Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒசாமா பின்லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தின் பிரதான மூளைசாலி ஒரு இலங்கை தமிழர் :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சர்வ மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு ஜனநாயகவாதி ஒருபோதும் இவ்வாறான காரியங்களை எண்ணிப்பார்க்கவே மாட்டார்.

 

தனது வலது கையை கொலை செய்ய முடியும்.தனக்கு எதிராக எழுதுவோரை கொல்ல முடியும்.அழையா விருந்தினராக சிவபூசையில் கரடி புகுந்தது போல் செல்ல முடியும். கள்ள வாக்குகள் பெற சண்டித்தனம் காட்ட முடியும்.எதிராக தேர்த்தலில் நிற்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களை மயங்கும் வரை தாக்குவது என்று பல பக்கங்களுக்கு அண்ணரின் வீரப்பிரதாபங்களை எழுதலாம். மறுப்பீர்களா?

 

தனது வலது கையை கொலை செய்ய முடியும்.தனக்கு எதிராக எழுதுவோரை கொல்ல முடியும்.அழையா விருந்தினராக சிவபூசையில் கரடி புகுந்தது போல் செல்ல முடியும். கள்ள வாக்குகள் பெற சண்டித்தனம் காட்ட முடியும்.எதிராக தேர்த்தலில் நிற்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களை மயங்கும் வரை தாக்குவது என்று பல பக்கங்களுக்கு அண்ணரின் வீரப்பிரதாபங்களை எழுதலாம். மறுப்பீர்களா?

 

அண்ணரை பற்றி தம்பி எழுதும்போது அந்நியப்பட்ட பொது ஜனங்களாக நாம் மறுக்க முடியாது. அண்ணன் கூடக் கொன்றானா தம்பி கூடக் கொன்றானா என்று எண்ணிக்கொண்டிருப்பதுதான் எமது வேலை. அதை தான் காலாகாலம் செய்துவருகின்றோம். அண்ணன் தம்பிக்குள் பிரச்சனை முடிந்தால் நல்லது என்பது தான் எமது நிலைப்பாடு.

நாடுகடந்த அரசுக்கும் பிரசாரக்கடிதம் போய் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் இந்த தமிழருக்கு பரிசு கிடத்ததை, யாழில் சிலர் மாதிரியோ அல்லது தயான் ஜயதிலகா மாதிரியோ ஒரே கண்ணோட்டத்தில் பார்த்து அறிக்கை வெளிவிடவில்லை.  "தமிழர்களின் பழைய நினைவே தாங்கள் தகுதி கூடியவர்கள் ஆனால் சிவாநந்தன் பரிசுக்கு தகுதியானவர் அல்ல" என்றோ அல்லது அவர் இந்த பரிசை ஏற்பது மேட்டுக்குடித்தனம், சாதித்துவம் என்றோ நா.க.அ பிரதிநிதிகள் வெளிவிட்ட அறிக்கையை நான் பார்க்கவில்லை. அதனால் அவர்களை  இதற்குள்  என்னால் சேர்க்க முடியாது.கோட்டை ராசாதானி தனது பிரச்சார கடிதங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கும் அதே நேரத்தில்தான்  நாடுகடந்த அரசுக்கும் அனுப்பிவைக்கிறதென்றும் அதை பற்றித் தங்களுக்கு கூட தெரியும் என்றால் நான் அதை மறுக்க முடியுமா? அரசு என்ன் செய்கிறது என்று கூறி பிடிவாதம் பிடிக்க, அரசு செய்யும் எதை பற்றி எனக்கு முதல் தர அறிக்கை வருகிறது?


 
 
அண்ணரை பற்றி தம்பி எழுதும்போது அந்நியப்பட்ட பொது ஜனங்களாக நாம் மறுக்க முடியாது. அண்ணன் கூடக் கொன்றானா தம்பி கூடக் கொன்றானா என்று எண்ணிக்கொண்டிருப்பதுதான் எமது வேலை. அதை தான் காலாகாலம் செய்துவருகின்றோம். அண்ணன் தம்பிக்குள் பிரச்சனை முடிந்தால் நல்லது என்பது தான் எமது நிலைப்பாடு.

65 வருடம் அண்ணன் என்னடா தம்பி என்னட வாழ்க்கை. அதன் பின்னர் அந்த இணக்க அரசியல் பிரசாரத்திற்கு செவி சாய்க்க இன்னும் ஒரு கூட்டம் இருக்கு. 

 

 "தமிழர்களின் பழைய நினைவே தாங்கள் தகுதி கூடியவர்கள் ஆனால் சிவாநந்தன் பரிசுக்கு தகுதியானவர் அல்ல" என்றோ அல்லது அவர் இந்த பரிசை ஏற்பது மேட்டுக்குடித்தனம், சாதித்துவம் என்றோ

 

கருத்துக்கள் பொறுப்பற்ற தலைப்பை பற்றியது. இதற்குள் தகுதி மேட்டுக்குடித்தனம் சாதியம் என்பது உங்கள் கற்பனையில் உதிப்பது. விசயத்துக்கு சம்மந்தமில்லாத தலைப்பு எப்படியோ அப்படித்தான் உங்கள் கற்னை இடைச்செருகல்களும். இது முற்று முழுதாக உங்களுக்குள் இருக்கும் பிரச்சனை.

