TNPF1_CI.jpg

 

 

தமிழ் தேசியக்கூட்டமைப்பு 19 மே 2009 இற்கு முன்னதாக எவ்வாறான கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டதோ இனியும் அவ்வாறு செயற்படுவோமென கூறட்டும் நாங்கள் எமது கட்சியை கலைத்து விட்டு கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

இன்று மாலை வடமராட்சியின் கரவெட்டிப்பகுதியில் நடைபெற்ற கட்சியின் மேதினக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது கூட்டமைப்புக்குள் நிலவி வரும் முரண்பாடுகளின் மத்தியில் ஒவ்வொரு தரப்பும் தம்மோடு பேச்சு நடத்த அழைப்பு விடுத்துவருகின்றனர். எம்மை பொறுத்த வரையில் கட்சியோ பதவியோ  முக்கியமில்லை. தேவையானால் கட்சியினை கலைத்துவிடவும் தயார். ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு முன்னதாக எந்த கொள்கையினை முன்வைத்து கூட்டமைப்பு செயற்பட்டதோ அந்த நிலைக்கு முதலில் திரும்பவேண்டும்.

தமதுயிர்களை அர்ப்பணித்த மக்களுக்கு நாம் மரியாதை செலுத்தவேண்டும். ஒன்றுமே இல்லாத மாகாணசபையை கைப்பற்ற கூட்டமைப்பு பெரும்பாடுபடுகின்றது. தேர்தலில் போட்டியிட்டு மாகாணசபையில் ஒன்றுமில்லையென காட்டப் போவதாகவும் சிலர் கூறுகின்றனர். அவ்வாறாயின் ஏன் தேவையற்று தேர்தலில் போட்டியிடவேண்டுமெனவும்  கேள்வி எழுப்பினார் அவர்.

ஏட்டிக்கு போட்டியாக போராட்டங்களை நடத்தி அம்மக்களை நட்டாற்றில் விடுவது தான் கூட்டமைப்பின் வேலையே. அவர்களது ஏட்டிக்கு போட்டியான அறிவிப்புக்களையடுத்து ஒரு ஜந்து மாதம் எமது கட்சி போராட்டங்கிளிலிருந்து விலகி அமைதி காத்துவந்திருந்தது. ஆனால் கூட்டமைப்பு அக்காலப்பகுதியினுள் எதனையும் செய்திருக்கவில்லை.

இப்போது வலிவடக்கு மக்களது காணி சுவீகரிப்பு தொடர்பாக கூட்டமைப்பு எதனையும் கண்டுகொள்ளாது இருந்ததையடுத்து பாதிக்கப்பட்ட மக்களே எம்மை கோரியிருந்தார்கள். அதனையடுத்து மாவட்ட செயலகம் முன்பதாக எமது போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. அதற்கும் போட்டியாக தெல்லிப்பளையில் கூட்டமைப்பு போராட்டத்தை நடத்துவதாக அறிவிப்பு விடுத்திருந்தது. சாகும் வரையுண்ணாவிரதமென அறிவித்து விட்டு மதியவுணவுடன்  அவர்கள் வீடுகளுக்கு போய்விட்டனர். இப்போது புதிதாக வழக்குப் போடப்போவதாக கூறுகின்றனர். ஏற்கனவே போடப்பட்ட வழக்குகளுக்கு என்ன நடந்ததென்பதை கூட்டமைப்பு தலைமையே சொல்லவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

மேதினத்தினில் கடந்த ஆண்டை விட இம்முறை கூடியளவில் மக்கள் திரண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. குறிப்பாக இளம் தலைமுறையினரை சேர்ந்தவர்களே கூடிய அளவில் காணப்பட்டனர்.

மேதினம் இடம்பெற்ற மைதானப்பகுதியை சூழ பெருமளவிலான பொலிஸார் இம்முறை குவிக்கப்பட்டிருந்தனர். 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91320/language/ta-IN/article.aspx

 

TNA யையும், TNPF யும் அரசிடமிருந்து காப்பாற்ற இது அவசியம் நடைபெற வேண்டும்

  • தொடங்கியவர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மே தின உரையில் “கட்சியை கலைத்து கூட்டமைப்புடன் இணையத்தயார்” என்று கூறியதாக வெளியான செய்தி தொடர்பில்.
PostDateIcon.png வியாழக்கிழமை, 02 மே 2013 15:37
v-kajaamey1uur%20%2825%29.jpgcam-logo.gifநேற்றய தினம் இடம்பெற்ற மே தின நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தனது உரையில் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக கருத்துக் கூறும்போது

“கட்சியை கலைத்துவிட்டு கூட்டமைப்புடன் இணையத்தயார்”  என்று கூறியுள்ளதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எந்தவொரு இடத்திலும் அவர் “கட்சியை கலைத்து விட்டு” என்று குறிப்பிடவில்லை.

