Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு எதிரான புலம்பெயர் தமிழர்களின் கூட்டுச்சதி குறித்து ஐ.நா. ஆராயவேண்டும்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் சில நாடுகள் மற்றும் புலம் பெயர் தமிழ் மக்களின் ஒரு பிரிவினர் ஆகியோரின் கூட்டுச் சதி தொடர்பில் அதிகரித்த ஆதாரங்கள் உள்ளன. எனவே இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை விரிவாக ஆராயவேண்டும். புலம்பெயர் மக்களின் சில பிரிவினர் மேற்கு நாடுகளின் அரச பிரதிநிதிகளாகவே 22ஆவது மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் கலந்துகொண்டிருந்தனர் என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

 

கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையானது உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எவ்விதமான நன்மையயையும் அளிக்காமல் இலங்கை மக்கள் மத்தியில் சர்வதேச சமூகம் தொடர்பான சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளை இந்த பிரேரணை பாதகமாக பாதித்துள்ளது என்றும் அரசாங்கம் ஜெனிவாவில் குறிப்பிட்டுள்ளது.

வட மாகாணத்தின் வாக்காளர் இடாப்பு தயாரானதும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வட மாகாண சபை தேர்தல் நடைபெறும். மேலும் யாழ்ப்பாணத்தின் தற்போது 13200 படையினரே உள்ளனர் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.

 

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை பேரவையின் 23ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார்.

 

அவர் அங்கு மேலும் கூறியதாவது:

 

இந்தப் பேரவையில் சில தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்கெதிராக பிரேரணைகள் கொண்டுவரப்படுகின்றது. இது அரசியல் நோக்கங்களுக்காக மனித உரிமை விவகாரத்தை பயன்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த அரசியல் மயமாக்கப்பட்ட செயற்பாடு இந்தப் பேரவையின் விதிகளை மீறுவதாக உள்ளன என்பதை வலியுறுத்துகின்றோம்.

 

இந்த நடைமுறையானது இலங்கையின் விடயத்தில் இந்தப் பேரவையின் முன்னெடுக்கப்பட்ட நடைமுறைகளில் காணப்பட்டமை கவலையளிக்கின்றது. நான்கு வருடங்களுக்கு முன்னர் இலங்கை பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை ஒன்றிணைத்ததும் இலங்கை விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை தேவை என கூறப்பட்டதை இங்கு நினைவூட்டுகின்றோம்.

 

கடந்த மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் அரசியல்மாமாக்கலின் விளைவாக புலம் பெயர் மக்களின் கட்டாயப்படுத்தலில் அரசாங்கங்களுக்கு இடையிலான செயற்பாடுகளின்றி நம்பகத்தன்மையற்ற முறையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை முற்றுமுழுதாக அவசியமற்ற ஒன்றாகும். அதனால்தான் இலங்கை அரசாங்கம் அதனை முற்றாக நிராகரித்தது.

இலங்கைக்கு எதிராக செயற்படும் நாடுகள் மற்றும் புலம் பெயர் தமிழ் மக்களின் ஒரு பிரிவினர் ஆகியோரின் கூட்டுச் சதி தொடர்பில் இந்த மனித உரிமைப் பேரவை விரிவாக ஆராயவேணடும். , புலம்பெயர் மக்களின் சில பிரிவினர் மேற்கு நாடுகளின் அரச பிரதிநிதிகளாகவே 22ஆவது மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.

 

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையானது உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எவ்விதமான நன்மையயையும் அளிக்காமல் இலங்கை மக்கள் மத்தியில் சர்வதேச சமூகம் தொடர்பான சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது. மேலும் உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளை இந்த பிரேரணை பாதகமாக பாதித்துள்ளது.

 

இதேவேளை யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களில் இலங்கை பல்வேறு முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த தேசிய செயற்றிட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நல்லிணக்க வேலைத்திட்டமாகும். அந்த வகையில் இந்தத் தேசிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டில் தற்போது ஈடுபட்டுள்ளோம்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 295873 மக்களும் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் இந்த செயற்பாடு முடிக்கப்பட்டது. 2064 சதுர கிலோமீற்றர் பகுதிகளில் 96 சதுர கிலோமீற்றர் பகுதிகளிலேயே இன்னும் கண்ணிவெடி அகற்றவேண்டியுள்ளது. இதுவரை 961447 வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவமே கண்ணிவெடிகயற்றும் செயற்பாட்டில் 75 வீதமானவற்றை முன்னெடுத்துவருகின்றது.

12000 முன்னாள் போராளிகளில் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஆகும்போது 11551 புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீளிணைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 374 பேர் புனர்வாழ்வளிக்க்பபட்டுவருகின்றனர். 194 பேர் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தில் இறந்தவர்கள் தொடர்பில் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் கணக்கீடு மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 8998 பேர் உயிரிழந்துள்ளனர். இது நோயினால் ஏற்பட்ட மரணம் இயற்கை மரணம் என்பனவற்றையும் உள்ளடக்குகின்றது. இவற்றில் 7896 உயிரிழப்புக்கள் மோதல்களுடன் சம்பந்தப்பட்டவையாகும். அரச கட்டுப்பாட்டுப்ப பகுதிக்கு வரும்போது புலிகளினால் கொல்லப்பட்டுள்ளவர்களும் இதில் அடங்குகின்றனர். எவ்வாறெனினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய புதிய மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டுவருகின்றோம்.

 

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்த விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளன. 17 அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் கொலை தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன. செனல் 4 வீடியோக் காட்சிகள் தொடர்பில் இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை நடத்திவருகின்றது.

 

யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரமாக காணப்பட்ட இராணுவ படையினர் தற்போது 13200 ஆக குறைக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினரின் முகாம்களை அரச காணிகளில் அமைத்து தற்போதுள்ள காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்பதற்கு சில காணிகள் பெறப்பட்டுள்ளன. அவ்வாறான தனியார் காணிகளின் உரிமையாளர்களுக்கு சந்தைப் பெறுமதிக்கு ஏற்ப நட்டஈடு வழங்கப்படும். இதேவேளை காணிப் பிரச்சினைகளை தீர்க்க காணி ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நான்காவது காணி ஆணைக்குழுவை நிறுவவும் நடவடிக்கை எடுக்க்பபட்டுள்ளது.

 

வட மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி வீதம் சிறப்பாக உள்ளது. 2010 ஆம் ஆண்டில் வட மாகாணம் 22 வீத பொருளாதார வளர்ச்சியையும் 2011 ஆம் ஆண்டில் 27 வீத வளர்ச்சியையும் அடைந்துள்ளது. வடக்கில் அரசாங்கம் தொடர்ந்து அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது. மேலும் வட மாகாணத்தின் வாக்காளர் இடாப்பு தயாரானதும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வட மாகாண சபை தேர்தல் நடைபெறும்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4858

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.