Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்தின் பங்காளிகளான நாம் ஒருபோதும் அரசைவிட்டு வெளியேறப்போவதில்லை - அமைச்சர் ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Hakkeem_seithy-080513.jpg

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பங்காளிகளான நாம் ஒருபோதும் அரசைவிட்டு வெளியேறப்போவதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் நேற்று உறுதியாக அறிவித்தார். இவ்விடயம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான ஆசிரிய தலையங்கங்களில் எதுவிதமான உண்மையும் இல்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசாங்கத்துடன் சில விடயங்கள் தொடர்பில் எமக்கு விவாதங்கள் உள்ளன. ஆனால், அவை தொடர்பில் எமது கட்சிக்குள் பேசி நாம் தீர்வுகளைக் காண்போம். ஏழாம் திகதி நேற்று எமது கட்சியின் மாகாண சபை, பாராளுமன்ற பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த கொழும்பிற்கு அழைத்துள்ளோம்.

  

இதனை முதன்மைப்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறப் போவதாக கடந்த சில தினங்களில் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதோடு, ஆசிரியர் தலையங்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் எந்தவொரு உண்மையும் இல்லை. நாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறப்போவதும் இல்லை. அதற்கான அவசியமும் எழவில்லை. ரிஸானா நபீக்கை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி மற்றும் அமைச்சர் டிலான் உட்பட நாமும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆனால், சவூதி அரேபியா இறையாண்மை கொண்ட நாடு அவர்களுக்கென சட்டம் உள்ளது. அதன் பிரகாரமே அவர்கள் நடவடிக்கைகளை எடுப்பார்கள். அதேபோன்று எமது நாடும் இறையாண்மை கொண்ட நாடு எமக்கும் சட்டங்கள் உள்ளன. அதற்கேற்பவே நாமும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எனவே, அமைச்சர் டிலானுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையானது. அரசியல் நோக்கம் கொண்டதாகுமென்றும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=82195&category=TamilNews&language=tamil

    அரசாங்கத்திற்குள்ளேயே ஓர் எதிர்க்கட்சியாக எம்மை பார்க்கின்ற நிலவரம்- நீதி அமைச்சர்

78539c203492e84bfae49c32cfb0ce33.jpg

 இந்த அரசாங்கத்திற்குள்ளேயே ஓர் எதிர்க்கட்சியாக எம்மை பார்க்கின்ற நிலவரம் இருக்கின்றது, நீதி அமைச்சராக இருக்கின்ற நான் அரசாங்கத்தின் எல்லா நடவடிக்கையிலும் உடன்பாடாக இருக்க முடியாத அவஸ்தையில் உள்ளேன் என நீதி அமைச்சரும் முஸ்லீம் காங்கரசின் தலைவருமான ரவூப் கக்கீம் தெரிவித்தார்.

 
வவுனியா றோயல் காடின் மண்டபத்தில் கட்சி ஆதரவாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்ததாவது:
 
 நீதி அமைச்சராக இருக்கின்ற நான் அரசாங்கத்தின் எல்லா நடவடிக்கையிலும் உடன்பாடாக இருக்க முடியாத அவஸ்தையில் உள்ளேன். இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கின்றது என்பதற்கு அத்தாட்சியாக இருக்க வேண்டியவன் நான். ஆனால் அத்தாட்சியாக இருக்க வேண்டிய நானே இன்று ஒரு சில நடவடிக்கையில் உடன்பாடில்லாமல் இருக்கின்றேன் என்பதனை பகிரங்கமாக சொல்லவேண்டும். 
 
கடந்த வியாழக்கிழமை அசாத்சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  அசாத் சாலி கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் எமது கட்சியின் சார்பில் போட்டியிட்டவர். அந்த தேர்தல் மேடைகளில் அவர் கடிவாளம் இல்லாமல் பேசுபவராக இருந்த காரணத்தால்  அவருக்கு நானாகவே சென்னேன் முஸ்லீம் காங்கிரசின் பிரசார மேடைகளில் அரசாங்கத்தோடு படு மோசமாக முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை தவிர்த்துக்கொண்டால் நல்லது என. இருந்தாலும் அவருடைய அரசியல் பாணி அவ்வாறு இருந்த காரணத்தால் சில சந்தர்ப்பங்களில் நான் அது குறித்து எச்சரித்தும் அவர் கோட்காத நிலை இருந்தது.
 
இன்று அவர் கைது செய்யப்பட்டிருப்பதற்கான காரணத்தை கூட பொலிஸாரால் சொல்ல முடியாத நிலையை இட்டு கவலையடைகின்றேன். காரணமின்றி யாரையும் கைது செய்ய முடியாது என்பதை நீதி அமைச்சர் என்ற வகையில் நான் தெளிவாக சொலிகின்றேன். 
 