அவர் தனது உரையில் “எங்களுடன் கூட்டமைப்பின் பல்வேறு அமைப்புக்கள் தனித்தனியாக  பேசுகின்றனர். அவர்கள் தனித்தனியாக வந்து கதைத்தால் என்ன, கூட்டாக வந்து கதைத்தால் என்ன அவர்களிடம் கூறுவதற்கு எமக்கு ஒரு செய்திதான் உள்ளது. அது எங்களுக்கு எந்த கட்சியினுடைய பெயருக்கு கீழ் இயங்கப் போகின்றோம் என்பது முக்கியமல்ல, எந்த சின்னத்திற்கு கீழ் போட்டியிடப் போகின்றோம் என்பது முக்கியமல்ல. கட்சியில் என்ன பதவியில் இருக்கப்போகின்றோம் என்பது முக்கியமல்ல. தலைமைப் பதவிகளும் முக்கியமல்ல. எமது ஒரே ஒரு நிபந்தனை கொள்கை மட்டுமே. அந்தக் கொள்கை தனித்துவமான தேசம், தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை இது 2009 ற்கு முன்னர் கூட்டமைப்பினது நிலைப்பாடுதான். நாம் புதிய கொள்கை வியாக்கியானங்களை கொடுக்கவில்லை. இந்த ஆரம்ப நிலைப்பாட்டுக்கு கூட்டமைப்புக் கட்சிகளில் யார் திரும்ப தயாராக இருந்தாலும் நாங்கள் அவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம்” என்றே குறிப்பிட்டிருந்தார்.v-kajaamey1uur%20%281%29.jpgv-kajaamey1uur%20%282%29.jpgv-kajaamey1uur%20%2822%29.jpgv-kajaamey1uur%20%2824%29.jpgv-kajaamey1uur%20%283%29.jpgv-kajaamey1uur%20%284%29.jpgv-kajaamey1uur%20%286%29.jpgv-kajaamey1uur%20%285%29.jpgv-kajaamey1uur%20%287%29.jpgv-kajaamey1uur%20%2814%29.jpgv-kajaamey1uur%20%2815%29.jpgv-kajaamey1uur%20%2816%29.jpgv-kajaamey1uur%20%2817%29.jpg


நன்றி

செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்

 

http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=23476:2013-05-02-15-45-32&catid=45:news&Itemid=67

 

 

  • கருத்துக்கள உறவுகள்

டெனிஸ் பத்திரிகை ஊடகம் ஒன்றிற்கு திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அளித்த பேட்டியின்

 

டெனிஸ் பத்திரிகை ஊடகம் ஒன்றிற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அளித்த பேட்டியின் தமிழாக்கம்: தற்போது ஆட்சியில் உள்ள சிறீலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பில் முனைப்புடன் செயற்பட்டுவருகின்றது. இது இனப்படுகொலை மட்டும் அல்ல, குறிப்பாக தமிழ் சமூகத்தினை முழுமையாக துடைத்தெறியும் ஒரு திட்டமிடப்பட்ட நடவடிக்கை. இன்நடவடிக்கையானது 2009ம் ஆண்டு ஆயுதப்போர் மௌனிக்கபட்டதன் விளைவாக மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. என நீண்டகாலமாக இலங்கை பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்து வரும்இ அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கருத்து தெரிவித்தார். மேலும் அவர் டென்மார்க் வாழ் தமிழர்களை சந்தித்து தாயகத்தில் எஞ்சியிருக்கும் தமிழ் உறவுகளின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடினார்.

http://tamilnaatham.dk/?p=13171

 

டெனிஸ் செய்தியினை வாசிப்பதற்கு கீழ்காணும் இணைப்பில் அழுத்தவும்.

http://aoh.dk/artikel/tamilsk-leder-p%C3%A5-visit

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.