Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்

Featured Replies

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தன் மகனை மீட்க உதவி கோரி, அவருடைய தாயார் குசலகுமாரி என்பவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்திருப்பதாகச் செய்தி ஒன்று வந்துள்ளதே?

பதில்:- 2009ஆம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தபோது, தன் மகன் துஷ்யந்தனை (வயது 26) இந்தோனேசியாவிற்கு அவருடைய தாய் குசல குமாரி அனுப்பி வைத்திருக் கிறார். அங்கிருந்த அவருடைய மகன் பத்திரமாக இந்தோனேசியாவிற்கு வந்துவிட்டதாகவும், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் கூடவந்த ஒன்பது தமிழர்களுடன் செல்லவிருப்பதாகவும் தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார்.

அதற்குப் பிறகு நான்காண்டுகளாக எந்தச் செய்தியும் மகனிடமிருந்து கிடைக்கவில்லையாம். கடந்த நான்காண்டுகளாக மகன் எங்கேயிருக்கிறான் என்று தேடி பலரிடம் உதவி கேட்டும் சோர்ந்து போயிருந்த நிலையில், தற்செயலாக இலங்கையில் வெளிவரும் “தினக்குரல்” நாளிதழில் தன் மகனின் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறார். அந்தப் புகைப்படம், இலங்கையிலிருந்து இந்தோனேசியா வந்துள்ள அகதிகளின் படம். அதிலே தனது மகன் துஷ்யந்தன் இருந்ததைப் பார்த்துவிட்டு, அந்தச் செய்தியைப் படித்தபோது, இந்தோனேசியா சிறையில் அந்த ஈழத் தமிழர்கள் வாழ்வதாகவும், அவர்களுக்கு கரப்பான் பூச்சிகளே உணவாகக் கொடுக்கப்படுகிறது என்றும் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து விட்டு, எப்படியாவது சிறையிலிருந்து அவர்களை மீட்க வேண்டுமென்ற எண்ணத்தோடு அந்தத் தாய்
தமிழகத்திற்கு வந்திருப்பதாகவும் செய்தி படித்தேன். அந்தத் தாயின் துயரத்தையும், இந்தோனேசியாவில் உள்ள மற்ற ஈழத் தமிழர்களின் துயரத்தையும் தீர்க்க இந்திய அரசும், தமிழக அரசும் உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும்; எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி :- இரண்டு லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கக் கூடிய முக்கிய மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கப் போவதாகச் சொல்லப்படுகிறதே?

பதில்:- அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் வாழ்ந்து
வருவதாகவும், அவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்து மசோதா தயாரிக்கப்பட்டு, அமெரிக்க செனட் சபையின் நீதித் துறை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். தற்போது நீதித் துறை உறுப்பினர்கள் அதைப் பரிசீலித்தபோது, மசோதாவுக்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் விழுந்திருக்கின்றன. 8 வாக்குகள் அதிகம் பெற்று மசோதா நீதித் துறைக் குழுவின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக இந்த மசோதா செனட் சபையின் ஒப்புதலுக்குச் செல்லும். 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் 60 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று மசோதா நிறைவேற வேண்டும்.

இந்தத் தகவலை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், 26-9-2009 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தி.மு.கழகம் நிறைவேற்றிய 8-வது தீர்மானத்தில், தமிழகத்திலே அகதிகளாக தங்கியுள்ள 1 இலட்சத்திற்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின்கீழ் மறு குடியமர்த்தும் முயற்சியாக தமிழக அரசு மத்திய அரசோடு கலந்து பேசி, அவர்கள் தமிழகத் திலே நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தோம். கழகம் ஆட்சியில் இருந்தபோது தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அமெரிக்காவில் 2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க முடிவு செய்திருப்பதைப்போல, இந்தியாவிலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமையினை - நிரந்தரமாகப் பாதுகாப்போடு வாழ்வதற்கான அனுமதியினை இந்திய அரசு வழங்கிட முன்வர வேண்டும் என்பது தான் நமது விருப்பமும் வேண்டு கோளும் ஆகும். இங்குள்ள ஈழத் தமிழர்களில், விரும்புவோர்க்குக் குடியுரிமை வழங்குவது, அவர்களது எதிர்காலத்திற்கு நாம் தருகின்ற உத்தரவாதமாக அமையும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14906:eelam-tamil-citi&catid=36:tamilnadu&Itemid=102

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.