ஒரு சில அமைச்சர்களுக்கு அபரிமிதமமான அதிகாரங்களை பாவிப்பதற்கு இடம்கொடுக்கப்பட்டுள்ள அதேவேளை ஒரு சிலருக்கு அவ்வாறாக செயற்பட முடியாமல் உள்ளது. குறிப்பாக எமது கட்சியை பொருத்தமட்டிலே பலவீனப்படுத்த எடுக்கும் முயற்சிகளில் அதனை எதிர்த்து நிற்பதற்காக தொடர்ச்சியாக நாம் தண்டிக்கப்பட்டு வந்திருக்கின்றோம். 
நான் தற்போது கூறும் விடயங்களுக்கு பின்னர் நான் இன்னும் படு மோசமான எதிரியாகவே பார்க்கப்படுவேன். அதற்காக நான் வாய் மூடி மௌனியாக இருக்க முடியாது. அதற்காக நாம் கொடுக்கும் விலை எமது ஆதரவாளர்களுக்கு கிடைக்கின்ற வேலை வாய்ப்பாக இருக்கலாம்.
 
மேலும், ரிசாட் பதியுர்தீனுக்கும், விமல் வீரவன்சவுக்கும் சம்பிக்க ரணவக்கவுக்கும் ஒரு உடன்பாடு வட மாகாணத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்பதாகும். ஆனால் அந்த நிலைப்பாட்டில் முஸ்லீம் காங்கிரஸ் இருக்க முடியாது.தமிழர்களுடைய மாகாண ஆட்சி அமையுமாக இருந்தால் அதற்கு குந்தகமாக இருக்க வேண்டும் என நாம் எண்ணவில்லை. அதற்காக அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்போகின்றோம் என்பது அர்த்தமல்ல. அரசுக்க விரோதமாக செயற்பட போகின்றோம் என்பதும் அர்த்தமல்ல. ஆனால் ஜனநாயகமாக தேர்தல்கள் உரிய சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்டாக வேண்டும். ஒரு போதும் தேர்தல்களை பிற்போடுமாறு முஸ்லீம் காங்கிரஸ் கேட்டது கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

Edited by மல்லையூரான்

 

ஹக்கீம் மீது கோத்தபாய சீற்றம்! - அசாத் சாலி நாட்டின் இறைமைக்கு எதிரானவர் என தொலைபேசியில் பதில்!!

8441de32-b28c-4a4c-8b12-6e7f50c780bf1.jp

கொழும்பு மாநகரபையின் முன்னாள் பிரதி மேயர்  அசாத் சாலியின் கைது தொடர்பில் சிறிலங்காவின் நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்த காரசாரமான கருத்துத் தொடர்பில் தனது கடும் அதிருப்தியை படைத்துறை அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவரிடம் நேரடியாகே வெளியிட்டுள்ளார்.

ரவூப் ஹக்கீமை நேற்றிரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சிறிலங்கா படைத்துறை அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இது தொடர்பிலான தனது அதிருப்தியை கடும் சீற்றத்துடன் வெளிப்படுத்தியதாக தெரியவருகின்றது.

அத்துடன், 'சிறிலங்காவின் நீதியமைச்சராகப் பதவி வகித்துக் கொண்டு பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்கூற வேண்டாம்' என ரவூப் ஹக்கீமை தொலைபேசியில் கோத்தபாய ராஜபக்ச கடிந்து கொண்டார்.

வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களை கடந்த ஒருசில தினங்களுக்கு முன் சந்தித்த அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அசாத் சாலியின் கைது தொடர்பில் சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு எதிரான நீதியின் ஆட்சி குறித்து சந்தேகம் வெளியிட்டு  மிகக் காட்டமான கருத்துகளைக் கூறியிருந்தார்.

இது தொடர்பிலேயே சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது அசாத் சாலி சட்டவிதிகளுக்கு அமையவே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரது கைது முறைப்படியே இடம்பெற்றுள்ளது என்றும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

'நாட்டின் இறைமைக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக அசாத் சாலி பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார். அதன் அடிப்படையிலேயே நாம் அவரைக் கைது செய்துள்ளோம். அவர் அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. தேவையென்றால் பார்வையிடுங்கள்' என்று இந்த தொலைபேசி  உரையாடலின் போது ரவூப் ஹக்கீமிடம் கோத்தபாய ராஜபக்ச கூறியதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில் சிறிலங்கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கருத்தை மறுதலித்து அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், எது எவ்வாறு இருப்பினும் அசாத் சாலியின் கைது விடயத்தில் அரசாங்கத்தின் கருத்துடன் உடன்பட முடியாதிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயருமான அசாத் சாலி சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டடை தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=8441de32-b28c-4a4c-8b12-6e7f50c780bf

  • கருத்துக்கள உறவுகள்

அரசை  தொடர்ந்து விமர்சித்து வரும் பிரதி மேயர்  அசாத் சாலி 2012ல் மட்டக்களப்பில் கத்திக்குத்திலிருந்து மயிரிழையில் தப்பினார். ஆகவே இவர் அரசால் பழிவாங்கப்படும் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை.

 

முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப் போகிறதாம்.

PostDateIcon.png வியாழக்கிழமை, 09 மே 2013 11:39

musliim%20kongrees.jpgஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடத்தினர் ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சருடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

பிரதேச முஸ்லிம் மக்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தகவல்கள் திரட்டப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியுடன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தை நடத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அசாத் சாலிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டுமென ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.