" அவர் இந்த பரிசை ஏற்பது மேட்டுக்குடித்தனம், சாதித்துவம் என்றோ".............
ஆகவே இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அமரிக்கா மட்டும் எதிரியில்லை இலங்கைத் தமிழரும் எதிரி.சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர்களுக்கு உதை கொடுக்க மறக்கவேண்டாம் என்பதை தமிழ்த்தேசீயம் நினைவுபடுத்தியுள்ளது.

 

சர்வ மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு ஜனநாயகவாதி ஒருபோதும் இவ்வாறான காரியங்களை எண்ணிப்பார்க்கவே மாட்டார்.

 

 

 

பரிசு ஏன் கொடுக்கப்பட்டது என்பதற்கு பத்திரிகைகள் தமது விளக்கத்தை கொடுக்கின்றன. யாழில் பலர் வசதிக்கேற்றமாதிரி தங்கள் விளக்கத்தையும் கொடுக்கிறார்கள்.  அதில் வேண்டுமென்றே விபரங்களை தவிர்க்கிறார்கள். பின்னர் தேவைப்பட்டால் விவாதத்தை திசை திருப்புகிறார்கள்.  இதனால் நாங்கள்தான் விபரங்களை சேர்த்துப்பார்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். அது கற்பனையாக இருந்தாலும், நியாயமானதாக இருக்கத்தவறுவதில்லை. 

 

சிவானநந்தனுக்கு கிடைத்த பரிசில் "தமிழ் தேசியம், சர்வ மத நல்லிணக்கம்" என்ற சொற்பதங்கள் அதீதக் கற்பனைகள். அவர் ஒரு விஞ்ஞானி என்றதை மனத்தில் வைத்து பத்திரிகையின் தலைப்புக்கு பதில் அளித்திருக்க வேண்டும். இந்த அரையல் கருத்துக்கள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டவை.

 

இதையேதான் தாயான் ஜெயதிலகா செய்தார்.  1.5 மில்லியன் டயஸ்போறாவில், இந்த வருடம் மட்டும் 11 பேரில் ஒருவராக ஒரு தமிழர் பரிசில் வென்றார். தமிழர் சொல்லுவதாக  தாயான் ஜெயதிலகா கொடுத்த விளக்கத்தை அவர் யாராவது ஒரு தமிழர் உண்மையில் சொல்லியிருந்தார் என்றதை காட்டுவாரா?

 

தயான் போன்றவர்கள் கிளறிவிடும் இந்தப் பிரிவிணைப் போட்டியால், பொறாமையால் தான் தமிழர் இலங்கையில் வேண்டுமென்றே மற்றய இனங்களால் ஒதுக்கப்படுகிறார்கள். இதில் தமிழர்களின் பங்கு எள்ளவும் இல்லை.

 

இராமநாதன் இலங்கையில் நடந்த முதல் இனக்கலவரத்தில் வெள்ளைகளை எதிர்த்து நீதியை நிலை நாட்டிய உத்தம வீரன். அந்த நன்றிக்காக  சிங்களவர் குதிரைகளை விட்டுவிட்டு தாங்கள் அவரை காவியது சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  அப்படியிருக்க இராமநாதன் தனது மேட்டுக்குடி முஸ்லீம்களை ஒதுக்கினார் என்று கற்பனைக் கதை கட்டியோர் , "இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அமரிக்கா மட்டும் எதிரியில்லை இலங்கைத் தமிழரும் எதிரி.சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர்களுக்கு உதை கொடுக்க மறக்கவேண்டாம் என்பதை தமிழ்த்தேசீயம் நினைவுபடுத்தியுள்ளது"  என்று எழுதும் போது அதே வலிந்த பிரிவினையை தூண்டும் அதன் தொடர்தான் இதுவும் என்றதை மறுக்க முடியாது. 

 

மேட்டுக்குடி, சாத்தித்துவ கற்பனை கதைகளுடன் வந்து யாழில் யார் பிரிவினையை தூண்ட முயற்சிக்கிறார்கள் என்பதில் யாருக்காவது சந்தேகம் என்றால் அவர்கள் தாங்கள் செய்வது பிரச்சாரம் என்று நினத்துக்கொண்டு தங்களைத் தாங்கள் ஏமாற்றுகிறார்கள். யாழில் எல்லோருக்கும் மற்றவரின் சாயங்கள் நன்றாகத்தான் விளங்குகிறது. இதில் வந்து யார் எந்த வர்ணம், எந்த மேட்டுக்குடி என்ற விளங்கங்கள் கொஞ்சம் ஒவர்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.