Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய ஒன்றியமே நன்றி நன்றி நன்றி

Featured Replies

வணக்கம்

ஒருபேப்பரில் வெளியான இவ்வார ஆக்கம் இதோ!

நெஞ்சு போறுக்குதில்லையே - வித்தகன்

ஐரோப்பிய ஒன்றியமே நன்றி

தலையங்கத்தைப் பாத்துப் போட்டு வித்தியாசமா யோசிக்காதேங்கோ. நான் என்ன சொல்ல வாறனெண்டா இந்த நாடுகளிலை எங்களுக்கு எக்கச்சக்கமான சோலிகள் இருக்கிறது உண்மைதான். வேலை, குடும்பம் பிள்ளைகள் குட்டிகள், சாமத்தியச் சடங்கு, பேத்டே பார்ட்டி, எண்டு உந்தச் சோலிகளுக்குள்ளை நாங்களெல்லாம் மறக்கப் பாத்த எங்கடை நாட்டைப் பற்றின எண்ணத்தை, அதுகளுக்கு எங்களை விட்டா ஒருத்தருமே இல்லை எண்ட உண்மையை உறைக்கிற மாதிரி சொன்னது உவையள் தானே.

பின்னை என்ன? அங்கை குறுக்காலை போவார் அல்லபிட்டியிலை கண்ணாலை பாக்கேலாத அநியாயத்தைச் செய்த சுூடு ஆறமுதல் அவனாரோ சொல்லிப் போட்டான் எண்டு போட்டு புலிகளைத் தடை செய்து எங்கடை உணர்வுகளைத் தட்டி எழுப்பிவிட்டிருக்கினம்.

புலிகள் மீதான தடையை ஒவ்வொரு தமிழனும் தனக்கெதிரான அநியாயமா அவமானமாத் தான் பாக்கிறான்.

அதின்ரை வெளிப்பாடுதான் ஒவ்வொரு இடத்திலையும் தங்கடை தங்கடை புத்திக்குப் பட்ட மாதிரி உண்ணாவிரதமெண்டும் கறுப்புப் பட்டிப் போராட்டமெண்டும் துண்டுப்பிரசுர விநியோகமெண்டும் தங்கடை உணர்வுகளைக் காட்டிக்கொண்டிருக்கினம்.

வயது வித்தியாசமில்லாமை எல்லா நாடுகளிலையும் எங்கடை ஆக்கள் உப்பிடிப் போராடுறதைப் பாக்க ஒரு பக்கம் சந்தோசமாயிருந்தாலும் மிச்ச ஆக்களை நினைச்சாக் கவலையாக்கிடக்குது.

இப்பவும் கனபேர் தாங்கள் பிரிஞ்சு வந்த நாட்டை மண்ணை மொழியை உறவுகளை மறந்துபோய் என்ரை குடும்பம் என்ரை வேலை என்ரை சொத்து எண்டு ஒரு சின்ன வட்டத்துக்குள்ளை தான் வாழ்ந்து கொண்டிருக்கினம்.

நாலு தமிழ்ச் சனங் கூடிற இடத்திலை எங்கடை மண், எங்கடை மொழி, எங்கடை போராட்டம் எண்டு பெரிசாக் கதைக்கிற கனபேர் இப்பிடியொரு போராட்டம் எண்டதும் ஓட்டுக்குள்ளை தலையை இழுத்துக் கொள்ளுற ஆமையைப் போலை வீட்டுக்குள்ளை அடைஞ்சிடுவினம்.

அண்டைக்கு உப்பிடித்தான் ஒருத்தர் ஈழத்து அரசியலைப் பற்றியும் உரிமைப் போராட்டத்தைப் பற்றியும் பிச்சு வாங்கிக் கொண்டிருந்தார். மெல்லமா அவரிட்டை

"அண்ணை நீங்கள் பாளிமென்ருக்கு முன்னுக்கு நடந்த உண்ணாவிரதத்துக்குப் போனனீங்களோ"

எண்டு கேட்டன்.

