Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடல்வழியாக ஆதரவு திரட்டும் உதயகுமார்- உளவுதுறை தீவிர கண்காணிப்பு

Featured Replies

கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக மே 15ல் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள் ஸ்டிரைக் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் படகில் சென்று மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டி வருகிறார். இதற்கிடையே இடிந்தகரையில் தாமஸ் மண்டபம் அருகே இன்று திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக 2 ஆண்டுகளுக்கும் மேலாக இடிந்தகரை மற்றும் சுற் றுப்புற கிராம மக்கள் போராடி வருகின்றனர். கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் கூடங்குளம் அணுமின்நிலையம் இயங்குவதற்கு தடை யில்லை என்று அறிவித் தது. இதையடுத்து இன் னும் ஓரிரு வாரங்களில் கூடங்குளத்தில் அணுமின்உற்பத்தி நடைபெறும் என்று கூறப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டை தீர்ப்பை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று அறி வித்த போராட்டக்குழுவினர் அடுத்த கட்டமாக கடலோர கிராமங்களில் மே 15ம்தேதி மீனவர்கள் ஸ்டிரைக் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். கூடங்குளம் அணுமின்நிலையத்தில் அடுத்தவாரம் மின்உற்பத்தி தொடங்கும் பட்சத்தில் மாநில அளவில் போராட் டம் நடைபெறும் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் மே 15ல் நடைபெறும் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் அதிகமாக மீனவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அவர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக உதயகுமார் இன்று கடல் வழியாக உவரிக்கு சென்றார். அங்கு கூடங்குளம் அணுமின்நிலையம் இயக்கப்பட் டால் கடலில் மீன்வளம் பாதிப்பு மற்றும் என் னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து விளக்கினார். 2012ம் ஆண்டு செப்டம்பர் 8ம்தேதி நடந்த அணுமின்நிலைய முற்றுகை போராட்டத்திற்கு பின்னர் உதயகுமார் இடிந்தகரை, கூத்தங்குழி ஆகிய கிராமங்களில் தங்கியிருந்தார். வெளியே செல்லவில்லை. தற்போது கடல் வழியாக அவர் உவரி சென்றது போலீஸ் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே இடிந்தகரையில் தாமஸ் மண்ட பம் விலக்கில் இன்று அதி காலை முதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சமீபத்தில் உதயகுமார் கடு மையாக விமர்சித்ததால் அவர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து பிடிவாரன்ட் கோர தமிழக அரசு முடிவு செய்துள்ள தாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் தாமஸ் மண்டபம் அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் ஒருவேளை அவர் கைது செய்யப்பட லாம் என மீனவ மக்கள் சந்தேகிக்கின்றனர். இத னால் இடிந்தகரை மற்றும் சுற்றுப்புற மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கடற்கரையோர கிராமங்களுக்கு படகில் சென்று மீனவர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இதனை மத்திய மற்றும் மாநிலத்தை சேர்ந்த உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர் சென்று வரும் இடங்கள், சந்திக்கும் நபர்கள், என்ன நடவடிக்கை எடுக்க திட்டமிடுகிறார் போன்ற தகவல்களை திரட்டி வருகின்றனர்.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14625:and-mobilize-support-to-maritime-october-ulavuturai-intensive-monitoring&catid=37:india&Itemid=103

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.