Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலவரத்திற்கு காரணம் விடுதலை சிறுத்தைகள் தான் ஆனால் என்னை பழிவாங்க சிறையில் அடைத்தனர்: ராமதாஸ் பேட்டி

Featured Replies

திருச்சி மத்திய சிறை வாசலில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாமல்லபுரத்தில் முறையான அனுமதி பெற்று விழாவை நடத்தினோம். ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியினர் குண்டர்கள் ஆதரவோடு திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர். விழாவிற்கு வந்த 4 ஆயிரம் வாகனங்களை திருப்பி அனுப்பினர். 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை கல்வீசி தாக்கினர். இதற்கு போலீசும் உடந்தை. பா.ம.க.வினருக்கோ, வன்னியர்களுக்கோ இதில் எந்தவித சம்மந்தமும் இல்லை. இதைகண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் போலீசார் இங்கு பேசக்கூடாது என்று தடுத்து கைது செய்தனர்.

டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பும், சோனியா வீட்டு முன்பும், மந்திரிகள் வீட்டு முன்பும் அணுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில்தான் இந்த நிலை.

விழுப்புரத்தில் கைது செய்த என்னை, போலீசார் 12 மணி நேரம் மின்சாரம் இல்லாத ஒரு மண்டபத்தில் வைத்து விட்டு அதிகாலை 4 மணிக்கு திருச்சி சிறைக்கு கொண்டு வந்து அடைத்தனர். 108 டிகிரி வெயில் கொளுத்துகிற கந்தக பூமியான திருச்சி மத்திய சிறையில் 12 நாட்கள் என்னையும், பா.ம.க.வினர் நூற்றுக்கணக்கானவர்களையும் அடைத்து கொடுமைப்படுத்தினர். சிறையில் எந்த வசதிகளும் இல்லாமல் ஒரு அறையில் படுத்து கிடந்தேன். பா.ம.க. முக்கிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறையில் எனக்கு சன்ஸ்ட்ரோக் ஏற்பட்டு நெற்றியிலும் தலையிலும் ஈரத்துணியை வைத்து சமாளித்தேன். எங்கே மாரடைப்பு ஏற்பட்டு பத்திரிக்கையாளர்களையும், மக்களையும் வெளியில் வந்து சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். அந்த அளவிற்கு பா.ம.க. வினர், வன்னியர்கள் மீதும் தமிழக அரசு ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அவிழ்த்துவிட்டது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடந்த சம்பவங்களுக்கும் பா.ம.க.வினருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. விடுதலை சிறுத்தை கட்சியினர் உதவியோடு தமிழக அரசு இவற்றை செய்துவிட்டு பா.ம.க. மீது வீண்பழி சுமத்துகிறது. நாங்கள் ஒருபோதும் எங்கள் கட்சியினரை வன்முறையில் ஈடுபடவோ, தவறான பாதையில் செல்லவோ அனுமதிப்பதில்லை.

இதற்காக எங்கள் கட்சியினருக்கு அரசியல் பயிலரங்கமே நடத்துகிறோம். ஆனால் காதல் நாடகம் என்ற பெயரில் படிக்க செல்லும் பிற சமுதாய பெண்களை காதலித்து ஏமாற்றி கட்டபஞ்சாயத்து செய்யும் கட்சியை குறித்தும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதால் அதை திருத்தம் செய்ய கோரியும் தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்டங்களிலும் அனைத்து சமுதாய தலைவர்களும் கூட்டத்தை நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு செய்தோம். இதனால் தங்கள் கட்டபஞ்சாயத்து பாதிக்கபடுகிறது, அரசியல் செய்ய முடியவில்லை என்று நினைத்த விடுதலைசிறுத்தை கட்சி கட்சியினர் தவித்த நிலையில் தமிழக அரசும் கூட்டாக சேர்ந்து செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக வன்னியர்களுக்கு எதிரானவற்றை நடத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 12 நாட்களாக நடந்த தேவையில்லாத செயல்களுக்கும் பா.ம.க.வினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதற்கு தமிழக அரசே பொறுப்பு. ஆனால் பாமக மீது வீண்பழி சுமத்தியுள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு அ.தி.மு.க.வோடு பா.ம.க. கூட்டணி அமைக்கும் என்று உளவுத்துறை போலீசார் அரசுக்கு `நோட்' அனுப்பியுள்ளனர். அதன் பிறகு நான் இனிமேல் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிட கட்சிகளோடு பா.ம.க. இனி எக்காலத்திலும் கூட்டணி அமைக்காது என்று கூறினேன். இதனால் அரசு பா.ம.க. மீது பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