அதுக்கு அவர்

"நான் போகேல்லை. மனிசி பொயிட்டு வந்தது"

எண்டு சொன்னார்.

இன்னுமொரு அக்கா கோயிலிலை புூசைக்குப் பிறகு சாப்பிட்டுக் கொண்டு ஊர்ச் சனத்தைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தா. அவவிட்டையும் கேட்டன். அவா சொன்னா

"நான் போகேல்லை. என்ரை அவர் போட்டு வந்தவர்"

எண்டு

எனக்கு ஒரு விசயம் விளங்கேல்லை. அதென்ன கோயிலுக்குப் போறதெண்டாலோ இல்லாட்டி பேத்டே பார்ட்டிக்குப் போறதெண்டாலோ குடும்பமா அள்ளுப்படுறம். ஆனா இப்பிடி ஒரு விசயத்துக்கெண்டா வீட்டுக்கொரு representativeவை அனுப்புறம்.

இன்னுமொருத்தர் எங்கடை வரலாறை அக்கு வேறை ஆணி வேறாத் தெரிஞ்சவர். டொனமூர் காலத்திலை இருந்து நடந்த சம்பவங்களை விரல் நுனியிலை வைச்சிருக்கிறார். அவரிட்டைக் கேட்துக்கு அவர் சொன்ன பதில்

"Sunday போகவேணுமெண்டுதான் நினைச்சிருந்தனான். பிறகு திடீரெண்டு Barbecue Party ஒண்டு arrange பண்ணினதிலை நேரம் பொயிட்டுது. அப்பிடியே இருண்டும் போச்சுது. tired ஆவும் கிடந்துது. அதாலை போகேல்லை."

இப்பிடிப் போராட்டத்திலை கலந்து கொள்ளாததுக்கு ஏதாவது ஒரு காரணத்தை எல்லாரும் தயாராவே வைச்சிருக்கினம்.

இன்னுமொராள் நாட்டிலை நடக்கிற சம்பவங்களைப் பற்றிக் கண்கலங்கிக் கதைப்பா. எங்கடை சனம் உணர்வில்லாமல் இருக்குதே எண்டு வேதனைப்படுவா. வௌpட்டைக் கேட்டதுக்கு அவ என்ன சொன்னவா தெரியுமே

நான் weekendக்குப் போய்ப் பாக்கவேணுமெண்டுதான் இருந்தனான், ஆனா சனிக்கிழமை மகளுக்கு dance class பிறகு ஞாயிற்றுக் கிழமை மகனுக்குக் கராட்டிக் கிளாஸ் அதாலை போகக் கிடைக்கேல்லையாம்

இப்பிடிக் கவலையாச் சொல்லிப்போட்டுக் கேட்டா

"எப்பிடித் தம்பி சனம் வந்ததோ" எண்டு.

"ஓம் பறவாயில்லை.. ஆனா இஞ்சை இருக்கிற சனத்தின்ரை தொகையோடை ஒப்பிடேக்கை காணாது தான் எண்டு சொன்னன்.

"அதுதான் தம்பி எங்கடை சனத்துக்கு எவ்வளவு சொன்னாலும் உறைக்காது எப்பதான் திருந்தப் போகுதுகளோ தெரியாது"

எண்டு அவா சொன்னதும் எனக்கு விசர் வராத குறை.

சரி பழசைக் கதைச்சுக் கொண்டிருந்து என்ன செய்யிறது. இனி நடக்கப் போறதைப் பாப்பம்.

