Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எத்தனை வெற்றிவிழா கொண்டாடினாலும், தீர்க்கப்பட வேண்டிய கணக்குகளுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்!

Featured Replies

sl-flag-300x182.jpg

18 ஆம் நூற்றாண்டின் பிரபலமான போரியல் ஆய்வாளரும், படைத்தளபதியுமான Carl von Clausewitz (கர்ல்-வொன் குளோசவிட்ஸ்) கூறிய போரியல் தத்துவத்துக்கும், ஶ்ரீலங்காவின் அதிகாரப் படையாட்சிகள் நடத்தி முடித்த போர் கூறும் செய்திக்கும் இடையே நிறையவே வேறுபாடுகள் உள்ளன. முள்ளிவாய்க்கால் பேரழிவில் நான்காம் ஆண்டு நிறைவின் பின்னணியில் குளோசவிட்ஸ் கூறிய 'போர் என்பது வெவ்வேறான வழிமுறைகளில் நடக்கும் தொடர்ச்சியான அரசியல் ஊடுதொடர்பு' என்ற கருத்து பொய்த்துப்போய், அதுவொரு இனப்படுகொலையாக மட்டமே மிகக் குரூரமாகப் பதிவாகியுள்ளது.

 

ஒருவேளை ஜோன் கீகன் என்ற பிரித்தானியப் படைத்துறை வரலாற்றாளர் தனது History of Warfare என்ற நூலில் கூறுவதுபோல, போரை நடாத்தும் சமூகத்தைப் பொறுத்து அதன் வடிவமும் வீச்செல்லையும் இலங்கையில் வரையறுக்கப்பட்டிருக்கலாம். ஆம்! அதிகாரம் மற்றும் மேலாண்மை கொண்ட சமூகம் என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் மீது சிங்களம் நடாத்திய போர் அதன் வடிவத்தையும் வீச்செல்லையையும் முள்ளிவாய்க்கால் வரை வரை வரையறுத்துத்தான் உள்ளது.

 

குளோசவிட்ஸ் குறிப்பிடுவதுபோல, தமிழர்கள் மீது சிங்களம் நடத்திய போர் ஒரு அரசியல் ஊடுதொடர்பு அல்ல, மாறாக அதுவொரு அழிவுக்குரிய ஊடுதொடர்பு. விடுதலைப் புலிகளுடனான போரில், போரியல் விதிகள் கோரும் 'விகிதாரசம் பேணும் தன்மையை' மிக மோசமாக மீறிய கொழும்பு, தனது வடிவத்தையும் வீச்செல்லையையும் ஒரு இனப்படுகொலை இலக்கை நோக்கியே நகர்த்தியிருந்தது.

 

இன்றுகூட 'கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்கம்' என்ற போலியான பட்டயத்தைக் காவியபடி அனைத்துலகத்தை ஏமாற்ற முனையும் கொழும்பு, 2009 மே வரை நகர்த்தப்பட்ட இந்தப் போர் 'தமிழ் மக்களை' எவ்வளவு தூரம் இன்றுவரை காயப்படுத்தி வருகிறது என்ற 'அரிச்சுவடிப் பாடத்தைக்கூடக் கற்றுக்கொண்டதாக இல்லை'! 'பயங்கரவாதம்' ஒழிக்கப்பட்ட நாள் என்ற மிலேச்சத்தனமாக அடையாளத்துடன் இன்று மீண்டும் ஒருமுறை காலிமுகத்திடலில் வெற்றிவிழா கொண்டாடப்படுகிறது!

 

ஆனால் தமிழ் மக்களின் மனங்களிலிருந்து வெளிப்படும் 'முள்ளிவாய்க்கால் சாபம்' இன்னமும் நீண்ட நாட்களுக்கு சிங்கள தேசத்தைத் துரத்தத்தான் போகிறது. முள்ளிவாய்க்கால் வரை தாம் துரத்தியடிக்கப்பட்டு, தமது உறவுகளும் குரூரத்தனமாகக் காவுகொடுக்கப்பட்ட அந்த வேளையின் துயரத்துக்கான 'கணக்கு' சிங்கள தேசத்திடம் இன்னமும் தீர்க்கப்படாமல்தான் உள்ளது.

 

மரணித்த தமது உறவுகளுக்காக ஒரு நினைவேந்தலைக் கூட செய்ய முடியாத அளவுக்கு சிங்களத்தின் 'வெற்றிவிழா மமதை' பல வழிகளில் அவர்களை அச்சுறுத்துகின்றது. 'பட்டகட்டையிலே' பகற்குருடு செல்வதுபோல இன்று மகிந்தரின் பட்டாளங்கள் காலிமுகத்திடலில் வெற்றிவிழா அணிவகுப்பு செய்து, தமது விமானங்களை கரணமடித்து சாகசம் காட்டினாலும், இவையெல்லாம் மீண்டுமொருமுறை தமிழர்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக அமையும்.