ஏற்கனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வோடு ம.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர். கம்யூனிஸ்டும் அங்கு உள்ளது. இந்நிலையில் தலித் ஓட்டுகளையும் சேர்த்தால் மிகப்பெரிய வெற்றி பெறலாம் என்று நினைத்தவர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். அதனால்தான் பா.ம.க. தலைவர் மீது வழக்கு, பத்திரிகையாளர்களிடம் பேசிய அன்புமணி மீது மூன்று வழக்கு, குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை என சட்டத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மாமல்லபுரம் விழாவில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லாததை சுட்டிக்காட்டி பேசிய நான் அப்போது போலீசாருக்கு நல்ல யோசனைகளைத்தான் கூறினேன். ஆனால் என் மீது கூடங்குளம் போராட்டம் தொடர்பான வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய பிறகும் அந்த 2 வழக்குகளிலும் என்னை கைது செய்தனர். கடைசியாகத்தான் இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் கிடைத்தது. இதுபோன்ற அடக்கு முறைகளை ஏராளமான முறை சந்தித்து உள்ளோம்.

ஒரு ஆட்சி என்றால் உண்மை, நேர்மை, தூய்மை, சத்தியம், ஜனநாயகம், எதிர்கட்சிகளை மதிக்கும் தன்மை இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசுக்கு இல்லை. தொடர்ந்து தமிழகம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. வரலாறு கானாத வறட்சி, குடிநீர் பஞ்சம் இப்படி ஏராளமான பிரச்சினைக்ள உள்ளன. கடந்த 2 ஆண்டில் எந்த பணிகளும் நடைபெறவில்லை, மக்கள் சோர்ந்து போய் உள்ளனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பெரும் தோல்வி அடையும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

தொடர்ந்து டாக்டர் ராமதாசிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்கள் விபரம் வருமாறு:-

கே: தி.மு.க. தலைவர் கருணாநிதி உங்களுக்கு நாவடக்கம் தேவை என்று கூறியுள்ளாரே?

ப: அவர் நான் சிறையில் இருந்தபோது என்னை விடுதலை செய்யவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அதேபோன்று என்னை விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கே: இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ம.க. பெரிய கூட்டணியில் சேரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே?

