Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை ஜெயலலிதா திறந்துவைத்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை சென்னை, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, அவர் பேசியபோது, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் துவங்கப்பட்டிருந்தாலும் அத்திட்டத்திற்கு அ இஅதிமுகவே மூல காரணம் என வாதிட்டார்.

 

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

 

1986 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது 120 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

 

பின்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1994 ஆம் ஆண்டு 350 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. ஆனால் போதிய நிதி உதவி கிடைக்காததன் காரணமாக, இத்திட்டத்தை அப்போது நிறைவேற்ற இயலவில்லை.

 

இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழக அரசால் திட்ட அறிக்கை திருத்தி அமைக்கப்பட்டு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 18 ஒன்றியங்களில் உள்ள 6755 ஊரகக் குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜப்பானிய பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் 1,005 கோடி ரூபாய் நிதி உதவியுடன் நிறைவேற்றுவதற்கான கருத்துரு மத்திய அரசுக்கு 18.8.2005 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.

 

''அதன் அடிப்படையில், நிதி உதவி பெறப்பட்டு திமுக ஆட்சியின்போது, 2008 ஆம் ஆண்டில் அத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் கர்நாடக பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் சார்பில் ஒகேனக்கல்லில் போராட்டம் நடத்தப்படும் அறிவிக்கப்பட்டது, தொடர்ந்து கர்நாடக அரசின் எதிர்ப்பைத் தடுத்திட மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரும் தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கர்நாடக சட்டமன்றத் தேர்தலை காரணம் காட்டி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை திமுக நிறுத்தி வைத்தது'' என நினைவுகூர்ந்தார் ஜெயலலிதா.

 

பின்னர், 2011 ஆம் ஆண்டு தான் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில், 50 விழுக்காடு பணிகள் முடிவுற்று இருந்து இருக்க வேண்டும். ஆனால், அன்றைய நிலையில், வெறும் 18 விழுக்காடு பணிகள் மட்டுமே முடிவடைந்து இருந்தன. ஆனால் தனது அரசு பணிகளை முடுக்கி விட்டதாலேயே இந்தத் திட்டம் இன்று துவக்கி வைக்கப்படுகிறது என்றார் ஜெயலலிதா.

 

எப்படியும் 1928 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்திட்டம் , தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பயன் அளிக்கும் என்றார் முதல்வர்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/05/130529_jeyawaterproject.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.