 

கொழும்பு நகரை சில தினங்களாக முடக்கி, வீதிகளை ஆங்காங்கே மூடி வெற்றிவிழா கொண்டாட்ட ஒத்திகைகளை நடாத்திய மகிந்த அதிகார மைய படைத்துறை, இன்று 100 கவச வாகனங்கள், 55 போர்க்கப்பல்கள், 28 வான் கலங்களுடன் தமது சாகசங்களை காட்டுவது, இலங்கையின் எதிர்காலத்துக்கும் வெறும் சாகசமாகவே அமையும். வெற்றிவிழா மமதையுடன் 'தம்' பிடித்து நமோ.. நமோ.. மாதாவை ஒலித்தாலும், தமிழ் மக்களிடமிருந்து ஒலித்த அவலக்குரல்களுக்கான பொறுப்புக் கூறலை சிங்களம் ஏற்கும்மட்டும் நீதிகோரும் அறவழிக் குரல்களும் ஒலிக்கத்தான் செய்யும்.

 

இதற்கிடையே பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட தினத்தை நாம் கொண்டாடுவோம் என்ற வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகளையும் யாழ் நகரப் பகுதிகளில் அதிகார அல்லக்கைகள் இரவோடு இரவாக ஒட்டிய காட்களும் தென்பட்டன. 2009 இல் இடம்பெற்றதைப் போலவே நேற்றுக்காலை உகண்டாவிலிருந்து மீண்டும் நாடுதிரும்பிய மகிந்தரும் இன்னொரு வெற்றிச் செய்தியை கொடுக்கத் தயாராகிவிட்டார்.

 

மறுபுறத்தே, அப்பனுக்குப் பிறந்த தப்பாத பிள்ளையாக, இறுதிக்கட்டப் போரின்போது பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதலை புலிகள் நடாத்தினார்களா, அல்லது படையினர் நடாத்தினார்களா என்பது தெரியாத நாமல் ராஜபக்ச வேறு, BBC யிற்கு 'ஐயத்தை வெளிப்படுத்தும் ஒரு கதை' கூறுகிறார். அத்துடன் வடக்கு மக்கள் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மக்களும் போர் காரணமாக துயரங்களை அனுபவித்ததாக 'துயரங்களின் விகிதாசாரக் கணக்கை' வேறு அவர் போட்டுக்காட்டுகிறார்.

 

இவ்வாறு கூறி BBC ஊடகருக்கு வேண்டுமானால் நாமல் கணக்கு விடலாம். ஆனால் தீர்க்கப்படவேண்டிய கணக்குகளுக்கு அவர் கணக்குவிட முடியாது. இவ்வாறான கணக்குகள் பொருந்தாதென்பதால் தானே, சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதியை இலங்கையில் கால்பதிக்க மகிந்த அதிகார மையம் அனுமதியளிக்கவில்லை.

 

இலங்கைக்குத் தான் பயணிக்க விரும்புவதாக ஏற்கனவே கோரிக்கை விடுத்த கிறிஸ்டோப் ஹென்ஸ் மீண்டும் ஒருமுறை தனது கோரிக்கையை கொழும்பிடம் முன்வைத்தாலும், இதுவரை அவருக்கு பதிலளிக்காமல் மௌனம் காக்கிறது கொழும்பு. சனல் 4 வின் 'இலங்கையின் கொலைக்கள' ஆவணக் காட்சிகள் உண்மையானதென, 2011 இல் ஹென்ஸ் கருத்துத் தெரிவித்திருப்பதால், அவர் நாட்டுக்குள் நுழைந்தால் சிக்கல் என்பதற்காகவும் அவரைக் காய்வெட்ட முனைகிறது கொழும்பு.

 

தனது மனித உரிமை பொறிமுறைக்கு சான்றிதழ் வழங்க ஆபிரிக்க நிபுணத்துவ 'மெக்கானிக்குகள்' வரும்போது ஐ.நா.வாவது, ஜெனிவாவாவது என கொழும்பு எதிர்மறைப் போக்கில் துடிக்கிறது. ஆனால் பொதுநலவாய அமைப்பு என்பது பிரித்தானிய முடியாட்சிக்குட்பட்ட முன்னைய நாடுகளின் அமைப்பு என்பதும், ஐ.நா அமைப்பு உலகப் பொதுமன்றம் என்ற உண்மையையும் விரைவில் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் கொழும்புக்கு ஏற்படும்.

 

http://tamilworldtoday.com/home

 

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

 

மறுபுறத்தே, அப்பனுக்குப் பிறந்த தப்பாத பிள்ளையாக, இறுதிக்கட்டப் போரின்போது பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதலை புலிகள் நடாத்தினார்களா, அல்லது படையினர் நடாத்தினார்களா என்பது தெரியாத நாமல் ராஜபக்ச வேறு, BBC யிற்கு 'ஐயத்தை வெளிப்படுத்தும் ஒரு கதை' கூறுகிறார். அத்துடன் வடக்கு மக்கள் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மக்களும் போர் காரணமாக துயரங்களை அனுபவித்ததாக 'துயரங்களின் விகிதாசாரக் கணக்கை' வேறு அவர் போட்டுக்காட்டுகிறார்.

 

 

 

 

 

 

 

சிங்கள இராணுவம் புலிகள் மீதும் மக்கள் மீதும் எறிகணைகளை வீசும் போது புலிகள் ஏன் மக்கள் மீது எறிகணையை வீச வேண்டும். தங்கள் மீது எறிகணையை வீசுபவர்களுக்கு திருப்பி வீசினால் தானே இராணுவத்தின் எறிகணை எறியும் வீரியம் குறையும்.

தனக்கு பொது அறிவு இல்லாவிட்டாலும் கேட்பவர்களுக்கு பொது அறிவு உள்ளது என்ற அறிவும் மகிந்தவின் புதல்வருக்கு இல்லையா??

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.