ப: எந்த சூழ்நிலையிலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை. பா.ம.க. தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்போம். 10 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார். திருச்சி மத்திய சிறை வாசலில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாமல்லபுரத்தில் முறையான அனுமதி பெற்று விழாவை நடத்தினோம். ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியினர் குண்டர்கள் ஆதரவோடு திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர். விழாவிற்கு வந்த 4 ஆயிரம் வாகனங்களை திருப்பி அனுப்பினர். 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை கல்வீசி தாக்கினர். இதற்கு போலீசும் உடந்தை. பா.ம.க.வினருக்கோ, வன்னியர்களுக்கோ இதில் எந்தவித சம்மந்தமும் இல்லை. இதைகண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் போலீசார் இங்கு பேசக்கூடாது என்று தடுத்து கைது செய்தனர்.
டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பும், சோனியா வீட்டு முன்பும், மந்திரிகள் வீட்டு முன்பும் அணுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில்தான் இந்த நிலை.
விழுப்புரத்தில் கைது செய்த என்னை, போலீசார் 12 மணி நேரம் மின்சாரம் இல்லாத ஒரு மண்டபத்தில் வைத்து விட்டு அதிகாலை 4 மணிக்கு திருச்சி சிறைக்கு கொண்டு வந்து அடைத்தனர். 108 டிகிரி வெயில் கொளுத்துகிற கந்தக பூமியான திருச்சி மத்திய சிறையில் 12 நாட்கள் என்னையும், பா.ம.க.வினர் நூற்றுக்கணக்கானவர்களையும் அடைத்து கொடுமைப்படுத்தினர். சிறையில் எந்த வசதிகளும் இல்லாமல் ஒரு அறையில் படுத்து கிடந்தேன். பா.ம.க. முக்கிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
சிறையில் எனக்கு சன்ஸ்ட்ரோக் ஏற்பட்டு நெற்றியிலும் தலையிலும் ஈரத்துணியை வைத்து சமாளித்தேன். எங்கே மாரடைப்பு ஏற்பட்டு பத்திரிக்கையாளர்களையும், மக்களையும் வெளியில் வந்து சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். அந்த அளவிற்கு பா.ம.க. வினர், வன்னியர்கள் மீதும் தமிழக அரசு ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அவிழ்த்துவிட்டது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடந்த சம்பவங்களுக்கும் பா.ம.க.வினருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. விடுதலை சிறுத்தை கட்சியினர் உதவியோடு தமிழக அரசு இவற்றை செய்துவிட்டு பா.ம.க. மீது வீண்பழி சுமத்துகிறது. நாங்கள் ஒருபோதும் எங்கள் கட்சியினரை வன்முறையில் ஈடுபடவோ, தவறான பாதையில் செல்லவோ அனுமதிப்பதில்லை.
இதற்காக எங்கள் கட்சியினருக்கு அரசியல் பயிலரங்கமே நடத்துகிறோம். ஆனால் காதல் நாடகம் என்ற பெயரில் படிக்க செல்லும் பிற சமுதாய பெண்களை காதலித்து ஏமாற்றி கட்டபஞ்சாயத்து செய்யும் கட்சியை குறித்தும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதால் அதை திருத்தம் செய்ய கோரியும் தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்டங்களிலும் அனைத்து சமுதாய தலைவர்களும் கூட்டத்தை நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு செய்தோம். இதனால் தங்கள் கட்டபஞ்சாயத்து பாதிக்கபடுகிறது, அரசியல் செய்ய முடியவில்லை என்று நினைத்த விடுதலைசிறுத்தை கட்சி கட்சியினர் தவித்த நிலையில் தமிழக அரசும் கூட்டாக சேர்ந்து செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக வன்னியர்களுக்கு எதிரானவற்றை நடத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 12 நாட்களாக நடந்த தேவையில்லாத செயல்களுக்கும் பா.ம.க.வினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதற்கு தமிழக அரசே பொறுப்பு. ஆனால் பாமக மீது வீண்பழி சுமத்தியுள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு அ.தி.மு.க.வோடு பா.ம.க. கூட்டணி அமைக்கும் என்று உளவுத்துறை போலீசார் அரசுக்கு `நோட்' அனுப்பியுள்ளனர். அதன் பிறகு நான் இனிமேல் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிட கட்சிகளோடு பா.ம.க. இனி எக்காலத்திலும் கூட்டணி அமைக்காது என்று கூறினேன். இதனால் அரசு பா.ம.க. மீது பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
ஏற்கனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வோடு ம.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர். கம்யூனிஸ்டும் அங்கு உள்ளது. இந்நிலையில் தலித் ஓட்டுகளையும் சேர்த்தால் மிகப்பெரிய வெற்றி பெறலாம் என்று நினைத்தவர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். அதனால்தான் பா.ம.க. தலைவர் மீது வழக்கு, பத்திரிகையாளர்களிடம் பேசிய அன்புமணி மீது மூன்று வழக்கு, குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை என சட்டத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
மாமல்லபுரம் விழாவில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லாததை சுட்டிக்காட்டி பேசிய நான் அப்போது போலீசாருக்கு நல்ல யோசனைகளைத்தான் கூறினேன். ஆனால் என் மீது கூடங்குளம் போராட்டம் தொடர்பான வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய பிறகும் அந்த 2 வழக்குகளிலும் என்னை கைது செய்தனர். கடைசியாகத்தான் இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் கிடைத்தது. இதுபோன்ற அடக்கு முறைகளை ஏராளமான முறை சந்தித்து உள்ளோம்.
ஒரு ஆட்சி என்றால் உண்மை, நேர்மை, தூய்மை, சத்தியம், ஜனநாயகம், எதிர்கட்சிகளை மதிக்கும் தன்மை இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசுக்கு இல்லை. தொடர்ந்து தமிழகம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. வரலாறு கானாத வறட்சி, குடிநீர் பஞ்சம் இப்படி ஏராளமான பிரச்சினைக்ள உள்ளன. கடந்த 2 ஆண்டில் எந்த பணிகளும் நடைபெறவில்லை, மக்கள் சோர்ந்து போய் உள்ளனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பெரும் தோல்வி அடையும்.


இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.


தொடர்ந்து டாக்டர் ராமதாசிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்கள் விபரம் வருமாறு:-


கே: தி.மு.க. தலைவர் கருணாநிதி உங்களுக்கு நாவடக்கம் தேவை என்று கூறியுள்ளாரே?


ப: அவர் நான் சிறையில் இருந்தபோது என்னை விடுதலை செய்யவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அதேபோன்று என்னை விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.


கே: இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ம.க. பெரிய கூட்டணியில் சேரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே?


ப: எந்த சூழ்நிலையிலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை. பா.ம.க. தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்போம். 10 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.


இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14596:but-the-panthers-due-to-disturbances-jailed-avenge-me-ramadoss-interview&catid=36:tamilnadu&Itemid=102

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.