Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறுவளத்தில், ஆயுதப் போராட்டம் முப்பதாண்டுகளுக்கும் மேல் தனக்கு எதிராக எழுந்த எல்லா வாய்ப்பற்ற சூழலையும் எதிர்த்துப் போராடி, தமிழ் மக்களின் போராட்டத்தை பாதுகாத்து நின்றமை வியப்புக்குரியதே. துணிச்சல், அர்ப்பணிப்பு, விலைபோகாத நேர்மை இவற்றின் மூலம் விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் போராட்டத்தை பாதுகாத்து போரில் முன்னேறி வந்தனர்.

கடந்த நூற்றாண்டின் இறுதிவரை, அரசியல் பாதகமான சூழல் குறுக்கீடு செய்யினும் போரில் பலம் பெற்று முன்னேறுவதன்மூலம் அப்பாதகமான அரசியல் சூழல்களைக் கடந்திட முடியும் என்பதற்கான ஒரு உலக முன்னுதாரணமாகக்கூட விடுதலைப்புலிகள் திகழ்ந்தனர். அசாத்திய போராற்றல் இதற்குத் துணைபுரிந்திடும் என்றே நம்பிக்கையை வளர்த்தது.

எடுக்கப்பட்ட தீர்மானங்கள் முன்னோக்குவதற்காகத் தான் எடுக்கப்பட்டன. எந்தத் தீர்மானமும் அநீதி இழைப்பதற்காக எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆயினும், தீர்மானத்தில் நேர்மையிருந்தளவு அறிவார்த்தம் இருக்கவில்லை என இப்போது காலத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே தவறுகள் நேர்ந்தன் அதற்காக அவை குற்றங்கள் ஆகிவிடா.

பாதைகள் கடந்துவிட்டபின்பே பயணத்தின் வழுக்களை மறு ஆய்வுக்குட்படுத்தி மனித சமூகம் முன்னேறிவந்திருக்கிறது. கற்றுக்கொண்ட பாடங்கள், அனுபவங்களிலிருந்து தவறுகளை அடையாளம் காண்பது குற்றம் காண்பதாகாது.

அனைத்துலக அரசியல் போக்கில் ஏற்பட்ட 2001ம் ஆண்டிற்குப் பின்னான திடீர் மாற்றத்தில் போராட்டம் தன்னை சமன்செய்வதில் தவறியது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பதாகையின் கீழ் முன்னெடுக்கப்பட உலக அரசியல் சூறாவளியில் போராட்டம் தன்னை நிலைப்படுத்த முயற்சித்த தீர்மானத் தவறு சமநிலையை வேரோடு அறுத்தது. மேற்குலகு, சீனா, இந்தியா என்ற முக்கோண சுற்றிவளைப்புக்குள் ஈழப்போராட்டம் மூழ்கடிக்கப்பட்டது. இதுவும் உலகப் போராட்டங்களுக்கான நவீன முன்னுதாரணமாயிற்று.

கொள்கை நேர்மையுடன் இறுதிவரை புலிகள் போரிட்டு தமிழ் மக்களின் போராட்டத்திற்கு அனைத்துலகப் பெறுமானத்தை உருவாக்கி, அனைத்துலக தலையீட்டைச் சாத்தியப்படுத்தி மடிந்து போனார்கள். அவர்களின் மகத்துவமான அர்ப்பணிப்பும் வீரமும் மாசற்றவை. நந்திக்கடல்வரை வீழ்ந்த உடல்கள் தமிழ்மக்களை நோக்கி “உங்களுக்காக நாங்கள் இங்கே வீழ்ந்துமடிகிறோம்” என்றே பறைசாற்றி நின்றன.

ஆரம்பகால தமிழ்மக்களின் சாத்வீகப் போரில் அரச ஒடுக்குமுறைதான் வெற்றிபெற்றது. சாத்வீகப் போர் தோற்றுப்போனது. ஆனால் அதன் போராட்டம் தோற்கவில்லை. ஒடுக்குமுறை பெற்ற வெற்றியே, ஆயுதப் போராட்டத்தை பெற்றெடுத்து அது வளர்வதற்குரிய அக - புறக் காரணிகளைத் தந்தது. இதுவே, பின்னாளில் தமிழ்மக்களின் போராட்டத்துக்கு அகப் பலத்தையும், போராட்டத்திற்கு அனைத்துலகப் பெறுமானத்தையும் பேரப்பலத்தையுங்கூட பெற்றுத் தந்தது. மிதவாதப் போரில் வென்ற அரச தரப்பு போராட்டத்தில் தோற்றுப் போன பாடம் இது.

இப்போது ஆயுதப் போரில் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள்; ஆனால் போராட்டத்தில் அல்ல. ஆயுதப்போர் தன் இயலுமைகளால், அர்ப்பணிப்புகளால் இறுதிப் பயணத்திற்கான முன்னேற்றப் பாதைகளை திறந்துவிட்டிருக்கிறது. மீதிப்பயணம் நிறைவேற வேண்டும்.

ஈழப்போராட்டத்தை அதன் பயணவழியின் அடிகொண்டு மூன்று கட்டங்களாக வகுக்கமுடியும்.

 

பல  இடங்களில் கள  நிலை  சார்ந்து  அப்படி செய்திருக்கலாம்

இப்படி  நகர்ந்திருக்கலாம்  என  தூரநின்று  பார்த்தது போலிருந்தாலும் 

இந்தநிலையை  உணர்ந்தமை

முடிவு  செய்தமை வரவேற்கக்கூடியதே.

 

நன்றி  கிருபன் பதிவுக்கும்

நேரத்திற்கும்

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.