Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேது சமுத்திர திட்டத்துக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுக: கருணாநிதி

Featured Replies

16th May 2013

 

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடந்தது. சென்னை தங்கசாலை அருகில் நடந்த கூட்டத்துக்கு தி.மு.க. வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறுகிற இந்த எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கிலே குழுமி உள்ள உங்களை காண்பதிலும், நீங்கள் அளிக்கின்ற உற்சாகமான ஆதரவை காண்பதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பெறுகின்றேன்.

சேது சமுத்திர திட்டம் வருவதால் யாருக்கு என்ன பயன், திட்டத்தின் பலன் என்ன? பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கும். இப்படி நடந்தால் மாநில அரசுக்கு பெருமைதானே. ஆனால் இதை செய்யாமல் தி.மு.க. தொடங்கிய திட்டம் என்பதால் நாங்கள் தொடரமாட்டோம் என்று மாநில அரசு செயல்படுவது வீண் கனவு ஆகும்.

இது மக்களையும் ஏமாற்றி, மத்திய அரசையும் குறை கூறும் நாடகமாக உள்ளது. இதைப்போல் பல திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளனர். தமிழகத்தை உயர்ந்த மாநிலமாக ஆக்க என்ன செய்துள்ளார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். நீங்கள் நல்ல முடிவுக்கு வரவேண்டும்.

சேது சமுத்திர திட்டத்துக்கு முதலில் குரல் கொடுத்தவர் அண்ணா. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றும் இந்த திட்டத்தை வலியுறுத்தி பெற மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறிவிட்டன.

எனவே இந்த திட்டத்தை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவேற்ற புதியதாக அமையும் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறியது அ.தி.மு.க.தான். சேது சமுத்திர திட்டத்தை தி.மு.க. சரிவர கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டியவர்கள் இன்று இந்த திட்டம் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் சென்று மனு கொடுத்துள்ளனர்.

1860-ம் ஆண்டுகளில் இந்த திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு, தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஆய்வுகள் செய்யப்பட்டு இந்த திட்டம் தொடங்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மத்தியில் பா.ஜனதா ஆட்சியிலும் இந்த திட்டம் தொடங்குவதற்கான முறையான அனுமதியும் வழங்கப்பட்டது.

ஆனால் இப்போது இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கூறி உள்ளனர். அதில் சேது பாலத்தை சேதப்படுத்தகூடாது, உடைக்க கூடாது என்று கூறி இருக்கிறார்கள். இந்தியாவில் மேற்கில் இருந்து கிழக்கு பகுதி வரை கப்பல்கள் இலங்கையை சுற்றி வரவேண்டி உள்ளதால் இதற்கு ஒரே தீர்வு சேது சமுத்திர திட்டம்தான்.

இந்த திட்டத்தால் 30 மணி நேர பயண செலவு குறையும். அதனால் இந்த திட்டத்தை பலமுறை நடைமுறைபடுத்த அறிவுறுத்தி கேட்கிறோம். வணிக மேம்பாடும், வியாபாரம் அபிவிருத்தி அடையும், லட்சக்கணக்கான தமிழர்களுக்கு வேலை கிடைப்பதற்கு இந்த திட்டம் உதவும்.

எனவே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறும்படி கேட்கிறேன். சேது சமுத்திர திட்டம் கோடிக்கணக்கான மக்களின் பிரச்சினை. அவர்களின் தலையில் கைவைக்காதீர்கள் என்று முதல்வர் ஜெயலலிதாவை பணிவுடன் கேட்கிறேன்.

தமிழக மக்கள் மீதான அன்பின் காரணமாக கேட்கிறேன். இந்த எழுச்சி நாள் கூட்டத்தை வழக்கை வாபஸ் பெறும் கூட்டமாகவே கருதுகிறேன். வழக்கை வாபஸ் பெறாவிட்டால் மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருள் சூழ்ந்து விடும். அதற்கு துணை போகவேண்டாம்.

கருணாநிதி சொன்னால் அவர்கள் கேட்கவா போகிறார்கள் கேட்க மாட்டார்கள். வேண்டாம், கேட்ககூடிய காலம் வரும். அந்த காலத்தை உருவாக்க வேண்டியவர்கள் என் எதிரே உட்கார்ந்திருக்கிறீர்கள். எனவே அந்த காலத்தை உருவாக்குங்கள் நான் கேட்க வேண்டிய முறையிலே கேட்கிறேன். நிச்சயமாக சேது சமுத்திர திட்டம் நமக்கும் கிடைக்கும். அதை கிடைப்பதற்கான வழி வகைகளை நாம் காணமுடியும்.

 

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

 

http://www.newsalai.com/details/karunanithi-wants-case-against-sethu-canal-withdrawn.html

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தடவையும் முள்ளிவாய்க்கால் காலத்தின் போது திமுக இப்படியான கவனக் கலைப்பு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. கருணாநிதி இன்று வரை முள்ளிவாய்க்காலுக்கு திமுக சார்ப்பிலோ அல்லது செடோ சார்பிலோ... ஒரு இரங்கல் கூட்டம் அல்லது அகவணக்கக் கூட்டம்.. நடத்தியதில்லை. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.