Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டிற்கு வந்த மருமகள் கணவன் குடும்பத்தில் ஒரு அங்கம்: வீட்டு வேலைக்காரி அல்ல: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடில்லி: வீட்டிற்கு வந்த மருமகளாக வந்தவள் குடும்பத்தில் ஒருவர் தான். மாறாக அவளை வீட்டு வேலைக்காரியாக நினைக்ககூடாது என, கணவன் கொடுமையால் மனைவி இறந்த வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு சிறை தண்டணையும் விதித்தது.

திருமண பந்தத்தில் ஒன்றினைந்த் ஆண், பெண் ஆகியோர் குடும்பம் என் வட்டத்தில் கணவன்-மனைவி என்ற அந்தஸ்தில் சமூகத்தில் போற்றப்படுகின்றனர். ஆனால் இன்றோ கணவனால் மனைவி பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றாள். மனைவியை கணவனின் குடும்பத்தினர் வீட்டு வேலைக்காரியாக பாவிக்கும் கொடூரம் நடந்து வருகிறது.

மனைவியை பல வழிகளில் அடித்து சித்ரவதை செய்த சம்பவத்தில் அவர் மனதளாமல் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மனைவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. இந்தவழக்கினை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர்அடங்கிய பெஞ்ச், பரபரப்ப தீர்ப்பளித்தனர்

அவர்கள் கூறியதாவது, குடும்பம் என்ற பந்தத்தில் கணவன்-மனைவியும் சமமமாகபாவிக்கப்படுகின்றனர். ஆ னால் வீட்டிற்கு மருமகளாக வந்தவர் , கணவன் குடும்பத்தில் ஒரு அங்கம் தான்.அவரை பல வழிகளில் வீட்டுவேலைக்காரி போன்று நடத்தும் சம்பவம் இன்றும் நடந்துவருவது வேதனை அளிக்கிறது.

வரதட்சணை கொடுமையால் மனைவி தீ வைத்து கொளுத்தப்படுவதும், குடும்ப வன்முறையால் பெண்கள் உடல் அளவில், மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது போன்று எதிர்காலத்தில் நடக்க கூடாது. எனவே கணவன் கொடுமை தாங்காமல் மனைவி தற்கொலை செய்து கொண்டது உண்மை என தெரியவருவதால், கணவனுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்

Dinamalar

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமே புரியல

சுண்டல் எதற்கு இதை? இங்கு????



:D

வசதிகளை மாப்பிள்ளை வாங்கிக்கொள்ளட்டும் என்று தங்கள் உடலை வருத்தி உழைத்த பணத்தை  ஆசைகளை கட்டுப்படுத்தி சேமித்து சீதனம் கொடுத்து,  வாழ்கையில் அலைவுகள் வந்தால் அசையாத அம்மியாக இருப்பேன் என்று அம்மி மிதித்து, கண்ணில் இன்னொரு  உருவம் வந்து விழுந்து என் மனதில் களங்கம் வராது என்று அருந்ததி பார்த்து கண்களை நிறைத்து , தீயை வலம் வந்து உனது இன்பத்திலும் துன்பத்திலும் சமமாக பங்கு கொள்ளத்தயாராக உன்னோடு வாழ வருகிறேன் என்று சத்தியம் செய்த பிள்ளையை, இந்த வீட்டு பெண்ணான இவள் இனி மணவாளன் வீட்டு உடமையாக வாழ்வாள் என்று  தரையை வார்த்து விடை சொல்லி வீட்டை விட்டு அனுப்பி வைத்த பெற்றார்கள் இந்த மாதிரி ஏமாற்றத்தால் தற்கொலை செய்தாள் தங்கள் மகள் என்று வீடு திரும்பி வந்த வெற்று உடலை காடு கொண்டு சென்று தகனிக்கும் போது அடையும் மனவருத்தத்திற்கு சமனானதாக ஒரு வருத்தம் அடையத்தக்கதாக  ஒரு தண்டனை நீதிபதிகள் கொடுத்திருந்தால் அது சரியே. இழப்புத்துன்பதில் இருவரும் சரியாக இருந்தாலே நீதி நடை பெறுகிறது என்பது தான் தமிழ் மன்னன் மனுநீதிகண்ட சோழன் ஏற்படுத்தி வைத்த வாகடம். 

 

:)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுடில்லி: வீட்டிற்கு வந்த மருமகளாக வந்தவள் குடும்பத்தில் ஒருவர் தான். மாறாக அவளை வீட்டு வேலைக்காரியாக நினைக்ககூடாது என, கணவன் கொடுமையால் மனைவி இறந்த வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு சிறை தண்டணையும் விதித்தது.

Dinamalar

 

ஐயா இதுவும் பரபரப்பா..

  • 2 weeks later...

புதுடில்லி: வீட்டிற்கு வந்த மருமகளாக வந்தவள் குடும்பத்தில் ஒருவர் தான். மாறாக அவளை வீட்டு வேலைக்காரியாக நினைக்ககூடாது 

 

இதை ஒரு உச்ச நீதிமன்றம் சொல்ல வேண்டிய அளவுக்கு இந்தியாவின் பண்பாடு தரம் கெட்டதாக உள்ளது.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.