வாற 25ம் திகதி செவ்வாய்க்கிழமை கறுப்பு ஜூலையின் நினைவு சுமந்த எழுச்சிநினைவுகூடல் Hyde park மைதானத்திலை நடக்க இருக்குது. அண்டைக்கு ஒரு வேலை நாள் தான். ஆனால் ஊரிலை எங்கடை சனம் ஆமிக் காரற்றை துவக்குகளுக்கு முன்னாலை உயிரையும் துச்சமா மதிச்சு கதவடைப்பெண்டும் ஆர்ப்பாட்டமெண்டும் ஊர்வலமெண்டும் செய்யேக்குள்ளை நாங்கள் எங்கடை சனத்துக்காக எங்கடை மண்ணுக்காக ஒரு நாள் வேலையைத் தியாகம் செய்யக் கூடாதே. அதுமட்டுமில்லாமை எங்கடை பிள்ளை குட்டிக்கு ஒரு வருத்தம் கிருத்தமெண்டால் நாங்கள் லீவு எடுக்கிறதில்லையே. அதாலை நாங்கள் எல்லாரும் இதையும் எங்கடை சொந்தப் பிரச்சினையா நினைச்சு கட்டாயம் கலந்து கொள்ளுவம். இந்தப் போராட்டத்தை வெற்றியடையச் செய்வம். என்ன எல்லாரும் வருவீங்கள் தானே?

முதலில் தமிழர்கள் எல்லோருக்குள்ளும் இருக்கும் சுயநலத்தை விரட்ட வகை செய்யுங்கோ...அப்படிச் செய்திருந்தா..இப்ப நாங்கள் தமிழீழத்தில இருந்திருப்பம். எது எப்படியோ.. சுயநலத்தமிழரைக் கொண்டு ஒரு நிகழ்ச்சி நடத்திறது எண்டது மிகக் கடினமான காரியம் தான். ஒரு துன்பியல் நிகழ்வை நினைவு கூற என்றாலும் கூடுகிறார்களோ பார்ப்போம்...! பிரித்தானியாவில் தமிழர்களின் தொகை..2,50000. :idea:

அப்ப குருவி புலத்தில நடக்கிற எழுச்சிப்போராட்டங்கள் எல்லாத்திலையும் கலந்து கொள்ளுறீங்கள். நல்ல விசயம். இன்னொன்று குருவி அடுத்தவன் என்ன செய்யிறான் எண்டு பாக்கிறதை விட்டுட்டு நீங்க நாட்டுக்கு என்ன செய்தீங்க எண்டு பாருங்க. சுயநலம் எண்டது எல்லாருக்கும் இருக்கு. ஆனா அதின்ர அளவுகோல்கள் மாறுபடும். உந்த "அட்வைஸ்" வேலைகளை விடுங்க. களத்தில இறங்குங்க. நல்லதே நடக்கும்.

அப்ப குருவி புலத்தில நடக்கிற எழுச்சிப்போராட்டங்கள் எல்லாத்திலையும் கலந்து கொள்ளுறீங்கள். நல்ல விசயம். இன்னொன்று குருவி அடுத்தவன் என்ன செய்யிறான் எண்டு பாக்கிறதை விட்டுட்டு நீங்க நாட்டுக்கு என்ன செய்தீங்க எண்டு பாருங்க. சுயநலம் எண்டது எல்லாருக்கும் இருக்கு. ஆனா அதின்ர அளவுகோல்கள் மாறுபடும். உந்த "அட்வைஸ்" வேலைகளை விடுங்க. களத்தில இறங்குங்க. நல்லதே நடக்கும்.

எழுச்சி கொண்டவைக்கு எதுக்கு எழுச்சிப் போராட்டம். தூங்கிறவைக்காகத்தான் இப்படிப் போராட்டம்..! :idea:

வெளிநாடுகளில் இன்று நடப்பது பலவிதமானது. எழுச்சி, கவனயீர்ப்பு, வேற்றினத்தவர் மற்றும் 2ஆம் 3ஆம் தலைமுறைக்கான அறிவூட்டல் என்று விரிகிறது.

அப்ப எழுச்சி கொண்ட புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் என்னவென்று நடந்து கொள்ள வேண்டும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.